என் மலர்
நீங்கள் தேடியது "Lifestyle"
- ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஆடம் போடே கூறுகிறார்.
- அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களை விட ஆண்களே சற்று அதிகமாக காதலில் விழுகின்றனர், ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் துணையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த Peer review மதிப்பாய்வில், ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்னதாகவே காதலில் விழுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் ஆசிரியரும், ANU முனைவர் பட்ட மாணவருமான ஆடம் போடே கூறுகையில், "ஆண்கள் தங்கள் காதலியின் மனதை கவர தங்கள் அர்ப்பணிப்பைக் அதிகம் காட்ட வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று தெரிவிக்கிறார்.
ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர வகை புற்றுநோயாகும்.
- லட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.
மார்பகப் புற்றுநோய் ஒரு தீவிர வகை புற்றுநோயாகும். பொதுவாக இந்த பிரச்சனை பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், சில சூழ்நிலைகளில் ஆண்களும் இந்த பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான நோயாளிகள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். சிகிச்சையில் தாமதம் மற்றும் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாததால் மார்பக புற்றுநோய் தீவிரமடைகிறது.
மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதிக உயரம் உண்மையில் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறதா? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மார்பகப் புற்றுநோய்க்கு பல காரணங்கள் உள்ளன. உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை தவிர, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள், உடல் அமைப்பு மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
NCBI -ல் வெளியிடப்பட்ட சில ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் உயரமான உயரம் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அதிக ஆபத்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
மார்பக புற்றுநோயைத் தூண்டும் காரணிகளில் உயரமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், உயரம் மட்டுமே மார்பக புற்றுநோயை ஏற்படுத்தாது. மார்பகப் புற்றுநோய்க்கு உயரத்தைத் தவிர, வேறு பல காரணங்களும் காரணமாக இருக்கலாம்.
உடல் உயரம் அதிகரிக்கும் போது, ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படுகின்றன. இது மார்பக திசுக்களை பாதிக்கிறது. இது தவிர, அதிக உயரம் கொண்ட பெண்களுக்கு இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி (IGF-1) ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக, செல்கள் வளரும் அபாயமும் அதிகரிக்கிறது.
- குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், ஆபத்து அதிகரிக்கலாம்.
- கொழுப்புச்சத்து மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
மார்பகப் புற்றுநோய் குறித்த தகவல்கள் இல்லாததாலும், இணையத்தில் தவறான தகவல்கள் கிடைப்பதாலும், அது தாமதமாகக் கண்டறியப்படுகிறது. இந்த நோயை சரியாகக் கண்டறிவதன் மூலம், அதிலிருந்து விரைவாக மீட்க முடியும். ஹார்மோன் மாற்றங்கள், உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மரபணு காரணங்கள் போன்ற பல காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
* குடும்பத்தில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால், ஆபத்து அதிகரிக்கலாம்.
* BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணு மாற்றங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
* ஹார்மோன் மாற்று சிகிச்சையின் (HRT) பயன்பாடும் ஆபத்தை அதிகரிக்கலாம்.
* மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
உணவில் அதிகப்படியான கொழுப்புச்சத்து மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
தடுப்பு நடவடிக்கைகள்
மார்பக புற்றுநோயை தடுக்க, உணவு, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள்
* பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் சாப்பிடுங்கள்.
* கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்கவும்.
* உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்
* தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான-தீவிர ஏரோபிக் செயல்பாட்டைப் பெறுங்கள்.
* எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமன் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
மது அருந்துதல் மற்றும் புகைத்தல்
மது அருந்துவதை கட்டுப்படுத்துங்கள். மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்துவது நல்லது.
புகை பிடிக்காதீர்கள். புகைபிடித்தல் மார்பக புற்றுநோயை மட்டுமல்ல, பல கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும்.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்க, 40 வயதிற்குப் பிறகு வழக்கமான மேமோகிராபி செய்ய வேண்டும். மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய மேமோகிராபி உதவுகிறது.
இது தவிர, உங்கள் மார்பகத்தை நீங்களே சரிபார்த்து, மடிப்புகளில் ஏதேனும் மாற்றத்தைக் காணலாம். மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை அணுகி, பரிசோதனைக்குப் பிறகு, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
- உலகளவில்100 வயதை கடந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடு.
- ‘ஐகிகாய்’ என்பது ஜப்பானிய பாரம்பரிய தத்துவமாகும்.
ஜப்பானியர்களின் வாழ்க்கை முறையும், கலாசாரமும், அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களும் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உலகளவில்100 வயதை கடந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடாக அது விளங்குவதுதான் அதற்கு காரணம். மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் ஜப்பானியர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்வதும், அதனை கடைப்பிடிப்பதும் அவசியமானது.

