என் மலர்
நீங்கள் தேடியது "IPL"
- குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. 244 ரன் இலக்கை தூரத்திய குஜராத் அணி 232 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 14 ஓவர் வரை நல்ல நிலையில் இருந்த அந்த அணி 'இம்பேக்ட்' வீரர் விஜய்குமார் வைஷாக்கின் 'யார்க்கர்' பந்து வீச்சில் போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது தோல்விக்கு வழிவகுத்தது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் (3 விக்கெட்) தவிர மற்றவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முகமது சிராஜ், ரபடா, ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தங்களது பந்து வீச்சில் அதிக ரன் கசியவிடுவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
மும்பை இந்தியன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் உதை வாங்கியது. அந்த ஆட்டத்தில் மும்பை அணி 155 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. ரோகித் சர்மா ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். திலக் வர்மா (31 ரன்), சூர்யகுமார் யாதவ் (29) தவிர யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் (3 விக்கெட்) பிரமாதமாக பந்து வீசி கவனத்தை ஈர்த்தார். டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர் உள்ளிட்ட மற்ற பவுலர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை.
கடந்த ஆண்டு மெதுவாக பந்து வீசிய புகாரில் 3 முறை சிக்கியதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் முந்தைய ஆட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆடவில்லை. அவர் களம் திரும்புவது அந்த அணியின் உத்வேகத்தை அதிகரிக்கும்.
முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இவ்விரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முந்தைய ஆட்டத்தை போலவே ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் குஜராத்தும், 2-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு அல்லது கிளென் பிலிப்ஸ், ராகுல் திவேதியா, ஷாருக்கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ரஷித் கான், கசிகோ ரபடா, முகமது சிராஜ்
மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், சத்யநாராயணா ராஜூ.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- கவுகாத்தியில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர்.
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் புதிய விதிகளை கொண்டுவருவதை ஐபிஎல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் புதிய விதிகளை கொண்டுள்ளது.
ஆனால் இந்த ஆண்டு புதிதாக கலை நிகழ்ச்சியில் ஒரு புது முயற்சியை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆனால் இந்த முறை 12 மைதானங்களில் நடக்கும் தொடக்க போட்டியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடிய தொடக்க ஆட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த வகையில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி கவுகாத்தியில் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நட்சத்திரம் சாரா அலி கானின் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
- விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விராட் கோலி, பட்டிதாரை அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
இது குறித்து பிளமிங் கூறியதாவது:-
விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம். ஆர்சிபி அணியில் விராட் கோலியையும் ரஜத் பட்டிதாரையும் அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுமே கடந்த ஆண்டை விட தற்போது வித்தியாசமாக இருக்கிறது.
விராட் கோலியை தவிர இம்முறை அவர்கள் பல பலமான வீரர்களை சேர்த்து இருக்கிறார்கள். ஆர்சிபி மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிகளும் தற்போது இப்படிதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டுகளை விட இம்முறை தொடர் சரிசமமாக இருப்பதாக நான் நினைக்கின்றேன். பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.
- ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு குறைந்தது 7-8 வெற்றி தேவையாகும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
சென்னை அணி தனது முதலாவது லீக்கில் இதே மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது. இதில் மும்பையை 155 ரன்னில் கட்டுப்படுத்திய சென்னை அணியினர் அந்த இலக்கை 5 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தனர். சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவின் 4 விக்கெட் அறுவடையும், ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும் வெற்றியை எளிதாக்கின. அதே உற்சாகத்துடன் களம் இறங்குவார்கள். விக்கெட் கீப்பர் டோனி முதலாவது ஆட்டத்தில் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர் பேட்டை சுழற்றுவதை பார்க்க ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழல் ஜாலம் தூக்கலாகவே இருக்கும். அதனால் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஊதித்தள்ளியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட்டும், விராட் கோலியும் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா (3 விக்கெட்), ஹேசில்வுட் (2 விக்கெட்) கலக்கினர். ஆனால் சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு உகந்தது என்பதால் நூர் அகமது, ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் தாக்குதலை திறம்பட எதிர்கொள்வதை பொறுத்தே அவர்களின் ஸ்கோர் வேகம் அமையும். மும்பைக்கு எதிராக இவர்கள் 3 பேரும் கூட்டாக 12 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினர். அதனால் இந்த விஷயத்தில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் அதிக விழிப்போடு இருப்பார்கள். குருணல் பாண்ட்யா, சுயாஷ் ஷர்மா ஆகியோருடன் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக மொகித் ரதீயை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. காயத்தால் முதல் ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் உடல்தகுதியை பெற்றால் அது பெங்களூருவின் பந்து வீச்சை வலுப்படுத்தும்.
பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் நேநற்று நிருபர்களிடம் கூறுகையில், 'விராட் கோலி, சமீபத்தில் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக ஆடினார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் குவித்த இந்தியர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார். சுழற்பந்து வீச்சில் ஆடாமல் எப்படி அதிக ரன் எடுத்திருக்க முடியும். அவர் நல்ல நிலையில் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். இப்போது கூட தனது பேட்டிங் நுணுக்கத்தில் மேலும் ஒரு ஷாட்டை சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதை பார்த்தேன்.
அவர் தொடர்ந்து தனது ஆட்டத்திறனை மேம்படுத்த விரும்புகிறார். எப்போதும் போலவே சாதிக்கும் வேட்கையுடன் உள்ளார். உண்மையிலேயே அவர் சிறப்பு வாய்ந்த ஒரு வீரர்' என்று குறிப்பிட்டார்.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. கடந்த சீசனில் சென்னை அணி பெங்களூருவில் நடந்த லீக்கில் 27 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோற்றதால் தான் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. அதற்கு பழிதீர்க்க இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது.
மொத்தத்தில் இந்திய முன்னாள் கேப்டன்கள் டோனி, விராட் கோலி நேருக்கு நேர் கோதாவில் குதிப்பதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. அதனால் மஞ்சள் படையின் ஆர்ப்பரிப்பும், விசில் சத்தமும் சென்னை வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஷிவம் துபே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டோனி, ஆர்.அஸ்வின், நாதன் எலிஸ் அல்லது பதிரானா, நூர் அகமது, கலீல் அகமது.
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் அல்லது மொகித் ரதீ, லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, ராசிக் சலாம் அல்லது புவனேஷ்வர்குமார் அல்லது ஸ்வப்னில் சிங், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ரசிகர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டை வைத்து ஸ்டேடியத்திற்கு செல்லவும், போட்டி முடிந்து அங்கிருந்து புறப்படுவதற்கும் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர பஸ்களை இலவசமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.
- தற்போது டெல்லி அணியில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 24 அன்று நடைபெற்ற போட்டியில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது.
அண்மையில் தான் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் தான் முதல் போட்டியில் டெல்லி அணியின் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் விளையாடவில்லை.
இந்நிலையில், தற்போது டெல்லி அணியில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார். இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனின் பேட்டிங் ஸ்டைலை கே.எல்.ராகுல் ரீக்ரியேட் செய்த விடியோவை அந்த அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கெவின் பீட்டர்சன் போலவே கே.எல்.ராகுல் மிமிக்ரி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோற்றது.
- இந்த மைதானத்தில் கடந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டன.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.
ஐதராபாத் தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 44 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் இஷான் கிஷன் சதத்தோடு 286 ரன்கள் குவித்து மலைக்க வைத்த ஐதராபாத் அணி, எதிரணியை 242 ரன்னில் மடக்கியது.
அந்த அணியில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி என அபாயகரமான பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இவர்களில் ஒருவர் நிலைத்து நின்றாலே எதிரணி நிலைமை திண்டாட்டம் தான். சொந்த ஊரில் நடப்பது அவர்களுக்கு கூடுதல் அனுகூலமாகும்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோற்றது. இதில் மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன் ஆகியோரது அரைசதத்தால் 209 ரன்கள் சேர்த்த லக்னோ அணி, வெற்றியை நெருங்கி வந்து கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் டக்-அவுட் ஆகிப்போனார். தவறுகளை திருத்திக் கொண்டு முதல் வெற்றிக்காக போராடுவார்கள்.
இவ்விரு அணிகள் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் கடந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டன. இதனால் இந்த தடவையும் ரன்விருந்தை எதிர்பார்க்கலாம். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஆடம் ஜம்பா.
லக்னோ: எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி, ஷர்துல் தாக்குர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, ஆவேஷ்கான், எம்.சித்தார்த்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
- லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 14 சீசன்களாக 8 அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலையில் 15-வது சீசனில் இருந்து கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டது.
2022-ம் ஆண்டில் குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வென்றது. லக்னோ அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. 2023-ம் ஆண்டு குஜராத் 2-வது இடத்தையும் லக்னோ அதே 3-ம் இடத்தையும் பிடித்தது. கடந்த ஆண்டு லக்னோ 7-வது இடத்தை பிடித்தது. ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளில் அதிக வெற்றி பெற்ற டாப் 5 அணிகளில் லக்னோ அணி 4-வது இடத்தில் உள்ளது.
