என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Vikas Aghadi"

    • எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
    • குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சோ்க்கப்படும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்றதால் மகாவிகாஸ் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது மகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

    இது குறித்து நேற்று கோலாப்பூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் பால்தாக்கரே சிவசேனா வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தோ்தலை ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற புரிதல் உள்ளது. குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சோ்க்கப்படும்.

    இதுதொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது. பல விவகாரங்களில் நாங்கள் சேர்ந்து முடிவு எடுத்து உள்ளோம். எனவே எந்த பிரச்சினையும் இல்லை.

    சிவசேனா உடைந்து உள்ள போதும், பெரும்பான்மையான தொண்டர்கள் உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக உள்ளனர். பிளவின் போது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு சென்று இருக்கலாம். ஆனால் தேர்தல் வரும் போது மக்களின் மனநிலையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சினை தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

    எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கை மூத்த சட்ட வல்லுநர்களை வைத்து நமது தரப்பு வாதத்தை பலமாக முன்வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கஸ்பா பேத் புத்திசாலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு அடி கொடுத்து உள்ளனர்.
    • மாநில அரசியல் எதிர்காலத்துக்கான குறியீடு தான் இந்த வெற்றி.

    மும்பை :

    மராட்டியத்தில் நடந்த இடைத்தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி கஸ்பா பேத் தொகுதியில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி அளித்தது. சிஞ்வாட்தொகுதியில் பா.ஜனதா வெற்றியை தக்க வைத்தது. இந்தநிலையில் புனே சென்ற சிவசேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி. சஞ்சய் ராவத் கஸ்பா பேத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகரை சந்தித்தார்.

    சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஸ்பா பேத் புத்திசாலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு அடி கொடுத்து உள்ளனர். அவர்கள் இங்கு வாக்காளர்களை வாங்க முயற்சி செய்தனர். ஆனால் தோல்வி அடைந்துவிட்டனர். கஸ்பா டிரைலர் தான். இன்னும் ஒட்டுமொத்த மராட்டியமும் பாக்கி உள்ளது. மாநில அரசியல் எதிர்காலத்துக்கான குறியீடு தான் இந்த வெற்றி. மகாவிகாஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும், சட்டசபை தேர்தலில் 200-க்கும் அதிகமாக தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    நான் சட்டசபை உறுப்பினர்களை மதிக்கிறேன். சட்டசபையில் ஒரு குழுவை தான் திருடர்கள் என நான் கூறினேன். இது எல்லோருக்கும் தெரியும். எல்லா சட்டசபை உறுப்பினர்களையும் திருடன் என அழைப்பவன் நான் அல்ல. நான் நாடாளுமன்ற உறுப்பினர். எனக்கு அரசியல் அமைப்பு, சட்டம் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
    • மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம் இருக்கிறது.

    மும்பை

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவார்க்கர் குறித்து சமீபத்தில் பேசியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது.

    அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவும் விவசாய விளைபொருள் சந்தை குழு தேர்தலில் இணைந்து போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவானும் தேசியவாத காங்கிரசை விமர்சித்து இருந்தார்.

    இதனால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று கூறியதாவது:-

    மகா விகாஸ் அகாடி கூட்டணி பலமாக உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு குறித்து ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்ப தேவையில்லை.

    மகா விகாஸ் அகாடி தலைவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்திக்கிறார்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளிடையே நல்லிணக்கம் இருக்கிறது. கூட்டணி பிரபலமடைந்து வருவதைக் கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. அதனால் தான் மகா விகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவுகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. எனவே தான் நாக்பூரில் நடத்த உள்ள பொதுகூட்டத்தை தடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

    சத்ரபதி சாம்பாஜி நகரில் மகா விகாஸ் அகாடி நடத்திய கூட்டத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் இதுபோன்ற பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். ஏப்ரல் 16-ந் தேதி அன்று திட்டமிட்டபடி நாக்பூரில் பொதுகூட்டம் நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து அமராவதி, புனே, கோலாப்பூர், நாசிக் மற்றும் மும்பையில் கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.
    • மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன. மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தால், தேர்தலுக்குப்பின் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இரண்டு கூட்டணியும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துதான் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பட்நாவிஸ், அஜித் பவார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மகாயுதி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பட்நாவிஸ் "முதல் மந்திரி இங்கே அமர்ந்து இருக்கிறார். உங்களுடைய முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று எதிர்க்கட்சிகளிடம் கேளுங்கள். முதலில் உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவிக்கவும். உங்களுடைய முதல்வர் வேட்பாளரை தெரிவியுங்கள் என சரத் பவாரிடம் வலியுறுத்துகிறேன்" என்றார்.

    ஏக்நாத் ஷிண்டே "உயர்ந்த பதவியை பெறுவதற்கு யாரும் ஆசைப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் அரசாங்கம் செய்த பணிகள் எங்கள் முகம்" என்றார்.

    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் மகாயுதி, மஹா விகாஸ் அகாதி என இரண்டு பெயர்களில் மெகா கூட்டணி உள்ளன.

