என் மலர்
நீங்கள் தேடியது "ISIS"
- கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
- ஐஎஸ் அமைப்பின் முந்தைய தலைவர் அபு இப்ராஹிம் அல்-குராஷி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்லப்பட்டார்.
பெய்ரூட்:
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷி, போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது. ஈராக்கைச் சேர்ந்த ஹாஷிமி, கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஆடியோ செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எப்போது இறந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து எந்த விவரத்தையும் செய்தித் தொடர்பாளர் அந்த ஆடியோவில் வெளியிடவில்லை.
அதேசமயம், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு அல்-ஹூசைன் அல்-ஹூசைனி அல்-குராஷி நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஐஎஸ் அமைப்பின் முந்தைய தலைவரான அபு இப்ராஹிம் அல்-குராஷி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருக்கு முன்னால் இருந்த தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அக்டோபர் 2019 இல் இட்லிப் நகரில் கொல்லப்பட்டார்.
- ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு ஆசிக்கை தேடி வருகின்றனர்.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆசிக் (வயது 25). இவர் சேலம் கோட்டை அருகே உள்ள சின்னசாமி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத இயக்கத்துடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து அவரை கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஆசிக்கிற்கு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரை மீண்டும் கோர்ட்டில் சரண் அடைய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆசிக் தலைமறைவாகிவிட்டார். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு ஆசிக்கை தேடி வருகின்றனர்.
மேலும் திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் ஆசிக் வசித்து வந்த பகுதியில் உள்ள மக்களிடம் அவருடைய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவற்றை பதிவு செய்து கொண்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- ஐஎஸ்ஐஎஸ் தலைவரை தேடும் பணிகளில் துருக்கி புலனாய்வு துறை ஈடுபட்டு வந்தது.
- பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இந்த பகுதியில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டான் என்று எர்டோகன் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
நீண்ட காலமாக ஐஎஸ்ஐஎஸ் தலைவரை தேடும் பணிகளில் துருக்கி புலனாய்வு துறை ஈடுபட்டு வந்துள்ளது. சிரியாவின் வடக்கில் உள்ள ஜாந்தாரிஸ் எனும் நகரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் துருக்கி கிளர்ச்சி பிரிவுகள் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இந்த பகுதியில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை நள்ளிரவு துவங்கிய மோதல் ஞாயிற்று கிழமை வரை தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற மோதலின் இறுதியில் பயங்கர வெடிப்பு சத்தத்தை கேட்டோம் என்று அந்த பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசி தெரிவித்துள்ளார். தாக்குதலை தொடர்ந்து பொது மக்கள் இந்த பகுதிக்குள் நுழையாமல் இருக்க பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் முன்னாள் தலைவர் சிரியாவின் தெற்கு பகுதியில் கொல்லப்பட்டதை அடுத்து அல் குரேஷி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது.
- கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
பெங்களூரு:
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சர்வதேச அளவில் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமாக கருதப்படுகிறது.
அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் ரகசியமாக செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அடிக்கடி என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கலவரத்தை தூண்டவும் அந்த இயக்கத்தினர் சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உளவுத்துறைக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இரு மாநிலங்களிலும் 44 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் 31 இடங்களில் அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள்.
புனேயில் 2 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பயாந்தர் நகரிலும் ஒரு இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய துணை நிலை ராணுவ பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.
உள்ளூர் போலீசாரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சென்றுள்ளனர்.
44 இடங்களில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது அங்கிருந்த 15 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். பிறகு அவர்களை மேலும் விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். அவர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதான 15 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் ரகசிய தொடர்பில் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான ஆவணங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இது தவிர சோதனை நடந்த இடங்களில் இருந்து லேப்டாப்புகள், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இந்த 15 பேர் மூலம் இந்தியாவின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நடத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று நடந்த சோதனை மூலம் மிகப்பெரிய நாச வேலை சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்தான் புனே நகரில் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
அவர்கள் இந்தியாவில் நாசவேலை செய்ய நிதி திரட்டியதும், பயிற்சி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் இன்றைய சோதனை நடத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் தானே மாவட்டத்தில் நடந்த சோதனையிலும் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- சிரிய மக்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடி தீர்த்தனர்.
- ஐஎஸ்ஐஎஸ் குழு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.
சிரியாவில் பஷார் அல் ஆசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பஷார் அல் ஆசாத் சிரியாவில் இருந்து விமானம் மூலம் தப்பியோடி, ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசாத் ஆட்சி முடிவுக்கு வந்ததை சிரிய மக்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசாத் தப்பியோடியதைத் தொடர்ந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா பயங்கர தாக்குதல்களை நடத்தியது. சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அவசர நிலை குறித்து பேசியிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சிரியாவில் நிலவும் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள ஐஎஸ்ஐஎஸ் குழு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இத்தகைய அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் அமெரிக்க படைகள் ஐஎஸ்ஐஎஸ்-ஐ குறி வைத்து கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 75 இலக்குகளை குறிவைத்து தாக்கிய அமெரிக்க படைகள் பி-52, எஃப்-15 மற்றும் ஏ-10 ரக விமானங்களை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவில் கார் ஒன்று வேகமாக கூட்டத்துக்குள் புகுந்ததில் 15 பேர் உயிரிழந்தார்கள்.
