என் மலர்
நீங்கள் தேடியது "Kadambur"
- வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
- தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக திம்பம், தாளவாடி, ஆசனூர், கடம்பூர் வனப்பகுதியில் மழை பரவலாக பெய்து வருவதால் வனப்பகுதியில் பசுமையான சூழ்நிலை உள்ளது. மரம், செடி, கொடிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் இருந்து குத்தியாலத்தூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது குத்தியாலத்தூரில் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து ஒரு புலி மற்றொரு வனப்பகுதிக்கு சென்றது.
இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைத்தனர். பின்னர் தங்களது வாகனங்களை சிறிது தூரம் முன்பே நிறுத்தி விட்டனர். அந்த புலி மெதுவாக சாவகாசமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சிறிது தூரம் நடமாடி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
புலி வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். புலி சாலையை கடந்து செல்லும் காட்சியை வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது குத்தியாலத்தூர் வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் சொல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றனர்.
- கடம்பூர் பேரூராட்சி 1, 2 மற்றும் 11-வது வார்டுகளில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ராஜேஷ்வரி, சிவகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
- மொத்தம் உள்ள 12 வார்டில் தி.மு.க. 6 இடங்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடத்தையும், சுயேட்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றினர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி 12 வார்டுகளை கொண்டது.
கடம்பூர் பேரூராட்சி
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
கடம்பூர் பேரூராட்சி 1, 2 மற்றும் 11-வது வார்டுகளில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, ராஜேஷ்வரி, சிவகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. மற்ற 9 வார்டுகளிலும் போட்டி இருந்ததால் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாததால் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. அதில் ஏற்கனவே மனுதாக்கல் செய்த வேட்பாளர்களை கொண்டு தேர்தல் நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
தேர்தல்
அதன்படி 1, 2 மற்றும் 11-- வது வார்டுகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் தவிர மற்ற 9 வார்டுகளுக்கும் கடந்த 29-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் கனகமணி (3-வது வார்டு) , தாளபுஷ்பம் (4), தமிழரசி (5), சரஸ்வதி (6), மாரீஸ்வரி (7), செல்லத்துரை (8), ஜெயராஜ் (9), ரெங்கசாமி (10), முத்துமாரி (12) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மொத்தம் உள்ள 12 வார்டில் தி.மு.க. 6 இடங்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ், ம.தி.மு.க. தலா ஒரு இடத்தையும், சுயேட்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றினர்.
பதவியேற்பு
இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.
மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அபுல்காசிம் வெற்றி பெற்ற 12 உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மறைமுக தேர்தல்
நிகழ்ச்சியில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், கடம்பூர் நகர செயலாளர் பாலகுமார், அரசு வக்கீல் ராமச்சந்திரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஸ்வநாதராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடம்பூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் கடம்பூர் பேரூராட்சி அலுவலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 9 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
- 9 வார்டுகளின் பதிவான வாக்கு எந்திரங்கள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 9 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
இந்த வார்டுகளிலும் தி.மு.க. சார்பில் 7 வேட்பாளர், காங்கிரஸ், ம.தி.மு.க. சார்பில் தலா ஒரு வேட்பாளளும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சைகள் 13 பேர் என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.
9 வார்டுகளில் மொத்த ஓட்டுக்கள் 2,470 பேர் தகுதியான நிலையில் 1,598 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது 65 சதவிகிதம் ஆகும். 9 வார்டுகளின் பதிவான வாக்கு எந்திரங்கள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் 9 வார்டுகளில் பதிவான வாக்குகள் நாளை ( 1-ந் தேதி ) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கபடும்.
- விழாவையொட்டி ரூ.4½ கோடியில் திருப்பணிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பெருமாள், பிள்ளையார், சிவன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி கோபுரங்கள் கட்டப்பட்டது.
- இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எஸ்.வி.எஸ்.பி.சந்திரராஜா மற்றும் கடம்பூர் ஜமீன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
கயத்தாறு:
கடம்பூரில் சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிசேக விழா நடைபெற்றது. இதையொட்டி ரூ.4½ கோடியில் திருப்பணிகள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக பெருமாள், பிள்ளையார், சிவன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனி கோபுரங்கள் கட்டப்பட்டது.
கடந்த 5 நாட்களாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பட்டர்கள், சென்னை அகலோம் பட்டர்கள் கும்பகோணம் பட்டர்கள் உள்பட 51 பட்டர்கள் பல்வேறு யாகங்கள், ஹோமங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை 11 கும்பங்களுக்கு அபிேஷகத்துடன் கவசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கயத்தாறு யூனியன் தலைவர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்மண்டல பொறுப்பாளரும், தலைமை க்கழக செயலாளருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, கடம்பூர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் நாகராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எஸ்.வி.எஸ்.பி.சந்திரராஜா மற்றும் கடம்பூர் ஜமீன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.