என் மலர்
நீங்கள் தேடியது "Lokayukta"
- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
- தாசில்தாரின் வீட்டில் இருந்து சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
விஜயபுரா:
கர்நாடக மாநிலம் விஜயபுரா மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அரசு அதிகாரிகளின் வீடுகளில், லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் பணம் கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது.
- கர்நாடகாவில் இன்று அதிகாலை முதல் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் 10 மாவட்டங்களில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொறியாளர் அனுமந்தராயப்பா, பொதுப்பணித்துறை மாண்டியா கோட்ட பொறியாளர் ஹர்ஷா, சிக்மகளூர் வணிகவரி அலுவலர் நேத்ராவதி, ஹாசன், உணவு ஆய்வாளர் ஜெகநாத் ஜி கொப்பல், வனத்துறை அலுவலர் ரேணுகாமா, சாம்ராஜ்நகர் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் ரவி, மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணை அலுவலர் யக்ஞேனந்திரா, பெல்லாரி உதவி பேராசிரியர் ரவி, விஜயநகர மாவட்ட எரிசக்தி துறை அதிகாரி பாஸ்கர், மங்களூரு மெஸ்தாம் அதிகாரி சாந்தகுமார் ஆகியோருக்கு தொடர்புடைய 40 இடங்களில் இந்த சோதனை நடந்துவருகிறது என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பண்ணை வீடுகள், வணிக வளாகங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.
லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் நடத்தி வரும் சோதனையால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- லோக்அயுக்தா போலீசார் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவார்கள்.
- சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரி சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 19-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது விரிவான விசாரணை நடைபெற்றது. முதல் நாளிலேயே, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் கவர்னர் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சித்தராமையா சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். கடைசியாக இந்த வழக்கின் விசாரணை கடந்த 12-ந் தேதி நடைபெற்றது.
அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு அளிக்கப்படும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. அதன்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் மூடா முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என்று உத்தரவு விடப்பட்டுள்ளது.
அதன்படி லோக்அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவார்கள்.
விசாரணை நடத்தி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படும் நிலை ஏற்படும். அதே நேரத்தில் சித்தராமையா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது.
- லோக்அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.
- இந்த போராட்டத்தில் மக்கள் என் பக்கம் உள்ளனர். அரசியலமைப்பு எனக்கு நம்பிக்கை உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
இது தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். சித்தராமையா மீது வழக்கு தொடரலாம் என கவர்னர் உத்தரவிட்ட நிலையில் தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மூடா முறைகேடு தொடர்பாக சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே லோக்அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இதற்கிடையே சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பாஜக போராட்டம் படப்பிறகு வருகிறது.
இந்நிலையில் விசாரணையை எதிர்கொள்வதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மேற்கொண்டு என்ன செய்வது என்பது குறித்து நிபுணர்களுடன் சட்ட ஆலோசனை நடத்துவேன் என்றும். விசாரணை நடத்துவதற்கான உத்தரவு ரத்தாகும். இந்த போராட்டத்தில் மக்கள் என் பக்கம் உள்ளனர். அரசியலமைப்பு எனக்கு நம்பிக்கை உள்ளது.
இந்த போராட்டத்தில் உண்மை ஜெயிக்கும். நான் ஏன் பதவி விலக வேண்டும். ஜாமினில் உள்ள குமாரசாமி பதவி விலகினாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலேயும் தன்மீதான வழக்கு விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதால் அதை தான் எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் சித்தராமையா அடுத்த காட்டமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக கவர்னர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா மனு தாக்கல் செய்தார்.
கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சித்தராமையா மீதான புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "என்னை விசாரிக்க லோக் அயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நீதிமன்ற உத்தரவின் முழு நகலையும் படித்துவிட்டு விரிவாக பதில் அளிக்கிறேன்.
விசாரணையை எதிர்கொள்ள, சட்டப்போராட்டம் நடத்த தயாராக இருக்கிறேன். விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை. அனைத்தயும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
- முறைகேடு தொடர்பான வழக்கை லோக் ஆயுக்தாவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
- சி.ஐ.டி. தலைவருக்கு மிரட்டல் விடுத்ததாக ஏ.டி.ஜி.பி. அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு,
கர்நாடக மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஹெச்.டி. குமாரசாமிக்கு எதிராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் மற்றும் அவர்களுடைய உதவியாளர் சுரேஷ் பாபு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்ததுடன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. எம். சந்திரசேகர் அளித்த புகார் அடிப்படையில் பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமாரசாமி தொடர்பான முறைகேடு வழக்கை விசாரணை நடத்தி வரும் கர்நாடக மாநில லோக்ஆயுக்தாவின் சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவருக்கு மிரட்டல் விடுத்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ சாய் வெங்கடேஷ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு சுரங்க குத்தகை சட்டவிரோதமாக வழங்கியதாக குமாரசாமி மீது வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி பெற்ற பிறகு, அதிகாரிக்கு குமாரசாமி தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. செப்டம்பர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், மிரட்டலும் விடுத்ததாக சந்திரசேகர் தெரிவித்தள்ளார்.
