என் மலர்
நீங்கள் தேடியது "ladakh"
- ராணுவ வாகனம் லடாக் அருகே சென்ற போது ஆற்றில் கவிழந்துள்ளது.
- விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் இருந்துள்ளனர்.
ராணுவ வாகனம் ஒன்று லடாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. லே பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கியாரி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. ராணுவ வகனம் தரையில் சறுக்கியதால், நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் (எட்டு ஜவான்கள், ஒரு ஆணையர்) பயணம் செய்ததாகவும், இவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
- லடாக்கில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு ராணுவ வாகனத்தில் வீரர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.
கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போது மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தானர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லடாக் விபத்தில் ராணுவ வீரர்கள் பலியானதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லடாக்கில் நடந்த சாலை விபத்தில் எங்கள் வீரம்மிக்க வீரர்களை இழந்தோம். இந்த துக்க நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுடன் ஒட்டுமொத்த தேசமும் தோளோடு தோள் நிற்கிறது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- லடாக்கில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
லடாக்கின் லே மாவட்டத்தில் பணியில் இருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு நேற்று 3 ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த வாகன அணிவகுப்பு தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்றபோது, ஒரு வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.
அந்த வாகனத்தில் 10 வீரர்கள் இருந்தனர். பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் வாகனம் அப்பளம் போல நொறுங்கியது. அதில் இருந்த வீரர்கள் அனைவரும் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன.
காயமடைந்த வீரர்களை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், லடாக்கில் ராணுவ வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லடாக் விபத்து பற்றிய செய்தியால் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம். தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய செழுமையான சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என பதிவிட்டுள்ளது.
- நிதியை லடாக் கிராம சாலை மேம்பாட்டு முகமைக்கு மாற்ற வேண்டும்.
- லடாக்கிற்கு 2023-24 ஆண்டு ஒதுக்கீடு திட்ட நிதியின் முதல் தவணை இது.
2023-24 நிதியாண்டில் பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.36.65 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
யூனியர் பிரதேசம் நிர்வாகம் ரூ.36.65 கோடி நிதியை, அது கிடைத்த நாளிலிருந்து அதிகபட்சம் 30 நாட்களுக்குள் லடாக் கிராம சாலை மேம்பாட்டு முகமைக்கு மாற்ற வேண்டும்.
இந்த காலக்கெடுவிற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் வெளியீடுகளை நிறுத்த மத்திய அரசும் கட்டுப்படுத்தப்படலாம்.
ரூ.36,65,62,500 கார்பஸ், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தனது எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் யூனியன் பிரதேசத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள், மாவட்ட சாலைகள் மற்றும் பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.
பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் லடாக்கிற்கு 2023-24 ஆண்டு ஒதுக்கீடு திட்ட நிதியின் முதல் தவணை இது.
பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின், மூன்றாம் கட்டத்தின் கீழ், லடாக்கில் 500 கிமீ கிராமப்புற சாலை வலையமைப்பை அமைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.
லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, 15 நிமிடங்கள் இடைவௌியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஜம்மு- காஷ்மீரின் கிஷ்த்வாரில் இன்று லேசான தீவிர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தேசிய நிலநடுக்கவியல் மையம் கூற்றுபடி, இன்று மாலை 3.48 மணிக்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4.01 மணியளவில் 4.8 மற்றும் 3.8 தீவிரம் கொண்ட இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில், கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று மாலை 4.18 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் இல்லை.
- கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- இந்திய ராணுவத்தின் லேயை தளமாகக் கொண்ட ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் அறிவிப்பு.
- மீட்பு நடவடிக்கையின் சில படங்கள் மற்றும் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள லே மற்றும் ஷியோக் நதிப் பள்ளத்தாக்குக்கு இடையே 17,688 அடி உயரமுள்ள சாங் லா கணவாயில் பனிப்பொழிவின் மத்தியில் சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை திரிசூல் பிரிவின் வீரர்கள் மேற்கொண்டதாக இந்திய ராணுவத்தின் லேயை தளமாகக் கொண்ட ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ப்யூரி கார்ப்ஸ் சமூக வளைதளத்தில் குறிப்பிடுகையில், "அவசர அழைப்பு வந்ததை அடுத்து, திரிசூல் பிரிவின் வீரர்கள் சாங் லாவின் பனிக்கட்டி பகுதியில் போக்குவரத்துத் தடையை அகற்றி, இரவில் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் போராடி, பனிப்பொழிவின் மத்தியில் சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 80 நபர்களுக்கு நிவாரணம் அளித்தனர்" என்றிருந்தது.
மீட்பு நடவடிக்கையின் சில படங்கள் மற்றும் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.
- பாஜகவின் அரசியல்வாதிகள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் 12 சந்திப்புகள் நடத்தியுள்ளனர்.
- எதற்காக பாஜகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஏன் தொடர்ச்சியாக சந்தித்து கொண்டன.
பாஜகவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன உறவு உள்ளது என்று காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்டுள்ளது.
இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
"2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மோடி அதை கண்டுகொள்வது கூட இல்லை. சீனாவை எதிர்த்து நிற்க பாஜக ஏன் விரும்பவில்லை என்று இந்திய மக்கள் கேட்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்புகள் இதன் பின்னணியில் உள்ளதா?
