என் மலர்
நீங்கள் தேடியது "Mayam"
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமாகினர்.
- சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தனமாரி. இவரது மகள் அழகு பத்மா (வயது 27). இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு கனகராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் கவி ஜெகத்ரா மகள் உள்ளார்.
இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அழகு பத்மா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் சந்தனமாரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு பத்மாவை தேடி வருகின்றனர்.
பட்டதாரி பெண்
வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் துர்கா தேவி (வயது 23). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அத்தை மகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கூமாபட்டி போலீஸ் நிலையத்தில் மகளை கண்டு பிடித்து தருமாறு பெரியசாமி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் தாட்கோ காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மகாலட்சுமி மற்றும் 5 வயது மகள் குழலியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு பேருந்தில் திரும்பி வந்துள்ளனர்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பாத்ரூம் சென்ற மகாலட்சுமி திரும்பி வரவில்லை. தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜபாளை யம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் செல்வ குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (17). இவர் கடந்த 15-ம் தேதி சொக்கநாதன் புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தந்தை வேலு சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே விளாங்காட்டுபுதூர் பகுதியில் தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் குழந்தையுடன் மாயமானார்.
- போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து, குழந்தையுடன் சுபஸ்ரீ எங்காவது சென்று விட்டாரா?
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே விளாங்காட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வசந்தன் (வயது 29). இவர் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஸ்ரீ(27). இவரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு சமீத் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். சமீத்தை சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சுபஸ்ரீ விட்டுள்ளார். அங்கு சுப பெற்றோர்கள் அவனை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 19-ந் தேதி காலை சுபஸ்ரீ, தாய் வீட்டிற்கு சென்று வருவதாக மகள் சஞ்சனாவுடன் பஸ்சில் ஏறி சென்றுள்ளார். ஆனால் அவர் தாய் வீட்டிற்கு போய் சேரவில்லை. அதேபோல் விளங்காட்டுபுதூரில் உள்ள கணவன் வீட்டிற்கும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தன், உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுபஸ்ரீ மற்றும் குழந்தையை தேடி பார்த்தனர்.
ஆனால் சுபஸ்ரீ, குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வசந்தன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜவகர்
வழக்கு பதிவு செய்து, குழந்தை
யுடன் சுபஸ்ரீ எங்காவது சென்று விட்டாரா? அல்லது
அவர்களை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்பது குறித்து தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்.
- விருதுநகர் மாவட்டத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் மாயமாகினர்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாளையம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவர் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மதுரைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ராஜ்குமாரின் சகோதரி சத்யவாணி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள மணியம்பட்டியை சேர்ந்தவர் மைக்கேல். வெளியூரில் வேலை பார்க்கிறார். இவருக்கு அன்னலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற அன்னலெட்சுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மைக்கலின் தாயார் ராணி அளித்த புகாரின் பேரில் அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள நாட்டா மங்கலத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 17 வயது மகள் சிவகாசி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று மொபட்டில் கல்லூரி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மாரி முத்து அளித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் சின்னத்தாய். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சின்னதாய் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகாசி அருகே உள்ள வலையப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா (19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் தென்காசி மாவட்டம் ஆவுடையாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல் குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக சாமி. இவரது மனைவி பத்மாவதி (32). இவர்களுக்கு 2 வயதில் கவியரசன் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று மனைவி-மகனை வெம்பக்கோட்டையில் உள்ள கோவிலுக்கு ஆறுமுகசாமி அழைத்து சென்றார். சாமி கும்பிட சென்ற பத்மாவதி மகனுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போலீஸ்காரர் மனைவி-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
- இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே உள்ள சேதுநாராய ணபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது சேலத்தை சேர்ந்த போலீஸ்காரர் சந்தோஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் சேதுநாராயணபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். வத்திரா யிருப்பு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
சிவகாசி அருகே உள்ள போதுரெட்டியபட்டியை சேர்ந்த 20 வயதுடைய மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின்பேரில் மாரநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்
திருச்சுழி சேதுபுரத்தை சேர்ந்தவர் லதா. இவரது மகள் கற்பகவள்ளி. இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததால் குடும்பத்தினர் கண்டித்தனர்.
