என் மலர்
நீங்கள் தேடியது "Kathir Anand"
- தி.மு.க. பொதுச் செயலாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்.
- இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சென்னை:
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கதிர் ஆனந்த் எம்.பி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்துசெய்ய முடியாது என அதிரடியாக தெரிவித்த சென்னை ஐகோர்ட், கதிர் ஆனந்த் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
- 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார் கதிர் ஆனந்த்.
- வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது.
அதில் முக்கியமானவர் கதிர் ஆனந்த்... அமைச்சர் துரைமுருகன் மகனான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
கதிர் ஆனந்த் கட்சி பணி மற்றும் மக்கள் பணி இரண்டிலும் சிறப்பான வகையில் செயல்பட்டதாலேயே மீண்டும் ஒருமுறை கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அதன்படி அவரின் முக்கிய செயல்பாடு என எடுத்துக் கொண்டால், எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது, வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது போன்றவை மிக முக்கியமானவையாகும். வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது என கூறினால் அது மிகையாகாது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்திருக்கிறார்.
இதனாலேயே அவரை மீண்டும் வேட்பாளராக கட்சி தலைமை தேர்வு செய்ய வைத்துள்ளது.
- வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேலூர் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், என்ன எல்லாம் பளபளப்பாக வந்து இருக்கீங்க? 1000 ரூபாய் தான் காரணமா? என பேசுவதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.
ஆனால் நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், என்ன பளபளப்பாக வந்து இருக்கீங்க ? என கதிர் ஆனந்த் கேட்க, அங்கிருந்த மக்கள் 1000 ரூபாய் தான் என சொல்ல... அதற்கு கதிர் 1000 ரூபாய் தான் காரணம் என பதில் பேசுகிறார். மேலும், "தளபதியின் ஆட்சியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க மனம் நெகிழ்கிறது" என கதிர் ஆனந்த் கூறினார். இதனால் அங்குள்ள மக்கள் மனம் நெகிழ்ந்து, மீண்டும் நீங்கள் தான் வெற்றிபெறுவீர்கள் என கூறுகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ காண இங்கே க்ளிக் செய்யவும்...
- கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார்.
- பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.
வேலூர் :
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், பா.ஜ.க. சார்பில் ஏ.சி.சண்முகன், அ.தி.மு.க. சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் களம் காண்கிறார்கள்.
அதிக அளவு முஸ்லிம்கள் வேலூர் தொகுதியில் வசிப்பதால், அவர்கள் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி இங்கு அதிகம். அதனால் இந்த முறையும் அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட கதிர் ஆனந்த் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.
அதே நேரம் பா.ஜ.க. தேர்தல் பணிகளை இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. வேலூரின் முன்னாள் எம்.பி., ஏ.சி.சண்முகம் பாஜக சார்பில் களம் காண்பதால், திமுக - பாஜக - அதிமுகவுக்கு இடையே போட்டி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏ.சி.சண்முகம் கதிர் ஆனந்திடம் தோற்றார். அதனால் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேலூர் தி.மு.க. கோட்டை என்பதால் கதிர் ஆனந்த்தை வீழ்த்துவது எளிதல்ல.
அதிமுகவும் வன்னியரான பசுபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் கதிர் ஆனந்த் தான் பலமான வேட்பாளராக இருப்பார் என திமுக அவரை தேர்ந்தெடுத்தது. பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத பசுபதி என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தியது கட்சியினருக்கே அதிர்ச்சி தான். பாஜகவில் இருந்து மக்கள் நலனுக்காக பிரிந்து விட்டோம் என்பதை மட்டுமே முன்நிறுத்தி அதிமுக நிர்வாகிகள் வாக்கு கேட்டு வருகின்றனர். இது எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.
- வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
- வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தேர்தலின்போது தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கதிர்ஆனந்துக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது தாமோதரன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் இருந்து தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.10.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், வாக்குச்சாவடி விவரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டு கட்டுகள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் அப்போதைய தேர்தல் கணக்கு அலுவலர் சிலுப்பன் அளித்த புகாரின் பேரில் தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த், தி.மு.க பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக கதிர் ஆனந்த் எம்.பி. இன்று கோர்ட்டில் ஆஜரானார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்
- தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனும் டெல்லி சென்றுள்ளார்.
- ‘சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்'
சென்னை:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் தி.மு.க. எம்.பி.யுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. ஜனவரி 3 ஆம் தேதி சோதனை துவங்கிய நிலையில், 44 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனும் சென்றுள்ளார்.
முன்னதாக, சென்னையில் புத்தக கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், 'வேலூரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து முடிந்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் சிரித்த முகத்துடன், 'சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்' என்று பதிலளித்தார்.
- 3 நாட்கள் தொடர்ந்து சோதனை நடந்தது.
- கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கம்ப்யூட்டரில் கிடைத்த தகவல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.
சென்னை:
அமைச்சர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த். வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு சொந்தமான என்ஜீனியரிங் கல்லூரியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் வீடு, துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர்கள் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 3 நாட்கள் தொடர்ந்து சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது டிஜிட்டல் பண பரிவரித்தனை, அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கம்ப்யூட்டரில் இருந்த ஆவணங்கள், கல்லூரியில் பணம் வைக்கப்படும் அறை ஆகியவற்றை அதிகாரிகள் சல்லடை போட்டு அலசினார்கள். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் பற்றி இதுவரை அமலாக்கத்துறை தகவல் எதுவும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் கதிர்ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த் வீட்டின் லாக்கரை உடைத்ததில் அதில் இருந்து ரூ.75 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கதிர் ஆனந்தின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை திரட்டி வருவதாகவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கம்ப்யூட்டரில் கிடைத்த தகவல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.
- கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
- கதிர் ஆனந்துக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது சோதனை நடத்தினார்கள்.
துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடியே 51 லட்சம் பணம் சிக்கியதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதையொட்டி சமீபத்தில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், ரூ.75 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி அமலாக்கத்துறை வட்டாரத்தில் நேற்று தகவல் வெளியானது. இதற்கிடையே கதிர் ஆனந்த் எம்.பி.யை விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. இன்று நேரில் ஆஜரானார் . காலை 10.30 மணி அளவில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குச் சென்ற அவரிடம் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு கதிர் ஆனந்த் எம்.பி. முழு ஒத்துழைப்பு அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து அவரை நேரில் அழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் டெல்லி மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

வருமானவரி சோதனை நடந்த 16 நாட்களுக்கு பிறகு தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதனால் தகுந்த விளக்கம் கூட அளிக்க முடியவில்லை.
தேர்தல் ரத்து என்பது சரியான நடவடிக்கை இல்லை. எங்கள் வெற்றியை தடுக்க சோதனை நடந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Loksabhaelections2019 #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission

ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை, சிறப்பு குழுக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிரசார கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்காக, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். கடந்த மாதம் 27-ந்தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுகிறது. கதிர் ஆனந்த் வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையின் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு இம்மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து விட்டது. #MadrasHC #MadrasHCdismissed #baningcandidature #Kanimozhi #KathirAnand #LSpolls
பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் முன்னாள் அமைச்சரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, டி.டி. வி.தினகரன் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்கள்.
மொத்தம் 23 வேட்பாளர்கள் வேலூர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
வெற்றியை பறிக்க அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. வார்டு வாரியாக பணம் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். மறுநாள் (30-ந்தேதி)யும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது.
சோதனையின்போது கணக்கில் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.
இந்த சோதனைக்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேலூரில் தேர்தலை நிறுத்த திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். என்றாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை கைவிடவில்லை. துரை முருகனின் கல்லூரி, பள்ளியிலும் சோதனை நடத்தினார்கள்.
இதற்கிடையே கடந்த 1-ந்தேதி காட்பாடி அருகே தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது சகோதரி வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அருகில் உள்ள சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகளில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த பணத்தை கணக்கிட்டபோது 11 கோடியே 48 லட்சம் ரூபாய் இருந்தது. ஒவ்வொரு பணக்கட்டு மீதும் வார்டு எண்கள் எழுதப்பட்டு இருந்தன. எனவே அந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பணம் பதுக்கி வைத்திருந்த தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து பூஞ்சோலை சீனிவாசனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரி கணவர் தாமோதரன் ஆகியோர் மீது தலா 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்வது பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் இது தொடர்பாக காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி னார்கள்.
முடிவில் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கதிர்ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் பணப்பட்டு வாடா செய்ய ஏற்பாடுகள் நடந்து இருப்பது உறுதியானதால், அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து பணம் சிக்கியது பற்றிய தகவல் அறிக்கையை வருமான வரித்துறையிடம் இருந்து தமிழக தேர்தல் ஆணையம் பெற்றது.
அந்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் வேலூர் தொகுதி நிலவரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.

ஆனால் நேற்று மாலை இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற திடீர் பரபரப்பு உருவானது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தனது வேட்பு மனுவில் தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும் பணப்பட்டுவாடாவுக்கு கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்ட அறிவிக்கையில் ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்து போட்டு இருப்பதால் அதை ரத்து செய்ய ஒப்புதல் கேட்டு ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்று காலை வரை ஜனாதிபதி மாளிகையில் இருந்து தேர்தல் ரத்து தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்று காலை தேர்தல் ஆணையம் அதை மறுத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண் கூறியதாவது:-
வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை இடைத்தேர்தல் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #VelloreConstituency