என் மலர்
நீங்கள் தேடியது "lakes filled"
- 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
- நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
நேற்று ஒரே நாளில் 52 ஏரிகள் நிரம்பி உள்ளன. 241 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும் , 284 ஏரிகள் 50 சதவீதமும், 200 ஏரிகள் 25 சதவீதமும, 70 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
உத்திரமேரூர் - 20.5 செ.மீ
காஞ்சிபுரம் - 15.3 செ.மீ
செம்பரம்பாக்கம் - 13.2 செ.மீ
வாலாஜாபாத் - 12.7செ.மீ
ஸ்ரீபெரும்புதூர்- 13.1 செ.மீ
குன்றத்தூர் - 10.7செ.மீ
மஞ்சள் நீர் கால்வாய்
பலத்த மழை காரணமாக திருகாலிமேடு அருந்ததி பாளையம் பகுதியில் உள்ள மஞ்சள் நீர் கால்வாயில் இருந்து வெளியேறிய தண் ணீர் அருகில் உள்ள குடி யிருப்புகளுக்குள் புகுந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் சரியான திட்ட மிடாமல் மஞ்சள் கால்வாயில் மேற்கொண்டு வரும் பணியினால் கால்வாயில் போதிய மழை நீர் செல்ல முடியாமல் தண்ணீர் வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 916 ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும் நீர் இன்றி வறண்டு காணப்பட்ட நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் வரத் தொடங்கியுள்ளது.
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. 52 ஏரிகளில் 75 சதவீமும், 179 ஏரிகளில் 50 சதவீதமும் மீதமுள்ள ஏரிகளில் 25 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான தாமல் ஏரி, தென்னேரி ஏரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணிமங்கலம், மானாம்பதி, மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் இதுகுறித்து கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தால் ஏரிக்கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் உள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவீனமாக உள்ள ஏரிக்கரைகள், மதகுகள், நீர்வரத்து கால்வாய் போன்றவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Rain #Lakes