என் மலர்
நீங்கள் தேடியது "JPC"
- கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்று மக்களவையில் கொண்டு வந்தார்.
- மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது
ஒரு நாடு, ஒரு தேர்தல் தொடர்பான பாராளுமன்ற கூட்டு குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை 2025 மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்துள்ளது.
கூட்டுக் குழுவின் தலைவர் பிபி சவுத்ரி, ஒரே நாடு, ஒரு தேர்தல் மசோதா (129 வது சட்டத்திருத்தம் 2024), யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா, 2024 ஆகிட்டவற்றின் மீதான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்று மக்களவையில் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்தது. இதற்கிடையே இன்று மதியம் 3 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆராயும் கூட்டுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கையின் பேரில் மசோதாவானது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மக்களவையில் மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்.
- மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதவை நிறைவேற்ற வேண்டுமென்றால் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத நிலையில் மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்ப்பை மீறி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கான வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதனால் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டுக்குழு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் பிரதிநிதிகளாக எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி, சுக்தியோ பகத், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோரை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு பிரியங்கா காந்தி முதன்முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் முக்கிய மசோதா குறித்து முடிவு எடுக்கும் குழுவில் காங்கிரஸ் சார்பில் இடம் பிடிக்க உள்ளார்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
- 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் பல சட்டத்திருத்தங்கள் செய்ய வேண்டும் என ராம்நாத் கோவிந்த் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.
இதன்படி 3 சட்டப்பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என மொத்தம் 18 சட்டத்திருத்தங்கள் செய்யவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடந்த 12-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். கூட்டுக்குழு பரிசீலனையின்போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி மற்றும் மணீஷ் திவாரி, தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் தர்மேந்திர யாதவ், ஹரீஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஷிண்டே, அனுராக் சிங் தாக்கூர், சம்பித் பத்ரா ஆகியோரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
- 44 திருத்தங்கங்களுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
- எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பாராமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இந்த குழு ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பிடித்திருந்துள்ளனர்.
இந்த குழு மத தலைவர்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்துகளை கேட்டது. குழுவில் உள்ள எம்.பி.க்களும் பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தினர்.
இந்த நிலையில் 44 மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், இதில் 14 மாற்றங்களுக்கு இந்த குழு ஒப்பந்தல் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். வழங்கிய பல்வேறு பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
14 மாற்றங்களை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு ஜனவரி 29-ந்தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 31-ந்தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நவம்வர் 29-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், பிப்ரவரி 13-ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. அன்றைய தினம் பட்ஜெட் தொடரின் கடைசி நாளாகும்.
"44 மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆறு மாதங்களாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் திருத்தங்களை பெறப்பட்டது. இது எங்களுடைய கடைசி ஆலோசனைக் கூட்டம்.
மெஜாரிட்டி வாக்கு என்ற அடிப்படையில் 14 பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாற்றங்களை முன்வைத்தனர். அவைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. அவர்களுடைய திருத்தங்களுக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிர்த்து 16 வாக்குகளும் பதிவாகின" என ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.
இந்த கமிட்டியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தலைவர் மீது குற்றம்சாட்டினர். டெல்லி தேர்தல் கண்ணோட்டத்தோடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்கிறார் என மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர்.
கூட்டத்தின்போது ரகளையில் ஈடுபட்டதாக 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய நேரம் தரப்படவில்லை எனவும் புகார் அளித்தனர்.
வக்பு வாரிய திருத்த மசோதாவில், வக்பு வாரிய நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் குறித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம் அல்லாத நபர்கள், குறைந்த பட்சம் இரண்டு பெண்கள் குழுவில் இடம் பெற வழிவகை செய்கிறது.
ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய அமைச்சர், மூன்று எம்.பி.க்கள், இரண்டு முன்னாள் நீதிபதிகள், நாடு தழுவிய அளவில் புகழ்பெற்ற நான்கு பேர்கள், மூத்த அரசியல் அதிகாரிகள் இடம் பெறும் வகையில் சட்ட திருத்த மசோதா உள்ளது. கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வக்பு வாரியம் நிலத்திற்கு உரிமை கோர இயலாது.
- மத்திய அரசின் இசைக்கு நடனமாடுகிற நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் இருக்கிறார்.
- இந்திய நாட்டிற்கு காவி வண்ணம் பூசுவதற்கு ஒரு நல்ல பெயிண்டராகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் செயல்படுகிறார்.
வக்பு வாரிய திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பாராமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இந்த குழு ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பிடித்திருந்துள்ளனர்.
இந்த குழு மத தலைவர்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்துகளை கேட்டது. குழுவில் உள்ள எம்.பி.க்களும் பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தினர்.
இந்த நிலையில் 44 மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், இதில் 14 மாற்றங்களுக்கு இந்த குழு ஒப்பந்தல் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். வழங்கிய பல்வேறு பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
14 மாற்றங்களை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு ஜனவரி 29-ந்தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 31-ந்தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மெஜாரிட்டி வாக்கு என்ற அடிப்படையில் 14 பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாற்றங்களை முன்வைத்தனர். அவைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. அவர்களுடைய திருத்தங்களுக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிர்த்து 16 வாக்குகளும் பதிவாகின" என ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.