மகிழ்ச்சி :
'ஐகிகாய்' என்பது ஜப்பானிய பாரம்பரிய தத்துவமாகும். எந்தவொரு சூழலிலும் அமைதியை கடைப்பிடிப்பது, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருப்பது, சின்ன சின்ன விஷயங்களிலும் மகிழ்ச்சியை அனுபவிப்பது போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி மற்றும் மன நிறைவை கண்டறியலாம் என்பதை நோக்கமான கொண்டது. இந்த தத்துவத்தை ஜப்பானியர்கள் பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்க்கை சூழலை தக்கவைத்துக்கொள்கிறார்கள்.
சாப்பாடு:
உடலை கோவில் போல வழி நடத்த வேண்டும் என்பது ஜப்பானிய உணவுக்கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். மது, புகையிலை போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விலக்கி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதனை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.
உணவில் குறைந்த கலோரி கொண்ட பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொள்கிறார்கள். சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் கலோரிகள் குறைவாக இருப்பதை உறுதி செய்கிறார்கள். அதனால் திருப்தியாக சாப்பிடுகிறார்கள். உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கிரீன் டீ :
கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட பாலிபீனால்கள் அதிகம் இருக்கிறது. அதனால் ஜப்பானியர்கள் கிரீன் டீயை தங்கள் பாரம்பரிய பானமாக ருசிக்கிறார்கள்.
இது குடல் நலனை பாதுகாக்கும், செல் சிதைவை தடுக்கும், நாள்பட்ட நோய்களில் இருந்து விலக்கி வைக்கும் பானமாக விளங்குகிறது. ஜப்பானிய பாரம்பரிய பானமான கிரீன் டீ உலக அளவில் பிரபலமடைந்தும் வருகிறது.

சமூக ஈடுபாடுகள்:
குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அடிக்கடி சமூக செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அதன் மூலம் சமூக தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்கிறார்கள். அப்படி இயங்குவது சமூகத்திற்கு பயன்படும்படியாக அமைவதுடன் அவர்களின் உடல் செயல்பாடும் மேம்படுகிறது. அது அவர்களின் ஆரோக் கியத்திற்கும் நன்மை தருவதாகவும் அமைந்துவிடுகிறது.
மெதுவாக சாப்பிடுதல்:
ஜப்பானியர்கள் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். உணவை நன்றாக மென்று சாப்பிடவும் செய்கிறார்கள். அது செரிமானம் சிறப்பாக நடைபெறுவதற்கு வித்திடுகிறது. அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு எழுவதற்கு குடும்பத்தினரை அனுமதிப்பதில்லை. அப்படி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் உறவு பந்தத்தையும் வலுப்படுத்திக்கொள்கிறார்கள்.
- இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது.
- தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தனி நபர் செலவினங்கள் குறித்த குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு [Human consumption expenditure survey -HCES ] 2022-23 அறிக்கை வெளியாகியுள்ளது. அதனபடி இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது.
தனி நபர் அதிக செலவு செய்யும் பட்டியலில் ஒரு சில மாநிலங்களே உள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று. கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தனி நபர் செலவினம் நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளதாகவும், அதுவே கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் அதிகம் உள்ளதாகவும் அறிக்கையில் குறியப்படடுள்ள நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகர்ப் புறத்தில் சராசரியாக ஒருவர் ரூ. 7,630 செலவழிக்கிறார். அதுவே கிராமப்புறத்தில் ஒரு நபரின் செலவினம் ரூ.5,310 ஆக உள்ளது. இந்திய அளவில் நகர்ப்புற கிராமப்புற செலவின வித்தியாசம் 71 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் அந்த வித்தியாசம் 44 சதேவீதமாக மட்டுமே உள்ளது.

இதற்கு முக்கிய கரணம் தமிழகத்தில் நாகபுரத்துக்கு ஈடாக கிராமப்புரத்தில் உள்ள இளைஞர்களுக்கு உரிய கல்வி கிடைப்பதால் அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. எனவே தமிழகத்தில் நகர்புறத்துக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் தனி நபர் செலவினம் உள்ளதாகவே பார்க்கமுடிகிறது. மேலும் கலாசார மாற்றங்களும் தனி நபர் செலவினத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உடுத்தும் ஆடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவை இதற்கு முந்தைய காலத்தில் குறைவாகவே இருந்த நிலையில் தற்போது அவர்களும் விதவிதமான ஆடைகள், உணவுகள், பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தப் பழக்கப்பட்டுவிட்டனர் என்பதை நாம் பார்க்கலாம்.
குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது கண்கூடு. இதுதவிர்த்து இந்த செலவின அறிக்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வறுமை நிலையையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறிய முக்கிய ஆதாரமாக உள்ளது குறிப்பிடத்க்கது.
- உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
- மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது.
இரவில் தாமதமாக உறங்கச் செல்பவர்களை தூக்கி வாரிப் போடும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையால் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களில் முக்கியமானது சிறுவர்கள் உட்பட பெரும்பாலானோர் அதிகமாக மொபைல் பயபடுத்துவது ஆகும்.
இரவில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு விடிய விடிய மொபைல் பயன்படுத்தும் காட்சிகளை ஏறக்குறைய எல்லோரது வீட்டிலும் நாம் பார்க்க முடியும். இதனால் மனிதர்களின் உடலுக்கு முக்கியத் தேவையாக உள்ள உறக்கம் பாதிக்கப்பட்டு உடலில் பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக ஸ்டேன்போர்டு பலகலைக்கழகத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூங்கச்செல்பவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவில் தாமதமாக உறங்கச் செல்வதால் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன், நோய் எதிர்ப்புதிறன் குறைவு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனஅழுத்தம், நரம்பியல் பிரச்சனைகள், தனிநபர் குணாதிசயங்களில் மாறுபாடு ஆகியவற்றை தாமதமாக உறங்குபவர்களிடத்தில் கண்டறிய முடிகிறது. மேலும் அந்த ஆய்வில் இரவு வேகமாக தூங்கி அதிகாலையில் எழுந்துகொள்பவர்களின் மனநலம் சிறப்பானதாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வானது பிரிட்டனில் உள்ள சுமார் 74,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தற்போதைய காலக்கட்டத்தில் பலர் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள்.
- ஒரு பிடித்த உணவை சாப்பிட எண்ணம் வந்தாலும், இது போன்ற நபர்கள் கூறிய வீடியோக்கள் கண் முன்னே வந்துப் போவதால்
தற்போதைய காலக்கட்டத்தில் பலர் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வாழ்க்கை முறை, தரம் கெட்ட உணவுகள், வேலை பளு, மனச் சோர்வு என்று ஏகப்பட்ட காரணங்களை கூறிக் கொண்டே இருக்கலாம்.
இதனால் பலர் உடற்பயிற்சி, யோகா என அவரவர் விரும்பிய பயிற்சிகளை செய்கிறார்கள். அவர்களால் முடிந்த உடற்பயிற்சியில் ஈடுப்படுகின்றனர். இதனால் இன்ஸ்டாகிராமில் ஃபிட்னஸ் சார்ந்த கிரியேட்டர்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஒவ்வொருவரும் தனக்கு தோன்றியதை கருத்தாக கூறி வருகின்றனர். ஒருவர் கூறும் தகவல்கள் குறித்து அறிவியல் ஆராய்ச்சி எதுவும் செய்யாமல் மேம்போக்காக வீடியோவில் கூறி விடுகின்றனர்.
சமூக வலைதளங்களில் இப்படியொரு வழக்கம் இருப்பதைத் தொர்ந்து இன்ஸ்டாகிராமில் யாரை நம்புவது, எந்த தகவல் உண்மை என்பதை குழம்பி தவித்து வருகின்றனர். ஒரு பிடித்த உணவை சாப்பிட எண்ணம் வந்தாலும், இது போன்ற நபர்கள் கூறிய வீடியோக்கள் கண் முன்னே வந்துப் போவதால் அதை சப்பிட்டப் பின் இத்தனை கலோரிகள் கூடிவிடும் என்பதால் அவர்களுக்கு பிடித்த உணவுகளை கூட சாப்பிட முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கின்றனர்.
அப்படி சமீப காலமாக ஃபிட்னஸ் செய்யும் நபர்களில் சிலர், நாம் சாப்பிடும் உணவின் கலோரியை உடலில் எரிக்க எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் அந்த உணவின் கலோரியை எரிக்க முடியும் என்று கூறிவருகிறார்கள். இந்த தகவல்களை முற்றிலும் மறுக்கும் கருத்துக்களை முன்னணி உடற்பயிற்சி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த வீடியோவில் ஜார்டன் யோ ஃபிட்னஸ் கூறும் போது, உதாரணமாக நாம் சாப்பிடும் 1 சமோசாவில் 550 கலோரிகள் உள்ளன. அதன் கலோரியை எரிக்க வேண்டுமென்றால் நாம் 30 நிமிடம் ஓட வேண்டும் அல்லது 30 நிமிடம் நீச்சல் பயிற்சி வேண்டும் அல்லது 1 மணி நேரம் தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஆனால் மக்கள் தினசரி அவர்கள் பார்க்கும் வேலைக்கு ஏற்ப கலோரி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். சராசரி மனிதன் தினசரி 1500 முதல் 2000 கலோரிகளை உணவாக உட்கொள்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் நம்மால் உடற்பயிற்சியின் மூலம் எரிக்கவே முடியாத காரியம்.
