என் மலர்
நீங்கள் தேடியது "mathura"
- காளியங்க நர்த்தனராக கிருஷ்ணன் காட்சி தருகிறார்.
- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் அலங்காரம்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், சென்னிமலையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது கிருஷ்ணபெருமாள் ஆலயம். சுமார் 500 வருடங்கள் பழமை மிக்க திருக்கோவில் இது.
ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது, பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாக தோன்றியதாகும். இவருக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமண வரம் கைகூடும், நஷ்டத்தில் இயங்கி வந்த வியாபாரம் லாபம் கொழிக்கும். ஊத்துக்கோட்டை காளிங்கநர்த்தனர் கோவில் தலத்தில் சர்ப்பத்தை வதம் செய்யும் திருக்கோலத்தில், காளியங்க நர்த்தனராக கிருஷ்ணன் காட்சி தருகிறார்.
இந்த காளிங்கநர்த்தனர் கோவிலுக்கு, நாகதோஷம் உள்ளவர்கள் வந்து ஸ்ரீகாளிங்கநர்த்தனப் பெருமானைத் தரிசித்து வேண்டினால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.
வராகபுரி: உறியடித் திருவிழா என்றால் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள வராகபுரி என்ற வரகூரே பக்தப் பெருமக்களின் நினைவுக்கு வரும்.
பல வைணவத் தலங்களில் உறியடித் திருவிழா நடைபெற்றாலும் வரகூரில் நடக்கும் உறியடித் திருவிழா மிகச் சிறப்பானது. பிறந்த குழந்தைகளை இந்த வழுக்கு மரத்தின் முன்னால் தரையில் வைத்து, இந்தக் குழந்தை ஸ்ரீகிருஷ்ணர் அருளிய பிரசாதமாக நினைத்து எடுத்துக் கொள்கிறார்கள்.
மதுரா: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, ஆக்ராவில் இருந்து வடக்கே 50 கி.மீ. தொலைவிலும், டெல்லியில் இருந்து தென்கிழக்கே 145 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பஞ்ச பாண்டவர்களுக்கு கடைசி வரையில் துணை நின்று அவர்களின் பிரச்சினைகளையும் துயரங்களையும் போக்கியவர் கிருஷ்ண பரமாத்மா என்பதால், மதுரா கிருஷ்ணரை வழிபட்டால் துன்பங்களும் துயரங்களும் விலகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குருவாயூர்: குழந்தைகளுக்கான பிரத்யேகமான தலமாக குருவாயூரைப் போற்றுவார்கள். குருவாயூரில் எல்லா நாட்களிலும் அன்னப்ராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
திருச்சி: ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ணன் கோவில். திருச்சி பீமநகர் பகுதியில் ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணன் சக்தி மிக்கவர்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக, ரோகிணி நட்சத்திரநாளில், இங்கு கிருஷ்ணரை வேண்டி, பால், தயிர் மற்றும் பழச்சாறு அபிஷேகம் செய்தால் அந்தக் குழந்தைகள் விரைவில் குணமடையும் என்பது நம்பிக்கை.
திருவானைக்காவல்: ஸ்ரீவேணுகோபால் சுவாமி, திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு அருகில், கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால் சுவாமி.
வெண்ணெய் தாழியுடன் அருள்பாலிக்கும் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணருக்கு, வெண்ணெய் மற்றும் கற்கண்டு நைவேத்தியம் செய்து தரிசித்தால்... விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்க பெறுவார்கள் என்பது நம்பிக்கை
இந்த கோயில், புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்த கோவிலில் ஸ்ரீராதா கல்யாணம் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த வைபவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஸ்ரீவேணுகோபாலனை தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.
திருச்சி திருமந்திரநகர்: சந்தான கிருஷ்ண சாமி கோவில், திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்து வந்த சுந்தர்ராஜ ஐயங்காரும் அவர் மனைவி ருக்மினியும் திருமணமாகி 15 வருடங்களாகியும் பிள்ளை செல்வம் இல்லாமல் பெரிதும் கலங்கி வந்தனர்.
அவர்களின் கனவில் வந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தென் திசையில், ஸ்ரீபார்வதி தேவிக்கு சிவப்பரம்பொருள் மந்திரோபதேசம் செய்த இடம் உள்ளது. அந்த இடத்தின் பெயர்... திருமந்திர நகர்.
