என் மலர்
நீங்கள் தேடியது "Instagram"
- சர்வதேச அளவில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது.
- இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் பதில்.
உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச அளவில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் இன்ஸ்டகிராம் சேவை முடங்கியுள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயனர்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் இதுகுறித்து செயலிழப்பு கண்காணிப்பு இணையதளத்தில் அமெரிக்காவில் 100,000 பயனர்களும், கனடாவில் 24,000க்கும் அதிகமான பயனர்களும், பிரிட்டனில் 56,000 பேர் என ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம்," இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பை முடிந்தவரை விரைவாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, மீண்டும் செயல்பாட்டு வந்தது.
- தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது.
மெட்டாவினை தாய் நிறுவனமாக கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் உலகளவில் செயல்படாமல் முடங்கி போனது. இதனால் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். மேலும் இது பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சேவை முடங்கியதாக இன்ஸ்டாகிராம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
"தொழில்நுட்ப குறைபாடு காரணமாக பலர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தாத நிலையை எதிர்கொண்டனர். இந்த குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைந்து பிரச்சினைகளை சரி செய்துவிட்டோம்," என்று மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தனயார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இது குறித்து முடங்கிய வலைதளங்கள் பற்றிய விவரங்களை வெளியிடும் டவுன்டிடெக்டர் வலைதளத்தில், இன்ஸ்டாகிராம் செயலி சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டு இருக்கிறது.
- பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.
- இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உத்திரபிரதேசம்:
இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள்.
ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள். ஒரு சிலர் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடனம் ஆடுகின்றனர்.
இதுபோல பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் ரூ.15 ஆயிரம் இழந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வர்ணிகா பிரயாக் மாவட்டத்தில் உள்ள சிவிலியன் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.
இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார். மணப்பெண் போல் உடை அணிந்து சொகுசு கார் மீது முன்னால் அமர்ந்து பிரபலமான பாடலுக்கு நடனமாடினார். முக்கிய சாலைகளில் சென்று வீடியோவை பதிவு செய்தார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார். இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.
ஒரு சிலர் இது குறித்து போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் இளம்பெண் அமர்ந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணின் விவரங்களை கண்டுபிடித்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறி இளம்பெண் முக்கிய சாலைகளில் காரின் மீது அமர்ந்து வீடியோ பதிவு செய்ததாக ரூ.15,500 அபராதம் விதித்தனர். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- புனம் ஆர்ட் அகாடமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் 2 பெண்கள் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைகிறார்கள்.
- சுண்ணாம்பு மற்றும் கருப்பு தூள் மூலம் வட்டத்தை நிரப்புகிறார்கள்.
சிலர் வித்தியாசமாக செய்யும் செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடும்.
அந்த வகையில் 2 பெண்கள் தரையில் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைந்து நடைபயிற்சி செல்வது போன்ற ஒரு வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புனம் ஆர்ட் அகாடமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் 2 பெண்கள் ஒரு கம்பத்தை சுற்றி வட்டம் வரைகிறார்கள். அதன் பிறகு சுண்ணாம்பு மற்றும் கருப்பு தூள் மூலம் வட்டத்தை நிரப்புகிறார்கள். பின்னர் அந்த வட்டத்தில் அவர்கள் நடைபயிற்சி செல்வது போல காட்சிகள் உள்ளது.
வைரலாக பரவும் இந்த வீடியோவை 1.14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
- ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
- கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சி அடுத்தபடியாக அதிக பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற இடத்தையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை கோடிக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 250 மில்லியனாக உள்ளது. இதன் மூலம், ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சி அடுத்தபடியாக அதிக பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற இடத்தையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
- சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
- போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அகமதாபாத்:
16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியில் 'டாஸ்' ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.

சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது. போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் profile-யை மாற்றியுள்ளார். அதில் ஜடேஜாவை டோனி தூக்கியது போல உள்ள புகைப்படத்தை தனது profile-லில் வைத்துள்ளார். லீக் போட்டிகளில் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என குரல் கொடுத்த ரசிகர்களை கையெடுத்து கும்பிட வைத்து விட்டார் ஜடேஜா என்றால் மிகையாகாது.
- இன்ஸ்டாகிராமில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்தார்.
- ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஸ் தயாள் இடம் பெற்றிருந்தார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஸ் தயாள் இடம் பெற்றிருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பும் வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் யாஷ் தயாளை கடுமையாக விமர்சித்தனர்.
அந்த பதிவில் இஸ்லாமியர் ஆண்கள் இந்து பெண்களை குறிவைத்து திருமணம் செய்து அவர்களை கொலை செய்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் லவ் ஜிகாத் என்று வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய யாஷ் தயாள், மன்னிக்கவும். அந்தப் புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுவிட்டேன். வெறுப்பை பரப்ப வேண்டாம். அனைத்து மதம் மற்றும் சமூகம் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக யாஷ் தயாள் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தவர் தான் இந்த யாஷ் தயாள்.
- இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும்.
- இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ சாட்பாட் உருவாக்கும் பணிகளில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளன. ஸ்னாப்சாட் தளத்தில் 'மை ஏஐ' சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனமும் சொந்தமாக ஏஐ சாட்பாட் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏஐ சாட்பாட்கள் சாட்ஜிபிடி சேவைக்கு இணையானவை ஆகும்.
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் உருவாக்கப்படுவதை ஆப் ஆய்வாளரான அலெசாண்ட்ரோ பலூசி கண்டறிந்தார். இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும் என தெரியவந்துள்ளது. பயனர்கள் கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பண்புகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.
பபயனர்கள் தங்களை பற்றி சிறப்பாக வெளிப்படுத்தவும், மெசேஜ்களை எழுத உதவி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் நினைக்கிறது. இது பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் எப்படி எழுத வேண்டும் என்பது பற்றி அறிவுறையாக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் இன்னமும், உருவாக்கும் பணிகளே நடைபெற்று வருகிறது. இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
இன்ஸ்டாகிராம் தளத்தில் இது எப்படி இயங்கும் என்பது பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. ஸ்னாப்சாட் பயனர்கள் ஏஐ சாட்பாட் உடன் உரையாடல் நடத்தவும், கேள்விகளை கேட்கவும் முடியும். ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி கொண்டு தான் இந்த தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் கடந்த வாரம் மெட்டா வெரிஃபைடு சேவை அறிவிக்கப்பட்டது.
- மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என ஆறு நாடுகளில் கிடைக்கிறது.
மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்களுக்கு வெரிஃபிகேஷன் பேட்ஜ் வழங்கும் திட்டத்தை ஜூன் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் மெட்டா வெரிஃபைடு சேவையை கட்டண முறையில் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கட்டணம் செலுத்தி வெரிஃபைடு சேவையை பெறுவோருக்கு புளூ டிக் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்கி வருகிறது.
இந்தியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு செயலிக்கான வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 599 விலையில் வெப் வெர்ஷனுக்கான வெரிஃபைடு சேவை வரும் மாதங்களில் வெளியிடப்பட இருக்கிறது.

மெட்டா வெரிஃபைடு சேவை அரசு அடையாள சான்று மூலம் வழங்கப்படுகிறது. வெரிஃபைடு சேவையின் கீழ் அக்கவுன்ட் பாதுகாப்பு, நேரடி அக்கவுன்ட் சப்போர்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வெரிஃபைடு பெறுவது எப்படி?
ஆன்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.
வெரிஃபைடு பெற வேண்டிய ப்ரோஃபைலை க்ளிக் செய்ய வேண்டும்.
செட்டிங்ஸ் -- அக்கவுன்ட் சென்டர் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
மெட்டா வெரிஃபைடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை அம்சம் காணப்படவில்லை எனில், செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
கட்டண முறையை தேர்வு செய்ய வேண்டும்.
அரசு அடையாள முகவரி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரிபார்க்கப்பட்ட பிறகு, பயனர்களின் அக்கவுன்டில் வெரிஃபைடு பேட்ஜ் வழங்கப்பட்டு விடும்.
வெரிஃபைடு பெற தேவையானவை:
இந்தியாவில் மெட்டா வெரிஃபைடு பெற நினைப்போரின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் நிறுவனம் சார்பில் பயனர் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும். இவற்றை தொடர்ந்து அரசு அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். இதில் அடையாள சான்றில் உள்ள புகைப்படம், பெயர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் அக்கவுன்ட் உடன் ஒற்றுப் போக வேண்டும்.