நாம் சாப்பிடும் பெரும்பாலான கலோரிக்கள் பிஎம்ஆர் என சொல்லப்படும் பேசல் மெடபாலிக் ரேட்டில் (Basal Metabolic Rate) தான் 60 சதிவீததுக்கும் மேற்பட்ட கலோரிக்கள் எரிக்கப்படுகிறது. 20 சதவீத கலோரி NEAT என கூறப்படும் நாட் எக்சர்சைஸ் ஆக்டிவிட்டி லெவல் (Not Exercise Activity Level) உதவியுடன் நாம் கலோரிக்களை எரிக்கிறோம்.
அந்த வகையில் ஒருவர் தனது உடல் எடையை குறைக்க அதிகளவு உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், பிஎம்ஆர் அடிப்படையில் அவரவர் உடலுக்கு தேவையானதை விட குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுளை உட்கொண்டாலே நாளடைவில் உடல் எடை தானாக குறையும்.
இதனால் மக்களுக்கு கூற வருவது என்னவென்றால், மனதுக்கு பிடித்திருப்பதை சாப்பிடுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் எடை கூடி இருந்தாலும், உடல் எடை குறைந்து இருந்தாலும் கவலைப்படாமல் மனதில் தைரியத்துடன் எல்லாம் விஷயத்தையும் அணுகுங்கள், என்று தெரிவித்தார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இவருக்கு நன்றியும், இது தொடர்பான சந்தேகங்களையும் கமென்ட் செய்து வருகின்றனர்.
- ஒரு நிகழ்வினை சமாளிக்க அதிக டிராமா தேவையில்லை.
- நீங்கள் உருவாக்கும் குடும்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
மன அமைதி, தெளிவு, நிம்மதி இவற்றிற்கு அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை அல்லது சில முயற்சிகளை நாம் கடைபிடிக்க வேண்டும். இதனை 50 வயதில் கடைபிடிப்பது ரொம்ப லேட். எனவே 20 வயதிற்குள் அதை கடைபிடிக்க இளைய தலைமுறைக்கு சொல்லித் தரலாமே.

* பல நேரங்களில் பேசாமல் அமைதி காப்பது நல்லது. நன்கு பேசும் கிளியினைத்தான் கூண்டில் அடைக்கின்றார்கள். மறவாதீர்கள்.
* ஒரு நிகழ்வினை சமாளிக்க அதிக டிராமா தேவையில்லை. அமைதி போதும்.
* அநேக மக்களுக்கு வாழ்வின் நோக்கம், வாழ்வின் பாதையினை நிர்ணயிக்க முடிவதில்லை. தெரிவதில்லை.
* நீங்கள் வந்த குடும்பம் பெரிய முக்கியம் அல்ல. நீங்கள் உருவாக்கும் குடும்பம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
* குடும்பம்தான் உங்களை ஊக்கப்படுத்தும், உறுதுணையாய் நிற்கும்.
* உங்கள் வெற்றியில் மகிழும் ஒரு நண்பர் இருந்தாலும் போதும். நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
மேலும் இந்த வழக்கங்களும் நடைமுறையும் உதவும்
* பிறரைப் பற்றி குறை கூறாது இருப்பதும், புறளி பேசாது இருப்பதும் மிகுந்த மன அமைதி தரும்.
* நீங்கள் பேசுவதை நீங்களே பதிவு செய்து பின்னர் நீங்களே அதனை கேட்டுப் பாருங்கள். உங்களை அழகாய் செதுக்கிக் கொள்ள இந்த பழக்கம் உதவும்.
* எங்கெங்கு தவறுகள் ஏற்படுகின்றன என்பதனை உணர உங்களுக்கு முழு உண்மையான உள்வட்ட நபர்கள் தேவை.
* யாரையும் பிறர் எதிரில் அவர்களது தவறுகளைக் கூறாமல் தனியே கூறிப்பாருங்கள்.
* மற்றவர்கள் பெயர்களை ஞாபகத்தில் வைத்து பேசுவது ஒரு தனி கலை.
* ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தெரியாது என்றால் 'தெரியாது' என்று சொல்லி விடுவது நிம்மதி தரும். நமக்கு சாதாரண ஆசைகள் இப்படியும் இருக்கலாமே?
