என் மலர்
நீங்கள் தேடியது "insurgents"
- குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்
- நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியான பின் நாட்டு மக்களின் கவனமும் அரசியல்வாதிகளின் கவனமும் மணிப்பூரை நோக்கி திரும்பியது.
இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதமேந்திய குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு இம்பாலில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி டிரோன் மூலம் மெய்தி இன மக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். நேற்றைய தினம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் அரங்கேறின. பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று [சனிக்கிழமை] ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தவரைச் சுட்டுக்கொன்றனர்.
தொடர்ந்து மாவட்டத் தலைநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்டக்காரர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர் மணிப்பூரில் மீண்டும். மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில் அம்மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
- அதிகாலை 1 மணியளவில் அதிநவீன ஆயுதங்களால் பல ரவுண்டுகள் குண்டுகளை வீசினர்
மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்டு வாயை மூடும் முன் கிராமத்தில் குண்டு வீசி தாக்குதல்
இந்த ஆண்டு [2024] முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த வருடம் மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன், மாநில மக்களிடம் வருந்துகிறேன்.
பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
கடந்த 3-4 மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு 2025 புத்தாண்டுடன் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன் என்று பாஜக ஆளும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய குக்கி - மெய்தேய் இனக்குழுக்கள் இடையிலான கலவரம் 250 பேர் வரை காவு வாங்கியது. இன்னும் கலவரம் ஓயாத சூழலில் கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில் நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்கும் முகாந்திரமாக பாஜகவின் பைரன் சிங் மன்னிப்பு கேட்டு வாயை மூடும் முன் இன்று மீண்டும் கிளர்ச்சியாளர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தின் கடங்பண்ட் பகுதியில் இன்று [புதன்கிழமை] அதிகாலையில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கும் நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் உள்ள கிளர்ச்சியாளர்கள், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள தாழ்வான கடங்பண்ட் பகுதியில் உள்ள கிராமத்தின் மீது அதிகாலை 1 மணியளவில் அதிநவீன ஆயுதங்களால் பல ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியும் குண்டுகளை வீசியும் தாக்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது .
நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். கிராமத்தினருடன் சேர்ந்து தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 2023 மே மாதம் மாநிலத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து கடங்பண்ட் பகுதி கிளர்ச்சியாளர்களால் அதிக தாக்குதலை சந்தித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவம் போராடி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன. #Afghan #NationalDefense #SF
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம், நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் 12 இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி மற்றும் தரைப்படை தாக்குதல்களில் ஒரே நாளில் 7 தலிபான் தளபதிகள் உட்பட 162 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 66 பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒரு பயங்கரவாதியை கைது செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Afghanistan