இதனால் விரக்தியடைந்த கற்பகவள்ளி திடீரென மாயமானார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மகளுடன் மாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மா பட்டியை சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவரது மனைவி நாகரத்தினம். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று நாகரத்தினம் தனது மகளுடன் மாய மானார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி அன்று பள்ளி விடுமுறை என்பதால் சசிரேகாவும், சஷீந்தரனும் வீட்டில் இருந்துள்ளனர்.
- கோபியும் அவரது மனைவி கலைமதியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடித்து திரும்பியபோது, வீட்டில் சசிரேகாவை காணவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா
நடந்தை அருகே சுங்கக்கா ரன்பட்டி பகுதியை சேர்ந்த
வர் கோபி (வயது 38). இவரது மனைவி கலைமதி(33). இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சசிரேகா(14) என்ற மகளும், சஷீந்திரன்( 8 ) என்ற மகனும் உள்ளனர்.
சசிரேகா எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி அன்று பள்ளி விடுமுறை என்பதால் சசிரேகாவும், சஷீந்தரனும் வீட்டில் இருந்துள்ளனர். கோபியும் அவரது மனைவி கலைமதியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடித்து திரும்பியபோது, வீட்டில் சசிரேகாவை காணவில்லை.
இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, பகல் 11 மணியளவில் சசிரேகா ஜெராக்ஸ் எடுத்து வருவ தாக கூறிவிட்டு சென்றது தெரியவந்தது. ஆனால் அவர் இரவு வெகு நேர
மாகியும் வீட்டிற்கு வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பே
ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமி மாய மானது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
- தானிய ஸ்ரீ நேற்று கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
- தந்தை ஆறுமுகம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கடலூர்:
சிதம்பரம் அருகே திருவக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் தானிய ஸ்ரீ. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் தானிய ஸ்ரீ நேற்று கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மீண்டும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தானிய ஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கே தெடியும் தனியா ஸ்ரீ கிடைக்கவில்லை. இதனால் தந்தை ஆறுமுகம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி தானிய ஸ்ரீ எங்கு சென்றார் என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்திச் சென்றனரா ? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- விருதுநகரில் நர்சு-மாணவன் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- பாண்டியன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டான்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி யேசுதாசன் (வயது47). இவரது மகள் மேகலா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று பணிக்கு சென்ற மேகலா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் சூரியசா மிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் மாதவன் (12). இவர் அல்லம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மதியம் உணவு இடைவெளிக்கு வெளியே சென்ற மாதவன் பின்னர் பள்ளிக்கு திரும்பவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை.
இதுகுறித்து தலைமை யாசிரியர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள ஆர்.வி.ஆர். நகரை சேர்ந்தவர் மலர்கொடி. இவரது மகள் சந்தியா (19). விருதுநகரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சந்தியா திடீரென மாயமானார். பாண்டியன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வந்த வேன் டிரைவர் மாயமானார்.
- கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.
சேலம்:
சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 45). இவருடைய மனைவி சங்கீதா (40). இந்த தம்பதிக்கு பிரகாஷ் (23) என்ற மகனும், பிரதிஷா(21) என்ற மகளும் உள்ளனர்.
வேன் டிரைவர் சிவகுமார் சன்னியாசி குண்டு அருகில் சொந்தமாக பந்தல் அமைக்கும் கடை வைத்தும், வேன் வைத்தும் டிரைவராக தொழில் செய்து வந்தார். இந்த வேன் வாங்குவதற்கும் பிள்ளை–களை படிக்க வைப்பதற்கும் சில வருடங்களுக்கு முன்பு அவர், வட்டிக்கு பணம் 7 லட்சம் வரை கடன் வாங்கினார். பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர்.
இந்த நிலையில் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் சிவகுமார் கவலை அடைந்து புலம்பிக் கொண்டிருந்தார். கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.
நாளை வீட்டிற்கு வந்து விடுகிறேன் என கூறினார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிவகுமாரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.
'இது குறித்து சங்கீதா கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிவகுமார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிவகுமார் கடனுக்கு பயந்து தலைம–றைவாக உள்ளாரா? அல்லது கந்து வட்டி கும்பல், சிவகுமாரை கடத்தினார்களா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவையில் முகாமிட்டு சிவகுமாரை தேடி வருகின்றனர்.
