என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kuwait"
- ஷேக் நவாஃப் உடல் நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86வது வயதில் காலமானார்.
கடந்த நவம்பர் மாதம் ஷேக் நவாஃப் உடல் நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானார்.
குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் துரதிர்ஷ்டவசமான மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். குவைத் அரச குடும்பத்தினருக்கும், தலைமைக்கும், மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் நகர் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி விஜய லட்சுமி (வயது 35). இவர், குடும்ப ஏழ்மையின் காரணமாக ஏஜெண்டு மூலம் குவைத்த நாட்டுக்கு வேலைக்கு சென்றார்.
ஆனால், அந்த ஏஜெண்டின் தவறான வழிகாட்டுதலால் ஒரு வீட்டில் கொத்தடிமையாக விஜயலட்சுமி வேலைக்கு சேர்க்கப்பட்டார்.
கடந்த 3 மாதங்களாக மிகுந்த சித்ரவதைக் குள்ளாக்கப்பட்டதால் மனமுடைந்த விஜயலட்சுமி அங்கு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
குவைத் அரசு ஆஸ்பத்திரியில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி விஜயலட்சுமியின் குடும்பத்தினர் புதுவை பாரதிய ஜனதா கட்சியினரை தொடர்பு கொண்டு குவைத் நாட்டில் இருந்து விஜயலட்சுமியை மீட்குமாறு கேட்டு கொண்டனர்.
இதுபற்றி புதுவை பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தகவல் தெரிவித்து முழு விவரங்களை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விஜயலட்சுமியை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.
இதன் மூலம் விஜய லட்சுமியை எந்தவித பாதிப்பும் இன்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு புதுவைக்கு அனுப்பி வைத்தது.
இதையடுத்து புதுவை வந்த விஜயலட்சுமி தனது கணவர் சந்திரமோகனுடன் புதுவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார். #Sushmaswaraj
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்