- தாக்குதலுக்கு பயன்படுத்திய காரில் வெடிகுண்டு, துப்பாக்கி, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி ஆகியவை இருந்தது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வேகமாக கூட்டத்துக்குள் புகுந்ததில் 15 பேர் உயிரிழந்தார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உடனே போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டிய நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்தது.
கார் தாக்குதலை நடத்தியவர் டெக்சாஸை சேர்ந்த 42 வயதான ஷாம்ஷத் டின் ஜப்பார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான அவர் ஒருமுறை ஆப்கானிஸ்தானில் பணியாற்றி உள்ளார்.
அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய காரில் வெடிகுண்டு, துப்பாக்கி, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி ஆகியவை இருந்தது. அவர் பலரை கொலை செய்யும் நோக்கத்துடன் இத்தாக்குதலை நடத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்கவில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "நியூ ஆர்லியன்சில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இந்த சோகத்திலிருந்து மீள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கர்நாடகாவில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
- விசாரணையில் அவர்கள் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டது தெரிய வந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் பதுங்கி இருப்பதாக கர்நாடக மாநில உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அவர்கள் சிவமொக்கா போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சையது யாசின், மாஷ் முனீர் அகமது மற்றும் ஷாரிக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் ஐ.எஸ். அமைப்பில் பயங்கரவாதம் மற்றும் வெடிகுண்டுகளை கையாள்வது குறித்து பயிற்சிகளை எடுத்துக்கொண்டதும், வெடிகுண்டுகளை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
அவர்கள் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டு பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதைடுத்து போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
- ஷைபு என்பவர் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கூறி கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- இந்த வழக்கு தொடர்பான விசாரணை எர்ணாகுளம் தேசிய புலனாய்வு கோர்ட்டில் நடந்து வந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு வளைகுடா நாடுகளுக்கு சென்ற சிலர் அங்கு தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக புகார் எழுந்தது.
இதற்கிடையே கேரளாவை சேர்ந்த வாலிபர் ஷைபு என்பவர் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கூறி கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை எர்ணாகுளம் தேசிய புலனாய்வு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் கேரள வாலிபர் ஷைபு குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விபரத்தை வருகிற 19-ந் தேதி தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்தனர் என கூறி 8 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் மீது, தங்களது தீவிரவாத குழுவுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய திட்டமிட்டது, ஆயுத போராட்டம் நடத்துவதற்கு தேவையான நிதியை உயர்த்துவது, சிறையில் உள்ள தீவிரவாதிகளை தப்பிக்க செய்து, அவர்களை நாட்டிற்கு எதிராக செயல்பட செய்வது ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த ஜனவரி 8-ந்தேதி வழக்கு பதிவானது.

இந்த சோதனையில், 3 லேப்டாப்புகள், 3 ஹார்டு டிஸ்குகள், 16 மொபைல்போன்கள், 8 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ்கள், 5 மெமரி கார்டுகள் மற்றும் கார்டு ரீடர் ஒன்று உள்ளிட்ட டிஜிட்டல் பொருட்களும் இதுதவிர 2 கத்திகளும் கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோத ஆவணங்களும் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின.
2013-ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் வலுப்பெற்ற இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ஆயிரம் வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
ஆனால் ஈராக், சிரியாவில் இதன் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை ஏற்படுத்தும் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை பயங்கரவாதி தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாக ஐ.எஸ். அமைப்பினர் சமிபத்தில் தெரிவித்திருந்தனர். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்காசியாவில் உள்ள முக்கிய நாடுகளில் காலூன்ற நினைக்கும் இந்த அமைப்புக்கு ’ஐ.எஸ்.ஐ.எஸ். கோராசான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முஹம்மத் அமைப்பின் தலைவனான பயங்கரவாதி ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கடந்த முதல் தேதியன்று அறிவித்தது.
இதைதொடர்ந்து, தெற்காசிய நாடுகளில் தலைதூக்கி வருவதாக நம்பப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கிளைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் சுமார் 150 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததால் இந்த அமைப்புக்கு சர்வதேச தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
2013-ன் இறுதிக்கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014 தொடக்கத்தில் இருந்து ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ஆயிரம் வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
ஆனால் ஈராக், சிரியாவில் இதன் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை ஏற்படுத்தும் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை பயங்கரவாதி தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாகக் கூறியுள்ளனர் ஐ.எஸ். அமைப்பினர். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய கிளைக்கு அரபு பெயர் "ஹிந்த் இன் வாலே" என பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் அமாம் நியூஸ் ஏஜென்சி இதனை தெரிவித்துள்ளது. இந்த கூற்றை ஒரு மூத்த ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி நிராகரித்தார்.
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனும் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, வடகிழக்கு சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருவரும் ஒப்புக்கொண்டனர்.

சமீபத்தில் மன்பிஜ் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #SyriaIssue #Trump #Erdogan