search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைக்கு சென்ற பள்ளி மாணவி மாயம்
    X

    கடைக்கு சென்ற பள்ளி மாணவி மாயம்

    • எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி அன்று பள்ளி விடுமுறை என்பதால் சசிரேகாவும், சஷீந்தரனும் வீட்டில் இருந்துள்ளனர்.
    • கோபியும் அவரது மனைவி கலைமதியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடித்து திரும்பியபோது, வீட்டில் சசிரேகாவை காணவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா

    நடந்தை அருகே சுங்கக்கா ரன்பட்டி பகுதியை சேர்ந்த

    வர் கோபி (வயது 38). இவரது மனைவி கலைமதி(33). இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சசிரேகா(14) என்ற மகளும், சஷீந்திரன்( 8 ) என்ற மகனும் உள்ளனர்.

    சசிரேகா எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி அன்று பள்ளி விடுமுறை என்பதால் சசிரேகாவும், சஷீந்தரனும் வீட்டில் இருந்துள்ளனர். கோபியும் அவரது மனைவி கலைமதியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடித்து திரும்பியபோது, வீட்டில் சசிரேகாவை காணவில்லை.

    இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, பகல் 11 மணியளவில் சசிரேகா ஜெராக்ஸ் எடுத்து வருவ தாக கூறிவிட்டு சென்றது தெரியவந்தது. ஆனால் அவர் இரவு வெகு நேர

    மாகியும் வீட்டிற்கு வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பே

    ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமி மாய மானது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×