என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lebanon"

    • இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம்.
    • இது முழுமையான போர் பிரகடனம் என ஹிஸ்புல்லா தெரிவித்தது.

    ஜெருசலேம்:

    லெபனானில் பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவங்களில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் இது முழுமையான போர் பிரகடனம் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, வடக்கு இஸ்ரேலிய பகுதிகள்மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.

    இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படைத்தளபதி இப்ராகிம் அகில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    1983-ம் ஆண்டு பெய்ரூட்டின் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தி 63 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான இப்ராகிம் அகில் குறித்த தகவலுக்கு 7 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா பரிசாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் போர் லெபனான் மக்களுடன் இல்லை.
    • அது ஹிஸ்புல்லா உடன். நீண்ட காலமாக மக்களை கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது.

    லெபனான் மீது பயங்கரமான வகையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 500 லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினரை பாதுகாக்கும் வகையில் கேடயமாக மாறாதீர்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு லெபனான் மக்களை வீடியோ மூலம் மெசேஜ் தெரிவித்துள்ளார்.

    லெபனான் மக்களுக்கான நேதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் "இஸ்ரேல் போர் லெபனான் மக்களுடன் இல்லை. அது ஹிஸ்புல்லா உடன். நீண்ட காலமாக மக்களை கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது. உங்கள் வீடுகளில் ராக்கெட்டுகளை பதுக்கி வைக்கிறது. அவைகள் எங்கள் நாட்டின் மக்களை குறிவைக்கிறது. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு எதிராக எங்கள் மக்களை பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் வெளியே எடுக்க வேண்டும்" என்றார்.

    இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இருந்து (லெபனான் எல்லை) வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக அமர்த்துவது எங்களுடைய நோக்கம் என போர் நோக்கத்தை இஸ்ரேல் விரிவுப்படுத்தியது. மேலும், போரின் மையப்பகுதிய வடக்கு நோக்கி நகர்கிறது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    சில தினங்களுக்கு முன் போர் கட்டம் மாற்றப்படுகிறது என லெபனான் எச்சரித்திருந்தது. லெபனான் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என இஸ்ரேல் பதில் அளித்திருந்தது.

    இநத் நிலையில்தான் லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தியதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என இஸ்ரேல் தெரிவித்தது.
    • இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் கூறியுள்ளது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு லெபானானில் ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. தெற்கு லெபனானில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது

    இதையடுத்து லெபனானில் 2 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்தது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மூடப்படுகின்றன.

    இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதிக்கு மேலும் படைகளை அனுப்ப உள்ளோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பென்டகன் அதிகாரி பாட் ரைடர் கூறுகையில், மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தாலும், மிகுந்த எச்சரிக்கை காரணமாகவும், அப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் நமது படைகளை அதிகரிக்க சிறிய எண்ணிக்கையிலான கூடுதல் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அதுதொடர்பான விவரங்களை வெளியிடவில்லை என தெரிவித்தார்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள்.
    • இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர்.

    பெய்ரூட்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு-இஸ்ரேல் இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்துள்ளது.

    சமீபத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள், வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியதில் 39 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறிய ஹிஸ்புல்லா, அந்நாடு மீது ஏவுகணைகளை வீசியது. இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள். இதனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசியது.

    இந்த தாக்குதலை ஒடுக்கும் விதமாக நேற்று லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி கடுமையான தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் உள்ள பகுதிகளில் தீவிர வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.

    தலைநகர் பெய்ரூட், தெற்கு லெபனான் உள் ளிட்ட பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 274 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

    ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் செயல்பாட்டை முற்றிலும் ஒடுக்கும் விதமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

    இந்த நிலையில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. 35 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,645 பேர் காயமடைந்து உள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறும்போது, லெபனான் மக்களுக்கு நான் செய்தி ஒன்றை சொல்கிறேன். இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர். நீண்ட காலமாக, ஹிஸ்புல்லா உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது.

    உங்கள் வீட்டு அறைகளில் ராக்கெட்டுகளையும் ஏவுகணைகளையும் பதுக்கி வைத்துள்ளது. அந்த ஏவுகணைகள் எங்களது நகரங்களை குறிவைக்கின்றன. எங்களது மக்களை ஹிஸ்புல்லா தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் அழிக்க வேண்டும்.