2022ல் அறிமுகமான லக்னோ, தொடர்ந்து இரண்டு சீசன்களில் (2022, 2023) பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. 2024-ல் சற்று பின்தங்கினாலும், 44 போட்டிகளில் 24 வெற்றிகளுடன் 55.81% வெற்றி சதவீதத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன்களாக களமிறங்கிய அனைவரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். அதன்படி 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
அதேபோல் 2023-ம் ஆண்டு மற்றொரு கேப்டனான குர்ணால் பாண்ட்யாவும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். அந்த வகையில் இந்த சீசனில் கேப்டனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். இது புதுவிதமான சாதனையாக உள்ளது.
- இந்த சீசனில் 5 போட்டிகள் முடிந்த நிலையில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
- போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காக இப்படி பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த போட்டி கடைசி ஓவர் வரை வாணவேடிக்கையாக இருந்தது.
முதலில் பேடிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப்பின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதே சமயம் இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாக பதிவானது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி கடைசி வரை போராடி 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சீசனில் தற்போது வரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3 போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியை கிரிக்கெட் என்று சொல்வதற்கு பதிலாக பேட்டிங் என்று சொல்லலாம் என தென் ஆப்பிரிக்கா அணியின் வீரரும் குஜராத் அணியின் வீரருமான ரபாடா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மைதானமும் பிளாட் பிட்ச்சாக உள்ளது. போட்டியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்காக இப்படி பிளாட் பிட்ச் அமைக்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியை இனிமேல் கிரிக்கெட் என்று கூறாதீர்கள், பேட்டிங் என்று சொல்லுங்கள் அது தான் சரியாக இருக்கும்.
சில சாதனைகள் முறியடிக்கப்படுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது பரவாயில்லை. அதிக ஸ்கோரிங் ஆட்டங்கள் நல்லது. ஆனால் குறைந்த ஸ்கோரிங் ஆட்டங்களும் அப்படித்தான். பேட்டிங் மற்றும் பந்துக்கு இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று ரபாடா ஆதங்கத்துடன் கூறினார்.
- ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பந்து கூட சந்திக்கவில்லை.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 243 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதலாவதாக பஞ்சாப் அணி பேட்டிங் செய்த போது அதிரடியாக விளையாடி அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசியில் ஒரு ஓவர் மீதம் இருந்தது. ஷ்ரேயாஸ் சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி ஓவரை முழுவதும் ஷஷாங்க் சிங் விளையாடி ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு பந்து கூட கொடுக்காமல் 5 பவுண்டர்கள் விளாசினார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி வெளியில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
யாராக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தால் ஒரு ரன் எடுத்து கொடுத்து அவரை சதம் அடிக்க முயற்சி செய்யும் வீரர்கள் மத்தியில் இவர் செய்த காரியம் அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ட்ரைக் மாற்றதது குறித்து ஷஷாங்க் சிங் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், உங்களுக்கு ஸ்ட்ரைக் வேண்டுமா என ஸ்ரேயஸிடம் நான் கேட்பதற்கு முன்பாகவே "எனது சதத்தை பற்றி நீ கவலைப்படாதே. எல்லா பந்துகளையும் அடித்து விளையாடு. நான் சந்தோஷமாக இருக்கிறேன். இது ஒரு அணியை சார்ந்த விளையாட்டு என ஷ்ரேயஸ் கூறிவிட்டார். ஆனால் அதுபோன்ற தருணங்களில் சுயநலமின்றி செயல்படுவது மிகவும் கடினமான ஒன்று. ஐபிஎல்-ல் சதம் விளாசுவது எளிதான விஷயம் அல்ல என ஷஷாங்க் கூறினார்.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போல் தோல்வியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், தனது முதல் லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சிடம் போராடி பணிந்தது.
கொல்கத்தா அணியின் முதல் ஆட்டத்தில் ரஹானே, சுனில் நரின் தவிர மற்றவர்களின் பேட்டிங் சிறப்பாக இல்லை. குயின்டான் டி காக், வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஒற்றை படையை தாண்டவில்லை. பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை. எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததுடன், 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
ராஜஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், ஐதராபாத்துக்கு எதிராக 286 ரன்களை வாரி வழங்கி விட்டனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை சிதறவிட்டு வள்ளலாக மாறினார். இமாலய இலக்கு என்றாலும் ராஜஸ்தான் அணியினர் 246 ரன்கள் வரை நெருங்கினர். சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் அரைசதம் அடித்தனர். விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கேப்டன் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் 'இம்பேக்ட்' வீரராகவே பயன்படுத்தப்பட்டார். இன்றைய ஆட்டத்திலும் அதே நிலை தொடருவதால் ரியான் பராக் கேப்டன் பணியை கவனிப்பார்.