- போலீஸ்காரர்-இளம்பெண்கள் உள்பட 6 பேர் மாயமானார்கள்.
- இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் ஆயுதப்படை யில் காவலராக பணி புரிபவர் விவேக் (வயது 30). இவரது மனைவி கற்குவேலாயி (29). பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சூலக்கரை வ.உ.சி. நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
விவேக் தனது செல்போ னில் பல பெண்களுடன் பேசி வந்துள்ளார். இதனை கற்குவேலாயி கண்டித்துள்ளார். ஆனால் விவேக் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆயுதப்படை அலுவலகத்திற்கு நேரில் சென்று கற்குவேலாயி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் விவேக் திடீரென மாயமானார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் பாண்டிச்செல்வி (23). கவரிங் நகை கடையில் வேலை பார்த்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(45). இவரது மகள் அஸ்வினி (18). பிளஸ்-2 படித்து விட்டு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தண்ணீர் எடுத்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தங்கல் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (23). இவருக்கு சக்தி அய்யனார் என்பவருடன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று குழந்தை களுடன் வெளியே சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் வீரசெல்வி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசியை சேர்ந்தவர் யாகப்பன்(49). இவரது 17 வயது மகள் சிவகாசி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏற்கனவே மாய மாகி அதன்பிறகு கள்ளக்குறிச்சி யில் இருந்து போலீசார் மீட்டு வந்தனர்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமன்னார். இவரது மகள் ரமாதேவி(22). விருதுநகரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜமன்னார் வன்னியம்பட்டி போலீசில் அளித்துள்ள புகாரில், பொட்டல்பட்டியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தனது மகளை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளதாகவும், இதுபற்றி விசாரித்து மகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை வலையபட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(38). இவரது 17 வயது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு பெருங்குடி போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.
இதையடுத்து மகளை அருப்புக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அவர் அங்கிருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் சூலக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி.
இவரது மகன் சிவசந்தோஷ் (12). 6ம் வகுப்பு படிக்கிறான். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டான். எங்கு சென்றான்? என தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருேக உள்ள நற்கரலந்தன்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சேகர். விவசாயி. அவரது மகள் மதுமிதா (வயது 21). அண்ணா மலை பல்கலை கழகத்தில் பி.எட். இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பல்கலைகழகத்துக்கு சென்றார்.
இது குறித்து பல்கலைகழக தோழிகள் மதுமிதாவின் தாய் உமாதேவி யிடம் ஏன் உங்கள் மகள் வகுப்புக்கு வரவில்லை என்று கேட்டனர். இதனால் உமாதேவி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மதுமிதா கிைடக்க வில்லை. இதுகுறித்து உமாதேவி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து மதுமிதா எங்குசென்றார். என்ன ஆனார். கடத்தப் பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
- விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் சையது இப்ராகிம். இவரது மகள் ரமலான் ராபியா(21). அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ரமலான் ராபியாவை அவரது சகோதரர் தினமும் பஸ் நிறுத்ததிற்கு அழைத்து செல்வார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
விசாரித்த போது கல்லூரிக்கு வரவில்லை என தெரியவந்தது. பஸ் நிறுத்தத்தில் இருந்து எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து சையது இப்ராகிம் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் எம்.ராமசந்திராபுரம் தங்கக்கொடி(27). 6 மாதங்கள் அம்மாபட்டி அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். அதன் பிறகு வேறு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் வேலை சம்பந்தமாக மதுரை சென்று வருவதாக கூறி சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து அவரது தாய் தங்கேஸ்வரி அளித்த புகாரின்பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
விருதுநகரை சேர்ந்தவர் கருப்பசாமி(36). இவரது சகோதரி மகன் ஹரீஷ்(15). இவரது வீட்டில் தங்கி படித்து வந்தார். படிப்பு சரியாக வரவில்லை. இதனால் ஹரீசை சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு கருப்பசாமி அனுப்பி வைத்தார். ஆனால் அங்கும் அவர் சரியாக படிக்கா ததால் அவரை மீண்டும் விருதுநகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.