* ராமாயணம், மகாபாரதம், பைபிள், குரான் இவை அனைத்தையும் சிறு வயதிலேயே படித்து அறியலாமே?
* தேர்ந்தெடுத்து சில புத்தகங்களை வாழ்நாளில் படித்து அறிந்து கொள்வோமே.
* சூரிய அஸ்தமனம் செவ்வாயில் நீலமாகத் தெரியுமாம். அழகாய் இருக்கும். சென்று பார்த்து வரலாமா.
* பிரபஞ்சம் நிசப்தமாக இருக்குமாம். நாமும் நிசப்தமாக இருந்து பிரபஞ்ச சக்தியாக மாற முயற்சிப்போமா.
* அகத்திய மகரிஷியினைப் பார்த்து இன்றும் ஏதோதோ வைரஸ் வகைகளை சொல்கின் றார்களே. அதற்கெல்லாம் அவருக்குத் தெரியாத மருந்தா? கேட்டு வர முடியுமா?
* இங்கிருந்து விடாது நடந்தால் 9 அல்லது 12 வருடத்தில் நிலவுக்கு சென்று விடலாம் என்கின்றனர். என்ன பிரமாதம். போக 9 வருடம், திரும்பி வர 9 வருடம். மொத்தம் 18 வருடம் தானே கண் சிமிட்டும் நேரத்தில் சென்று வந்து விடலாமே. செய்யலாமா?
* கருந்துளை, கருந்துளை என்கின்றார்களே. விண்வெளியில் நிலவும் கருந்துளை ஆற்றல் மிக்க ஈர்ப்பு விசை கொண்டது. ஒளி உட்பட எதுவும் அதன் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பிக்க முடியாது என்கின்றனர். எண்ணற்ற கருந்துளை உள்ளனவாம். மெதுவாக உள்ளே விழுந்து விடாமல் உள்ளே எட்டி பார்த்து விட்டு வருவோமா.
* என்னிடம் ஒரு பெண்மணி கூறியது. எனக்கும் ஒரே ஒரு சின்ன ஆசைதான். கடவுளைப் பார்த்து கேட்கணும். 'கடவுளே. எனக்கு ஒரு சின்ன ஆசை. உன்னிடம் எல்லா சக்தியும் இருந்தும் ஏன் இவ்வளவு அசடா இருக்கே. உன் சக்தியை என் கிட்ட கொஞ்ச நேரம் மட்டும் கொடு. கெட்டவனை எல்லாம் தீர்த்து கட்டி விட்டு உன்னிடமே உன் சக்தியினை திரும்ப கொடுத்து விடுகின்றேன்" என்றார். இதுவும் மிகச் சிறிய ஆசை தானே.
* சித்தர்களாலும், யோகிகளாலும் தூசியினைக் கூட ஒரு பொருளாக, சக்தியுள்ளதாக மாற்ற முடிகின்றதே. நமக்கு அந்த அளவு வேண்டாம். செய்யும் வேலை, படிக்கும் படிப்பு இவற்றில் முழு கவனம் செலுத்தி சாதிக்க விழிப்புணர்வும், கவனமும் வேண்டுமே.
* உங்களுக்கென என்ன வேண்டும்? ஒரு நல்ல தோட்டமும், நூலகமும் இருந்து விட்டால் போதும். அநேக நன்மைகள் கிடைத்ததற்கு இவை சமம்.

ஜென் புத்திசம்
இது புத்தர் வழி பின்பற்றுபவர்களின் ஒரு பிரிவு எனலாம். ஜென் என்றால் ஜப்பானிய மொழியில் தியானம் என்று பொருள். தியானத்தின் மூலம் உள்ளுணர்வு மற்றும் ஞானத்தினை அடையும் மார்க்கமாக இதனைக் கூறுவர்.
இவ்வழி பின்பற்றும் சில துறவிகள், ஞானிகளின் கருத்தினை கேட்கும், படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவைகளை பகிர்ந்து கொள்கிறேன்.
மார்க்கம் எதுவானாலும் மனிதனின் நோக்கம் ஒன்றுதான். தீயவை அகல வேண்டும். நல்லவை வந்து சேர வேண்டும். நல்லது என்று ஒன்று இருக்கும். அந்த தீயதனை நாம் நீக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
அப்போதுதான் நன்மை தடங்கல் இன்றி வந்து சேரும் என்ற விதமாக இவர்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவர்களின் பல கருத்துக்கள், பழக்க வழக்க முறைகள் நம் பழக்க வழக்கங்களை ஒத்து உள்ளன.