2008 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் அரசியல்வாதிகள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் குறைந்தது 12 சந்திப்புகள் நடத்தியுள்ளனர். இந்த சந்திப்புகள் பெரும்பாலும் சீனாவில் நடந்துள்ளது.
இந்த சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது. எதற்காக பாஜகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஏன் தொடர்ச்சியாக சந்தித்து கொண்டன.
2017 ஜூன் மாதத்தில் டோக்லாமில் எல்லை மோதல்கள் நடந்த அதே மாதத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஏன் சந்தித்து கொண்டனர்.
இந்த சந்திப்புகளில் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
அண்மையில் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்திருந்தார்.
"நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன்' என சமீபத்திய பேட்டியில் சுப்ரமணிய சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி- 72 டேங்க் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
- ராணுவ வீரர்கள் உயிரிழந்தற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லடாக் பகுதியில் உள்ள சீன எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் மூழ்கியதால் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆற்றை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த தேசம் துணைநிற்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதிகாலை 1 மணியளவில் டி- 72 டேங்க் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.
- பாலத்தின்மீது வாகனம் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் நதியின் [Pangong Lake] குறுக்கே 400 மீட்டர் பாலத்தைச் சீனா கட்டி முடித்தது. இந்த பலமானது சீன துருப்புகள் பாங்காங் நதியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளுக்கு எளிதாகச் சென்று வர உதவும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைத்துள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பாலம் கட்டப்பட்டுள்ள பகுதியானது கடந்த 1958 முதல் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. ஆனால் அந்த இடத்தின்மீது சீனா உரிமை கொண்டாடுவதற்கு எதிரான நிலைப்பதிலேயே இந்தியா இருந்து வருகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த பாலமானது நதியைக் கடக்க 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.

பலமானது கட்டப்பட்டது முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது பாலத்தின்மீது வாகனங்கள் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பகுதிகளுக்கு சீனா தங்களின் வரைபடத்தில் புதிய பெயர்களை சூட்டியும், எல்லையில் ராணுவ நடவைடிகைகளை அதிகப்படுத்தியும் வருவது இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ [ Wang Yi] மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சந்திப்பில் எல்லையில் உள்ள படைகளைத் திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.


- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்போது யூனியன் பிரதேசமாக லடாக் அறிவிக்கப்பட்டது.
- இதுவரை இரண்டு மாவட்டங்கள் இருந்தன. இனிமேல் ஏழு மாவட்டங்களாக அதிகரிக்கும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.
இந்த நிலையில் லடாக் மாவட்டங்களில் புதிதாக ஐந்து மாநிலங்கள் உருவாக்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜான்ஸ்கர், த்ராஸ், ஷாம், நும்பரா, சாங்தாங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உருவாக்கப்படும்.
வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கை கட்டமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசமாக இருப்பதால் லடாக் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
லடாக் யூனியன் பிரதேசம் தற்போ லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டும் உள்ளது. தற்போது ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதா இனிமேல் ஏழு மாவட்டங்களை கொண்டதாகும்.
- 24 மணிநேரமும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு
- இரவு நேரத்தில் பறப்பது மிகவும் சவாலான பணி.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய எல்லையில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
24 மணிநேரமும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீரின் லடாக் பனி மலைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. இங்கு செல்வதற்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ராணுவத்துக்காக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்.ஏ.எல்.) துருவ் என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரை தயாரித்தது. இந்த ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் இரவு நேரத்தில் லடாக் பனிமலைப் பகுதிக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து சீத்தல் ரக ஹெலிகாப்டரின் பைலட் கூறியதாவது:-
"ஹெலிகாப்டரில் பகல் நேரத்தில் பறப்பதை விட இரவு நேரத்தில் பறப்பது மிகவும் சவாலான பணி. சூரியன் மறைந்து இருண்டு விட்டால், தொலைவில் உள்ளவை எதுவும் தெரியாது. அதனால் இரவில் பறக்கும்போது, ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டிருக்கும் உபகரணங்களைத் தான் நாம் அதிகம் சார்ந்திருக்க வேண்டும்.
இரவு நேரத்தில் பயணம் செய்வதற்கு முன் பலவித மான விளக்கங்கள் அளிக் கப்படும். செல்ல வேண்டிய இடம், வானிலை குறித்து விளக்கம் அளிக்கப்படும். அதன்பின்பே இரவு நேர பயணத்தை தொடர்வோம்" என்றார்.
தொழில்நுட்ப மேற்பார்வையாளர் மேஜர் ஆயுஷ் தேவிஜ்யால் கூறுகையில், "இரவு நேர பயணத்துக்கு முன்பாக, ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களின் செயல்பாடுகளையும் சரிபார்க்க வேண்டும்.
ஹெலிகாப்டரின் என்ஜினை இயக்கி சோதனை செய்தபின், என்ஜின் அதிகாரி பறந்து செல்வதற்கு ஒப்புதல் அளிப்பார். மீட்பு பணி, இரவு நேர கண்காணிப்புக்கு இந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் தான் பயன் உள்ளதாக இருக்கும்" என்றார்.