    மகாயுதி கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன. மகாயுதி கூட்டணிதான் ஆட்சி அமைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அஜித் பவார் மற்றும் பா.ஜ.க.வின் பட்நாவிஸ் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.

    மகா விகாஸ் அகாதி என்ற எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து விசிக போட்டியிடுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

    இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பிற தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    கங்காபூர், பத்நாபூர், நன்டெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர், அவுரங்காபாத் (மையம்), முள்ளன்ட் ( மும்பை), கன்னட் ஆகிய 10 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    பிவாண்டி, மலேகோன், வாசிம், அவுரங்காபாத் (மேற்கு), அவுரங்காபாத் (கிழக்கு), புலம்பிரி, மும்பை மலாட், தாராவி, போக்கர்டன் ஜல்னா, துலே ஆகிய 10 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடுகிறது

    • மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம்.
    • மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு மகா விகாஸ் அகாடி என்று பெயர்.

    மகா விகாஸ் அகாடி தேர்தலுக்கான பிரசாரத்தை நேற்று தொடங்கியதாக குறிப்பிட்ட சரத் பவார், இன்று மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம். இன்று முதல் நான், கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த அதற்கான பணியை மேற்கொள்ள இருக்கிறோம். மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும். ராகுல் காந்தி சொல்வது போன்று நடந்தால் அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    • கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டி.
    • ஏற்கனவே 21 பேரை சஸ்பெண்டு செய்துள்ள நிலையில் தற்போது 7 பேர் சஸ்பெண்டு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த மூன்று கட்சிகளிலும் வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், தங்களது கட்சி வேட்பாளர்களையும் எதிர்ப்பு போட்டியிடுகின்றனர். இது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மூன்று கட்சிகளும் தங்களது கட்சி தலைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பெரும்பாலான எதிர்ப்பு தலைவர்கள் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். சிலர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். வேட்புமனுவை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.

    அவர்களை கட்சிகள் சஸ்பெண்டு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றரன். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே 21 பேரை சஸ்பெண்டு செய்திருந்தது. தற்போது மேலும் 7 பேரை சஸ்பெண்டு செய்துள்ளனர். மொத்தம் 22 தொகுதிகளில் 28 பேரை சஸ்பெண்டு செய்துள்ளது.

    2019 தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    தற்போது சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு கட்சிகளாக பிரிந்து எதிரெதிர் கூட்டணியில் உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    • மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை.
    • தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாயுதி கூட்டணி கட்சிகள் (பா.ஜ.க., சிவசேனா (ஏக் நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்)), மகா விகாஸ் அகாடி கட்சிகள் (காங்கிரஸ், சிவசேனா (UBT-உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் ((சரத்சந்திரா பவார்)- சரத் பவார்) தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

    பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவரை எதிர்த்து சரத் பவார் பேரன் யுகேந்திர பவார் களம் இறக்கப்பட்டுள்ளார். தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் யுகேந்திர பவார், மகா விகாஸ் அகாடி 175 முதல் 180 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுகேந்திர பவார் கூறுகையில் "மகாயுதி 175 இடங்களை பெறுவார்கள் என்ற நான் நினைக்கவில்லை. மகா விகாஸ் அகாடி 175 இடங்கள் முதல் 180 இடங்களை பிடிக்கலாம்.

    நவம்பர் 23-ந்தேதி சரியாக எத்தனை இடங்கள் என்பதை நம்மால் பார்க்க முடியும். வெற்றி நமதே. தண்ணீர் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, குற்றம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது. இவைகள் அனைத்தும் மிகப்பெரிய பிரச்சனை. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகாணும் வகையில் நாங்கள் பணியாற்றுவோம். பொதுவாக இந்தியா எப்போதும் மிகப்பெரிய மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது.

    இவ்வாறு யுகேந்திர பவார் தெரிவித்தார்.

    • சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
    • நாடு செழிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    விவசாயிகளுக்கு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் எங்கள் அரசு அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. எங்கள் தேர்தல் வாக்குறுதி மாநில வளர்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும்.

    சுதந்திரத்திற்குப் பிறகு, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் முன்னேற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் விரும்புகிறது.

    சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸ் விரும்புகிறது. நாடு செழிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

    மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள். மாநில வளர்ச்சிக்கு மகா விகாஸ் அகாடி கட்சியினர் தடையாக இருக்கிறார்கள்.

    பா.ஜ.க அரசு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இரட்டிப்பு வேகத்தில் வளர்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள் என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் ஒருபோதும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது கிடையாது.
    • பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் லட்கி பஹின் திட்டம் கேம் சேஞ்சராக இருக்காது.

    பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அமைத்துள்ள மகாயுதி கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

    இரு கூட்டணிகளிலும் ஆட்சியை பிடித்தால் முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளன. இரண்டு கூட்டணிகளும் முதல்வர் வேட்பாளர் இவர்தான் என யாரையும் முன் நிறுத்தவில்லை.