உதாரணமாக
உப்பு: இங்கு உப்பு என்று குறிப்பிடப்படுவது கல் உப்பை பற்றித்தான். நம்ம ஊரில் சாதாரண சமையல் முதல் பதப்படுத்தும் ஊறுகாய் வரை உப்பு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. சிறிய அளவில்தான் என்றாலும் இது இல்லாமல் சமையல் இல்லை.
அதிக உப்பு கூடாது எனும் மருத்துவ உலகம் உடலில் உப்பின் அளவு குறைந்தால் ஏற்படும் தீமைகளையும் விளக்குகின்றது. நரம்பு மண்டலம், தசைகளின் இயக்கம், உடலின் திரவ சமநிலை இவற்றிற்கு உப்பு அவசியமான ஒன்றே.
உப்பின் அளவு உடலில் குறையும் போது வாந்தி, மயக்கம், சக்தியின்மை என கொண்டு சென்று விடும். இது ஆரோக்கிய, மருத்துவ முறை.
வீட்டில் ஏதேனும் புனித நீராடல் என்றால் கடலில் சென்று குளித்து வருவார்கள். அனைத்து தீய சக்திகளை நீக்கும் ஆற்றல் உப்பிற்கு உண்டு. வீட்டில் கண் திருஷ்டி எனச் சொல்ல உப்பு சுற்றி போடுவார்கள். இதனை நம்புபவரும், நம்பாதவரும் உண்டு. இது அவரவர் விருப்பம்.
மேலே குறிப்பிட்ட ஜென் முறையில் உப்பிற்கு நமக்கு ஆக்கப் பூர்வமான சக்தியிைன ஊட்டி வாழ்வினை வளமாக்கும் சக்தி உண்டு என்கின்றனர். இதனை எந்த மதசார்பும் இன்றி அனைவருமே வலியுறுத்தி உள்ளனர்.
கடற்கரையை ஒட்டி நடக்கும் போது ஒரு புத்துணர்ச்சி வருவதன் காரணம். உடலின் தீய சக்திகள் உப்பு காற்றின் மூலம் நீக்கப்படுகின்றன என்கின்றனர்.

உப்பு மனதினை மகிழ்வாக்கும் செரடோனின் சுரக்க உதவு கின்றது. இவர்கள் உப்பினை (ராக்சால்ட், ஸ்ரீமாலயன் சால்ட்) இவைகளை அதிகம் உணவிற்காக சிறிய அளவில் பயன்படுத்துகின்றனர்.
கல் உப்பினை ஒரு கிளாசில் 2 அல்லது 3 பங்கு நிரப்பி கால்பங்கு நீர் சேர்த்து நீங்கள் இருக்கும் அறையில் உங்களுக்கு அருகில் தரையில் வைத்து விடுங்கள். 24, 48 மணி நேரம் அந்த கிளாஸ் அங்கேயே இருக்கட்டும். உங்களை சுற்றியுள்ள தீய சக்திகள் நீங்கும் என்கின்றனர்.
- உடற்பயிற்சிகள் தான் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.
- உடலுக்கான பயிற்சி பெண்களிடம் குறைவாக காணப்படுகிறது.
இந்தியர்களின் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடு பற்றிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிடைத்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
கரமயமாதல் அதிகரித்து வருவது போல் நகர்ப்புற வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. அதே நேரம் அன்றாட வாழ்க்கை முறைகளால் பெரும்பாலானவர்கள் சுறுசுறுப்பை தொலைத்து செயலற்றவர்கள் போல் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 5-ல் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகள் விளையாடும் நேரத்தை விட படிப்பதற்குதான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
48 சதவீதம் பெரியவர்கள் விளையாடும் இளம் வயதை கடந்துவிட்டதாக நினைத்து விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்.
45 சதவீதம் பேர் பெண்கள் விளையாட்டில் ஈடுபட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும். அது திருமண வாய்ப்புகளுக்கும் இடையூறாக வரலாம் என்று நம்புகிறார்கள்.
உடல்நல அபாயங்கள், பதட்டம் மற்றும் மனச்சோர்வைத் தணிக்க, பெரியவர்கள் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடம் சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.
உடற்பயிற்சிகள் தான் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இதன் மூலம் மனநலமும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். சிறுமிகள் இளமைப் பருவத்தை அடைந்த பிறகு, மேலும் வீட்டு வேலைகள் மற்றும் கவனிப்புப் பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது.

பூங்காக்கள் மற்றும் மைதானங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாகவும் நகரங்களில் உள்ள பெண்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
கர்ப்பிணி மற்றும் மாதவிடாய் பெண்கள் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது என்றாலும், செய்யக்கூடாது என்ற தவறான கருத்து உள்ளது. இந்தியப் பெண்களின் முக்கால்வாசி சுறுசுறுப்பான நேரமானது வீட்டு வேலைகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவனித்து கொள்வதில்தான் செலவிடப்படுகிறது.
