என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land scam"

    • புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார்.
    • புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மணச்சநல்லூர் மேட்டு இருங்களூர் யாகூப் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி புஷ்பராணி (வயது 48).

    பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி சந்திரா. இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் சந்திரா இருங்கலூரில் தனக்கு சொந்தமாக இருக்கும் 21 சென்ட்நிலத்தை விற்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து புஷ்பராணி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்து ரூ. 18 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    பின்னர் புஷ்பராணி அந்த நிலத்துக்குரிய வில்லங்க சான்றை பார்த்தபோது 21 சென்ட் நிலத்தில் எட்டே கால் சென்ற நிலம் ஸ்ரீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. ஆனால் போலி ஆவணங்கள் தயாரித்து சந்திரா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தர்மராஜ், மகன் பிரபாகர் மரியராஜ், மனைவி மார்க்சி மற்றும் மார்க்கெட் புஷ்பலதா, டெய்சி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.
    • துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த நில மோசடியில் காரைக்கால் துணை கலெக்டர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.

    இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.

    இதைத் தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்டு செய்து கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை கலெக்டர் ஜான்சனிடம், அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் அதிகாரிகள் வழங்கினர்.

    • மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.
    • 2 நாட்களாக எதுவும் தெரியாது என கூறிய துணை ஆட்சியரிடம் போலீசார் உண்மையை வாங்கியுள்ளனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த நில மோசடியில் காரைக்கால் துணை கலெக்டர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.

    இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

    பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார். இதைத் தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை சஸ்பெண்டு செய்து கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சனிடம் சினிமா பாணியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சன் லஞ்சமாக பல லட்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    லஞ்சமாக பெற்ற பணத்தில் துணை ஆட்சியர் உல்லாச வாழ்க்கை நடத்தியுள்ளனர். குடும்பத்திற்கு மற்றும் மருத்துவ செலவிற்காக செலவிட்டு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.

    விசாரணையின்போது, 2 நாட்களாக எதுவும் தெரியாது என கூறிய துணை ஆட்சியரிடம் போலீசார் உண்மையை வாங்கியுள்ளனர்.

    • முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
    • முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டியது.
    • இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

    கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.

    இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, சித்தராமையாவின் மனைவிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    நில ஊழல் வழக்கில் ஆதாரமில்லை என லோக் ஆயுக்தா கூறிவிட்ட நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

    • பயிரிட்டு விளையும் பொருட்களில் 70 சதவீதம் குத்தகைதாரருக்கே வழங்கி விடுவதாகவும் கூறுகிறார்.
    • உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

    திருப்பூர் : 

    விவசாய நிலங்கள் குத்தகை என்ற பெயரில் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திருப்பூர் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- விவசாய நிலங்கள் குத்தகை மூலம் அதிக லாபம் பெற முடியும் என்று விவசாயிகளின் ஆசையைத் தூண்டும் விதமாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் யாரும் ஏமாற்றப்பட்டார்களா என்பது குறித்து தெரியவில்லை.

    அந்த ஆடியோவில் பெண் ஒருவர் விவசாயி ஒருவரிடம் பேசும் அந்த ஆடியோவில் 10 ஏக்கர் பண்ணை நிலத்தில் விவசாயம் செய்ய இருப்பதாகவும், அதை தலா 22 சென்ட் என 40 பகுதிகளாகப் பிரித்து 22 சென்ட் நிலத்தை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்துக்கு குத்தகைக்கு வழங்குவதாகவும கூறுகிறார்.மேலும் அதில் நெல் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு விளையும் பொருட்களில் 70 சதவீதம் குத்தகைதாரருக்கே வழங்கி விடுவதாகவும் கூறுகிறார்.அத்துடன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குத்தகைத் தொகையை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரமாக திருப்பித் தருவதாகவும் உறுதி கூறுகிறார்.இன்றைய நிலையில் விவசாய விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது.

    இந்த சூழ்நிலையில் வெறும் 30 சதவீத விளை பொருட்களைக் கொண்டு அந்த நிறுவனத்தால் லாபம் ஈட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபோலவே ஈமு கோழியின் முட்டையை ரூ. 2 ஆயிரத்துக்கு வாங்கிக் கொள்கிறோம்.கறியை ஏற்றுமதி செய்கிறோம்.இறகுகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்று பல கவர்ச்சி விளம்பரங்களின் மூலம் விவசாயிகளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் அபகரிக்கப்பட்டது.அதேநிலை இந்த விளம்பரத்தின் மூலமும் ஏற்படலாம்.எனவே இந்த திட்டத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்என்று விவசாயிகள் கூறினர்.

    • Sanjay Rawat received Rs 2 lakh monthly from Pravin Rawat Woman statement in ED
    • சஞ்சய் ராவத் கூறுவதன் பேரில் தான் பிரவின் ராவத் செயல்பட்டார்.

    மும்பை :

    சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பத்ரா சால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து உள்ளது. அதில், சஞ்சய் ராவத்திற்கு எதிராக சாட்சி அளித்த அவரின் முன்னாள் தொழில் கூட்டாளியான சுவப்னா பட்கர் என்ற பெண்ணின் வாக்குமூலம் சேர்க்கப்பட்டு உள்ளது.