    லெபனானியர்கள் ஹிஸ்புல்லாவின் நோக்கத்திற்காக தங்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது. தயவு செய்து, இப்போது ஆபத்து வழியிலிருந்து வெளியேறுங்கள். எங்கள் செயல்பாடு முடிந்ததும், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம். நாங்கள் போர்களைத் தேடவில்லை. அச்சுறுத்தல்களை களையப் பார்க்கிறோம் என்றார்.

    இதற்கிடையே இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 200 ஏவுகணைகளை வீசினர். இதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.

    • இஸ்ரேல் முழுவதும் சுமார் 270 பயங்கரவாத தாக்குதல்களை PLO மேற்கொண்டது.
    • 15,000 முதல் 18,000 வீரர்களை கொண்ட PLO அமைப்பு லெபனான் முழுக்க பரவி இருந்தனர்.

    இஸ்ரேல் - பாலஸ்தீனம் 

    பாலஸ்தீனம் மீது கடந்த 11 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வருவதாக்குதலில் 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட யூதர்கள் தங்களின் புராதன நிலமாகக் கருதப்படும் ஜெருசலேம் நகரம் அமைந்திருந்த பாலஸ்தீனத்துக்கு அடைக்கலம் தேடி வந்தனர். அவர்களை ஆதரித்து பாலஸ்தீன மக்கள் தங்கள் இடங்களில் அடைக்கலம் வழங்கினர். யுத்தம் முடிந்த 1945 க்கு பிறகு இவ்வாறு அடைக்கலம் புகுந்த யூதர்கள் ஏற்கவே அங்கு இருந்த யூத சமூகத்துடன் சேர்ந்து எண்ணிக்கையில் அதிகமாகிக்கொண்டே வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் பாலஸ்தீன பகுதிகள் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாடு உருவானது. இதனால் அங்கு வாழ்ந்து வந்த பாலஸ்தீன குடிகளான முஸ்லீம் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். எனவே இயல்பாகவே கிளர்ச்சிகள் எழத் தொடங்கின. அவ்வாறு உருவான கிளர்ச்சி அமைப்பே ஹமாஸ். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு இஸ்லாமியர்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளும் அங்கு இருந்த அமைப்புகளும் ஆதரவு வழங்கின.

     

     முதல் லெபனான் யுத்தம் 

    பாலஸ்தீனத்தைத் தவிர்த்து அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேலின் கண்கள் விழுந்தது. லெபனான் மீது தாக்குதல் நடந்த காத்திருந்த இஸ்ரேலுக்கு 1978 இல் அப்படி ஒரு வாய்ப்பு தானாக அமைந்தது. மார்ச் 1978 ஆம் ஆண்டில் லெபனானில் உருவாக்கப்பட்டு இயங்கி வந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பான PLO இஸ்ரேலுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தியது. பொதுப் பேருந்தைக் கடத்திய கிளர்ச்சியாளர்கள் அதில் இருந் அமெரிக்கச் சுற்றுலாப் பயணி உட்பட 34 பேரைக் கொன்றனர். இதை உடனடி காரணமாக வைத்துப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் நுழைந்தது. 

     PLO அமைப்பினரின் தளவாடங்கள் அமைத்துள்ள லெபனானிய பகுதிகளை இஸ்ரேலிய படைகள் 2 மாதகாலமாக தாக்கி வந்தன. கடைசியாக ஐநா தலையீட்டுக்குப் பின்னர் தாக்குதலானது சற்று ஓய்ந்தது. எனினும் PLO மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உரசல்கள் வெடித்த வண்ணம் இருந்தன. எனவே 1981 ஜூலையில் அமெரிக்கா ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவிலேயே மீறப்பட்டது.

    இஸ்ரேல் முழுவதும் சுமார் 270 தாக்குதல்களை PLO மேற்கொண்டது. சுமார் 29 இஸ்ரலேயர்கள் உயிரிழப்புக்கு 300 பேர் படுகாயமடைவதற்கும் இந்த தாக்குதல் காரணமானது,, 15,000 முதல் 18,000 வீரர்களை கொண்ட PLO அமைப்பு லெபனான் முழுக்க பரவி இருந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல் புள்ளியை தேர்ந்தெடுக்கமுடியாமல் திணறியது. இறுதியாக ஜூன் 1982 ஆம் ஆண்டு PLO அமைப்பினர் பிரிட்டனுக்கான இஸ்ரேல் தூதுவரை கொலை செய்ய முயன்றபோது நிலைமை  கையைமீறி சென்றது.

