என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loksabha election"

    • ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது.
    • பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க மறுப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார்.

    இதையடுத்து ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற அக்கட்சி முயற்சித்தது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.

    ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, புதிய சின்னம் குறித்த நாளை தெரிவிக்கப்படும் என துரை வைகோ தெரிவித்தார்

    இந்நிலையில், பம்பரம் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், மதிமுக மாற்று சின்னம் கோரியுள்ளது.

    அதன்படி, மதிமுக கட்சிக்கு தீப்பெட்டி அல்லது எரிவாயு சிலிண்டர் சின்னம் வேண்டும் என கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.

    ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்," நாளை டெல்லி சென்று மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என்றார்.

    • அரசின் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்து வருகிறது.
    • தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

    தென்காசி, விருதுநகர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பரப்புரை தொடங்கியது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும், தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன். பிரசாரத்தில் இன்றோடு 10 தொகுதிகளை கடக்கிறேன்.

    செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கிறேன்.

    அரசின் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள்

    தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ.1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் இன்று கூறுகின்றனர்.

    புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

    சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பாஜக அரசு என்ன செய்தது..?

    சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லி, மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டது.

    இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ.1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது.

    இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28% ஜிஎஸ்டி வரி போட்ட கட்சிதான் பாஜக.

    புதிய வாக்குறுதிகளைக் கொடுத்தால், நிறைவேறாத பழைய வாக்குறுதிகளை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி தப்புக்கணக்கு போடுகிறார்.

    தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

    செய்யும் அரசு, செய்யப் போகும் அரசு தான் திராவிட மாடல் அரசு. திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காக தான். நம் உரிமைகளை பறிக்கும் கூட்டம் தான் பாஜக.

    சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா?
    • 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அ.மலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பாஜக, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?

    வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?

    களத்தை சந்திக்க பயம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
    • பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மக்களவை தேர்தலுக்கான கட்சிகளின் களப் பணிகள் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. முதற்கட்டமாக அதுவும் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டியிடும் கட்சிகளும் அதன் கூட்டணிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் அதன் எம்.பிக்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர்.

    அந்த வகையில், பெரம்பலூர் தொகுதி எம்பியும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் தனது தொகுதி மக்களுக்கு செய்துள்ள நற்பணிகளை பட்டியலிட்டு இருக்கின்றனர். அப்படி என்ன திட்டங்களை தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறார் என்று பார்ப்போம்.

    பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.

    தமது ஏழ்மை நிலையால் உயர்கல்வி படிக்க வழியில்லாமல் சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த, கடலூர் மாவட்டம்

    வேப்பூர் ஒன்றியம் வி.சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த, சத்யாதேவி என்ற மாணவிக்கு எஸ்.ஆர்.எம். கல்லூரியில் வேளாண் உயர்கல்வியும், தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகியவற்றை மூன்று ஆண்டுகளுக்கும் முழுவதும் இலவசமாக வழங்கியுள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் பாரிவேந்தரின் பிறந்தநாளின் போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட மூன்று தொகுதிகளில் அலுவலகங்கள் திறந்துவைத்து பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார்.

    முசிறிப் பகுதி விவசாய மக்களின் பல ஆண்டு கோரிக்கையான கொரம்பு அமைப்பதற்கு நேரில் ஆய்வு செய்து தீர்வு காண வழிவகை செய்துள்ளார்.

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்ததின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க ரூ.1 கோடி நிதி எஸ்.ஆர்.எம். அறக்கட்டளை மூலம் தரப்பட்டது.

    இதன் மூலம் உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர், பெரிய வடகரை, சாத்தனூர் உள்பட 10 கிராமங்கள் பயன்பெற்றன. 

    பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட மூன்று கிராமங்களுக்குச் சொந்த நிதியில் போர்வெல் அமைத்துக் கொடுத்தார். தொட்டியம் - நத்தம் கிராமத்தில் ரூ.3 லட்சத்தில் மயான சாலை அமைத்துள்ளார்.

    லால்குடி - திண்ணியத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் உதவி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2020-ம் ஆண்டு ஏற்பட்ட

    கடும் வறட்சியால், குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க, தமது சொந்தச் செலவில் லாரிகள் மூலம் தேவைப்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கினார்.

    வெளிநாட்டில் தவித்தவர்களுக்கு தேடிச் சென்று உதவிய பாரிவேந்தர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் டயர் வெடித்ததால் கிணற்றுக்குள் விழுந்து, 8 பேர் பலியாகினர்.

    பலியானோர் குடும்பங்களுக்குத் தமது சொந்த நிதியில் தலா ரூ.1 லட்சம் வழங்கி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவையும் தாமே ஏற்றுக்கொண்டார்.

    வேலை வாய்ப்பிற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று, அங்கு எதிர்பாரா விதமாக மரணமடைந்த 6 நபர்களின் சடலங்களை, வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் மூலம் அவர்களின் உடல்களைக் குடும்பத்தாரிடம் சேர்க்க வழிவகை செய்தார்.

    கொரோனா காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாட்டங்களைச் சார்ந்த 11 பேர் அயல்நாட்டில் பணியிழந்து தாயகம் திரும்ப இயலாமல் தவித்த நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பத்திரமாகத் தாயகம் திரும்ப வழிவகை செய்யப்பட்டது.

    வெகுகாலமாகத் தொடர்கின்ற தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.

    பொருளாதாரப் பற்றாக்குறையால் சிகிச்சை பெற இயலாமல் உயிரிழக்கும் ஏழை மக்களைக் காக்கும் பொருட்டு, பிரதம மந்திரி நிவாரண நிதியின் மூலம் நோய்வாய்ப்பட்ட ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெற பிரதமருக்குப் பரிந்துரை செய்ததன் பேரில், பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை 40 க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள்

    ஒவ்வொருவரும் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை உயர்தரமான இலவசச் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.

