என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Iswaran"
- மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.
- கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சமீபத்தில், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் தெரு நாய்கள் கடித்து இறந்துள்ளன.
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வாதாரத்தை அரசு சிந்திக்க வேண்டும். பூங்காவில் சிறுவர்களையும், தெருக்களில் பெண்களையும் நாய்கள் கடிப்பதை பார்க்க முடிகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செயல்படுத்த தவறினால், நாய்கள் அனைத்தையும் கடித்து பழகிவிடும்.
தெரு நாய் கடித்து ஆடு உள்ளிட்டவை இறந்தால், அடுத்த நாளே இழப்பீடு வழங்கவும், நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இப்பிரச்சனையில் போதிய முயற்சி இல்லை. மக்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட வில்லை என்பது வருத்தம்.
ஈரோடு கிழக்கில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர். இது, இந்த ஆட்சியின் செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின் முதல்வர் இன்னும் வேகமாக செயல்படுவதை பார்க்க முடிகிறது.
அதேநேரம், ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி, போலியான வெற்றி என இ.பி.எஸ்., கூறுவதை ஏற்க முடியாது. கடந்த இடைத் தேர்தலில் பெற்ற ஓட்டை விட தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளதை சிந்திக்க வேண்டும்.
கள்ளச் சாராய சாவு, அதற்கான கொலைகள், மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை போன்றவை தொடர்ச்சியாக நடப்பவை, இதில் அரசு நடவடிக்கை எடுத்தாலும், சம்பவங்கள் தொடர்வதை பார்க்க முடிகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை தேவை.
அ.தி.மு.க.,வில் செங்கோட்டையன் செயல்பாட்டை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். அவர் 'திஷா' கூட்டத்தில் பங்கேற்றதில் எந்த தவறுமில்லை. ஒரு எம்.எல்.ஏ., என்ற முறையில் பங்கேற்பது சரிதான்.
அதேநேரம், அவரது கட்சி விசுவாசத்தை யாருடனும் ஒப்பிட முடியாது. இருந்தாலும், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வில்லை என்பது போன்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருப்பது, உட்கட்சி பிரச்சனை.
இதை சரி செய்தால், அவர்கள் ஒன்றிணைவார்கள். 'சிஓட்டர்ஸ்' கருத்து கணிப்பில் தி.மு.க., 5 சதவீதமும், பா.ஜ.க, 3 சதவீதமும் கூடுதல் ஓட்டுக்களை பெற்றுள்ளதை, தனிப்பட்டதாக பார்க்கக்கூடாது. அது தி.மு.க.,வுக்கானது மட்டுமல்ல. அக்கூட்டணிக்கானது.
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு ஒய் பாதுகாப்பு ஏன் என்று யாருக்கும், புரியவில்லை. அவரிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. மாநில அரசோடும் கலந்து பேசவில்லை, இதனால் பாதுகாப்புக்கான என்ன அரசியல் இருக்கிறது என்று தேர்தல் நெருங்க நெருங்க தான் காரணம் முழுமையாக தெரியவரும்.
இந்திய கூட்டணியில் பிளவு என்று சொல்வதற்கு எல்லாம் முதல்வர் தெளிவாக விளக்கம் சொல்லிவிட்டார். தோழமை கட்சிகள் போராட்டம் திட்டமிட்டு செய்வதில்லை, ஜனநாயாக ரீதியாக தான் செய்கிறார்கள் என்று முதல்வர் சொல்லி விட்டார்.
தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். கள் இயக்கம் நல்லசாமி, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார்.
இதன் மூலம் விவசாயிகள் அதிக பயன் பெறுவார்கள். பொருளாதார ரீதியாக மேம்படுவர். இதுபற்றி, 3 முறை சட்டசபையிலும், முதல்வரிடமும் பேசி, கள்ளுக்கான தடையை நீக்க கோரி உள்ளேன். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என நானும் ஆதரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- திமுகவுக்கு எதிரான வாக்குகளை பெறுவதற்காக சீமான் இவ்வாறு அவர் பேசுகிறார்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு அளிக்கு"ம் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது. மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது இந்த கருத்தை அவர் கூறுவது இடைத்தேர்தலை மனதில் வைத்து பேசுகிறார் என்று அர்த்தம்.
திமுகவுக்கு எதிரான வாக்குகளை பெறுவதற்காக சீமான் இவ்வாறு அவர் பேசுகிறார் என்று நினைக்கிறேன். பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை கூறி மக்களை திசை திருப்ப முடியாது" என்று தெரிவித்தார்.
- பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார்
- வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும்
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பாக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஈரோடு தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈஸ்வரன் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அழித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கட்சியை பாஜக அழித்துவிடும். அதிமுக என்ற கட்சி இருக்காது.
எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் பேசியுள்ளார்.
- தமிழகம்-சிங்கப்பூர் இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை.
- ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தியதாக முதலமைச்சர் தகவல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது முகாம் இல்லத்தில், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்புத்துறை மந்திரி ஈஸ்வரன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சிங்கப்பூர் நாட்டு துணை தூதர் எட்கர் பாங்க் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/09/18/1763835-mk-stalin-1.jpg)
பின்னர் இந்த சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு அமைச்சர் ஈஸ்வரன் அவர்களை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்குள்ள பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழ் மொழியின் இந்த அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி (பொறுப்பு) ஈஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்று அங்குள்ள தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்தது.
அதில் மந்திரி கூறுகையில், ‘தமிழ் மொழி தொடர்பான அரசின் கொள்கை முடிவும், ஆதரவும் தெளிவாக உள்ளது. மற்றபடி ஒவ்வொரு நாளும் தமிழை பேசி அதை வாழும் மொழியாக மாற்றுவது அனைத்தும் அந்த சமூகம், குறிப்பாக இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது’ என்றார். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கு, தமிழ் மொழி திருவிழா நடத்துவது சிறந்த வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். #Singapore #Tamil #OfficialLanguage