என் மலர்
நீங்கள் தேடியது "liquor policy"
- தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது.
- கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?
தூத்துக்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இன்று மாலை பா.ஜ.க. கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-
தமிழக எம்.பி.க்கள் மும்மொழி கொள்கையில் தமிழக மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். இதை சுட்டிக்காட்டவே பாராளுமன்றத்தில் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார். ஆனால் தமிழக மக்களை அவர் பேசியதாக கூறுகின்றனர்.
முதலமைச்சரை குற்றம் சாட்டினால் அது தமிழக மக்களை குற்றம் சாட்டியதாக ஆகுமா?.
தமிழகத்தில் 4479 மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மும்மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 16 லட்சம் பேர் இந்தி பயில்கிறார்கள். தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்கள் இந்தி பயில்வதாக தமிழக அரசு கூறுகிறது. விரைவில் 30 லட்சம் மாணவர்கள் இந்தி கற்பதாக ஒப்புக்கொள்வார்கள்.
தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுவதற்கு பதில் வேறு ஏதோ கற்பிக்கப்படுகிறது. தமிழக கல்வித்துறை திவாலாகி விட்டது.
தமிழக அரசின் மதுபான கொள்கை மூலம் ரூ.1000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது. இந்த பணம் தி.மு.க.விற்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை வைத்து 2026 தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
டாஸ்மாக் மதுபான முறைகேட்டை மறைக்கவே தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஓவர் பெர்மாமன்ஸ்' செய்து வருகிறார்கள். டாஸ்மாக் விற்பனையில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது.
கனிமொழி எம்.பி.யின் மகன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர் எங்கு கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறார் என்பது தெரியுமா? கல்வி உரிமையில் கனிமொழியின் மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவனுக்கு ஒரு நியாயமா?
அமைச்சர் பி.டி.ஆர். மும்மொழி கொள்கைளை அறிவற்றவர்கள்தான் பேசுவார்கள் என்று கூறியுள்ளார். அவரது மகன் மும்மொழி கற்பதால் பி.டி.ஆருக்கு அறிவு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
இதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் வீடுகளில் சோதனை நடத்திக்கொண்டே காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் தொகுதி பேரம் நடத்தியது. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
- ங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க.துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகளாக உள்ளது. ஆட்சி அமைந்தது முதல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான கொள்கையால் தள்ளாட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கூடுதலாக 10 மதுபான, சாராய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்துள்ளது. கவர்ச்சி நடனங்களுடன் கூடிய சுற்றுலா மதுபார் (ரெஸ்டோ பார்) அமைக்கவும் நூற்றுக்கணக்கில் அனுமதி வழங்குகிறது. என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபான உரிமையாளர்களுக்கு, சாராய முதலாளிகளுக்கும் சாதகமாக, அரசின் அனைத்து சட்டவிதிகளையும் மீறி செயல்பட்டு, அனுமதி வழங்கி வருகிறது. இதனால் புதுவையில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடும். புதுவையின் கலாச்சாரம், பண்பாடு முற்றிலுமாக சீர்குலையும்.
இந்த கலாச்சார சீரழிவுக்கு, புதுவை மாநில பா.ஜனதா நிலைப்பாடு என்ன? நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே பா.ஜனதா வின் தேசிய கொள்கை. ஆனால் பா.ஜனதா கூட்டணியில் உள்ள புதுவையில் என்.ஆர்.அரசு நாள்தோறும் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள், மதுபார்களை திறக்க அனுமதி வழங்கி வருகிறது.
ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி என்றாலும், மக்களின் உரிமைகள் பறிபோகும்போதும், அவர்களின் நலனுக்காகவும் தவறுகளை தட்டிக்கேட்பது அரசியல்கட்சிகளின் தலையாய கடமை. எனவே மதுபான, சாராய கொள்கையில் புதுவை மாநில பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக, அறிக்கையாக வெளியிட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
- கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.'
திருப்பதி:
தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கவிதா இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்த வழக்கை விசாரித்து வருவதால் அவர்களும் கடந்த 6-ந் தேதி திகார் ஜெயிலில் இருக்கும் கவிதாவை சிறையிலேயே விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒரு பெண் போலீஸ் மற்றும் கவிதாவின் வக்கீல் முன்னிலையில் திகார் ஜெயிலில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்தது ஊர்ஜிதமாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து கவிதாவை ஜெயிலிலேயே சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த போவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.
- தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால்.
- சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தடையை எதிர்த்து தான் அளித்த மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் நீதிமன்றத்தில் தனது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் விஷயத்தில் அடுத்தடுத்து பரபரப்பான வகையில் காட்சிகள் மாறி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- அமலாக்கத் துறை உதவியுடன் விசாரணை நடத்தப்படும்.
திருப்பதி:
ஆந்திரா மாநில சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் கடந்த ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்பட்ட மது கொள்கை குறித்த வெள்ளை அறிக்கையை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு அறிமுகப்படுத்திய மது கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு கருவூரத்துக்கு ரூ.18,860 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் ஏதும் இன்றி பணமாக மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.
கஜானாவுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியதற்காக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் . ஜெகன் மோகன் ரெட்டியின் மதுபான கொள்கைக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிடும் .மேலும் அமலாக்க துறை உதவியுடனும் விசாரணை நடத்தப்படும்.
போலி மது குடித்ததால் எத்தனை பேர் கடுமையான உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையிடம் இருந்து கேட்கப்படும்.
கடந்த ஆட்சியில் பிரபல பீர் வகைகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. உள்ளூர் வகைப்பீர்கள் அதை அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த திடீர் குற்றச்சாட்டால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
- 12 நகரங்களில் பிரீமியம் கடைகள் திறக்கப்பட உள்ளன.
- 1-ந் தேதி முதல் மதுபான கடைகள் தனியார் மயமாகப்படுகின்றன.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் மதுபான கடைகள் அனைத்தும் தனியார் மயமாகப்படுகின்றன.
இது தொடர்பாக மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் குறைந்த விலையில் தரமான மதுபானங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய மதுபான கொள்கைகளின் படி ஆண்டுக்கு ரூ.2000 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
99 ரூபாய்க்கு தரமான கிக் கான மது விற்பனை செய்ய வேண்டும். அதற்கும் குறைவான விலையில் மதுபானங்கள் அறிமுகம் செய்யபட உள்ளது.