    கலீலி அமைதி என்ற ஆபரேஷனை ஜூன் 6 ஆம் தேதி இஸ்ப்பிரேல் தொடங்கிட்டது. இந்த ஆபரேஷன் மூலம் லெபனானில் நடந்த தாக்குதல்கள் பொதுமக்கள் உயிருக்கும் அச்சுறுத்தலாக மாறின. லெபனான் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட் நகரை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைந்தன.

    ஆனால் சர்வதேச நாடுகள் தலையீட்டால் ஏற்பட்ட அமைதிப் பேச்சுவரத்தை மூலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. PLO அமைப்பினர் லெபானான் தளங்களில் இருந்து வெளியறிவது என்ற ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனாலும் இஸ்ரேலிய படைகளில் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்ந்தன.

    செப்டமப்ர் 1 1982 இல் சுமார் 14,000 PLO வீரர்கள் துனிசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றனர்.. இதில் PLO சேர்மேன் யாசர் அராபத்தும் அடங்குவார். தொடர்ந்து அப்போதைய இஸ்ரேல் பிரதமர் பதவி மெனாகெம் பேகின் பதவி விலகலைத் தொடர்ந்து 1984 இல் இஸ்ரேலிய படைகள் லெபனானில் இருந்து முழுவதுமாக பின் வாங்கின. இந்த போரில் சுமார் 19,000 லெபனான் மக்கள் உயிரிழந்தனர்.இந்த போருக்கு மத்தியில் எழுச்சி பெற்ற சியா முஸ்லீம் படையே ஹிஸ்புல்லா. போருக்கு மத்தியில் 1982 இல் உருவான ஹிஸ்புல்லா PLO அங்கு விட்டுச் சென்ற பணியை தற்போதுவரை தொடர்கிறது.

    இரண்டாம் லெபனான் யுத்தம்

    இடையே ௨௦௦௬ இல் ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேலுக்கும் இடையே வெடித்த மோதல் இரண்டாம் லெபனான் யுத்தமாக அறியப்படுகிறது. 2006, 12 ஜூலை – 14 ஆகஸ்ட்  வரையிலான காலகட்டத்தில் லெபனான் பகுதிகள்,  வடக்கு இஸ்ரேல், கோலோன் சிகரம், ஆகிய பகுதிகளில் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே கடுமையான மோதல்  ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஐநாவின் தலையீட்டால் இந்த மோதல் முடிவுக்கு வந்தது.

     

    மூன்றாம் யுத்தம் 

    தற்போது காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. எனவே இதனால் கொந்தளித்த இஸ்ரேல் ஹிஸ்புல்லாவினரின் தொலைத்தொடர்பு சாதனங்களை வெடிக்க வைப்பது உள்ளிட்ட ரீதியாக தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது நேரடியாக சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது .நேற்றைய இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் 1982 இல் நடந்ததைப் போல 2006 இல் நடந்ததை போல  மூன்றாவது லெபனான் போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அழிவு 

    முந்தய இரண்டு  முறையும் ஐநா சண்டையை தீர்த்து வைத்தது. ஆனால்  தற்போது ஐநாவின் தொடர் அறிவுறுத்தலையும் இஸ்ரேல் அலட்சியம் செய்து வருகிறத. எனவே இந்த முறை மனிதகுலம் பெருமையாக தத்தமது நாடுகளின் உருவாக்கி வைத்திருக்கும் மேம்பட்ட அழிவுக் கருவிகள் மூலம் கடந்த நூற்றாண்டைவிட அதிக அழிவுகள் இருக்கும் என்பதே சர்வதேச சமூகத்தின் அச்சமாக மாறியுள்ளது. 

    • இஸ்ரேலிய ஏவுகணை வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
    • சமநிலையை இழந்த ஊடகவியலாளர் தூக்கி வீசப்பட்டார்.

    லெபனான் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். மிராயா இன்டர்நேஷனல் நெட்வொர்க்கின் தலைமை ஆசிரியர் ஃபாடி பௌதயா, ஏவுகணை அவரது வீட்டைத் தாக்கிய நேரம், சமநிலையை இழந்த ஊடகவியலாளர் தூக்கி வீசப்பட்டார்.

