என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Language"

    • தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகியவை மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
    • அரசியல் காரணங்களுக்காக மேற்கண்ட மாநிலங்கள் மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கின்றன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை 2020-ன் படி மும்மொழி பாடத்திட்ட கொள்கையை அனைத்து மாநில அரசுகளும் ஏற்று அமல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், இதுதொடர்பாக பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

    தேசிய கல்வி கொள்கை என்பது அனைத்து தரப்பு மாணவர்களின் பள்ளி கல்வித்தரத்தை மேம்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் ஏழை எளிய பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த பள்ளி குழந்தைகள் இலவசமாக கற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கை திட்டம்.

    இதனை அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்க மறுக்கின்றன. மத்திய அரசு கொண்டுவரும் சட்ட திட்டம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பொருந்துவது என்பது மட்டுமின்றி, அத்தகைய கொள்கையை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

    இலவச கல்வி என்பது அரசியலமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமை. இந்தத் திட்டத்தை ஏற்க மறுப்பதினால் மாநில அரசு, சம்பந்தப்பட்ட பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மறுக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தி மொழி திணிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
    • தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு நகர செயலாளரும் நகர மன்றத் தலைவருமான குண்டாமணி என்கின்ற செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவதாஸ், ஜூபையர் அஹமது, நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் பேசும்போது, தமிழக்கத்தில் ஒன்றிய அரசு தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

    தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி என்றார்.இந்நிகழ்ச்சியில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, வழக்கறிஞர் அணி ராம. சேயோன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.

    ஆங்கில மொழி என்பது வியாதியல்ல. ஆங்கிலேயர்களின் மனப்பான்மையை நாம் கொண்டுள்ளதுதான் வியாதி என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார். #Englishmind #VenkaiahNaidu
    பனாஜி:

    இந்தி மொழியை கொண்டாடும் விதமாக டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆங்கிலம் என்பது இந்த நாட்டைப் பற்றியுள்ள ஒரு வியாதி போன்றது என்று கூறியதாக சில ஊடகங்களில் முன்னர்செய்தி வெளியானது.

    இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் உள்ள தேசிய தொழிநுட்ப பயிலகத்தில் இன்று நடைபெற்ற நான்காவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று பேசிய வெங்கையா நாயுடு, நான் ஆங்கிலத்தை வியாதி என்று குறிப்பிடவில்லை. பிரிட்டிஷாரின் மூலமாக ஆங்கிலேயர்களின் மனப்பான்மையை நாம் கொண்டுள்ளதுதான் வியாதி என்று கூறினார்.



    பிரிட்டன் நாட்டினர்தான் உயர்ந்தவர்கள். வெளிநாட்டினர்தான் சிறந்தவர்கள். இந்தியர்கள் ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்னும் கருத்தை பிரிட்டிஷார் கொண்டிருந்தனர். நம்மை விட்டுச் சென்றபோதிலும் அவர்கள் நம்மிடையே உருவாக்கி வைத்திருந்த தாழ்வு மனப்பான்மை நம்மை விட்டு விலகவில்லை.

    ஆங்கிலேயர்களின்  மனப்பான்மையை விட்டு நாம் வெளிவர வேண்டும். நமது பாரம்பரியம், கடந்தகால வரலாறு, நமது நாட்டின் உயர்ந்த தலைவர்கள் ஆகியவற்றை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்.

    அந்த நேரம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருந்தாலும் குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங் என்கிறோம். அந்த சொல் நமது உதயத்தில் இருந்து வருவதால் நமஸ்காரம் என்று சொல்வதில்தான் நமது நன்மதிப்பு அடங்கியுள்ளது.

    நீங்கள் எத்தனை மொழிகளை  வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், உரையாடல்களின்போது உங்கள் தாய்மொழியில் மட்டுமே பேச வேண்டும். உங்களது பெற்றோரையும், பிறந்த இடத்தையும், தாய்மொழியையும் எப்போதுமே மறக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். #Englishmind #VenkaiahNaidu
    பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களவை உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, ஒரியா, பஞ்சாபி, உருது ஆகிய 12 மொழிகளை ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் உள்ளன. எனவே மேற்குறிப்பிட்ட மொழிகளை தாய்மொழியாக கொண்ட எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை தங்குதடையின்றி முன்வைக்கலாம்.

    ஆனால் மீதமுள்ள 10 மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் மீதமுள்ள டோங்ரி, காஷ்மீரி, கொங்கனி உள்ளிட்ட 10 மொழிகளையும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான வசதி தற்போது செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன்மூலம் வருகிற 18-ந் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.
    ×