மொத்தத்தில் இரு அணிகளும் தங்களது பந்துவீச்சில் உள்ள குறைபாட்டை சரி செய்து முதல் வெற்றிக்கு தீவிரம் காட்டும். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன. மற்றொரு போட்டியில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா அல்லது ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, பசல்ஹக் பரூக்கி, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் மத்வால்.
கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன் அல்லது அன்ரிச் நோர்டியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை.
- நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் இறுதி ஓவர்கள் வரை சென்று ரசிகர்களுக்கு விருது படைக்கிறது. இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதி அமலில் இருக்காது என பல்வேறு தகவல்கள் வந்தது. ஆனால் 2027 வரை இந்த விதி இருக்கும் என பிசிசிஐ தெரிவித்தது.
இந்நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இம்பேக்ட் பிளேயர் விதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை வந்தபோது, ஐபிஎல் தற்போது நல்ல நிலையில் உள்ளது. இதற்குமேல் அதனை மேம்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. போட்டிகளும் விறுவிறுப்பாகவே உள்ளன என கூறினேன்.
ஆனாலும் அந்த விதி அமலுக்கு வந்தது. அந்த விதி எனக்கு உதவுகிறதுதான். ஆனாலும் நான் பேட்டிங்கும் செய்கிறேன். கீப்பிங்கும் செய்கிறேன். எனவே நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை. நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு எம்எஸ் தோனி கூறினார்.
- இந்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 438 ரன்கள் அடித்து சேஸ் செய்தது தான் நினைவுக்கு வந்தது.
- தற்போது என்னுடைய கிரிக்கெட் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறேன் என நினைக்கின்றேன்.
மும்பை :
ஐபிஎல் 2025 -ம் ஆண்டு சீசன் தொடரில் டு பிளிஸ்சிஸ் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதியை மாற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விதி ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை தருவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து டெல்லி அணியின் துணை கேப்டன் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது:-
டெல்லி லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் அற்புதமான போட்டியாக அமைந்தது. பல கிரிக்கெட் வீரர்கள் பல ரசிகர்கள் ஐபிஎல் இருக்கும் புதிய விதி குறித்து புகார் அளிக்கிறார்கள். ஆனால் இந்த போட்டியை பார்த்த பிறகு புதிய விதி ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஐந்து விக்கெட்டுகள் விழுந்தவுடன் போட்டி அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் புதிய வீரர் ஒருவர் வந்து ஆட்டத்தை மாற்றிவிட்டார். நானாக இருந்தால் மசாலா டீ அருந்தி இதுபோல் இருக்கும் போட்டியை ரசித்துப் பார்ப்பேன்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஆடுகளத்தை பார்த்தேன். பந்து கொஞ்சம் நிதானமாக தான் பேட்டிற்கு வந்தது. ஐந்து விக்கெட்டுகளை நாங்கள் இழந்த பிறகு இந்த இலக்கை எட்டுவது முடியாத காரியம் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னுடைய பழைய மூளை போட்டி முடியும் வரை லீக் ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பை விட்டு விலக மாட்டாய் என்று கூறியது. மேலும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு வரும்போது அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
தற்போது இந்திய அணியில் பல வீரர்கள் அபாரமாக விளையாடுகிறார்கள். குறிப்பாக இந்த இரண்டு வீரர்களும் பந்தை வெகு தூரத்திற்கு அடித்தார்கள். இந்த போட்டியை பார்க்கும்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 438 ரன்கள் அடித்து சேஸ் செய்தது தான் நினைவுக்கு வந்தது.
மோகித் சர்மா அடித்ததிலேயே மிகவும் முக்கியமான ரன்னாக அவருடைய வாழ்க்கையில் இதுவாகத்தான் இருக்கும். மூத்த வீரர்களுக்கும் ஐபிஎல் தொடரில் பல கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சி இருக்கிறது. ஐபிஎல் பாணியே இதுதான். நான் ஒரு அணியில் நீண்ட காலம் தங்கி இருப்பேன். அதன் பிறகு ஏலம் நடக்கும் மீண்டும் புதிய அணிக்கு சென்று புதிய அத்தியாயத்தை தொடங்குது.
சிஎஸ்கே அணியில் இருந்து ஆர்சிபிக்கு சென்றது ஒரு நல்ல அத்தியாயம் தான். ஆனால் தற்போது என்னுடைய கிரிக்கெட் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறேன் என நினைக்கின்றேன். இன்னும் எவ்வளவு பக்கங்கள் இருக்கிறது என்பது புதிய அணியை பொறுத்துதான் இருக்கிறது.
என்று டுபிளிசிஸ் கூறியுள்ளார்.