12 நகரங்களில் பிரீமியம் கடைகள் திறக்கப்பட உள்ளன. அரசு ஒதுக்கும் தனியார் மதுபான கடைகளை 10 சதவீத கடைகள்கள் இறக்கும் தொழிலாளர்களுக்காக ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சட்டவிரோத மதுபான விற்பனை தடுக்கப்படும். அரசுக்கு நிரந்தரமான வருவாய் கிடைக்கும். ஏற்கனவே கடந்த ஆட்சியில் இருந்த மதுபான கொள்கைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு வகை மது ஆந்திராவில் விற்பனைக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உடல் நலம் பாதிக்காத வகையில் மதுபான கொள்கைகள் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமைச்சரவை மற்றும் சட்டசபையின் ஒப்புதல்களை அரசு புறக்கணித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
- இந்த அறிக்கை பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
CAG என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களை தணிக்கை செய்யும் சட்டப்பூர்வ அமைப்பாகும். டெல்லி மதுபான கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை ஒன்று தற்போது கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் கீழ் வகுக்கப்பட்ட மதுதான் காலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

கசிந்த அறிக்கையின் சில பகுதிகளின்படி, சரண்டர் செய்யப்பட்ட மதுபான உரிமங்களை மறு டெண்டர் விடாததால் ரூ.890 கோடியும், மண்டல உரிமதாரர்களுக்கு வழங்கப்பட்ட விலக்குகளால் ரூ.941 கோடியும் நஷ்டம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர், அமைச்சரவை மற்றும் சட்டசபையின் ஒப்புதல்களை அரசு புறக்கணித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
அதுமட்டுமின்றி, மணிஷ் சிசோடியா தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) நிபுணர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில் தேர்தல் நேரத்தில் இந்த அறிக்கை கசிந்துள்ளதாக கூறப்படுவது அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிக்கை பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ எதுவும் வெளியாகாத நிலையில் கசிந்துள்ளதாக கூறும் இந்த அறிக்கையை பாஜகவால் தர முடியுமா என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
- 2020 தேர்தலில் பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
- சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது.
டெல்லி தேர்தல்:
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்குக் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பாஜக 43 இடங்களைக் கைப்பற்றி சுமார் 27 வருடங்கள் கழித்து ஆட்சி அமைக்கிறது.
22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகளாக தக்கவைத்த ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கோட்டை விட்டது. கடந்த 2020 தேர்தலில் 62 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆதமி ஆட்சி அமைத்தது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
ஆம் ஆத்மி - காங்கிரஸ் பிளவு:
இந்த நம்பிக்கையில் தான் இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காமல் ஆம் ஆத்மி தனித்து களம் கண்டது. ஆனால் கடைசியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி பிரிவு பாஜகவுக்கு சாதமாக அமைந்துள்ளது.
பல்வேறு இடங்களில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பாஜகவிடம் ஆம் ஆத்மி தோற்றுள்ளது. காங்கிரஸ் இவ்விடங்களில் வாக்குகளை வெகுவாக பிரித்துள்ளது. காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைந்திருந்தால் ரிசல்ட் மாற அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.

புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சுமார் 5000 வாக்கு வித்தியாசத்தில் தொற்றுள்ளார். ஜங்கிபூரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 675 வாக்கு வித்தியசாத்தில் தொற்றுள்ளார்.
கட்சியின் தோல்வி என்பதையும் தாண்டி அதன் முக்கிய தலைவர்களே தோற்றுள்ளதற்கு காங்கிரசை தவிர்த்து வேறு காரணிகளும் உண்டு.

ஆம் ஆத்மி மீதான அதிருப்தி:
2015 மற்றும் 2020 தேர்தல்களில் பெரு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது. மின்சாரம் மற்றும் குடிநீர் சலுகைகள் டெல்லி வாசிகளைப் பெரிதும் கவர்ந்தது.
இதனால் மத்தியில் பாஜக வென்றபோதிலும் டெல்லியைப் பிடிக்கத் திணறியது. ஆனால் காலப்போக்கில், ஆம் ஆத்மியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், காற்றின் தரம் குறைவு, யமுனை நதி மாசுபாடு ஆகியவை டெல்லி மக்களை தொந்தரவு செய்யத் தொடங்கின.
மத்தியில் உள்ள பாஜக அரசு தடைகளை உருவாக்குவதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறியது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில், வாக்காளர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சாக்குப்போக்காகக் கருதினர். ஆம் ஆத்மி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசுடன் மோதுவதிலேயே கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது.

மதுபானக் கொள்கை:
டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் ஆம் ஆத்மி தோல்வியில் முக்கிய பங்காற்றியுள்ளன.
புதிய கொள்கைபடி மதுபான பாட்டில்களில் '1 வாங்கினால் 1 இலவசம்' போன்ற சலுகைகள் டெல்லியை குடிகாரர்களின் நகரமாக மாற்ற ஆம் ஆத்மி முயல்வதாக பாஜக குற்றம் சாட்ட வழிவகுத்தது.
மேலும் புதிய மதுபான கொள்கை வகுப்பதில் பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் விசாரணைகள் அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைக் கைது செய்தது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு, அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆம் ஆத்மி அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டது.
பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருந்தார். பல உயர்மட்டத் தலைவர்களின் கைதுகள் ஆம் ஆத்மி கட்சியை வலுவிழக்க செய்தன.
முக்கிய தலைவர்கள் இல்லாமல் 2020 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மிக்கு சிரமம் ஏற்பட்டது. சிறையிலிருந்து ஜாமீனில் வந்த கெஜ்ரிவால் மக்கள் சம்மதம் இல்லாமல் மீண்டும் முதல்வர் ஆக மாட்டேன் என பதவியை ராஜினாமா செய்து அமைச்சர் அதிஷியை முதல்வர் ஆக்கினார்.

ஷீஷ் மஹால்
தேர்தலுக்கு முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தொடுத்த அஸ்திரம் 'ஷீஷ் மஹால்'. கெஜ்ரிவால் பதவியில் இருந்தபோது புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக பிரசாரம் செய்தது. 'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக கூறியது. ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.

இதனையடுத்து ஷீஷ் மகால் ஜோடிக்கப்பட்ட பொய் என்றும் அதை நிரூபிக்க தான் தயார் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடம்பரமான வாழ்க்கை முறை குறித்தும், பிரதமரின் ராஜ்மகால் இல்லத்தைக் காட்ட பாஜகவுக்கு துணிவு இருக்கிறதா என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
ஆனால் பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாக பாதித்ததாகத் தெரிகிறது. குறிப்பாக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு எதிரான 'தூய்மையான அரசியல்' என்ற பிம்பத்தை உடைத்து. தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன.