என் மலர்
நீங்கள் தேடியது "Kuldeep Yadav"
- குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
- குல்தீப்புக்கும் எனக்கும் ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கடைசியாக 2023 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதன்பின்பு அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பது குறித்து சாஹல் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த சாஹல், " இந்திய அணி நான் கம்பேக் கொடுப்பது எனது கையில் இல்லை. குல்தீப் தான் தற்போது உலகின் சிறந்த ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பந்துவீச்சைப் பார்த்தால் இது தெளிவாக தெரிகிறது. குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்களுக்கு ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.
சாஹலும் குல்தீப்பும் ஒன்றாக 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஐபிஎல் 2025 சீசனில் குல்தீப் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடுகிறார். சாஹல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் உள்ளார்.
- பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்:
சமீபத்தில் 8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.
இதில், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் நீடிக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்திய வீரரான ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
- வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
மிர்புர்:
3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- குல்தீப் யாதவ் 3-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
- இதற்கு முன்பு 57 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது.
வங்காளதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் 16 ஓவர்கள் வீசி 40 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். இது டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும்.
இதற்கு முன்பு 57 ரன் விட்டு கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. குல்தீப் யாதவ் 3-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார். முன்னதாக அவர் பேட்டிங்கில் 40 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம்.
- அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.
கொல்கத்தா:
இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நுவானிது பெர்னாண்டோ 50 ரன்னும், குசல் மென்டிஸ் 34 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. 86 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அதன் பின் லோகேஷ் ராகுல் (64ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (36ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடியது.
இந்தியா 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
இந்த போட்டி நெருக்கமான விளையாட்டாக இருந்தது. இதுபோன்ற விளையாட்டுகள் நிறைய கற்று கொடுக்கிறது. லோகேஷ் ராகுல் நீண்ட காலமாக 5-வது வரிசையில் விளையாடி வருகிறார். அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.
தொடக்க வரிசையில் ஒரு இடது கை ஆட்டக்காரர் இருப்பது நன்றாக இருக்கும். ஆனால் வாய்ப்பு கொடுக்கப்பட்ட வீரர்கள் கடந்த ஒரு வருடத்தில் நிறைய ரன்களை எடுத்துள்ளனர். நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் எங்கள் வலது கை பேட்ஸ்மேன்களின் தரம் எங்களுக்கு தெரியும்.
3-வது ஒரு நாள் போட்டிக்கான ஆடுகளத்தை பார்ப்போம். மேலும் மற்றொரு ஒருநாள் தொடரும் வர உள்ளது. எனவே ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமா என்று பார்ப்போம்.
இப்போட்டியில் குல்தீப் யாதவ் திருப்புமுனையை ஏற்படுத்தினர். இந்த நேரத்தில் அவர் ஒரு பந்து வீச்சாளராக மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். இது அணிக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை கேப்டன் ஷனகா கூறும் போது, இப்போட்டி எங்கள் கையில் இருந்தது. ஆனால் போதிய ரன்களை எடுக்க தவறி விட்டோம். ஆரம்பத்தில் 280 ரன்கள் பற்றி விவாதித்தோம். ஆனால் குல்தீப் யாதவ் நன்றாக பந்து வீசினார் என்றார்.
இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.
3-வது மற்றும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
- குல்தீப் யாதவ் கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார்.
- சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது.
குல்தீப் யாதவ் வங்காளதேசத்தில் டிசம்பரில் நடந்த தொடரில் அவர் விளையாடிய ஒரே டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அவர் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் மேட்ச்-வின்னிங் ஸ்பெல்களுடன் அதைத் தொடர்ந்தார்.
மேலும் அடுத்த வாரம் நாக்பூரில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் இந்திய தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ்வை நீக்கிய பிறகு உத்தரப்பிரதேச அணியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார். அவர் வீசும் திசையும் நன்றாக உள்ளது. முன்பை விட இப்போது பந்து அதிகமாக ஸ்பின் ஆகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் யாதவ்வை டெஸ்ட் போட்டிகளில் வைத்துக் கொள்ள வேண்டும். பிட்ச், மைதானம், ஊர் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. குல்தீப் எப்படி வீசுகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் அவர் ஆடிய டெஸ்ட், ஒருநாள், போட்டிகளில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் விதங்களைப் பார்க்க வேண்டும், அவரிடம் ஆட்டமிழந்தவர்கள் 30 யார்டு சர்க்கிளுக்குள் கேட்ச் ஆகி அவுட் ஆகின்றனர். அல்லது பவுல்டு, எல்.பி.என்று வீழ்த்துகிறார். இது பெரிய விஷயம்.
சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் பேட்டர்கள் அவர் பந்துகளை எளிதில் அடித்து விட முடிகிறது. இப்போதெல்லாம் உடல் செயற்பாடில்லாமல் வெறுமனே கையால் பந்தை ரிலீஸ் மட்டுமே செய்கிறார். இதனால் பிளாட்டாக விழுகிறது. ஆனால் குல்தீப் அந்த விதத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்.
ஆகவே உலகக்கோப்பை போட்டிகளில் குல்தீப் யாதவ்வுக்குத்தான் இடமளிக்க வேண்டும்.
இவ்வாறு சுனில் ஜோஷி கூறினார்.
