என் மலர்
நீங்கள் தேடியது "MGR Memorial Day"
- இன்று 35-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் திரண்டனர்.
மதுரை
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆரின் புகழை பரப்பு வகையில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி யில் பாடல்களும் ஒலிபரப்பு செய்யப்பட்டன.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அந்த கட்சியினர் பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.
இதைத்தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் பொதுமக்க ளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப் பட்டன.
மதுரையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் கே.கே.நகர் ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
அ.தி.மு.க., வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, இணை செயலாளர் சுகன்யா தாஸ், துணைச் செயலாளர் ஜெயபிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி, பகுதி செயலாளர்கள் நாகு, குப்புசாமி, அணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், ராகேஷ், ஆர்.சுந்தரராஜி, எம்.ஏ.ராஜா, பாலச்சந்தர், வி.எல்.ராஜன், அண்ணாமலை, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் எஸ். குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவுவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே அவருடைய உருவப்படங்களை வைத்து மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவுநாளான வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
24-ந்தேதி அன்று அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே அவருடைய உருவப்படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; அவருடைய படங்களை வைத்து மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை:
அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளான இன்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- எடப்பாடி பழனிசாமி இன்று காலை மரியாதை செலுத்தினார்.
- எடப்பாடி உறுதி மொழியை வாசிக்க தொண்டர்கள் திருப்பி கூறினார்கள்.
சென்னை:
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று எடப்பாடி பழனிசாமி உறுதி மொழியை வாசிக்க தொண்டர்கள் திருப்பி கூறினார்கள். உறுதிமொழி விவரம் வருமாறு:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த பாதையில், தடம் மாறாது; தடுமாறாது! சோர்ந்து போகாது; சோரம் போகாது! ஒற்றுமை உணர்வோடு, பயணிப்போம்! பயணிப்போம்! என்று உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
அள்ளிக் கொடுப்பதில் மன்னர் அவர், வாரி வழங்குவதில் வள்ளல் அவர், ரத்தத்தின் ரத்தங்களான உடன்பிறப்புகளை, உயிராக நேசித்தார், வீரத்தையும், விவேகத்தையும், கழகத் தொண்டர்க ளுக்கு சொல்லிக் கொடுத்தார், அராஜகத்தின் அடையாளம், தீயசக்தி தி.மு.க.-வை வீழ்த்துகின்ற தெய்வ சக்தியாய் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திகழ்ந்தார்.
அவர்வழி நின்றே, நேர்வழி சென்றால், நாமும் எதிரிகளை வீழ்த்து வோம்! வீழ்த்துவோம்! துரோகிகளை வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்! என்றே உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
ஆறுகள் வற்றிப்போனா லும்; வற்றாத ஜீவநதியாய் வாழ்ந்து கொண்டிருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெரும் புகழ் என்றும் தொடரும்! என்றும் தொடரும்! மக்கள் தலைவரின் மாசற்ற தொண்டின் வழியில், வழிநடப்போம்! வழி நடப்போம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
தி.மு.க-வை வீழ்த்திடவே! வீழ்த்திடவே! நேர்மை என்ற வாளெடுத்து; வாய்மை என்ற வேலெடுத்து, மூன்று தேர்தல்களிலும் தொடர் வெற்றி கண்டு, கழகம் தொடர்ந்து வெற்றிகாண, புரட்சித் தலைவி அம்மா என்கிற வீரமங்கையை நமக்குத் தந்திட்டவர், பாரிவள்ளல், பரங்கிமலைச் சிங்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மண்ணை விட்டு மறைந்தாலும், நம் நெஞ்சை விட்டு மறையாத, புரட்சித் தலைவரின் வழியிலே; பயணிப்போம்! பயணிப்போம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
பொய்யான வாக்குறுதி களைத் தந்து, வஞ்சக மனம் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிய திமுக-வை, வேரோடும், வேரடி மண்ணோடும், வீழ்த்திடவே, வீழ்த்திடவே, உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
எங்கே? எங்கே? நீட் தேர்வு ரத்து எங்கே? கல்விக் கடன் ரத்து எங்கே? சிலிண்டர் மானியம் எங்கே? எங்கே? டீசல் விலை குறைப்பு எங்கே? வெள்ள நிவாரணப் பணிகள் எங்கே? பழைய ஓய்வூதியத் திட்டம் எங்கே?
இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை எங்கே? எங்கே? மக்கள் கேள்விக்கு பதில் எங்கே...? பதில் எங்கே? விடமாட்டோம்... விடமாட்டோம்... விடியா தி.மு.க. அரசே, பதில் தராமல் விடமாட்டோம்! விடமாட்டோம்!
43 மாதகால தி.மு.க. ஆட்சியிலே, மூன்று முறை மின் கட்டண உயர்வு! பால் விலை உயர்வு! குடிநீர் கட்டண வரி உயர்வு! சொத்து வரி உயர்வு! முத்திரைத்தாள் கட்டண உயர்வு! என மக்களை வரிகளால் வாட்டி வதைக்கும்,
ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க. ஆட்சியை, வீட்டுக்கு அனுப்புவோம்! வீட்டுக்கு அனுப்புவோம்! என சபதம் ஏற்போம்! சபதம் ஏற்போம்!
கழகத்தின் பொற்கால ஆட்சியிலே, பொற்கால ஆட்சியிலே, மக்கள் நலன் காக்கும், நல்ல நல்ல திட்டங்கள், நாளும், பொழுதும் திட்டங்கள்! ஏழை மக்கள் பசியாற அம்மா உணவகங்கள்; எளியவர்கள் நலன் பெறவே அம்மா மருந்தகங்கள்;
பள்ளி மாணவர்கள் பயன்பெறவே, மடிக்கணிணி திட்டங்கள்; பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அம்மா இருசக்கர வாகனம்; திருமணம் செய்யும் பெண்களுக்கு, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்-என்றே கழக ஆட்சியின் முத்தான திட்டங்களை முடக்கியது.
தீயசக்தி திமுக ஆட்சியே! திமுக ஆட்சியே! கழகத்தின் புகழை மறைக்காதே! மறைக்காதே! காழ்ப்புணர்ச்சி கொண்டு, கழக அரசின் திட்டங்களை நிறுத்தாதே! நிறுத்தாதே! தி.மு.க. ஆட்சியே! விடியா தி.மு.க. ஆட்சியே! உங்கள் கொட்டத்தை அடக்குவோம்! குடும்ப ஆட்சியை அடக்குவோம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
கொடி பிடிக்கும் தொண்டனை, துச்சமென நினைப்பதுதான் தி.மு.க.-வின், வாடிக்கை... வேடிக்கை... இவற்றோடு, அன்றாடம் மக்களை ஏமாற்றி வரும் பொம்மை முதலமைச்சரின், மக்கள் விரோத ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி! எடுத்துச் சொல்லி!
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் பொய் முகத்தை, வெளிச்சம்போட்டுக் காட்டுவோம்! வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியிலே, தீயசக்தி திமுக-வை, விரட்டி அடிக்கவே! விரட்டி அடிக்கவே! சூளு ரைப்போம்! சூளு ரைப்போம்!
கழகத்தைத் தோற்றுவித்த நம் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியிலேயே, அரை நூற்றாண்டுகால அரசியலுக்கு, அ.தி.மு.க.வை அழைத்து வந்த, புரட்சித் தலைவி அம்மாவின் வழியிலேயே, தொடர்ந்து பயணிப்போம்! பயணிப்போம்! என உளமார உறுதி ஏற்கிறோம்! உளமார உறுதி ஏற்கிறோம்!
மக்கள் விரோத ஆட்சியை! ஆட்சியை! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியிலே, வீட்டுக்கு அனுப்புவோம்! வீட்டுக்கு அனுப்புவோம்! புரட்சித் தலைவி அம்மாவின் அஞ்சாமையை துணையாய்க் கொண்டு, வீரநடை போடுவோம்! வெற்றி நடை போடுவோம்! தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப! தீய சக்தியை அடியோடு அழித்திட, சபதம் ஏற்கி றோம்! சபதம் ஏற்கிறோம்!
தீயசக்தியால் பாதிக்கப்பட்டுள்ள, தமிழ் நாட்டைக் காப்பாற்றிட சூளுரைப் போம்! சூளுரைப்போம்! என, புரட்சித் தலைவர் நினைவு நாளில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது ஆணையாக, உறுதி ஏற்கிறோம்! உறுதி ஏற்கிறோம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வற்றாத புகழ், வாழ்க! வளர்க! புரட்சித் தலைவி அம்மாவின் வீரப் புகழ், என்றும் ஓங்குக! ஓங்குக! வெல்க! வெல்க!! வெல்கவே!!! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், வெல்க! வெல்க!! வெல்கவே.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, பா.பென்ஜமின், எஸ்.அப்துல்ரஹீம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய்சுந்தரம், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, தி.நகர் சத்தியா, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன், ஆதிராஜாராம், வி.அலெக் சாண்டர், வேளச்சேரி எம்.கே.அசோக்,
இலக்கிய அணி மாநில இணை செயலாளர் டி.சிவராஜ், துணைச் செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணி பிரசாத், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.வி, இளைஞரணி துணைச் செயலாளர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி (எம்.சி.), ஆயி ரம்விளக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம், மாணவரணி மாநில துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, ராயபுரம் பாலாஜி, வடபழனி சத்திய நாராயணமூர்த்தி, மதுரவாயல் வடக்குப் பகுதி செயலாளர் இமானுவேல், மதுரவாயல் வடக்குப் பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் ந.இளைஞ்செழியன்.