கிராமப்புறங்களை ஒப்பிடும்போது நகரப் பகுதியில் உடலுக்கான பயிற்சி பெண்களிடம் குறைவாக காணப்படுகிறது.
இளம் வயது பெண்களின் உடற்பயிற்சி, விளையாட்டுக்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது சமூக பாதுகாப்பு தொடர்பான அச்சம், இதன் காரணமாக 20 கோடி பேர் சுறுசுறுப்பை தொலைத்து செயலற்றவர்கள் போல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
- ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் வருகை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்திய மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது.
இந்திய சமூகத்தில் சமீப காலமாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் முறை அதிகரித்து வருகிறது. மேல்தட்டு மக்கள் இடையே மட்டுமே இருந்து வந்த இந்த வழக்கம் தற்சமயம் நடுத்தர குடும்பங்கள் இடையேயும் பரவி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் வருகை.
சிலிண்டர் டோர் டெலிவரி வாங்கி உணவு சமைத்து சாப்பிடுவற்கு பதிலாக உணவையே 10 நிமிடங்களில் டோர் டெலிவரி வாங்கி சாப்பிட்டுவிடலாமே என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். தற்கால கார்ப்பரேட் லைப் ஸ்டைலில் எதற்குமே நேரம் இல்லாதது போலவும், எல்லாமே எளிதில் கிடைக்கும்போது ஏன் சிரமப்பட வேண்டும் என்ற பிம்பமும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வியாபார உத்தியால் நாளுமொரு புதிய நிறுவனம் உதித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு புள்ளி விவரம் மேற்கூறியவற்றை உறுதி செய்வதாக உள்ளது. அதாவது, ஆன்லைன் ஸ்விகி [Swiggy], சோமாட்டோ[Zomato], பலசரக்கு டெலிவரி நிறுவனமான [Blinkit] மற்றும் [Zepto] ஆகிய 4 நிறுவனங்கள் சேர்ந்து கடந்த ஒரே வருடத்தில் 35,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.
இது இந்திய மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. நிறுவனங்களின் பசி, மக்களின் பசியை தீர்மானிக்கும் காலம் இது என சமூக ஆர்வலர்கள் நொந்து கொள்கின்றனர்.
- சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர்
- வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும்
ஆபீசில் வேலையின்போது அசதியில் தூங்கிய நபர் வேலையிலிருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து வழக்கில் அவருக்கு ரூ. 41.6 லட்சம் நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
சீனா நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் [Taixing] நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் [Zhang] என்ற நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார்.
நள்ளிரவுவரை வேலை இருந்ததால் அவர் ஆபீசில் தனது மேஜையிலேயே ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போட்டுள்ளார். இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர். வேலையின்போது தூங்கி கம்பெனியில் நெறிமுறைகளை அவர் மீறியதாக HR டிபார்ட்மென்ட் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் அவருக்கு அனுப்பிய நோட்டீஸில், ஜாங், நீங்கள் 2004 இல் ஓபன் கான்டிராக்ட்டில் கையெழுத்துப்போட்டு நிறுவனத்தில் சேர்ந்தீர்கள்.
வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும். இதன் விளைவாக, தொழிற்சங்கத்தின் ஒப்புதலுடன், நிறுவனம் உங்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளது கூறப்பட்டிருந்ததது.
ஆனால் தன்னை பணியிலிருந்து நீக்கியது நியாயமற்ற செயல் என கூறி அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூ குய், ஜாங் வேலையிடத்தில் தூங்கியது நிறுவனத்திற்கு எந்த தீங்கு விளைவிக்கவில்லை, ஜாங்கின் அந்த நிறுவனத்துக்கு 20 வருடங்களாக உழைத்துள்ளார்.
அவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்க விரும்பாததால் அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. எனவே இது நியமற்றது என கூறிய நீதிபதி, ஜாங்கிற்கு 350,000 யுவான் [ரூ. 41.6 லட்சம்] இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார்.
வாழ்வை நல்லமுறையில் அமைத்துக்கொள்ள வேண்டு மெனில் நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். நம் தமிழ் மக்கள் கொண்ட உயரிய கொள்கையே “வாழ்; வாழவை” என்பதாகும். இக்கொள்கைகளைப் பின்பற்றுவதால் சமூகத்தில் குற்றங்கள் பல தானாகவே குறையும் என்பது உறுதி.
கட்டுப்பாடுகள் மனிதனை நெறிப்படுத்தும் ஒரு வழிமுறையேயாகும். கட்டுப்பாடுகளை மனத்துள் கொண்டவர்கள் பண்புடையவர்களாகின்றனர். சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகள் மனித சமுதாயத்தைப் பண்படுத்தவே வகுக்கப்பட்டுள்ளன. நம் தமிழர்கள் மிகச் சிறப்பான வாழ்வு வாழ்ந்தவர்கள். தமிழர்களின் வாழ்வியலை ஆராய்ந்தால் கட்டுப்பாடுகளை அவர்கள் ஒருபோதும் சுமையாகக் கருதியதில்லை. சமுதாயத்தில் ஏமாற்றங்களும், வஞ்சங்களும் நிகழாது தடுக்க அக்கட்டுப்பாடுகளே மிகச்சிறந்த ஆயுதமாகத் திகழ்ந்தன. இன்றைய நாகரிக மாற்றத்தால் முன்பிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மிகுதியும் தளர்ந்து சமுதாயத்தில் எல்லா நிலையிலும் சீர்கேடு நிகழ்வதைக் காணமுடிகிறது.
ஒழுக்கக்கேடு ஒரு கொடியநோய். சமுதாயத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் அந்நோயின் அறிகுறிகளே ஆகும். சமுதாயத்தில் நிகழும் குற்றங்களுக்குப் பொருளாதார வறுமையும் அறியாமை நிறைந்த மனமும் பெரும் காரணிகளாக அமைகின்றன. இவற்றில் பொருளாதாரத்தில் மாற்றம் செய்வது எளிது. ஆனால் உள்ளத்தில் படிந்துள்ள இருளை அகற்றுதல் அவ்வளவு எளிதன்று. எனவே, சமூகம் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் மதித்து வாழும் போது தான் மீண்டும் உயரிய சமுதாயம் துளிர்விடும். மன இருளும் நீங்கும்.

இன்றைய சூழலில் சமுதாயத்தை மாற்ற மேடைப்பேச்சோ பல வகையான அறிவுரைக் கட்டுரைகளோ அவசியமில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்குதலே இன்றியமையாததாகும். அதுவே நாம் நாட்டிற்குச் செய்யும் முதற்கடமையுமாகும். நல்ல கல்வியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களிடத்து மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொணர்ந்து, அறிவைப் பெருக்கி, இளம் உள்ளங்களில் நற்பண்புகள் என்னும் விதைகளைத் தூவி, அவர்களை வளர்த்தால் உறுதியாக நம் சமுதாயம் சீர்பெறும்.
உணவு, உடை, பழக்க வழக்கங்கள், திருமணம் போன்ற விழாக்களின் நிகழ்முறைகள் போன்றவை அனைத்தும் தமிழர்களின் மரபுப்படி அர்த்தமுள்ளவை. நம் நாடு பல்வேறு தட்பவெப்ப நிலைக்கு உட்பட்டது. அந்நிலையில் உணவு, உடை போன்றவற்றையும் அந்நிலைக்கு ஏற்றவகையிலேயே அமைத்துள்ளனர். ஆனால் அதைத் தவிர்த்து உணவுப் பழக்க வழக்கத்தை நாம் மாற்றிக்கொள்ளும்போது அவை நம் தட்பவெப்பத்திற்கு ஏற்றதாக அமையாமல் பல நோய்களை ஏற்படுத்துகிறது.
நாகரிகம் என்னும் பெயரில் இன்று உடையமைப்பில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடியும். உடுத்தும் உடையில் மருத்துவம் நிறைந்துள்ளது என அறிஞர்கள் கூறுவர். நம் தட்பவெட்பத்திற்குப் பருத்தியாடையே மிகச் சிறந்தது என்கின்றனர். ஆனால் இன்று அதை விடுத்து ஆணும், பெண்ணும் உடல் நலத்தைப் பாதிக்கும் வகையில் உடை உடுத்துவது நாகரிகச் சிதைவையே உணர்த்துகிறது.
தமிழர்கள் தங்களின் தலை சிறந்த நாகரிகங்களை முற்றிலுமாக மறந்துவிடும் காலம் மிக அருகில் வந்துவிட்டது என்பதைத் தற்காலச் சூழலில் உணரமுடிகிறது. மொழியும், பண்பாடும் ஒவ்வொரு மனிதருக்கும் முகவரியாக அமைவன ஆகும். இவை இரண்டும் இல்லையெனில் மனிதன் அடையாளமின்றி முகவரி இல்லாத அனாதையாகிவிடுவான். தமிழர்களுக்கு அந்தநிலை வெகுதூரமில்லை.
முனைவர் இரா.கீதா, பேராசிரியர், தனியார்கல்லூரி, காரைக்குடி.