search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LKKvIDTT"

    • அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது.
    • கோவை அணிக்கு சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாசினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டி திண்டுக்கல்லில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலத் இரண்டு இடங்களை பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    திருப்பூர் அணிக்கு துவக்க வீரர்களான அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி அபாரமாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. இதில் அமித் (67), துஷார் (55) ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அசுத்து வந்த பாலசந்தர் அனிருத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை குவித்தது. முகமது அலி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோவை சார்பில் ஷாருக் கான் மற்றும் ஜதாவத் சுப்ரமணியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    201 எனும் கடின இலக்கை துரத்திய கோவை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஜிவி விக்னேஷ் ரன் ஏதும் எடுக்காமலும், சுஜய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை தொடர்ந்து வந்த சுரேஷ் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பிறகு சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் ஜோடி இணைந்து திருப்பூர் அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க ஆரம்பித்தது. சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாச, முகிலேஷ் 31 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். இதனால் கோவை அணி 185 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவை லைகா கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    • டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
    • டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் துஷார் ரஹேஜா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாலச்சந்தர் அனிருத் 21 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்துள்ளது. முகமது அலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    • துஷார் ரஹேஜா 81 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • கோவை தரப்பில் முகமது, ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் அணியை நெல்லை அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்-திருப்பூ தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். சச்சின் 30 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது.

    இதையடுத்து திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக துஷார் ரஹேஜா- ராதாகிருஷ்ணன் களமிறங்கினர். இதில் ராதாகிருஷ்ணன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாத்விக் 12, விஜய் சங்கர் 16, பாலசந்தர் 4 என அடுத்தடுத்து வெளியேறினார். இதனையடுத்து துஷார் ரஹேஜா- முகமது அலி ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

    எளிதாக வெற்றியை உறுதி செய்யும் அளவில் விளையாடிய நிலையில் 35 ரன்னில் முகமது அலியும் 81 ரன்னிலும் துஷார் ரஹேஜாவும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. கோவை தரப்பில் முகமது, ஷாருக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • முதலில் ஆடிய கோவை 160 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் அணியை நெல்லை அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்-திருப்பூ தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். சச்சின் 30 ரன்னிலும், சுஜய் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    ×