என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manaparai"

    • கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
    • மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    கே.கே.நகர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கலாமணி(வயது 45). அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(32). இவர்கள் இருவரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

    திருச்சி ஓலையூர் ரிங் ரோடு அருகே ஒரு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் இந்த பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது. இதில் கலாமணி, மாணிக்கம் ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர். இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.

    அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. 2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.

    மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் திரண்டு மாணிக்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பத்திலேயே பலியான மாணிக்கம் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • விழா 7 நாட்கள் நடைபெறுகிறது.
    • 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் வருகின்ற 28- ந்தேதி முதல் பிப்-3 ந்தேதி வரை பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

    சாரணர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவிற்கு தமிழக அரசு ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த விழா 7 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இதற்காக பெருந்திரளணி சபை, திட்டக்குழு, தொழில்நுட்பக்குழு,செயல்பாட்டுக்குழு மற்றும் 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இயக்குநர்களும் குழு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாரணர் இயக்க வைர விழா நடைபெறும் திருச்சி சிப்காட் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பாரத சாரணர் இயக்கத்தின் வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்ட ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

    * முதற்கட்டமாக 38 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    * ஜனவரி 22-ந் தேதி, குடியரசுத் தலைவரை எங்கள் குழுவினர் சந்திக்க உள்ளனர். அதன்பிறகு அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா இல்லையா என்பது குறித்து தெரியவரும். விழா சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

    * இதற்கு முன்னதாக கர்நாடகாவில் சர்வதேச அளவிலும், ராஜஸ்தானில் தேசிய அளவிலும் பாரத சாரணர் இயக்குநரக நிகழ்வை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் அதைவிட பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம்.

    * தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர் கலந்துகொண்டு தங்கள் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு போன்ற பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி காட்ட உள்ளனர்.

    * சாரணர்கள் தங்குவதற்காக 1000 கூடாரங்கள் மற்றும் சாரணியர்கள் தங்குவதற்காக 900 கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

    திரிசாரண சாரணியர்கள் தங்குவதற்காக 550 கூடாரங்கள், ஒன்றிய மற்றும் அரசு அலுவலர்கள் தங்குவதற்காக 40 கூடாரங்கள், அலுவலக பணிக்கா 32 கூராடங்கள் என மொத்தம் 2,422-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளியறைகள், கழிவறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



    மணப்பாறை பகுதியில் வீசிய சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்து பின்பும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மதிய நேரத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் லேசான தூரலுடன் மழை பெய்தது. இருப்பினும் பலத்த மழை பெய்யாததால் பொது மக்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள், கம்பங்கள் சாய்ந்தன.

    நேற்று 2-வது நாளாகவும் திருச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சூறைக்காற்று வீசியது. மாவட்டத்திற்குட்பட்ட மணப்பாறை பகுதியில் வீசிய சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தா நத்தம் அருகே உள்ள கம்பளியம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜூ (வயது 43), கனவாய்பட்டியை சேர்ந்த விவசாயி மனோகர் (41) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கருமலை நோக்கி சென்று கொண்டிருந் தனர்.

    மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் புத்தாநத்தத்தை அடுத்த கருஞ்சாலைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது சாலையோரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

    இதில் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட 2 பேரும் உடல் நசுங்கினர். அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்சு வேனில் அவர்களை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் சூறைக்காற்று வீசி வருவதில் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். #tamilnews
    ×