என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matchbox Factory"

    • தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
    • ரூ.4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூடைகள் எரிந்து சாம்பலானது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 4-வது தெருவில் நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் மருந்து தடவிய தீக்குச்சிகள் அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை தொழிலா ளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

    இதனால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதறியடித்து அங்குள்ள பல்வேறு பாதை வழியாக அங்கிருந்து வெளியேறினர்.

    இது தொடர்பாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவரை இடித்து, அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தின் போது தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூடைகள் எரிந்து சாம்பலானது. விபத்து குறித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து அவர் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தினார். அப்போது தீப்பெட்டி தொழிற்சாலை உரிய அனுமதியின்றி செயல்பட்டதும், அங்கு பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படாமல் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சங்கரன்கோவில் தாசில்தார் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.

    இதனிடையே தகவல் அறிந்து அங்கு ராஜா எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர் மன்ற துணைத்தலைவர் கண்ணன் என்ற ராஜூ ஆகியோர் விரைந்து சென்று அங்கிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    கழுகுமலையில் தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தீக்குச்சி மூட்டைகள் எரிந்து நாசமாயின.
    கழுகுமலை:

    கழுகுமலை பஸ் நிலையம் அருகில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருபவர் ராஜேந்திரன் (வயது 56). இவரது வீடு, தொழிற்சாலை வளாகத்தில் உள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.அந்த குடோனில் மருந்து முக்கிய தீக்குச்சிகளை மூட்டைகளில் அடைத்து வைத்து இருந்தனர். அவற்றில் தீப்பிடித்ததால் குடோன் முழுவதும் மளமளவென்று தீ பரவியது. இதனால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர்.

    இதுகுறித்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பொன்ராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து முக்கிய தீக்குச்சி மூட்டைகள் எரிந்து நாசமாயின. மேலும் கட்டிடமும் சேதம் அடைந்தது.

    தீயணைப்பு வீரர்கள் துரிதமாக வந்து தீயை அணைத்ததால், தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    ×