    நேரலையில், அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வீடியோவின் படி, நேரலையில் பௌதயா பேசிக் கொண்டிருந்த போது அவரது வீட்டை ஏவுகணை ஒன்று தாக்கியது. திடீர் தாக்குதலை அடுத்து அலறிய பௌதயா வீடியோவை துண்டித்ததாக தெரிகிறது.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. நேரலையில், இருக்கும் போது தாக்குதலில் சிக்கிய செய்தியாளருக்கு என்ன ஆனது என எக்ஸ் தளத்தில் பலரும் கேள்விகள் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கு பின் சிறிது நேரம் கழித்து ஆன்லைன் வந்த பௌதயா ஃபாளோயர்களுக்கு பதில் அளித்தார்.

    அதில், "தொலைபேசியில் அழைத்தவர்கள், குறுஞ்செய்தி அனுப்பியவர்கள், செக்-இன் செய்தவர்கள் மற்றும் ஏதோ உணர்ச்சியை உணர்ந்த அனைவருக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி, நான் நலமாக இருக்கிறேன், கடவுள் மற்றும் அவர் எங்களுக்கு அளித்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி. எதிர்ப்புக்கு ஆதரவாக எங்கள் ஊடக கடமையைத் தொடர நாங்கள் திரும்புகிறோம், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி," " என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 



    • இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
    • இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்துக்குக் குறிவைத்துத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதால் நிலை தடுமாறிய ஹிஸ்புல்லா தற்போது இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

    இஸ்ரேலின் தாக்குதலில் தங்களின் கமாண்டர் இறந்தாலும் அதனால் தங்களின் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழியும் என்று எண்ணிவிடக்கூடாது என்று ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடதத் தொடங்கியுள்ள ஹிஸ்புல்லா இதுவரை வடக்கு இஸ்ரேல் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்த பேலிஸ்ட்டிக் தாக்குதலை ஆன்டி- பேலிஸ்டிக் மிசைல்கள் மூலம்  இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரின் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்துக்குக் குறிவைத்துத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த பேஜர் தாக்குதல்களுக்கும் தங்களது தளபதிகளைக் குறிவைத்துக் கொன்றதற்கும் மோசாட்டை [பழிதீர்க்க இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் தலைநகர் டெல் அவிவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

     

    • ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
    • லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கிய நாளில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துகிறது. இருதரப்பு மோதல் பிராந்திய அளவில் பெரிய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடிக்க செய்யப்பட்டன. இந்த கோர சம்பவத்தில் 39 பேர் பலியாகினர். சுமார் 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கொடூர தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    இதனால் கோபமடைந்த இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவுக்கு லெபனான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது. கடந்த 2 நாட்களில் லெபனானில் 1,600-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் 560-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் எச்சரிக்கை cons.beirut@mea.gov.in என்ற இமெயில் மூலமும், +96176860128 என்ற எண் மூலமும் இந்திய தூதரகத்துடன் இணைப்பில் இருக்கவும் இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

    • ஹிஸ்புல்லா மீது முழு சக்தியுடன் தாக்குதல் தொடரும் என நேதன்யாகு அறிவிப்பு.
    • ஹிஸ்புல்லாவின் இரண்டு முக்கிய கமாண்டர்களை இஸ்ரேல் வான் தாக்குதல் மூலம் கொலை செய்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தினர். காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் வடக்குப் பகுதியில் உள்ள லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    அதனால் இஸ்ரேல் வடக்குப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக குடிமயர்த்துவதுதான் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்தது.

    அந்த அறிவிப்பு வெளியான அடுத்தடுத்த நாளில் ஹிஸ்புல்லா பயன்படுத்தி வந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. அதன்பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

    ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டு முக்கிய கமாண்டர்களை இஸ்ரேல் தாக்கி கொன்றுள்ளது. மூன்று நாட்களாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்துமாறு ஈரானை வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால், தற்போது அதற்கான நேரம் இல்லை என இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் மண்ணில் கொல்லப்பட்டபோது, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்திருந்தது. கொலை செய்யப்பட்ட ஓரிரு நாளில் இஸ்ரேல் மீது 350-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதன்பின் பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை.