பகுதி செயலாளர் மதுர வாயல் ஏ.தேவதாஸ், இம்மானுவேல், இ.கந்தன், காரம்பாக்கம் மகேஷ், வேளச்சேரி சி.முருகன், ஜெ.ஆரோக்கிய வில்பர்ட், கே.ஏழுமலை,செந்தூர் சுரேஷ், கலைச்செல்வன், கண்ணன், பாஸ்கர், டி.ஆல்பட்ராஜ், முகப்பேர் இளஞ்செழியன் முன்னான் கவுன்சிலர் சைதை சொ.கடும்பாடி , சைதை எம்.என். இளங்கோ,
முன்னாள் எம்.எல்.ஏ. புரசை வி.எஸ். பாபு, வில்லிவாக்கம் பகுதி பொருளாளர் நேரு நகர் எஸ். கோதண்டன், வில்லி வாக்கம் மேற்கு பகுதி இளைஞரணி செயலாளர் வில்லிவாக்கம் பி. ஜெய் சுரேஷ், பெரம்பூர் மேற்கு பகுதி செயலாளர் என்.எம்.பாஸ்கரன், கொளத்தூர் பகுதி செயலாளர் பட்மேடு டி.சாரதி, கொளத்தூர் சுதேஷ் பாபு, முஹமது இந்தியாஸ், பாலசுப்பிர மணியன், துறைமுகம் பையாஸ் , புரசை எம்.கிருஷ்ணன், சேத்துப்பட்டு பிரகாஷ், கேட்டரிங் ரமேஷ், என்.செல்வகுமார் செட்டியார்ஆயிரம் விளக்கு டி. ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சசிகலா இன்று காலை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகை சி.ஆர்.சரஸ்வதி மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் எம்.ஜி.ஆர். சமாதியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-
ஏழைக்கு இரங்குவதும், எளியோர்க்கு உதவுவதும் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட கடவுள் உள்ளம், கருணையின் ஊற்றாம் எம்.ஜி.ஆரின் உள்ளம் என்று சரித்திரம் சொல்லும். அத்தகைய மகத்தான மாமனிதர், காட்டிய பாதையில் வாழ்ந்து, அ.தி.மு.க.வை காத்திட உறுதி ஏற்போம்.
இமயத்தை வெல்லும் உயரம் கொண்ட புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.
ஏழை, எளியோரும், தாய்க்குலமும், நாளை உலகை ஆளப்போகும் தமிழ்ச் சந்ததியும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்நாளும் காப்போம், காப்போம்.
புரட்சித்தலைவி அம்மாவை அடையாளம் காட்டிய எம்.ஜி.ஆர்., திராவிட இயக்க வரலாற்றின் நிகரில்லா மாதரசி புரட்சித்தலைவி அம்மாவை போல, புரட்சித் தலைவரின் இயக்கம் மக்களுக்கான மக்கள் இயக்கமாய் தொடர்ந்து தொண்டாற்றிட, துணை நிற்போம், துணை நிற்போம்.
மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்-அமைச்சரான சரித்திர சிறப்புக்குரிய எம்.ஜி.ஆரைப் போலவே, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மீண்டும் சட்டமன்ற தேர்தல் என்று ஒவ்வொரு தேர்தலிலும் மகத்தான மக்கள் செல்வாக்கால் வெற்றி சிகரத்தில் கழகத்தை வீற்றிருக்க செய்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா.
கழகத்தின் கண்களாய் திகழும் நம் இருபெரும் தலைவர்களின் சாதனைகளை தொடரும் வகையில், வருகிற சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்று அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற உழைப்போம், உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.
இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி “எம்.ஜி.ஆருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்” என்றார். அதை ஏற்று தொண்டர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #MGR #MGRMemorialDay
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 31-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருடைய நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.