என் மலர்
நீங்கள் தேடியது "Makaravilakku Puja"
- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.
- மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (17-ந்தேதி) தொடங்கியது.
இதற்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.
தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி வந்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க 18-ம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்பட்டனர்.
பின்பு மாலை 6.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் மூலமந்திரம் கூறி பொறுப் பேற்றுக் கொண்டனர். பின்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். பின்பு இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கபபட்டு, சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்ப டைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று (17-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்தார். பின்பு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடை பெற்றன. தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது.
இந்தநிலையில் கோவில் நடை நேற்று மாலை திறக்கப் பட்டதால் சபரிமலையில் நேற்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மண்டல பூஜை தொடங்கிய தையடுத்து இன்றும் பக்தர்கள் குவிந்தனர். மழை பெய்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமரிமலையில் திரண்டனர்.
சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப் பட்டது. ஆன்லைனில் முன்பதிவுசெய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
பக்தர்கள் வரும் வாக னங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.
சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடை பெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறும்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதி களில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சபரிமலையில் இன்று
அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு, 3.30 மணிக்கு கணபதி ஹோமம், 3.35 மணிக்கு முதல் 7 மணி வரை நெய் அபிஷேகம்
காலை 7.30 மணிக்கு உஷ பூஜை, 8.30 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம்
காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அஷ்டாபிஷேகம்
மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை, 1 மணிக்கு நடை அடைப்பு
மாலை 3 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணி தீபாராதனை
இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபிஷேகம்
இரவு 9.30 மணிக்கு அத்தாழ பூஜை, 11 மணி நடை அடைப்பு
- பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.
- வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரி மலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.
இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனிலும் அந்த நடைமுறையே கடை பிடிக்கப்பட்டது. மேலும் நிலக்கல்லில் உடனடியாக முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்தனர். இதன் காரணமாக சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.
இதனால் பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் கூட, பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது.
இதன் காரணமாக பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் அவதிக்குள்ளானதாக பக்தர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல்வேறு கட்சியினரும் கருத்து வெளியிட்டனர்.
இந்தநிலையில் மண்டல பூஜை விழா முடிந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு தரிசனம் ஜனவரி 15-ந்தேதி நடக்கிறது.
- இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
- 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இந்த சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.

திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அடையாள சின்னத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 'சுவாமி சாட்பாட்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த செயலி மூலம் சபரிமலை கோவில் நடை திறப்பு, அடைப்பு, சிறப்பு பூஜை விவரம், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.
- பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கிடையே சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபரிமலை சீசனையொட்டி இந்த ஆண்டு ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்களுக்கு குறையாமல் தரிசனம் செய்கிறார்கள். 18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். அதாவது 15 நிமிடங்களுக்கு பின் ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் 18-ம் படியில் அதிக அளவில் பக்தர்கள் ஏற்றி விடப்படுகிறார்கள்.
சிரமமின்றி தரிசனம் செய்ய பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு வலியநடை பந்தலில் தனிவழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தரிசனம் முடிந்து மலை இறங்கும் பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் கடந்த ஆண்டு வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து களபாபிஷேகத்திற்கான சந்தனம் வாங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சந்தனத்தை அரைக்க 3 அரவை எந்திரங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த எந்திரங்கள் மூலம் தற்போது சந்தனம் அரைக்கப்பட்டு களபாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சபரிமலையில் ஏற்கனவே 40 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது தினமும் 1 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்.
- கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வழக்கமாக விரதமிருந்து வரும் பக்தர்கள் மற்றும் கன்னி ஐயப்பமார்கள் அதிகளவில் வருவதே இதற்கு காரணம்.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும்போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை செய்துகொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும்.
அதனை வெற்றிகரமாக மேற்கொள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்துகிறது.
அதே நேரத்தில் யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறது. சபரிமலை யாத்திரையில் பக்தர்கள் கடை பிடிக்கவேண்டிய விஷயங்களை இந்த ஆண்டும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-

செய்ய வேண்டியவை
* பக்தர்கள் மலை ஏறும் போது 10 நிமிட நடைக்கு பிறகு 5 நிமிடம் ஓய்வெடுங்கள்.
* மரக்கூட்டம், சரம்குத்தி, நடைபந்தல் - பாரம்பரிய பாதையை பயன்படுத்தி சன்னிதானம் செல்லவும்.
* பதினெட்டாம்படியை அடைய வரிசை முறையை பின்பற்றவும்.
* திரும்பும் பயணத்திற்கு நடைபந்தல் மேம்பாலத்தை பயன்படுத்தவும்.
* சிறுநீர் கழிப்பதற்கும், உடல் கழிவுகளை அகற்றுவதற்கும் கழிவறைகளை பயன்படுத்துங்கள்.
* சன்னிதானத்தில் நிலவும் கூட்டத்தின் நிலையை கண்டறிந்து, பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லுங்கள்.
* டோலியை பயன்படுத்தும் போது, தேவசம் கவுண்டரில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை வைத்துக் கொள்ள வேண்டும்.
* பாதுகாப்பு சோதனைச்சாவடிகளில் உங்களை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.
எந்த உதவிக்கும் காவல்துறையை அணுகவும்.
* சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
* உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே உண்ணக்கூடிய பொருட்களை வாங்கவும்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் மலையேற்ற பாதைகளை சுத்தமாக வைத்திருங்கள்.
* ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.
* கழிவுப் பெட்டிகளில் மட்டுமே கழிவுகளை இடுங்கள்.
* தேவைப்பட்டால், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்சிஜன் பார்லர்களின் வசதிகளை பெறவும்.
* குழந்தைகள், வயது முதிர்ந்தோர், மாளிகாபுரம் (பெண்கள்) முகவரி மற்றும் தொடர்பு எண்கள் கொண்ட அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிடப்பட வேண்டும்.
* குழுக்கள் அல்லது உடன் வந்த நண்பர்களிடமிருந்து தனிமை படுத்தப்பட்டால், பக்தர்கள் காவல் உதவி நிலையங்களில் புகார் செய்யலாம்.

