என் மலர்
நீங்கள் தேடியது "march"
- வாழப்பாடி அருகே பழங்காலத்தில் மார்கழியில், சிறுவர்–சிறுமியர் அதிகாலையில் பெருமாள் கோவிலில் கூடி, திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி வழிபாடு.
- ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர் - சிறுமியருக்கு, பொதுமக்களும், பக்தர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிறுவர்- சிறுமியரின் இந்த மார்கழி வழிபாட்டு ஊர்வலம்,மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரலாற்று சிறப்புமிக்க பேளூர், பழங்காலத்தில் வேள்வியூர் என்ற பெயரில் மிகச்சிறந்த ஆன்மிகத் தலமாக விளங்கியது. பேளூரில் வசிஷ்ட நதிக்கரையில் வடகரையில் பஞ்சபூத சிவன் சைவ திருத் தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோவிலும், தென் கரையில், அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமியெனும், வைணவ பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.
இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமான மார்கழியில், இப்பகுதி சிறுவர்–சிறுமியர் அதிகாலையில் பெருமாள் கோவிலில் கூடி, திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி வழிபாடு நடத்துவதும், பின்னர் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளில் வழியாக தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று, வழிபாடு நடத்துவதும் பல ஆண்டுகளாக மரபு மாறாமல் நடந்து வருகிறது.
நூறாண்டுக்கு மோலாக தொடர்ந்து வரும் சிறுவர்களின் மார்கழி வழிபாட்டு ஊர்வலத்திற்கு, பொதுமக்களும், பக்தர்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து வைத்து வரவேற்று, சிறுவர்–சிறுமியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வழிபடுவர்.
பேளூரில், நிகழ்வாண்டு நடுங்கும் குளிரிலும், அதி காலையில் விழித்தெழுந்த சிறுவர்–சிறுமியர், மார்கழி வழிபாட்டு ஊர்வலத்தை தொடங்கினர். ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர் - சிறுமியருக்கு, பொதுமக்களும், பக்தர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சிறுவர்- சிறுமியரின் இந்த மார்கழி வழிபாட்டு ஊர்வலம்,மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.
நாகர்கோயிலிலுள்ள சிறு ஊரில் நடக்கும் புறா பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பைரி. அப்பாவை இழந்த தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என தாய் ஆசைப்படுகிறாள். ஆனால் தாயின் பேச்சை கேட்காமல் புறா பந்தயத்தில் ஈடுப்படுகிறான் நாயகன்.
புறா பந்தயத்தில் இருக்கும் பிரச்சனைகளும் அதில் இருக்கும் விரோதம், துரோகத்தை பற்றி பேசுகிறது இந்த படம். ஜான் கிளாடி இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரமேஷ் ஆறுமுகம், மேகனா எலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நல்ல படங்களை பார்த்தால் அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டும் பழக்கமுடையவர். பிப்ரவரி மாதம் ரியோ ராஜ் நடித்து வெளியான் "ஜோ" திரைபடக்குழுவினரை அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பைரி படக்குழுவினரை அழைத்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் படக்குழுவினரிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது
- "எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க" என கூறினார்
வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் சிவக்கார்த்திகேயன் முக்கிய பங்கு வகுக்கிறார். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவரின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷ்ன்ஸ் இருக்கிறது.
சமீபத்தில் வெளியான அயலான் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.குழந்தை ரசிர்கர்கள் சிவகார்த்திகேயனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அயலான் படத்தை தொடர்ந்து அவரின் 21-வது படமான அமரனை கமலஹாசன் தயாரிக்கிறார்.
சாய் பல்லவி,புவன் அரோரா,ராஹுல் போஸ் போன்ற பல நட்சத்திரங்கள் இதில் நடித்துருக்கின்றனர். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்த்ற்கு இசையமைத்துள்ளார்.
அமரன் படத்தில் சிவகார்த்திக்கேயன் ராணுவ கமாண்டோவாக நடித்து இருக்கிறார்.
இதற்காக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றி கம்மோண்டோவின் தோற்றத்தில் கச்சிதமாக இருக்கிறார்.
அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படத்திற்க்கு நெட்ஃப்லிக்ஸ் கொடுத்த அதிகபட்ச தொகை இது. முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் ரைட்சை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
அதனால் இப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று அவரது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் " எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க. என் சினிமா வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணதுல இருந்து இப்போ வரைக்கும் நிறைய பிரச்சனை, வலி இருந்திருக்கு சிலது உங்களுக்கு தெரியும் சிலது தெரியாது. பிராப்ளம் ஷேர் பண்ண அப்பா இல்ல சப்போர்ட் பண்ண அண்ணனும் இல்ல. ஆனா இப்போ என் ஃபேன்சான ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் நீங்க இருந்தீங்க இருப்பீங்க" என மன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பின் சந்திப்பை முடித்து அங்கு இருந்து கிளம்பும் போது ரசிகர்களைப் பார்த்து சாப்ட்டீங்களா என்று கேடு விட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர்
- Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்
கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர். இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். இத்தளத்திற்கு Cspace என்று பெயரிட்டுள்ளனர். மலையாள சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த முயற்சியை துவங்குகிறோம் என்று அப்போது பினராயி கூறினார். இது கலை மற்றும் கலாச்சார மதிப்புள்ள திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரு பாதையாக அமையும் என்றும், பிற ஓடிடி தளம் அனைத்தும் வியாபார நோக்கத்துடன பெரிய கமர்ஷியல் படங்களை மட்டும் வாங்குகின்றன., CSpace தரமான திரைப்படங்களை வீட்டிற்கு கொண்டு வரும் ஒரு ஊடகமாக முத்திரை பதிக்க உள்ளது என்றும் கூறினார்.
Cspace ஓடிடி தளத்தில் ஏற்கனவே தியேட்டரில் வெளியான படங்களை மட்டும்தான் இடம்பெறும். அதனால் தியேட்டருக்கு சென்று பார்க்கும் பார்வையாளர்களை அது பாதிக்காத வண்ணம் இது செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
மாநில, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற படமும் இதில் இடம்பெரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 42 படங்கள் Cspace ஓடிடி தளத்தில் இடம்பெறவுள்ளது. அதில் 35 முழு நீள படங்களும், 6 ஆவணப் படங்களும்,1 குறும்படமும் இடம்பெறவுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்களை இந்த ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
பே பெர் வியூ என்ற அடிப்படையில் இந்த ஓடிடி தளம் இயங்கவுள்ளது. ஃபீட்சர் (Feature)படங்களை பார்க்க ரூ.75, குறும்படங்களை பார்க்க குறைவான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தில் பாதி தொகை அந்த படத்தின் தயாரிப்பளருக்கு சென்றடையும் என்று குறிப்பிட்டுள்ளனர். Cspace-ன் app-ஐ கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இருந்து நாம் டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.
இந்த Cspace ஓடிடி தளம் வெளியானதால் சிறிய பட்ஜெட் படங்களுக்கும், வணிக சமரசமின்றி எடுக்கப்படும் யதார்த்தப் படைப்புகளுக்கும் பெரும் வரமாக இருக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- தமிழ் சினிமாவில் வேகமாய் வளர்ந்து முன்னணி நடிகராக உச்சம் தொட்டவர் தான் சிவகார்த்திகேயன்.
- தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் நுழைந்துள்ளார்.
சென்னை, போரூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் வந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் சிவகார்த்திகேயன்.இன்று சந்தித்துப் பேசினார்.
தமிழ் சினிமாவில் வேகமாய் வளர்ந்து முன்னணி நடிகராக உச்சம் தொட்டவர் தான் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா போன்றோரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு நிகராக சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் ஈட்டி வருகிறது.
சமீபத்தில் வெளியான அயலான் படமும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அயலான் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் அமரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலை கொடுத்து ஒடிடி-ல் வாங்கப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று சென்னையில் அவரது ரசிகர்களை சந்தித்தார். இந்த பேன்ஸ் மீட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார். இந்நிலையில் முழு நேரமாக அரசியலில் இறங்கவுள்ளதால் இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
ஆதலால் விஜயின் இடத்தை பிடிக்கவே சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்திக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகிறது. மேலும் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கி தான் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அது போலவே அரசியலில் சிவகார்த்திகேயன் வருவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்"
- நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்". இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் நேற்று வெளியிட்டனர். T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில்நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்புகாக கேரளா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்
லியோ வெற்றியை அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். முதுமை தோற்றத்திலும், இளமைத் தோற்றத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.
பிரஷாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். படக்குழுவினர் தாய்லாந்து, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தினர். இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்புகாக கேரளா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- . பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
- இப்படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்
47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா.. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இளையராஜாவை இசை ஞானி என்றும் , மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேஸ்ட்ரோ இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய பயோபிக் உருவாகிறது.
இப்படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 20 ஆம் தேதி லீலா பேலசில் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். 2025 ஆம் ஆண்டு வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார்
- . இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகனாக சூர்யா இருக்கிறார். திரைத்துறை பணியிலும் , சமூக பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் சூர்யா.
2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் மக்களிடையே சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். அவர் இதுவரை தயாரித்த படங்களில் கங்குவா தான்
மிகப்பெரிய பட்ஜட் படம். சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார். பாபி டியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. இத்திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் கங்குவா படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
- . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்டார்
அறிமுக இயக்குனர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை படத்தை இயக்குகிறார். புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்ட நிலையில்.
இப்பொழுது அப்படத்தின் முதல் பாடலான 'டமக்கு டமக்கா' வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இப்பாடலை பாடியுள்ளார்.
அறிமுக நடிகர்களான திரவ் மற்றும் இஸ்மத் பானு இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டமக்கு டமக்கா பாடல் நல்ல ஃபீல் குட் பாடலாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2005 இல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது.
- தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். படம் வெளியாகி 26 நாட்களான நிலையில் உலகளவு வசூலில் 200 கோடி வசூல் செய்துள்ளது. மலையால சினிமா திரையுலகில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. படம் வெளிவந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் இப்படம் 200 கோடி வசூலிக்கப்பட்டது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. இந்தியா பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மட்டும் 110 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 52 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
2005-ல் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மக்களால் மிகவும் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் போது குணா குகையில் அவர்களின் நண்பன் ஒருவன் மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு அடுத்து என்ன ஆகிறது, நண்பர்கள் எல்லாம் அவனை எப்படி காப்பற்றுகிறார்கள் என்பதே மீதிக் கதை.
நட்பின் உன்னதத்தையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தி குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாட்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்ததே இப்படத்தின் முக்கிய வெற்றி. சமீபத்தில் நடந்த நேர்காணலில் பிருத்திவிராஜ் சுகுமாரன் எப்படி மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற மலையாளப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் மலையாளப் படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பும், வெற்றி பெற உதவியும் செய்கிறது என்று விவரித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- 47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா
- பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா
47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இளையராஜாவை இசை ஞானி என்றும் , மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேஸ்ட்ரோ இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்போது, அவரது பணியை நினைவுகூரும் வகையில், அவரது வாழ்க்கை பற்றிய பயோபிக் உருவாகிறது.
இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 20 ஆம் தேதி லீலா பேலசில் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். 2025 ஆம் ஆண்டு வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நாளை மதியம் 12.30 மணிக்கு ஒரு அற்புத பயணம் தொடங்குகிறது என்னு தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இளையராஜா பயோபிக் படமாக தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்