    இதன்படி 2019-ல் கொடுத்த தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வருடத்திற்கு 300 மாணவர்கள் வீதம் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் 1200 மாணவ, மாணவியர்களுக்கு இலவச உயர் கல்வியை, தமது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வழங்கினார்.

    50 ஆண்டு கால கனவுத் திட்டமான அரியலூர் - பெரம்பலூர்- துறையூர்- நாமக்கல் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற அன்றிலிருந்து இன்று வரை பிரதமர், நிதி அமைச்சர், ரெயில்வே துறை அமைச்சர் மற்றும் ரெயில்வே வாரியம் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து இலவச உயர்கல்வித் திட்டத்திற்கான ஆணையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் பாரிவேந்தர் வழங்கினார்.

    முறையாக எடுத்துக் கூறியதால் தற்பொழுது 2023 ஜூலையில் புதிய ரெயில் தடம் அமைப்பதற்கான சர்வே மேற்கொள்ளப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விரைவில் பெரம்பலூருக்கு ரெயில் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி தமிழக அரசுக்கு வழங்கினார்.

    பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் தேர்தலில் போட்டியிட மறுப்பு.
    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையில் காசில்லை. ஆனால் அவர் பையில், படுக்கை அறையில் பணம் உள்ளது.

    இந்தியாவின் சர்வாதிகாரம் என அமெரிக்க, ஜெர்மனி கூறுவதை நிர்மலா சீதாராமனின் கணவரே ஆதரிக்கிறார்.

    தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.
    • தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.

    மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணக்கையும் ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் நெருங்கி வருவதால் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜகவினருடன் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    'எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    • ராமநாதபுரம் தொகுதிக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்.
    • நீலகிரிக்கு தேர்தல் பொறுப்பாளராக அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி நியமனம்.

    தமிழ்நாடு உட்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

    தேர்தல் பணிகளை முறைப்படுத்தும் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டார்.

    திமுக-வின் கலாநிதி வீராசாமி போட்டியிடும் வடசென்னை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டார்.

    திமுக-வின் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடும் தென்சென்னைக்கு கோகுல இந்திரா தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதிக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்.

    திமுக-வின் ஆ.ராசா போட்டியிடும் நீலகிரிக்கு தேர்தல் பொறுப்பாளராக அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி நியமனம்.

    பாஜக சார்பில் ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம்.

    பாஜக-வின் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்கு இசக்கி நியமனம்.

    தேனி தொகுதிக்கு ஆர்.பி.உதயகுமார், தூத்துக்குடி தொகுதிக்கு கடம்பூர் ராஜூ, மதுரை தொகுதிக்கு நத்தம் விஸ்வநாதன் நியமனம்.

    தஞ்சை தொகுதிக்கு காமராஜ், மயிலாடுதுறை தொகுதிக்கு ஓ.எஸ்.மணியன், திருச்சிக்கு சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன்படி, தர்மபுரி, வட சென்னை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தென்காசி தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர் நியமிக்கபட்டுள்ளனர்

    • எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி உரை.
    • வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    வாக்கு எண்ணக்கை ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்றும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் நெருங்கி வருவதால் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக பாஜகவினருடன் இன்று மாலை 5 மணிக்கு 'எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

    அப்போது வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. உங்கள் மத்தியில் பேச வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. என் வாழ்க்கையின் பெரும் பகுதியை நான் ஒரு சாதாரண தொண்டராகவே கழித்தேன்.

    உங்களின் கடினமான உழைப்பு, கட்சியை ஆழமான வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும். தமிழ்நாட்டில் உள்ள பெண்களை சென்றடைகிறதா? அது பெண்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

    நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். எங்களுடைய பூத், வலிமையான பூத் என்ற முழக்கத்திற்கு உங்களின் கடின உழைப்பே காரணம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது
    • தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விசிகவுக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.

    சிதம்பரம் மக்களவை தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிடுகிறார் திருமாவளவன். விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்

    • எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர்.
    • 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான்.

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரோக்கணம் அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

    அதிமுக ஆட்சியில் ராணிப்பேட்டையில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கப்பட்டது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் கண்ட கனவு மாறிவிட்டது.

    மக்களை ஏமாற்றியே திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

    வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகிவிட்டது.

    எங்கள் ஆட்சியில் திமுக மீது வழக்கு போவில்லை. மக்கள் பணியாற்றினோம். திமுக எந்த திட்டங்களையும் கொண்ட வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால் தானே, நாங்கள் குறை கூற முடியும்.

    விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிடைக்கும் நேரத்தில் மக்களக்கு பணியாற்ற வேண்டும்.

    எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் குறைகளை பெட்டி வைத்து வாங்கி சென்றவர். பெட்டி தொலைந்துவிட்டதா அல்லது சாவி இல்லையா ?

    எதிர்க்கட்சியாக இருந்து எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து குரல் கொடுப்போம். காவிரி நதிநீர் விவகாரத்தில் 22 நாட்கள் அவையை அதிமுக முடக்கியது.

    7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுகதான். நீட் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், நீட் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது.

    நாங்கள் கட்டிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறப்பவர் முதல்வர் ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள். தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துவிட்டது.

    தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, ஆனால் நீங்கள் நலமா ? என்கிறார் முதல்வர்.

    விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் இருமுறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி.
    • வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இவரை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

    தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்திக்கு எதிராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×