என் மலர்
நீங்கள் தேடியது "karthi chidambaram"
- ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
- உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.
எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல்.
- அருண் கோயல் திடீரென பதவி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் கோயல் திடீரென பதவி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது:-
விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது.
பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது.
- மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை:
சிவகங்கை எம்.பி. கார்த்திசிதம்பரம் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது. பா.ஜ.க. கூட்டணிக்கு மறைமுகமாக அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிறதோ என்று சந்தேகம் உள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அ.தி.மு.க. கூட்டணி கணிசமான வாக்குகளை அந்த தொகுதியில் பெற்றுள்ளது.
ஒரு பெரிய அரசியல் கட்சி தேர்தல் நடத்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம். டெல்லியில் இருந்து அழுத்தம் அளித்து பா.ஜ.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியதால் தேர்தலை புறக்கணித்து உள்ளனரா என்ற சந்தேகம் உள்ளது.
தமிழகத்தில் ஒத்தை சீட்டு கூட வாங்கலையா என்று கையை உயர்த்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்டதாக நான் கருதுகிறேன். இந்தியா கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கு பெற்று வாதாடுவோம்.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இந்து கோவில்களை அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புதிதாக பதவி ஏற்று உள்ளவர்கள் அறியாமையில் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இந்து கோவில்கள், அறநிலையத்துறை அரசாங்கத்திடம் தான் இருக்க வேண்டும் . நீட் தேர்வில் வெளிப்படை தன்மை என்பது கிடையாது. தேர்வு நடந்த முறையில் வைத்து நான் சொல்கிறேன். எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்
மாநில உரிமைகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது தேவையில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. சுமூகமாகத்தான் உள்ளது. கோயம்புத்தூரில் கூட நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாங்கள் இருவரும் பரஸ்பரமாக தான் உள்ளோம். எந்தவிதமான பனிப் போரும் கிடையாது. வரும் காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.
- நாம் நமது கருத்தை ஆழமாக பதிவு செய்தால் தான் மக்களை நம்மை திரும்பி பார்ப்பார்கள்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.
ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கார்த்தி சிதம்பரம் பேசியதாவது,
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொடுங்கொலை செய்யப்பட்டார். இந்தியாவை ஆண்ட கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டதற்கு இன்று வரை இந்த அரசு ஒருவரை கூட கைது செய்யவில்லை. காவல்துறை என்கவுண்டர் செய்வது சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல.. அந்த வழக்கை முடிப்பதற்காக தான் என்கவுண்டர் செய்கிறார்கள். இப்போது கூலிப்படை கொலைகள் நடைபெறுகிறது அதை பற்றியும் நாம் பேசியாக வேண்டும். அதுபோல மின்கட்டண உயர்வு பற்றியும் நாம் பேசியாக வேண்டும். திருமாவளவனுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிட்டுகளுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? நாம் நமது கருத்தை ஆழமாக பதிவு செய்தால் தான் மக்களை நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.
- பெரியார் சர்ச்சை தேவையில்லாதது. நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.
- சீனா உருவாக்கியுள்ள AI கருவி உலகத்தையே தற்போது உலுக்கி வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், "பெரியார் சர்ச்சை தேவையில்லாதது. நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.
சீனா உருவாக்கியுள்ள AI கருவி உலகத்தையே தற்போது உலுக்கி வருகிறது. பங்குசந்தைகளில் பல நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனில் பலருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
பொருளாதாரம், வேலையின்மை என அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளன. ஆனால், என்ன உணவு சாப்பிட வேண்டும், தனிமனித உரிமைகள் இவைகள்தான் சர்ச்சை ஆகின்றன
நம் அரசியல் மேடை போகும் திசை மிகவும் வருத்தம் அளிக்கிறது. விஞ்ஞான ரீதியான, அறிவுபூர்வமான பொருளாதாரம் குறித்த விவாதங்கள் நடக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதனிடையே, விஜயின் அரசியல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு 'அரசியலில் கெளரவத் தோற்றம் போல விஜய் வருகிறார்' என்று கிண்டலாக பதில் அளித்தார்.
- இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.
- தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.
ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழும் ஆங்கிலமும் பயின்றாலே நமது மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நானும் அத்தகைய பள்ளியில் தான் படித்தேன். எனது மகளும் தமிழும், ஆங்கிலம் மட்டும் தான் பள்ளியில் படித்தார்.
மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்தினார்கள் என்றால் அது மறைமுகமாக இந்தி திணிப்பாக தான் பார்க்க வேண்டும். இந்தி திணிப்பை தமிழ்நாடு என்றும் ஏற்றுக் கொள்ளாது.
வடநாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வேலைக்கு வரும்போது யாரும் ஆத்திச்சூடியோ, திருக்குறளோ, தமிழ் இலக்கியமோ, இலக்கணமோ படித்துவிட்டு இங்கு வருவதில்லை.
தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தான் இங்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பிறகு பழகிக் கொள்கிறார்கள்.
நாமும் அவர்களுக்கு மொழி தெரியாததால் அவர்களை விரட்டி அடிப்பது கிடையாது. அதேபோல, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அவர்களும் பழகிக்கொள்வார்கள்.
யாருக்காவது இந்தி பயில வேண்டும் என்றால் சிபிஎஸ்இ பள்ளிகள், கேந்திரியா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இருக்கிறது. அங்கு படித்துக் கொள்ளலாம்.
ஆனால், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியை கட்டாயம் ஆக்குவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி மூன்றாவது மொழி என்றால் அவர்கள் இந்தியைதான் திணிக்க முயல்கிறார்கள்.
