என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kusal Mendis"

    • மழை காரணமாக போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் ரிஸ்வான், ஷபிக் அரை சதத்தால் 252 ரன்கள் எடுத்தது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. மழை குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 47 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் பதிரனா 3 விக்கெட்டும், மதூஷன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 42 ஓவரில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி 100 ரன்கள் சேர்த்தது.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமரவிக்ரமா 48 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 91 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் அசலங்கா பொறுப்புடன் ஆடி 49 ரன்னுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இலங்கை அணி கடைசி பந்தில் 252 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    பாகிஸ்தான் சார்பில் இப்திகார் அகமது 3 விக்கெட்டும், ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

    • ஜிம்பாப்வே அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இந்த தொடர் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது.

    காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரை தவற விட்ட ஹசரங்கா தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதனால் அடுத்த வரும் தொடர்களில் அவரை காணலாம். அடுத்த மாதம் ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வர உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணியின் டி20 கேப்டனாக வனிந்து ஹசரங்காவும் ஒருநாள் கேப்டனாக குசல் மெண்டீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜிம்பாப்வே தொடரில் இருந்து கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.

    • திமுத் கருணாரத்னே 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • குசால் மெண்டிஸ் 93 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

    வங்காளதேசம்- இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் இன்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    நிஷான் மதுஷ்கா- திமுத் கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் குவித்தது. அரைசதம் அடித்த மதுஷ்கா 57 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதத்தை சதமாக மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுத் கருணாரத்னே 86 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 93 ரன்னிலும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

    அடுத்து வந்த மேத்யூஸ் 23 ரன்னில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் சண்டிமல் உடன் தனஞ்ஜெயா டி செல்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இலங்கை அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்துள்ளது. சண்டிமல் 34 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசத்தின் அறிமுக வீரர் ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது.
    • இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் உள்பட 6 பேர் அரை சதமடித்தனர்.

    சட்டோகிராம்:

    வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, வங்காளதேசம் முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • இலங்கைக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்தது.
    • 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.

    இலங்கை- இந்தியா அணிகள் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடின. முதல் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது.

    அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான தொடரை இலங்கை அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி முடிவடைந்த பிறகு இலங்கை அணி வீரர் குசல் மெண்டீஸ்-க்கு இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட தனது டி சர்ட்டை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவார். அவரின் செயல் சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். அவரை சீண்ட நிறைய பவுலர்கள் யோசிப்பார்கள். ஏனென்றால் அதுவரை பொறுமையாக விளையாடி வருபவர் அதன்பின் ஆக்ரோசமான அதிரடியை காட்டி எதிரணி பந்து வீச்சாளர்களை திணற வைப்பார்.

    களத்தில் ஆக்ரோசமாக செயல்பட்டாலும் சில சமயங்களில் மற்ற வீரருக்கு ஆதரவாகவும் அவர் செயல்படுவார். குறிப்பாக ஸ்மித்-க்கு நவீன் உல் ஹக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு களத்திற்குள்ளேயே ஆதரவாக செயல்பட்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பேட்டிங் மற்றும் அவரது குணத்திற்காககதான் நிறைய வீரர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி செல்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    தம்புல்லா:

    இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மோதி 15 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 39 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ், குசால் பெராரா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.

    இறுதியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. குசால் மெண்டிஸ் 68 ரன்னும், குசால் பெராரா 55 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 324 ரன்களைக் குவித்தது.
    • இலங்கையின் குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்ணாண்டோ சதமடித்து அசத்தினர்.

    தம்புல்லா:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

    இந்நிலையில், இலங்கை-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பதும் நிசங்கா 12 ரன்னில் அவுட் ஆனார்.

    குசால் மெண்டிசுடன் அவிஷ்கா பெர்ணாண்டோ இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    2வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த நிலையில் அவிஷ்கா பெர்ணாண்டோ 100 ரன்னில் அவுட்டானார். சமர விகர்மா 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய குசால் மெண்டிஸ் 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் அசலங்கா அதிரடியாக ஆடி 40 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை அணி 49.2 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 324 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டு இலங்கை இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது.

    இதையடுத்து, டி. எல்.எஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 ஓவரில் 221 ரன்கள் எடுக்கவேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

    அடுத்து இறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர்.

    அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வில் யங் 48 ரன்னில் வெளியேறினார். டிம் ராபின்சன் 35 ரன்னும், பிரேஸ்வெல் 34 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், நியூசிலாந்து 27 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
    • முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பல்லேகலே:

    நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியது . முதல் ஒருநாள் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்க் சாப்மேன் 76 ரன்களும், மிட்ச் ஹே 49 ரன்களும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் வாண்டர்சே, தீக்சனா தலா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் இறுதிவரை போராடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பதும் நிசங்கா 28 ரன்னும், ஜனித் லியாங்கே 22 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குசால் மெண்டிஸ் 74 ரன்னும், தீக்சனா 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    ×