குழந்தை வடிவில் அவதரித்த எனக்கு, அந்த வடிவிலேயே அங்கே கோயில் கட்டி வழிபட்டு வா! குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அருளி மறைந்தார். அதன்படி கணவனும் மனைவியும் திருமந்திர நகர் எனும் ஊருக்கு வந்தார்கள்.
அங்கே சந்தான கிருஷ்ண சாமி கோவில் கட்டி குழந்தை கிருஷ்ணனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்கள். அதன் பலனாக, அவர்கள் குழந்தை வரம் கிடைக்க பெற்றனர். அங்கு நின்ற கோலத்தில், குழந்தை கண்ணனாக காட்சி தருகிறார் ஸ்ரீசந்தான கிருஷ்ண சுவாமி. இவருக்கு துளசி மாலை சார்த்தி சிறப்பு திருமஞ்சனம் செய்து வழிபட்டால்... பிள்ளை வரம் கிடைக்க பெறுவார்கள் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை குண்டு கண்ணன்: கண்ணனை அழிக்க கம்சன் பூதனை என்ற அரக்கியை அனுப்பி வைத்தான். அவள் அழகியாக உருவெடுத்து, குழந்தை கிருஷ்ணருக்கு பால் கொடுப்பது போல் விஷம் கொடுத்தாள். குழந்தை கண்ணன் பெரு வடிவம் எடுத்து பாலை குடிப்பது போல் அவளது உயிரையே குடித்து விட்டார்.
அப்படி கண்ணன் எடுத்த மாபெரும் வடிவம் திருவண்ணாமலை கிரிவல பாதையின் நிறைவு பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த கண்ணனுக்கு `பூதநாராயணர்' என்ற பெயரும் ஏற்பட்டது. இவரை வணங்கினால் தீய குணங்கள் அழிந்து நற்குணங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலை தலத்தின் காவல் அரணாக இந்த குண்டு கண்ணன் இருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைகள் அறிவாளியாகவும், நற்குணங்கள் கொண்டவர்களாகவும் பிறக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசிமாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.
கிரிவலத்தை நிறைவு செய்பவர்கள், இந்த கோயிலில் தீர்த்தம் வாங்கி வாசல் முன் அதை கொட்டுகின்றனர். அதாவது கிரிவலம் செல்வதால் உண்டான பலனை கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் செய்து தியாக உள்ளத்தை பெறுவதாக ஐதீகம்.
திருத்தங்கல்: சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். கிருஷ்ணரின் பேரன் அனிருத்துக்கும் உஷை என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த திருமணத்தை நடத்தி வைக்க கிருஷ்ணரே நேரில் வந்தார்.
அப்போது அவர் தஸ்காலமலையில் தங்கினார். அந்த மலையே திருத்தங்கல் என்று அழைக்கப்படுகிறது.
மருதூர்: நவநீத கிருஷ்ணர் கோவில், நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது.
கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் அடைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப் போட்டாள். அந்த உரலில் கண்ணன் இழுத்தப்படி சென்றான். அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது.
கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.
துவாரகை: துவாரகையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் அலங்காரம் செய்யப்படுகிறது. திங்கட்கிழமை ரோஜா, செவ்வாய்க்கிழமை சந்தனம், புதன்கிழமை பச்சை, வியாழக்கிழமை ஜேசரி, வெள்ளிக்கிழமை வெள்ளை, சனிக்கிழமை நீலம்,
ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிறங்களில் அலங்காரம் செய்கிறார்கள்.
பேளூர்: குழல் ஊதும் கண்ணன் 2 கைகளுடன் இருப்பதை தானே நாம் பார்த்து இருப்போம் ஆனால் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள பேளூரில் எட்டு கை கிருஷ்ணர் உள்ளார். எனவே இது அபூர்வமான தலமாக கருதப்படுகிறது.
இத்தலத்தில் வழிபாடு செய்தால் பணக் கஷ்டங்கள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
காரமடை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடையில் ஸ்ரீசந்தான ஆலயம் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இங்கு கிருஷ்ணருக்கு கற்கண்டு, சீடை, சுக்கு வெல்லம், முறுக்கு, நாவல் பழம் படைத்து வணங்குவார்கள். அன்று அவரை தரிசித்தால் உடல் நலமும், செல்வ வளமும், உண்டாகும் என்பது நம்பிக்கை.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில்: தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.
இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில் என்ற ஊர்.இங்கு அழகான கிருஷ்ணன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்தில் இரவு நேர பூஜையின் போது தினமும் பாலகிருஷ்ணனை வெள்ளித் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்கள்.