- பெங்களூரு கலால் துறை கண்காணிபாப்பாளர் உள்பட 4 அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் உள்பட 25 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் காவிரி பாசன கழகத்தின் நிர்வாக இயக்குனர், மற்றும் பெங்களூரு கலால் துறை கண்காணிபாப்பாளர் உள்பட 4 அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான வீடுகள், மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பினாமி என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் உள்பட 25 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
- உயர்கல்வித்துறை துணை செயலாளர், அவரது உறவினர்கள் வீடுகளில் மொத்தம் ரூ. 22.15 லட்சம் ரொக்கம்பறிமுதல் செய்யப்பட்டது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லோக்ஆயுக்தா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் அவ்வப்போது லோக்ஆயுக்தா போலீசார் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கி குவித்த அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதே போல் நேற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 10 அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் என 50 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் உயர்கல்வித்துறை துணை செயலாளர் அகேஷ்பாபு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் மொத்தம் ரூ. 22.15 லட்சம் ரொக்கம் மற்றும் பணம் எண்ணும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு ஊரக மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் சுனில்குமார் என்பவரது வீட்டில் இருந்து சொகுசு ஹோம் தியேட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போல் பல்வேறு இடங்களில் இருந்தும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கி குவித்த ரூ. 50 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லோக்ஆயுக்தா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி. ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டார்.
- நீதி சாராத 2 உறுப்பினர்களாக வி.ராமராஜ், ஆறுமுக மோகன் அலங்காமணி நியமிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் பதவி ஏற்றுக்கொண்டார். உறுப்பினர்களாக ராமராஜ், ஆறுமுக மோகன் அழகுமணி ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கத்தை நியமித்து கவர்னர் உத்தரட்டார். மேலும் நீதி சாராத 2 உறுப்பினர்களாக, மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனின் தலைவர் வி.ராமராஜ் (நாமக்கல்) மற்றும் வருமான வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான் இன்னு பதவி ஏற்றுக்கொண்டனர்.
லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் 17.4.2027 வரை பதவி வகிப்பார். மற்ற 2 உறுப்பினர்கள் தங்கள் 70 வயது வரையிலோ அல்லது 5 ஆண்டுகள் வரையிலோ, இதில் எது முதலில் வருகிறதோ? அதுவரையில் பதவியில் நீடிப்பார்கள்.
லோக் ஆயுக்தா தலைவராக பதவி ஏற்றுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ராஜமாணிக்கம் 31.5.1959-ம் ஆண்டு பிறந்தவர். 1983-ம் ஆண்டு வக்கீலாக பணியை தொடங்கி, அதன்பின்னர் மாவட்ட நீதிபதி, மாவட்ட தலைமை நீதிபதி என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு பதிவாளராக பதவியேற்ற அவர் அடுத்த ஆண்டில் (2017) சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனார். 30.5.2021 அன்று நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதி பிரிவு உறுப்பினராக 18.4.2022 முதல் 19.8. 2024 வரை பணியாற்றினார்.
- 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
- கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை குரூப் ஏ தலைமை பொறியாளர் டி.டி.நஞ்சுண்டப்பா, பெங்களூரு தரக்கட்டுப்பாடு மற்றும் தர உறுதி மற்றும் நெடுஞ்சாலை கிரேடு-1 பொறியாளர் எச்.பி.காலேஷப்பா, கோலார் உதவி நிர்வாக பொறியார் நாகராஜ், கலபுரகி திட்ட அமலாக்க பிரிவின் ஜெகநாத் உள்பட 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது.
இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட், அவர்கள் இருவரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் 29-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், மதுரை ஐகோர்ட் விதித்த இடைக்கால தடையை நீக்க முடியாது என்று கூறியது. அத்துடன், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு எதிர்மனுதாரர் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, எதிர்மனுதாரர் ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும் இதில் அவசரம் எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். #Lokayukta #SupremeCourt
கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நம் நாட்டில் ஊழலை முழுவதும் ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா சட்டம் 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் முறையாக விசாரிப்பது லோக் ஆயுக்தாவின் கடமை. தமிழகத்தில் கடந்த ஆண்டு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த அமைப்பின் தலைவராக ஐகோர்ட்டு நீதிபதி அல்லது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் 25 ஆண்டு பணியாற்றிய அனுபவம் உள்ளவரை நியமிக்க வேண்டும். 4 உறுப்பினர்களில் சட்டத்துறையைச் சேர்ந்த 2 பேரையும், பிற துறைகளில் பணியாற்றிய 2 பேரையும் நியமிக்க வேண்டும்.
இந்த நிலையில் லோக் ஆயுக்தாவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்துறையை சேர்ந்த 2 உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்துறையை சேராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் என்பவரும், மற்றொரு உறுப்பினராக ஆறுமுகம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த 1-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே அவர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் கூறும்போது, “தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தியதை மகிழ்ச்சியுடன் இந்த கோர்ட்டு வரவேற்கிறது. ஆனால் அதன் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், அ.தி.மு.க.வில் உள்ள ஆறுமுகம் ஆகியோர் விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரையும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமனம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
ஆனால் லோக் ஆயுக்தாவை தொடங்குவதற்கும், அதன் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் செயல்படவும் எந்த தடையும் கிடையாது. இந்த வழக்கு குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Lokayukta #HighCourtMaduraiBench