இந்த கமிட்டியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தலைவர் மீது குற்றம்சாட்டினர். டெல்லி தேர்தல் கண்ணோட்டத்தோடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்கிறார் என மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர்.
கூட்டத்தின்போது ரகளையில் ஈடுபட்டதாக 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய நேரம் தரப்படவில்லை எனவும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், வக்பு வாரிய மசோதாவிற்கு பாராமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்ததை கண்டித்து டெல்லியில் எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மத்திய அரசின் இசைக்கு நடனமாடுகிற நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் இருக்கிறார். இந்திய நாட்டிற்கு காவி வண்ணம் பூசுவதற்கு ஒரு நல்ல பெயிண்டராகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு.
இஸ்லாமியர்களின் 60% சொத்துக்களை பறிக்கவே, வக்பு சட்டத்திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற துடிக்கிறது பாஜக அரசு. அதற்கு உடந்தையாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மத்திய அரசு பயன்படுத்துகிறது. வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்" என்று தெரிவித்தார்.
- முஸ்லிம்கள் நிலம், சொத்துக்கள், மத விவகாரத்தை நிர்வகிக்கும் சுதந்திரத்தை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
- எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு இன்று [ஜனவரி 29] ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினர்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த ஆண்டு மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது.
இது முஸ்லிம்கள் நிலம், சொத்துக்கள், மத விவகாரத்தை நிர்வகிக்கும் சுதந்திரத்தை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனைத்தொடர்ந்து இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். பலமுறை கூடிய கூட்டுக்குழு அமளியிலேயே கழிந்தது. மொத்தம் 44 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அதில் 14 ஏற்கப்ட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் திருத்தியமைக்கப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. திருத்த மசோதாவுக்கு குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் பேசுகையில், பெரும்பான்மையுடன் வரைவு மசோதா ஏற்கப்பட்டது. 656 பக்கங்கள் கொண்ட கூட்டுக்குழு அறிக்கையை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தோம். நாளை இதை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
- எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
- வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.
புதுடெல்லி:
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினர்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த ஆண்டு மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது.
இது முஸ்லிம்கள் நிலம், சொத்துக்கள், மத விவகாரத்தை நிர்வகிக்கும் சுதந்திரத்தைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, இந்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். பலமுறை கூடிய கூட்டுக்குழு அமளியிலேயே கழிந்தது. மொத்தம் 44 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு அதில் 14 ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
இதற்கிடையே, திருத்தி அமைக்கப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று ஒப்புதல் வழங்கியது. திருத்த மசோதாவுக்கு குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் பேசுகையில், பெரும்பான்மையுடன் வரைவு மசோதா ஏற்கப்பட்டது. 656 பக்கங்கள் கொண்ட கூட்டுக்குழு அறிக்கையை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தோம். இதை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற கூட்டுக்குழுவினர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் வக்பு வாரிய திருத்த மசோதாவை சபாநாயகரிடம் வழங்கினர்.
- விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.
- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வுகள் இன்று தொடங்குகின்றன. இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவம் நிலையில், இது தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.
கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வுகள் துவங்க இருக்கிறது. அந்த வகையில், இன்று பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதாவில் 14 திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், கூட்டுக்குழு அறிக்கையை ஜெகதாம்பிகா பால் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்பித்தார். இந்த கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சூழலில் இன்று வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் ஜனாதிபதி உரைக்கு பதிலளிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு.
- உயிரிழப்பு எண்ணிக்கையை மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
மகா கும்பமேளா திருவிழாவையொட்டி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், அதாவது ஜனவரி 29-ந்தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை ஒரே நேரத்தில் லட்சக்கணக்காக பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
ஆனால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைப்பதாக மாநில அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பிரயாக்ராஜ் கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என பட்ஜெட் கூட்ட விவாதத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி பேசுகையில் "45 நாட்கள் கும்பமேளா திருவிழாவிற்கான 2500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய மற்றும் துரதிருஷ்டவசமான கூட்ட நெரிசல் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தவர்களின் எணணிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நிவாரணம் அல்லது இறப்பு சான்றிதழ் வழங்குதல் குறித்து எந்த தெளிவும் இல்லை.
மாநில அரசின் குறைபாடு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை அல்லது விசாரணை மத்திய அரசால் ஏன் எடுக்கப்படவில்லை?, நீங்கள் அதை ஒரு உள்நாட்டு பிரச்சனையாக ஆக்கிவிட்டீர்கள். அது இனி ஒரு மாநில பிரச்சினை அல்ல. மகா கும்பமேளா தொடர்பான புகார்களை விசாரிக்க நாடாளுமன்றத்தால் ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரபேல் விவகாரம், மேகதாது விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. கூட்டத்தொடரின் 7-வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்களும், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதுஒருபுறமிருக்க ஆளும் பாஜக எம்பிக்கள் சிலர், தங்கள் இருக்கைகளில் இருந்தபடியே சில பிரச்சினைகளை எழுப்பினர். இதன் காரணமாக அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. ரபேல் ஒப்பந்தத்தால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ரபேல் விவகாரம் தொடர்பாக அரசு விவாதிக்க தயாராக உள்ளது என்றார். ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.
கோரிக்கை ஏற்கப்படாததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மற்ற கட்சிகளின் எம்பிக்களும் அங்கு சென்று அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோது வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. #WinterSession #CongDemandsJPC