குழந்தைக்கிருஷ்ணனை தூங்க வைப்பதற்கு முன் கிருஷ்ணனுக்கு சார்த்தப்பட்ட வெண்ணெய் மற்றும் கிருஷ்ணனுக்கு நிவேதித்தப்பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.
தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து `பால கிருஷ்ணனை' வழிபட்டு வெண்ணெய் பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்றார் அசாம் முதல் மந்திரி.
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் இப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.
இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோவில் கட்டப்படும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்துவருகிறது.
ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.
- ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
- காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தக் கொடூர சம்பவத்தை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவுக்கும் ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சமூக வலைதளங்களில் பரவும் இந்த வைரல் வீடியோ, உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள கோவிலில் இருந்து மார்ச் 17-ம் தேதி அன்று ஹோலிக்கு முந்தைய நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலைக் காட்டுகிறது. இதில் 6 பேர் சுயநினைவை இழந்து காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
எனவே, சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் சம்பவத்தை காட்டும் வீடியோ போலி என தெரிய வந்துள்ளது.
- உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது.
- இந்த வழக்கை நீதிபதி மயங்க் குமார் ஜெயின் விசாரித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. அதையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி கடந்த 1669-70-ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் ஓளரங்க சீப் உத்தரவின்படி கிருஷ்ண ஜென்மபூமி பகுதியில் கட்டப்பட்டது என்று புகார் எழுந்தது.
இதுகுறித்து மதுரா கோர்ட்டில் இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ண ஜென்மபூமியில் இருந்த தாகூர் கேசவ் தேவ் சிலையின் எச்சங்கள் ஆக்ராவில் உள்ள ஜமா மசூதியில் புதைக்கப்பட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், "1670 ஆம் ஆண்டு மதுராவில் உள்ள கேசவ் தேவ் கோவில் இடித்து விட்டு ஆக்ராவில் உள்ள ஜமா மசூதியின் கீழ் சிலையின் எச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளது. ஆதலால் மசூதியை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வை மேற்பார்வையிட ஆணையராக வக்கீல் ஒருவரை இந்திய தொல்லியல் துறை நியமிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கை நீதிபதி மயங்க் குமார் ஜெயின் விசாரித்தார். அப்போது இந்த மனு தொடர்பாக இந்திய தொல்லியல் துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
- வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
- அபினவ் அரோரா பக்தியை தவிர வேறு எதுவும் செய்ய வில்லை.
மதுரா:
உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் அபினவ் அரோரா (வயது10). ஆன்மீக சொற்பொழிவில் மிகவும் பிரபலமானவர். 3 வயதில் இருந்தே ஆன்மீக சொற்பொழிவில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் அபினவ் அரோராவின் ஆன்மீக சொற்பொழிவு பிரபலமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் அவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல் குறித்து அவரது தாயார் ஜோதி அரோரா கூறியிருப்பதாவது:-
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து அபினவ் அரோராவுக்கு மிரட்டல் வந்துள்ளது. அபினவ் அரோரா பக்தியை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
சமூக வலைதளங்களில் அவரது ஆன்மீக சொற்பொழிவு பிரபலமாகி வருகிறது. அவரது வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரபல ஆன்மீக தலைவர் சுவாமி ராம பத்ராச்சார்யாவுடன் அபினவ் அரோரா பக்தி பாடல்களை பாடுவது மற்றும் நடனம் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது
இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் பிரசித்தி பெற்ற பங்கே பீஹாரி கோவில் அமைந்துள்ளது.
- தண்ணீர் வெளியேறும் குழாய் அந்த யானை துதிக்கை கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி குழாயில் இருந்து வந்த தண்ணீரை தீர்த்தம் என்று நினைத்து பக்தர்கள் வரிசை கட்டி நின்று பிடித்துக் குடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் பிரசித்தி பெற்ற பங்கே பீஹாரி கோவில் அமைந்துள்ளது.
கோவில் சுவரில் யானை துதிக்கை வடிவில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பிலிருந்து தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. இந்த நீரானது கிருஷ்ணரின் காலில் இருந்து வரும் தீர்த்தம் என்றும் அதை குடிப்பதால் பிரச்சனைகள் தீரும் என்று நம்பிய அங்கு வந்த பக்தர்கள் வரிசையில் நின்று அதைப் பிடித்துக் குடித்துள்ளனர்.