    அவர் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    சஞ்சய் ராவத் குடும்பத்தினர் பெயரில் தொடங்கப்பட்ட ஷெல் நிறுவனங்கள் மூலம் கணக்கில் வராத பணத்தை கையாண்டார். சஞ்சய் ராவத் குடும்பத்தினரின் தயாரிப்பு நிறுவனம் தாக்கரே என்ற பெயரில் படத்தை வெளியிட்டது. அந்த திரைப்பட நிறுவனம் மூலம் கணக்கில் வராத பணத்தை படம் தயாரிக்க சஞ்சய் ராவத் பயன்படுத்தினார்.

    கடந்த 2015-ல் நான் 'பால்கடு' என்ற படத்தை தயாரித்தேன். அந்த படத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் லாபத்தை சஞ்சய் ராவத் என்னிடம் இருந்து அபகரித்தார்.

    அலிபாக்கில் ரூ.9 முதல் ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை, ரூ.51 லட்சம் என குறைந்த மதிப்பு காட்டி ரொக்கமாக பணம் கொடுத்து வாங்கினார். 2008 முதல் 2014 வரை 2 முறை சாம்னா அலுவலகத்தில் பத்ரா சால் வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரவின் ராவத்தின் ஊழியர்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் சஞ்சய் ராவத்திற்கு பணம் கொடுத்தனர்.

    எனக்கு தெரிந்தவரை சஞ்சய் ராவத் கூறுவதன் பேரில் தான் பிரவின் ராவத் செயல்பட்டார். அவர் மாதந்தோறும் ரூ.2 லட்சத்தை சஞ்சய் ராவத்துக்கு கொடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    மும்பை :

    சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கடந்த மாதம் பத்ராசால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய பிரவின் ராவத்திடம் இருந்து பணப்பலன்கள் பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடியில் திரைமறைவில் இருந்து செயல்பட்டதாக கூறியது. மேலும் பத்ராசால் மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. அதில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று நீதிமன்ற காவல் முடிந்து சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட்டு கூடுதல் குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி அவரது நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கிடையே சஞ்சய் ராவத் தாக்கல் செய்து உள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    • பத்ராசால் குடிசை சீரமைப்பு திட்ட மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார்.
    • அவர் மீண்டும் ஆர்தர்ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    மும்பை

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமானவர் சஞ்சய் ராவத். சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான இவர், பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு எதிராக கட்சியை உடைத்த போதும், அதிருப்தி அணியினரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

    இந்தநிலையில் சஞ்சய் ராவத் பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பத்ரா சால் மோசடியில் கிடைத்த சட்டவிரோத பணத்தின் ஒரு பகுதி சஞ்சய் ராவத்தின் மனைவி, கூட்டாளிகளுக்கும் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அவர் நேற்று மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    சிறப்பு கோர்ட்டு சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 (வருகிற 19-ந்தேதி வரை) நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீண்டும் ஆர்தர்ரோடு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    • பத்ரா சால் முறைகேடு வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
    • சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரான பிரவின் ராவத் பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்

    மும்பை:

    மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

    இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆகஸ்டு 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை காவல் முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், சஞ்சய் ராவ்த்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு செப்டம்பர் 5 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • கடந்த 1-ந் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.
    • சிறையில் படுக்கை பயன்படுத்த சஞ்சய் ராவத்திற்கு கோர்ட்டு அனுமதி மறுப்பு.

    மும்பை

    மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சாலில் நடந்த குடிசை சீரமைப்பு பணியில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரவின் ராவத் என்ற தனக்கு நெருக்கமானவரிடம் இருந்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. குடும்பத்தினருக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரியவந்தது.

    இதையடுத்து இந்த மோசடி வழக்கில் கடந்த 1-ந் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. மேலும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்தது. கடந்த சனிக்கிழமை பத்ரா சால் மோசடி தொடர்பாக சஞ்சய் ராவத் மனைவியிடமும் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.

    இந்த விசாரணையில் பத்ரா சால் முறைகேடு மூலம் சஞ்சய் ராவத் ரூ.2 கோடியே 25 லட்சம் பெற்றதாகவும், அந்த பணத்தை அலிபாக்கில் சொத்து வாங்க பயன்படுத்தியதும் தெரியவந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

    இந்தநிலையில் நேற்று காவல் முடிந்து அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்தை மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அப்போது சஞ்சய் ராவத்தை இனிமேல் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. அதேநேரத்தில் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால், அவரை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே வருகிற 22-ந்தேதி வரை சஞ்சய் ராவத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    மேலும் கோர்ட்டு சஞ்சய் ராவத்திற்கு இதய நோய் இருப்பதை சுட்டிக்காட்டி ஜெயிலில் அவர் வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து சாப்பிட அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் படுக்கை பயன்படுத்த சஞ்சய் ராவத்திற்கு கோர்ட்டு அனுமதி மறுத்து விட்டது.

    கோர்ட்டு உத்தரவை அடுத்து மும்பை ஆர்தர்ரோடு சிறையில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டார்.

    • பத்ரா சால் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை கைதுசெய்துள்ளது.
    • சஞ்சய் ராவத் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக உள்ளார்.

    மும்பை:

    மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

    இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கடந்த 1-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.

    இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆகஸ்டு 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை காவல் இன்று முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் சஞ்சய் ராவத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ×