என் மலர்
நீங்கள் தேடியது "Maheesh Theekshana"
- ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது.
- ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் என்னால் வீழ்த்த முடியவில்லை.
இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை கண்டிப்பாக வீழ்த்துவேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் தொடர் மற்றுமல்லாமல் மற்ற போட்டியிலும் விராட் கோலியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் உலக கோப்பையில் அவரின் விக்கெட்டை வீழ்த்துவதே என்னுடைய இலக்கு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. டி20 போட்டிகளில், நான் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு 1 ரன்களை வழங்க முயற்சிக்கிறேன். ஒரு ரன் எடுப்பதால் யாரும் திருப்தி அடைவதில்லை. 50 ஓவர்களில், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். விக்கெட்டுகளைப் பெறுவதற்கு சில தந்திரங்களைச் செய்ய வேண்டும். பவர்பிளேயில் பந்துவீசுவது டெத் ஓவர்களில் பந்து வீசுவது வேறு விதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.
- ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.
ஹேமில்டன்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நேற்று நடந்தது. மழை காரணமாக 37 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இலங்கை 30.2 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 7-வது இலங்கை பவுலராக சாதனை படைத்தார்.
மேலும் சமிந்தா வாஸ் (2003), லசித் மலிங்கா (2007), துஷ்மந்தா மதுசங்கா (2018) ஆகியோருக்கு பின் வெளிநாட்டு மண்ணில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 4-வது இலங்கை பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
- பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் நட்சத்திர வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிஎஸ்கே அணி நிர்வாகமும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா. இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்சனா, தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்திகாவை திருமணம் செய்துக்கொண்டார்.
பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் நட்சத்திர வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்களை வெளியிட்டு சிஎஸ்கே அணி நிர்வாகமும், சிஎஸ்கே ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த இவரை மெகா ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 2-வது இடத்தில் உள்ளார்.
- பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களில் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை பின்னுக்கு தள்ளி இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 3-வது இடத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் 10-வது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ்-ம் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.