என் மலர்
நீங்கள் தேடியது "Lakshadweep"
- பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார்.
- மாலத்தீவு அமைச்சர்கள் பேசியதை பிரதமர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதாக மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அத்துடன் "சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது
இதனை தொடர்ந்து, மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை தொடர்ந்து மூன்று அதிகாரிகளும் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர், அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட முறையிலேயே எடுத்துக்கொள்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் நாம், நமது அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். காலத்துக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். அண்டை நாட்டினரை நம்மால் மாற்ற முடியாது" என்று தெரிவித்தார்.
- லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது.
- லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி மாதத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் எதிராலியால், தீவுப் பகுதிக்கு படையெடுக்கும் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அதிகாரி இம்தியாஸ் முகமது டிபி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையின் தாக்கம் குறித்து இம்தியாஸ் மேலும் கூறுகையில், " பிரதமர் மோடியின் லட்சத்தீவு வருகைக்கு பிறகான தாக்கம் மிகப்பெரியது. லட்சத்தீவு பயணத்திற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது.
தேசிய சுற்றுலா அரங்கம் மற்றும் சர்வதேச சுற்றுலா சந்தை ஆகிய இரண்டிலும் லட்சத்தீவு விசாரணைகளைப் பெறுகிறது.
லட்சத்தீவுகள் அதிக கப்பல் நிறுவனங்களை ஊக்குவிக்க முயல்கிறது. லட்சத்தீவில் சில விமான நிறுவனங்கள் செயல்படுவதால், இந்தியாவுடனான இணைப்புச் சிக்கல் பற்றி, விமான இணைப்பு நெறிப்படுத்தப்பட்டால், அது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும்.
இதற்கிடையில், மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அமன் சிங், "நாங்கள் லட்சத்தீவுக்கு வர நீண்ட நாட்களாக விரும்பினோம், ஆனால் தீவுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் இருந்தன, ஆனால் பிரதமர் மோடியின் வருகையால் செல்வது சாத்தியமாகும்" என்று கூறினார்.
இதற்கிடையே, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட லட்சத்தீவு தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
543 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.
- திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார்.
- சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அபயாம்பிகை நற்பணி மன்றம் சார்பில் லட்சதீப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் 35ம் ஆண்டு லட்சதீப திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து மகா தீபாரதனை கான்பிக்கப்பட்டது. சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.
ரிஷபக் குஞ்சரம் 75வது சுதந்திர கொடியை விநாயகர் ஏற்றுவது போன்று வரைந்த ஓவியங்கள் மற்றும் பலவிதமான மந்திர எழுத்துக்கள் தீப ஒளியில் பிரகாசித்தது பக்தர்களை கவர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விளக்குகளை ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், கேசியர் வெங்கடேசன், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் 7-ம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.

இதன்காரணமாக அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடல் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. #TNRain #RedAlert