இது என்னவாகும் என்றால், எல்லாம் அரசு பள்ளிகளிலும் மூன்றாம் மொழிக்கான ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் பாஜக அரசு பீகார், உபியில் இருந்து ஆசிரியர்களை அனுப்புகிறோம் என்பார்கள்.
ரயில்நிலையங்கள், தபால் நிலையங்களில் எப்படி வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்களோ அதுபோல, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தமிழ்நாடு பள்ளிகளிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் சூழ்நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 7 நாள் வரை தங்களை அமலாக்க துறை கைது செய்யாமல் இருக்க அவகாசம் அளிக்க வேண்டும் மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்தது.
இதற்கு இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியாவை கைது செய்ய தடை இல்லை என்றும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. பாடகர் சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது- அரவிந்த் கெஜ்ரிவால்
- காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
- வாக்காளர் பட்டியலை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்.
புதுடெல்லி :
கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதை தொடர்ந்து, சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நீடித்து வருகிறார். தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23 அதிருப்தி தலைவர்கள் அடங்கிய ஜி-23 குழுவை சேர்ந்த சசிதரூர், இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறார். தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிடுமாறு அதிருப்தி குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், இக்குழுவில் உள்ள மற்றொரு எம்.பி.யான மணீஷ் திவாரி, இதே கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியல் வெளியிடப்படாது என்று காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார். யாராவது வாக்காளர் பட்டியலை சரிபார்க்க விரும்பினால், மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றும், யாராவது போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தால் அவர்களுக்கு பட்டியல் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலை வெளிப்படையாக வெளியிடாமல் எப்படி நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்த முடியும்? ஒருவேளை யாராவது போட்டியிட விரும்பினால், வேட்புமனுவை 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். கடைசியில், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி, வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, வாக்களிப்பவர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். பட்டியலை பார்ப்பதற்காக மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு ஏன் செல்ல வேண்டும்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவரது கருத்துக்கு சசிதரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
யார் யார் வாக்களிப்பார்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். இதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் இந்த கருத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு தேர்தலுக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் உள்ளது. அந்த பட்டியலை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்.
சீர்திருத்தவாதிகளை கிளர்ச்சி செய்பவர்களாக பார்க்கக்கூடாது. கட்சியை சீர்திருத்த விரும்பும் ஒவ்வொருவரும் ராஜினாமா செய்ய வேண்டுமா? அப்படியானால் கண்மூடித்தனமான ஆதரவாளர்கள்தான் கட்சியில் இருக்க வேண்டுமா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால், ஆட்சேபனை தெரிவிப்பவர்களை விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நான் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவரின் வேட்புமனுவை ஏதேனும் 10 மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் முன்மொழிந்தால் போதும்.
தேர்தல் நடைமுறை குறித்து என் சகாக்கள் ஏன் குழப்பம் விளைவிக்கிறார்கள்? வெளிப்படையான முறையை கொண்டுள்ள நாம் பெருமைப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.
தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. துத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி, அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஓசூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை பெற்றனர்.ங

வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித் ஷா, காசியாபாத்தில் வி.கே.சிங் (பாஜக) ஆகியோர் முன்னிலை பெற்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கானை விட பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்தங்கினார். போபால் தொகுதியில் சாத்வி பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்தங்கினார்.
வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முன்னிலை பெற்றார். இதேபோல் கோரக்பூரில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன், அனன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுபிரியோ முன்னலை பெற்றார். முசாபர்நகரில் தற்போதைய பாஜக எம்பி சஞ்சீவ் பால்யன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்கா பின்தங்கினார்.
காரைக்குடி:
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது. கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சன நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறும்போது, நான் தமிழக காங்கிரஸ் தலைவராக வருவதை ப.சிதம்பரம் தடுத்து நிறுத்திவிட்டார். மேலும் கட்சியிலும் பொறுப்புகள் கிடைக்க விடாமல் செய்தார். மொத்தத்தில் எனது வளர்ச்சியை தடுத்து விட்டர்.
ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். கோர்ட்டுக்கு போக வேண்டியவர் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப் போவது உண்மை என்றார்.
இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் அலுவலகத்துக்கு சுதர்சன நாச்சியப்பன் திடீரென வந்தார். அவரை சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி வரவேற்றார்.
சுதர்சன நாச்சியப்பன் கட்சி அலுவலகத்துக்கு வந்தது குறித்து புதுவயலில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த கார்த்தி சிதம்பரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் காரைக்குடி தேர்தல் அலுவலகத்துக்கு வந்து சுதர்சனநாச்சியப்பனை சந்தித்தார்.
அதன்பின்னர் சுதர்சன நாச்சியப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் கூட்டம் இங்கு நடைபெறுகிறது என்பதை அறிந்து ஒரு தொண்டனாகவே இங்கு வந்தேன். காங்கிரசுக்கு எதிராக தீய சக்திகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதனை மக்கள் நம்ப வேண்டாம். கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற அவரோடு இணைந்து பணியாற்றுவேன். சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #karthichidambaram #congress #sudharsananatchiappan
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 தொகுதிக்கான வேட்பாளர்கள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்பட்டனர்.
இதில் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி சென்னையில் நிருபர்களிடம் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (நேற்று) மாலை அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
அதன்படி நேற்று மாலை சிவகங்கை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் கார் மூலம் சிவகங்கை தொகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தொழில் வளர்ச்சி என்பது எதுவும் இல்லை. எனவே தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலை வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர் சிவகங்கை புறப்பட்டு சென்றார். #KartiChidambaram #RahulGandhi #MKStalin