- 3வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
கயானா:
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், குல்தீப் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, சஹல் 34 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் (26 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தை ஹசரங்கா (30 போட்டிகள்) உடன் குல்தீப் யாதவ் பகிர்ந்து கொண்டார்.
- ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் ஆவார்.
- ஆசிய கோப்பையின் கடைசி 2 போட்டிகளில் குல்தீப் யாதவ் 9 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
கொழும்பு:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா அரை சதத்தால் 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். கடைசி 2 போட்டிகளில் அவர் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் பெற்றிருக்கிறார். இவர் 88 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் முகமது ஷமி (80 ஒருநாள் போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். அனில் கும்ப்ளே 106 போட்டிகளில் 150 விக்கெட் எடுத்துள்ளார்.
உலக அளவில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன்.
- நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம்.
ஆசிய கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் இந்தியா இலங்கை மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இஷான் கிஷன் 23 ரன்களும், சுப்மன் கில் 27 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு ஓவர் வீசிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த போட்டியில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு இந்த ஆசிய கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது பேசிய தொடர் நாயகன் குல்தீப் யாதவ் கூறியதாவது:-
கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறேன். தற்போது நான் மேலும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையில் பந்துவீசி வருவதாக நினைக்கிறேன்.
டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை லென்த் மிகவும் முக்கியம். அதேபோன்று ஒருநாள் போட்டிகளிலும் லென்த் மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது எல்லாம் நான் விக்கெட்டைப் பற்றி யோசிக்காமல் என்னுடைய லைன் மற்றும் லென்த்தில் கவனம் வைத்து அப்படியே பந்துவீசி வருகிறேன். மேலும் என்னுடைய இந்த சிறப்பான பந்துவீச்சுக்காக நான் பெரிய அளவில் பயிற்சி செய்து வருகிறேன்.
இன்று நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம். அவரின் என்கரேஜ்மென்ட் தான் என்னுடைய பந்துவீச்சில் என்னுடைய வேகத்தை மாற்றி அமைக்க உதவியது. எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கட்டுகளை எடுத்துக் கொடுத்தால் ஸ்பின்னர்களுக்கு இன்னும் அது உதவிகரமாக இருக்கும் என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.
- ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- தென்ஆப்பிரிக்கா அணியால் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.
இந்தியா- ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 56 பந்தில் 100 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
பின்னர் 202 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 95 இடங்களில் சுருண்டது. குல்தீப் யாதவ் 2.5 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.
சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- கடைசி 7 பந்தில் மட்டுமே 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி2 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. முதல் போட்டி மழையால் முழுவதுமாக தடைப்பட்டது.
2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். அதோடு, தனது 29-வது பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் எந்த பந்து வீச்சாளரும் செய்யாத உலக சாதனை ஒன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே பவுலர் என்ற உலக சாதனையை இந்திய பவுலர் குல்தீப் யாதவ் நிகழ்த்தியுள்ளார்.
குல்தீப் யாதவ் 2.5 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசி 7 பந்தில் மட்டுமே 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 17 ரன்கள் விட்டுக் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன்னதாக இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் தனது பிறந்தநாளில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். இந்த சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். இதே போன்று கடந்த 2018-ம் ஆண்டு மான்செஸ்டரில் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
- தசைப்பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
- அதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன்.
ராஜ்கோட்:
3-வது டெஸ்ட் நடக்கும் ராஜ்கோட் ஆடுகளத்தன்மை அதிகமாக சுழலுக்கு ஒத்துழைக்காது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். காயத்தில் இருந்து மீளாததால் இந்திய முன்னணி பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் விலகி விட்டார். பார்ம் இன்றி தவிக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடமில்லை. இதனால் 3-வது டெஸ்டில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் பயிற்சிக்கு பிறகு இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராஜ்கோட் ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கப்போவதில்லை. ஆனால் சிறந்த ஆடுகளமாக இருக்கும். பேட்டிங்குக்கு நன்றாக இருக்கும். அதற்காக 700-800 ரன்கள் குவிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கும் என்று அர்த்தமில்லை. மொத்தத்தில் உயிரோட்டமான ஒரு ஆடுகளமாக இருக்கும். சுழலுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். எத்தகைய ஆடுகளமாக இருந்தாலும் அனுபவித்து உற்சாகமாக பந்து வீசுவேன். ரசிகர்களும் சிறந்த ஆட்டத்தை பார்க்கவே விரும்புகிறார்கள். அது தான் முக்கியம்.
தசைப்பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அணியில் எனக்கு உறுதியாக இடம் உண்டா? என்பது தெரியாது. ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுவதில்லை. ஆனால் இங்கிலாந்தின் 'பாஸ்பால்' என்ற ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை பவுலர்களையும் அதற்கு ஏற்ப தயார்படுத்த வைக்கிறது. சில சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் போது பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களின் அதிரடி பற்றி கவலைப்படாமல் அவர்களின் விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கு இங்கிலாந்து வீரர்களின் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கிறது. தாக்குதல் பாணியை கடைபிடிக்கிறார்கள். இதனால் அவர்களின் ரன்வேட்டையை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் திட்டமிட வேண்டி உள்ளது. இதுவே போட்டியில் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.