    இஸ்ரேல் பாதுகாப்புப்படை, ஹிஸ்புல்லா உடனான மோதல் இணையும் வகையிலான எந்தவித காரணத்தையும் ஈரானுக்கு கொடுத்துவிட வேண்டாம் எனக் கூறியதாக இஸ்ரேலின் மூத்த அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • ஹிஸ்புல்லா மீது முழு வீச்சில் தாக்குதல் தொடரும் என நேதன்யாகு ஐ.நா.வில் பேச்சு.
    • லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்.

    காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் பாதுகாப்பாக அதே பகுதியில் குடியமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் லெபனான் தெற்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த வாரம் ஏற்கனவே நடத்திய பயங்கர தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் மீது பயங்கர வான்தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் கட்டடம் கடும் சேதம் அடைந்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் ஹஸ்ரல்லா உள்ளிட்டோரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் பலியாகியிருக்கலாம். 91 பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஐ.நா. சபையில் உரையாற்றிய நேதன்யாகு, ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதல் முழுவீச்சில் தொடரும் எனக் கூறினார். அவர் பேசிய உடனே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா [64 வயது] உள்ளிட்டோரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
    • தெற்கு பெய்ரூட்டில் நேற்று நடந்த தாக்குதல்களில் நஸ்ரல்லாவின் மகள் ஜைநப் உயிரிழந்துள்ளார்

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் தாக்குதல் நடந்தி வருகிறது. ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் லெபனான் பொதுமக்கள் உட்பட சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர், இரு குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்தது. இதில் ஹிஸ்புல்லா கமாண்டர்கள் சிலர் கொள்ளப்பட்டனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஒரே வாரத்தில் லெபனானில் 700 க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். 118,000 க்கும் அதிகாமாக லெபனான் மக்கள் போர் பதற்றத்தால் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

     

    இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே [Dahiyeh] பகுதியில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு குடியிருப்பு கட்டடங்கள் மீதும் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா [64 வயது] உள்ளிட்டோரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் இந்த வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு முதல் நஸ்ரல்லா காணாமல் போன நிலையில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து இதுவரை குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

     

    கடந்த 1992 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அப்போதைய ஹிஸ்புல்லா தலைவர் அபபாஸ் அல் முசாவி உயிரிழந்தபோது தலைவர் பொறுப்பேற்ற ஹசன் நஸ்ரல்லா 32 வருடங்களாக ஹிஸ்புல்லா தலைவராக இருந்துள்ளார்.

    கடந்த 2006 ஆம் ஆண்டு இரண்டாம் லெபனான் [போரின் போது தாங்கள் நடத்திய தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழந்ததாக அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே நஸ்ரல்லா உயிருடன் பொதுவெளியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தெற்கு பெய்ரூட்டில் நேற்று நடந்த தாக்குதல்களில் நஸ்ரல்லாவின் மகள் ஜைநப் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    • ஹிஸ்புல்லாவுடன் தொடர்பில் உள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
    • பெய்ரூட் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க நழுவியுள்ளது.

    பெய்ரூட் தாக்குதல் 

    லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாஅமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,.118,000 மேற்பட்ட மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்ததை நிராகரித்து நேற்றைய தினம் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் உட்பட மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மகள் ஜைனப் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகின. 

    அயத்துல்லா காமேனி

    மேலும் நேற்று இரவு முதல் நஸ்ரல்லா காணாமல் போன நிலையில் தங்களின் தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் ஹிஸ்புல்லா தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா காமேனியை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் அரசு மாற்றியுள்ளது. ஈரானில் பெயர் குறிப்பிடப்படாத அதிக பாதுகாப்புள்ள இடத்துக்கு காமேனி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

     

    ஈரான் 

    மேலும் ஹிஸ்புல்லாவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணதோடு தங்களின் தாக்குதலை முடித்துக் கொள்ளப்போவதில்லை என்று இஸ்ரேல் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாவுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்காமல் தாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

     

    இஸ்ரேல் பதற்றம் 

    ஹிஸ்புல்லா தலைமையகம் மீதும் நஸ்ரல்லாவின் மீதுதான் இந்த தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், சரியான நேரத்திற்காகக் காத்திருந்து தற்போது தாக்குதல் நடத்தியாகவும் இஸ்ரேலிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைவர் கொல்லப்பட்டதால் எந்நேரமும் இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தலாம் என்பதால் மொத்த இஸ்ரேளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ஹை அலெர்ட் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இஸ்ரேலின் பெய்ரூட் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க நழுவியுள்ளது. 

    ×