பொது பிரபலங்கள், கிரியேட்டர்கள், பிரான்டுகள் அக்கவுன்ட் மற்றும் வெரிஃபைடு பெற விண்ணப்பிக்கலாம். தற்போது மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
- அவிரா என்ற சிறுமி தனது சகோதரர் விஹான்னிடம் 'பையா மன்னிக்கவும்' என்று திரும்ப திரும்ப கூறுவதை காணமுடிகிறது.
- குழந்தையின் தாய் சுமன் சவுத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அவிரா என்ற சிறுமி தனது சகோதரர் விஹான்னிடம் 'பையா மன்னிக்கவும்' என்று திரும்ப திரும்ப கூறுவதை காணமுடிகிறது. ஆனால் அந்த குழந்தையிடம் எதற்காக அவரது சகோதரர் கோபம் அடைந்தார் என்பது தெரியவில்லை.
குழந்தை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட போதிலும், அதனை அவளது சகோதரர் பொருட்படுத்தாதை போன்று காட்சி உள்ளது. இதனை குழந்தையின் தாய் சுமன் சவுத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- இன்ஸ்டாகிராமில் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- ஏற்கனவே இதேபோன்ற அம்சம் டிக்டாக் சேவையிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னணி சமூக வலைதள சேவைகளில் ஒன்றான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இன்ஸ்டாகிராம் தனது பனர்களுக்கு ரீல்ஸ்-ஐ டவுன்லோடு மற்றும் ஷேர் செய்யும் வசதியை வழங்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி புதிய அம்சம் பற்றிய தகவலை தனது பிராட்காஸ்ட் சேனலில் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ நேரடியாக தங்களது சாதனத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு ஷேர் ஐகான் மற்றும் டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் தெய்தாலே போதுமானது.

புதிய அம்சம் பயனர் உருவாக்கும் தரவுகளின் மீது அதிக கண்ட்ரோல் வழங்குவதோடு, இன்ஸ்டாகிராம் தளத்தில் உருவாக்கும் தரவுகளை கொண்டாட வழி செய்கிறது. நிறுவனங்கள் சார்பில் வீடியோக்களை நேரடியாக டவுன்லோடு செய்ய அனுமதிக்கப்படுவதால், இதே போன்ற வசதி மற்ற தளங்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போதைக்கு ரீல்ஸ்-ஐ டவுன்லோடு செய்யும் வசதி பொது அக்கவுன்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் பொது அக்கவுண்ட்களில் டவுன்லோடு செய்யக் கோரும் வசதியை செயலிழக்க செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. டவுன்லோடு செய்யப்படும் ரீல்ஸ்-இல் வாட்டர்மார்க் இடம்பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
முன்னதாக டிக்டாக் செயலியும் இதேபோன்ற வசதியை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பயனர் வீடியோக்களில் டிக்டாக் லோகோவுடன் மற்றவர்களுக்கு பகிரப்படும். இது டிக்டாக்கிற்கு விளம்பரமாக அமைகிறது.
- புதிய சேவை திரெட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புளூஸ்கை, மாஸ்டோடான் போன்ற சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.
மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள சேவையை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்த சேவை பற்றிய தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் புதிய சமூக வலைதள சேவை ஜூலை 6-ம் தேதி அறிமுகமாவதாக கூறப்படுகிறது. புதிய சேவை திரெட்ஸ் (threads) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய திரெட்ஸ் சேவை தோற்றத்தில் இன்ஸ்டாகிராம் போன்றே இருக்கும் என்றும், பயன்பாடுகள் டுவிட்டர் போன்றே இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட தளங்களான புளூஸ்கை மற்றும் மாஸ்டோடான் போன்றே, திரெட்ஸ் சேவையும் பரவலான தளமாக இருக்கும் என்று தெரிகிறது.
புதிய சேவை பற்றிய தகவல், தனியார் செய்தி நிறுவனம் சார்பில் வெளியாகி இருக்கிறது. "திரெட்ஸ், இன்ஸ்டாகிராம் செயலி," என்றும், இது ஜூலை 6-ம் தேதி முதல் டவுன்லோடு செய்ய கிடைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகுள் பிளே ஸ்டோர் லிஸ்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது.