search icon
என் மலர்tooltip icon

    குவைத்

    • செய்தி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
    • 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம், 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    குவைத் நாட்டில் இந்த வினோத சம்பவம் நடந்தது. திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்தும் நடந்து முடிந்தது.

    எல்லா எதிர்பார்ப்புகளுடனும் அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. திருமண நிகழ்ச்சிகள் முடிந்து வீட்டிற்கு புறப்பட தயாரானபோது, மணமகள் கால் இடறி கீழே விழுந்தார். அப்போது மணமகன், 'பார்த்து நடக்கத்தெரியாதா முட்டாள்' என்று திட்டிவிட்டார். இதனால் மணப்பெண் மனம் உடைந்தார். காலமெல்லாம் இவருடன் எப்படி வாழப்போகிறோம் என்று அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே கோர்ட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தங்களை பிரித்துவைத்துவிடும்படி கோரிக்கை விடுத்தார். கோர்ட்டும் அவரது கோரிக்கையை ஏற்று திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து கொடுத்தது. இது அந்த நாட்டில் நடந்து முடிந்த மிக குறுகலான குடும்ப பந்தம் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. "மரியாதையற்ற உறவுகள் ஆரம்பத்திலேயே முடிவடைந்துவிடும்" என்று ஒரு பயனர் எழுதினார்.

    2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு திருமணம், 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    • குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள்.
    • பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

    குவைத்சிட்டி:

    குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 12-ந்தேதி அந்நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.

    பலியான இந்தியர்களில் கேளராவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், ஆந்திரா-உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த வீராசாமி மாரியப்பன் (தூத்துக்குடி), சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி (கடலூர்), சிவசங்கர் கோவிந்தன் (சென்னை ராயபுரம்) முகமது ஷெரீப் (திண்டிவனம்), கருப்பணன் ராமு (ராமநாதபுரம்), ராஜூ எபநேசன் (திருச்சி) , ரிச்சர்ட் ராய் (பேராவூரணி) ஆகியோர் இறந்தனர்.

    பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரபு டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

    • குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.
    • உடல்கள் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    குவைத் தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 25 தமிழர்கள் வசித்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 10 பேர் வேலைக்காக வெளியில் சென்றுவிட்ட நிலையில் மீதமுள்ள 15 பேர் தீ விபத்தில் சிக்கி உள்ளனர்.

    இந்த தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல் மங்காப் பகுதியின் அருகே உள்ள மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடலை அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம், தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடலும் இன்றே அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யும் என தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

    • இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
    • தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் இறந்துள்ளதுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

    தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட கரும்புகை, கட்டடம் முழுவதையும் உட்புறமாக சூழ்ந்ததாக யாராலும் தப்பிக்க முடியவில்லை.

    அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு அடங்கிய அஹமதி மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மங்காஃப், ஃபாஹில், அபுகலிஃபா, மெஹபுல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    கரும்புகைகளுக்கு நடுவே டார்ச் லைட் அடித்து காப்பாற்றுமாறு தொழிலாளர்கள் கதறும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

    • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் சந்தித்தார்.

    மேலும், தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் தெரவித்தார்.

    அதன்படி, இந்திய விமானப்படை விமானம் மூலம், உடல்களை இந்தியா கொண்டுவரப்படுகிறது.

    • உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.

    தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

    மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

    கட்டத்தில் சுமார் 150 பேருக்கும் அதிகமானோர் தங்கி இருந்துள்ளனர். விபத்தின்போது பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்துள்ளனர்.

    இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்திய கிழக்கு நாடு அரசியல் நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ளது.
    • பெரும்பாலான அரசு வசதிகளை அடைய ஊழல் பரவுவதை ஊக்குவித்தது.

    குவைத்தின் எமிர் ஷேக் அல்-சபா, தீவிர இஸ்லாமியவாதத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாராளுமன்றத்தை கலைப்பதாகவும், அரசியலமைப்பின் சில பகுதிகளை 4 ஆண்டுகள் வரை இடைநிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

    குவைத் எமிர் ஷேக் மிஷால் அல் அகமது அல் சபா நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தை நான்கு ஆண்டுகள் வரை இடைநிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து மற்றொரு மத்திய கிழக்கு நாடு அரசியல் நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ளது.

    இதுதொடர்பாக, அமிர் ஷேக் அல்- சபா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசுகையில், "அரசை அழிக்க ஜனநாயகத்தை பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன்.

    முந்தைய ஆண்டுகளில் குவைத் அனுபவித்த ஆரோக்கியமற்ற சூழல், பெரும்பாலான அரசு வசதிகளை அடைய ஊழல் பரவுவதை ஊக்குவித்தது.

    துரதிர்ஷ்டவசமாக அது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிறுவனங்களை அடைந்தது. இது நீதி அமைப்பைக் கூட பாதித்துள்ளது. இது மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் சரணாலயமாகும்.

    எந்த உரிமையும் இன்றி மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் தக்க தண்டனை வழங்கப்படும்" என்றார்.

    • ஷேக் சபா செப்டம்பர் 2020-ல் தனது 91 வயதில் இறந்தபோது மன்னராக பொறுப்பேற்றார்.
    • 2020-ல் எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியின் மூலம் அவர் பொருளாதாரத்தை வழி நடத்த வேண்டியிருந்தது.

    எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86வது வயதில் காலமானார்.

    குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குவைத் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

    நவம்பரில், ஷேக் நவாஃப் " உடல்நலப் பிரச்சனை காரணமாக" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடல் நலம் நிலையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமாகியுள்ளார்.

    ஷேக் நவாஃப் 2006ம் ஆண்டில் அவரது சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவால் கிரீட இளவரசராக நியமிக்கப்பட்டார். ஷேக் சபா செப்டம்பர் 2020-ல் தனது 91 வயதில் இறந்தபோது மன்னராக பொறுப்பேற்றார்.

    2020-ல் எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியின் மூலம் அவர் பொருளாதாரத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. தற்போதைய பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா, மற்றொரு சகோதரர், 83 மற்றும் மேலும் ஒரு இளைய தலைமுறை ஆட்சியாளரை அடுத்த மன்னராக கொண்டு வரப்படுகிறாரா என்பதில் இப்போது அதிக கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×