என் மலர்
நீங்கள் தேடியது "katrina kaif"
- அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் மெரி கிறிஸ்துமஸ்.
- இப்படத்தின் ரிலீஸ் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர்.

மெரி கிறிஸ்துமஸ்
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததாலும் திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.
- அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.
முன்னணி நடிகையான நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ஒரிஜினல் புகைப்படம்
இந்நிலையில், தற்போது கத்ரீனா கைப்பின் டீப் ஃபேக் (deep fake) புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், கத்ரீனா கைப் 'டைகர் 3' படத்திற்காக ஒரு துண்டு அணிந்து ஒரு அதிரடி காட்சியை செய்கிறார். ஆனால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தில் நடிகை கத்ரீனா கைப் அதே போஸில் ஆனால் மாற்றப்பட்ட ஆடையுடன் காட்டப்படுகிறார். இந்த புகைப்படம் சில மணி நேரங்களில் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இருந்தும் இந்த புகைப்படத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
- நடிகை ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
- அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து deep fake மூலம் 'டைகர் 3' திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப்யின் சண்டை காட்சி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ deep fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
- இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.
டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஒரு நபரின் உருவத்தில், வேறொரு நபரின் முகத்தை துல்லியமாக பதியச் செய்து போலியாக சித்தரிப்பதாகும்.

சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் மூலமாக நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், ஆலியா பட் என பலரின் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பலர் இந்த டீப்ஃபேக் (Deepfake) வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.
இதையடுத்து இது போன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், பல குழப்பங்களை உருவாக்கிய டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் தற்போது எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்போன போக்கிலே' பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் பல குழப்பங்களை செய்த டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் தற்போது தான் அருமையான ஒரு செயலை செய்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
A.I மூலம் மறுபடியும் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்தால் அந்தப் படம் கண்டிப்பா இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் pic.twitter.com/1cZXYZnYKs
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) November 28, 2023
- படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்.
- படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான, பெரிதும் எதிர்பார்க்கப்படும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு வசீகரமான அனுபவத்தை வழங்கும்.
மெரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் இயக்கத்தில் பணியாற்றியது குறித்து நடிகை கத்ரினா கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் சாருடன் பணியாற்றியது எனது கனவு நினைவானது என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு கிடைத்த நம்ப முடியாத நல்வாய்ப்பு என்று இதைச் சொன்னால் மிகையாகாது. தனித்துவமிக்க இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் சாரின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவது வேறு ஓர் உலகத்தில் நுழைந்ததைப் போலவே இருக்கும். நல்ல மனிதராகவும் சிறந்த படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்."
"அவருடன் பணியாற்றியது, குறிப்பாக இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது. நான் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் முதல் நாளிலிருந்து படத்தின் உருவாக்கத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். இப்போது படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
- சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது.
- சிஎஸ்கே அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் வருகிற மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் உறுதியாக இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் அடுத்ததுடத்து வெளிவருகின்றன. சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது. தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அது என்னவென்றால், அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனவே எதிர்வரும் சீசனில் சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரினா கைப்பும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று போட்டிகளையும் நேரில் கண்டுகளித்து அணியை ஊக்கப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நடிகை கத்ரீனா கைஃப் வாக்களிக்காதது பெரும் சர்ச்கையை ஏற்படுத்தியது.
- பிரிட்டன் குடியுரிமையை கத்ரீனா கைஃப் வைத்துள்ளார். இதனால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டது.
பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப்-க்கும் நடிகர் விக்கி கவுஷலுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின. இதுகுறித்து அத்தம்பதிகள் கருத்துகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து மகாராஷ்டிராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நடிகை கத்ரீனா கைஃப் வாக்களிக்காதது பெரும் சர்ச்கையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை கத்ரீனா கைஃப் இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளார். கத்ரீனாவின் தந்தை முகமது கைஃப் காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் ஒரு பிரிட்டன் தொழிலதிபர். அதேபோல், அவரது தாயார் சுசான் டர்கோட் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் என்பதால், பிரிட்டன் குடியுரிமையை கத்ரீனா கைஃப் வைத்துள்ளார். இதனால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், லண்டனில் சாலையில் நடந்து செல்லும் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுஷலின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பது உண்மை என்பது தெளிவாகியுள்ளது.
கத்ரீனா உண்மையில் கர்ப்பமாக இருப்பதாகவும், அவரும் அவரது கணவர் நடிகர் விக்கி கவுஷலும் லண்டனில் முதல் குழந்தையை வரவேற்பதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
- 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிவியலின் சமீபத்திய பிரசவமான ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பலதரப்பட்ட நன்மைகளை ஏஐ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது.
அந்த வகையில் ஏஐ தொழிநுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் பலரது வாழ்க்கையுடன் விளையாடத் தொடங்கியுள்ளது. வீடியோவில் உள்ளவரின் முகத்துடன் வேறு ஒருவரின் முகத்தை இணைத்து வீடியோவில் உள்ளவர் செய்யும் செயல்களை வேறு ஒருவர் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இதைப் பயன்படுத்தி பிரபலங்களின் முகத்தை விரசமான வீடியோக்களில் இணைத்து இணையத்தில் சிலர் உலாவ விடுகின்றனர்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து டீப் பேக்கின் அபாயம் குறித்து தொடர்ந்து அவர் எச்சரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் பேக் வீடியோ வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் ஆலியா பட் அலங்காரம் செய்துகொள்வது போல் 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன. ஆனால் உண்மையில் அவை டீப் பேக் வீடியோக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகை வாமியா காபியின் முகத்துடன் ஆலியா பட்டின் முகம் டீப் பேக் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிரதமர் மோடி, ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி நடிகை கஜோல், கத்ரீனா கைப் உள்ளிட்ட பலரது டீப் பேக் வீடியோக்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
- நடிகை கியராவின் திருமண பதிவு 16.26M லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை வெற்றி தொடர்பான கோலியின் பதிவு, இன்ஸ்டாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்பு, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றிருந்தது.
தற்போது நடிகை கியராவின் திருமண பதிவு 16.26 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
ஆலியா பட்டின் திருமணப் பதிவு 13.19 மில்லியன் லைக்குகளுடனும் கேத்ரினா கைஃபின் திருமணப் பதிவு 12.6 மில்லியன் லைக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
- கத்ரினா கைப் தற்போது விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார்.
- தற்போது இவர் குழந்தைகளுடன் விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கத்ரினா, மதுரையில் பள்ளிக்குழந்தைகள் சிலருடன் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நடனமாடிய கத்ரினா கைப்
மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக, இந்தியாவின் நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டு மதுரையில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளியை கத்ரினா கைபின் தாயார் சுசானே நீண்ட காலமாக அவரின் அறக்கட்டளை மூலமாக நடத்தி வருகிறார். சுசானே இந்த பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.

நடனமாடிய கத்ரினா கைப்
கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கத்ரினா கைப் சமீபத்தில் பங்கேற்று, குழந்தைகளுடன் நடனமாடியிருக்கிறார். அவர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருந்த அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி குழந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கத்ரீனா கைப் கன்னத்தோடு சாலைகளை ஒப்பிட்ட ராஜஸ்தான் மந்திரி#Rajasthan#RajendraGudha#KatrinaKaifpic.twitter.com/HmukzWwNDd
— Maalai Malar News (@maalaimalar) November 24, 2021