உண்மையில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ஏசி மெஷினில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாய் அந்த யானை துதிக்கை கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஏசி மெஷின் கழிவு நீரையே தீர்த்தம் என்று பக்தர்கள் குடித்துள்ளது பின்னர் தெரிய வந்துள்ளது. ஏசி கழிவு நீரை மக்கள் வரிசையில் நின்று பிடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பெண் ஒருவர் சரக்கு ரெயிலின் அடியில் ஊர்ந்து சென்றபோது, ரெயில் திடீரென நகரத் தொடங்கியது.
- இதனையடுத்து அப்பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் அடியில் நுழைந்து தண்டவாளத்தை பெண் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது சரக்கு ரெயில் நகர தொடங்கியதால் அவர் தண்டவாளத்திலேயே படுத்துக்கொண்டார்.
ரெயில் செல்லும்போது அந்த பெண் தண்டவாளத்தில் படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
மதுராவில் இருந்து ஆக்ராவுக்குப் புறப்படுவதற்குத் தயாராக ஒரு சரக்கு ரயில் நடைமேடை 1 இல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது சரக்கு ரயிலுக்கு அடியில் சென்று தண்டவாளத்தை கடக்க 2 பெண்கள் முயற்சி செய்தனர்.
பெண்களில் ஒருவர் சரக்கு ரெயிலின் அடியில் ஊர்ந்து சென்றபோது, ரெயில் திடீரென நகரத் தொடங்கியது. இதனையடுத்து அப்பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.
ரெயில் முன்னோக்கி நகரத் தொடங்கியதும், ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் சரக்கு ரெயிலை முன்னோக்கி நகரவிடாமல் நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.
பொது மக்களின் அலறல் சத்தத்திற்கு பிறகும் சரக்கு ரயில் நிற்கவில்லை. அதிசயமாக, சரக்கு ரெயில் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது. இதனால் நூல் இழையில் அப்பெண் உயிர் பிழைத்தார்.
பாலிவுட் சினிமாக்களில் 1970 மற்றும் 1980-களில் பிரபல முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ஹேமமாலினி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ளார்.
முன்னர் இந்திப்பட ரசிகர்களால் ‘கனவுக் கன்னி’ (டிரீம் கேர்ள்) என்றழைக்கப்பட்ட ஹேமமாலினி(70) இந்த தேர்தலிலும் மதுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்களில் அதிகம் பங்கேற்பதை தவிர்த்துவந்த பிரபல முன்னாள் அதிரடி பாலிவுட் கதாநாயகனும் ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா(83) இன்று அவரை ஆதரித்து மதுரா தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். #Dharmendracampaigns #HemaMalini #Mathuracampaign #LSpolls

இந்நிலையில் ஹேமமாலினி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நான் மும்பையில் தான் வசிக்கிறேன். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை?. எனக்கு மதுராவிலும் வீடு இருக்கிறது. மதுராவுக்கும் எனக்கும் தெய்வீக உறவு உள்ளது. நான் எம்.பியாக அறிவிக்கப்பட்டபோது கோவிலில் தான் இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்த போது இங்கு 250 முறை வந்துள்ளேன். இந்த தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். முதல் 2 ஆண்டுகள் எனக்கும், இந்த தொகுதி மக்களுக்கும் சரியான தகவல் தொடர்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடைசி 2 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். இதை வரும் தேர்தலில் வெற்றி பெற்றும் தொடருவேன். எனக்கு மந்திரி ஆகும் ஆசை கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini
உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் தானியங்கி படிக்கட்டு, மின்தூக்கி, நவீன நடைமேம்பாலம், சூரிய மின்சக்தி திட்டம், மேம்படுத்தப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, பிரமாண்ட நுழைவு வாயில் ஆகியவை தொடக்கவிழா நடந்தது.

மதுரா ரெயில் நிலையம் நவீன மயமாக்கப்படும் என்று தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். இந்த பணியில் ரெயில்வே அதிகாரிகள் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தார்கள்.
ஆன்மீக தளமான மதுராவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்ல வசதியாக மேலும் பல ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன். இதற்கு பா.ஜனதா தலைமை ஒப்புதல் அளித்து விட்டது. கடந்த தேர்தலில் பெற்றதை விட சிறப்பான வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு எம்.பி.யாக இந்த தொகுதியில் சிறப்பாக பணியாற்றியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். #HemaMalini #Mathura #BJP