செய்ய கூடாதவை
* கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் யாத்திரை செல்லும் வழியில் புகைபிடிக்க வேண்டாம்.
* மது அல்லது போதை பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
* வரிசையில் குதிக்க வேண்டாம். வரிசையில் இருக்கும்போது அவசரப்பட வேண்டாம்.
* ஆயுதங்கள் அல்லது பிற வெடிபொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.
* அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களை மகிழ்விக்க வேண்டாம்.
* கழிப்வறைக்கு வெளியே சிறுநீர் கழிக்காதீர்கள். கழிவறைக்கு வெளியே உடல்களை சுத்தம் செய்யாதீர்கள்.
* எந்தவொரு சேவைக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம்.
* எந்த உதவிக்கும் காவல்துறையை அணுக தயங்க வேண்டாம்.
* குப்பை தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளை வீசக்கூடாது.
* பதினெட்டாம்படியில் தேங்காய் உடைக்க வேண்டாம்.
* பதினெட்டம்பாடியின் இருபுறமும் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் தேங்காய் உடைக்க வேண்டாம்.
* புனித படிகளில் ஏறும் போது பதினெட்டாம்படியில் மண்டியிட வேண்டாம்.
* நடைப்பந்தல் மேம்பாலத்தை தவிர வேறு எந்த பாதையையும் திரும்பப் பயணத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
* மேல் திருமுட்டம் அல்லது தந்திரிநாடு எங்கும் ஓய்வெடுக்க வேண்டாம்.
* நடைபந்தல் மற்றும் கீழ் திருமுட்டம் ஆகியவற்றில் விரிகளுக்கு (தரையில் பாய்கள்) பாதைகளை பயன்படுத்த வேண்டாம்.
பாதுகாப்பு
* பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
* ஆயுதங்கள் அனுமதிக்கப்பட வில்லை.
* சன்னிதானத்தில் சமையல் எரிவாயு, அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. அப்படி தீ எரித்தால் தீயை உபயோகித்த உடனே அணைக்க வேண்டும்.
* பதினெட்டாம் படியில் ஏறும் முன் உங்களையும், உங்கள் பொருட்களையும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.
- மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
- நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இதனை அதிகரிக்க முடிவு செய்த போது, பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வந்தனர். இன்று காலை 7 மணிக்குள் 18 ஆயிரத்து 648 பக்தர்கள் புனித படிகளில் ஏறியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர். விடுமுறை தினமான இன்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தவுடன் உடனடியாக திரும்பிச் செல்ல தொடங்குவதாகவும், சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
- ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதி.
- ஜனவரி 20-ந் தேதி கோவில் நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கியது. இதனையடுத்து, மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வாக, ஐயப்பனுக்கு கடந்த டிசம்பர் 25-ந் தேதி மகா தீபாராதனை நடைபெற்றது.
டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது.
அதன்பிறகு மூன்று நாள் இடைவெளிக்குப் பின் டிசம்பர் 30-ந் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
2025-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மாலை, ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை நடக்கிறது. மகரஜோதி தரிசனத்திற்குப்பின், ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அரச கோல ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
ஜனவரி 20-ந் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினருக்கு மட்டுமான சிறப்பு பூஜையும், தரிசனமும் நடத்தப்பட்டு, அன்றிரவு கோயில் நடை அடைக்கப்படும்.
பின்னர் கோயிலின் சாவி, பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதோடு, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால உற்சவம் நிறைவு பெறும்.
- நாளை மறுநாள் (14-ந்தேதி) மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
- திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அதிலி ருந்து தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.
மகரவிளக்கு பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்களின் வருகை அதிக மாக காணப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் தேவசம்போர்டு செய்து வருகிறது.
மகரவிளக்கு பூஜையன்று பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் பம்பை, சபரிமலையில் கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று முதல் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மகரவிளக்கு பூஜை தினத்தில் மாலையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது.
வரும் இடங்களில் எல்லாம் திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். திருவாபரண ஊர்வலம் நாளை மறுநாள் (14-ந்தேதி) பம்பைக்கு வந்து சேரும். அன்று மாலையில் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
அதன்பிறகு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை முடிந்து பந்தள அரண்மனை பிரதிநிதி தரிசனம் செய்ததும் வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.