    இந்த நிலையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பல முதல்வர் முகங்கள் உள்ளன. தேர்தல் முடிவு வெளியான பின்னர் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ஆரிஃப் நசீம் கான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் நசீம் கான் கூறுகையில் "காங்கிரஸ் ஒருபோதும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது கிடையாது. வளர்ச்சி மற்றும் சித்தாந்ததம் ஆகியவற்றை முன்னிறுத்திதான் போட்டியிடுவோம். மகா விகாஸ் அகாடியில் ஏராளமான முதல்வர் முகங்கள் உள்ளன. ஆனால் தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தி அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம்.

    பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் லட்கி பஹின் திட்டம் கேம் சேஞ்சராக இருக்காது. பா.ஜ.க. மற்றும் ஷிண்டேயின் உண்மையான முகம் மகாராஷ்டிரா மக்களுக்கு தெரிந்து விட்டது. அவர்கள் பொய்கள் குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு சட்டமன்ற தேர்தல் பாடம் கற்பிக்கும்.

    இவ்வாறு நசீம் கான் தெரிவித்துள்ளார்.

    2019 தேர்தலில் நசீம் கான் 409 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனா கட்சி தலைவரிடம் தோல்வியடைந்தார்.

    • சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முன்வைக்கும் எந்த காரணங்களும் அர்த்தம் இல்லாதவை.
    • சிவசேனா யாருக்கு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

    அவுரங்காபாத் :

    மராட்டியத்தில் சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடத்திவந்த கூட்டணி ஆட்சி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் முதன்மை கோரிக்கையாக இருந்தது. ஷிண்டே தலைமையில் பிரிந்துசென்ற சிவசேனா அதிருப்தி அணியினர், பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினர்.

    ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்றார். இந்தநிலையில் அவுரங்காபாத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தல்களிலும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். ஆனால் இது எனது தனிப்பட்ட கருத்து தான். முதலில் கட்சி தலைவர்களுடன் இதுகுறித்து விவாதித்துவிட்டு, கூட்டணி கட்சிகளுடனும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் திடீர் மன மாற்றத்திகான காரணம் குறித்து நிலையான காரணத்தை இதுவரை கூறவில்லை. சில நேரங்களில் இந்துத்வா கொள்கையில் இருந்து தலைமை விலகி சென்றது தான் காரணம் என்கிறார்கள். சிலர் தங்கள் தொகுதிக்கு சரியான நிதி கிடைக்கவில்லை என்கிறார்கள். ஆனால் இவர்கள் முன்வைக்கும் எந்த காரணங்களும் ஒரு அர்த்தமும் இல்லாதவையாகும்.

    அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகரங்களில் பெயர் மாற்றுவது குறித்து மகா விகாஸ் அகாடி அரசு இயற்றிய குறைந்தபட்ச செயல்திட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. இந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு தான் எனக்கு தெரியும். இந்த முடிவு முன் ஆலோசனை இல்லாமல் எடுக்கப்பட்டது. அப்போதைய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்கு பதிலாக அவுரங்காபாத் நலன் குறித்து ஏதேனும் முடிவு எடுத்திருந்தால், மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருக்கும் என்று ஊகிக்க விரும்பவில்லை. நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சிவசேனா யாருக்கு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகினர்.
    • அவர்கள் குஜராத்தில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகி, அவர்கள் குஜராத் ஓட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் சிவசேனா அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஆட்சியமைக்கும் முயற்சியில் பா.ஜ.க. தீவிரம் காட்டியுள்ளது.

    288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன. இதில் 105 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் மந்திரி பதவியில் பங்கு கேட்டு சிவசேனா வற்புறுத்தியது.

    பா.ஜ.க. இதை ஏற்க மறுத்ததால் அங்கு அரசியல் பூகம்பம் ஏற்பட்டது. சிவசேனா கட்சி தனது இந்துத்வா கொள்கைக்கு மாறான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து 162 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாகவும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதல் மந்திரியாகவும் நவம்பர் 30-ம் தேதி பதவியேற்றனர்.

    உத்தவ் தாக்கரே அரசு இரண்டரை ஆண்டுகளைக் கடந்து ஆட்சி செய்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலிலும், நேற்று முன்தினம் நடந்த மகாராஷ்டிர மேல்சபை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை மிஞ்சி பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் மேல் சபைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டமன்ற குழு தலைவரான மந்திரி ஏக்நாத் ஷிண்டே, முதல் மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் இருந்தார். அதன்பிறகு அவரும், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரும் திடீரென மாயமாகினர். அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்திற்கு இரவோடு இரவாக சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கியது தெரியவந்தது. நேற்று காலை மேலும் சில சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் சூரத் ஓட்டலுக்கு சென்று அவர்களோடு தங்கினர்.

    ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 22 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் வெளியானது. இருப்பினும் தங்களது அணியில் 30-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர்கள் கூறினர். அவர்கள் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அமைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், ஆட்சியைக் கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சி பலிக்காது என சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

    ×