என் மலர்
நீங்கள் தேடியது "Kiran George"
- ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பான் வீரர் கண்டா சுனேயமா உடன் மோதினார்.
இதில் ஜார்ஜ் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.
- கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
- இதில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
சியோல்:
தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீன தைபே வீரர் சி.யு.ஜென் மோதினர்.
முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய கிரண் ஜார்ஜ், இரண்டாவது செட்டை 19-21 என போராடி இழந்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இவர் 21-17 என தன்வசப்படுத்தினார்.
இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்தது.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குள் நுழைந்த கிரண் ஜார்ஜ் ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதுகிறார்.
- கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
- இதில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
சியோல்:
தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.
இதில் கிரண் ஜார்ஜ் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்த கிரண் ஜார்ஜ் தாய்லாந்து வீரருடன் மோதுகிறார்.
- கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
- அரையிறுதியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி அடைந்தார்.
சியோல்:
தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைறுதிச் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், தாய்லாந்து வீரருடன் மோதினார்.
இதில் கிரண் ஜார்ஜ் 12-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக நாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உடன் மோதினார். இதில் ரஜாவத் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் 21-18, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் பின்லாந்தின் ஓல்டர்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.