என் மலர்
நீங்கள் தேடியது "minister kamaraj"
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று காலை சந்தித்து நலம் கேட்டறிந்தார்.
இதையடுத்து அமைச்சர் காமராஜ், மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, தமிழக சுகாதார துறையும் மற்ற துறைகளும் இணைந்து நோய் பரவுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை, அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
தற்போது மன்னார்குடி மருத்துவமனையில், தீவிர காய்ச்சலோடு, அனுமதிக்கப்பட்ட அனைவரும் பூரண குணம்பெற்று திரும்பி வருகின்றனர், மேலும் 14 பேர் சிகிச்சையில் நலம் பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இலவசங்களை தவிர்க்க என்ற வீராப்பு வசனம் சினிமாவிற்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாம். இலவச மடிக்கணினி, இலவச மிதிவண்டி, பஸ் பாஸ், சீருடைகள் என பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை உயர்கல்வியில் 48.6 சதவீதம் உயர் கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய அளவில் 25.8 சதவீதம் கல்வி வளர்ச்சி உள்ளது.
கிராமப்புறங்களில் ஆடு கோழி போன்ற இலவசங்கள் வழங்கப்படுவதால் கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு உள்ளது.
இலவசங்கள் வேண்டாம் என மக்கள் தான் தெரிவிக்க வேண்டுமே தவிர காசுக்காக சினிமாவில் நடிப்பவர்கள், படம் தயாரிப்பவர்கள் சொல்வதற்கு அருகதை அற்றவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Kamaraj #Sarkar #Vijay
திருவாரூர்:
திருவாரூரில் அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தினகரன் அணியின் வலங்கைமான் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணையன், அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சி போய்விடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெரிய கனவு கண்டார். அதனால் நேரடியாக ஆட்சிக்கு வந்து விடலாம் என எண்ணினார். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் பிறர் கேலி செய்யும் அளவிற்கு போய் விட்டது.
ஸ்டாலின் கண்ட கனவு ஒருபோதும் பலிக்காது. ஸ்டாலினின் கனவுக்கு துணை போனவர் டி.டி.வி.தினகரன். ஸ்டாலினும் தினகரனும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கூட்டாக சேர்ந்து சதி செய்தனர். அவர்கள் இருவர் கண்ட கனவும் பலிக்கவில்லை. இனியும் ஒரு போதும் பலிக்காது.
18 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிக் கொண்டிருந்த தினகரனுக்கு ஐகோர்ட்டில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இனி யார் நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. மேலும் தன்னுடைய சுயலாபத்திற்காக 18 பேரின் அரசியல் வாழ்க்கையை வீணடித்தவர் தினகரன். அரசியலில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும்.
தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அந்த பகுதி மக்களின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த 2 தொகுதி மட்டுமல்ல, 20 தொகுதிக்கும் உடனடியாக இடைத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார். #ministerkamaraj #dinakaran #mkstalin #rknagar
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் என்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் வரவேற்று பேசினார்.
முன்னாள் நகர் மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரிமுத்து, நகர இளைஞர் அணி செயலாளர் கோபி, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் கோவிந்தர்ராஜ், நகர்மன்ற துணை தலைவர் வரலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க.விற்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் இல்லை. அ.தி.மு.க.வை அழிக்கும் முயற்சி ஒரு நாளும் வெற்றி பெறாது. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே எண்ணம், ஒரே கனவுகளுடன் இருந்து வருகிறார்.
ஏழைக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கிய கட்சி அ.தி.மு.க.தான் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை வெல்ல முடியாது.
முதல்-அமைச்சர் மீது தி.மு.க. போடப்பட்ட வழக்கு பொய்யானது. அந்த வழக்கில் முதல்-அமைச்சர் வெற்றி பெறுவார். தி.மு.க.- டி.டி.வி. தினகரனுடன் இணைந்து கொண்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.
இவ்வாறுஅவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன் வாசுகிராமன், கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவர் கலியபெருமாள், மாவட்ட எம்.ஜிஆர், மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், மாவட்ட அண்ணா தொழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி தமிழ்ச்செல்வன் (மேற்கு) தமிழ் கண்ணன் (கிழக்கு) கோட்டூர் ஜீவானந்தம் (தெற்கு), ராஜா சேட் (வடக்கு), நீடாமங்கலம் அரிகிஷ்ணன் (தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முடிவில் 12-வது வார்டு செயலாளர் பார்த்தீபன் நன்றி கூறினார். #ministerkaramaj
சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுவிநியோகத் திட்ட கிடங்கில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் மாத ஒதுக்கீட்டின்படி நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.
அப்போது அனைத்து பொருள்களும் உரிய தரத்துடன், சரியான எடையில் இயக்க பொறுப்பாளர்கள் முன்னிலையில் நகர்வு செய்யப்பட வேண்டுமென கிடங்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அங்காடிகளுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களும், முன்நகர்வு செய்யப்பட்டு நவம்பர் 1-ந்தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, கையிருப்பு வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அமுதம் நியாய விலை அங்காடிகளை ஆய்வு செய்த அமைச்சர் குடும்ப அட்டை தாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தார். கோபாலபுரம் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு தரமான அரிசி, அனைத்து மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
மழை காலங்களில் கிடங்குகள் மற்றும் நியாய விலை அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகாமல் தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சோ.மதுமதி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சில இடங்களில் நிலவி வரும் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டும், மின் இழப்பை குறைத்திடும் பொருட்டும் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு ரூ.3 கோடியே 73 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் 33.11 கி.வோ கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் கூடுதலாக திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடங்க விழா நேற்று கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார், மன்னார்குடி செயற்பொறியாளர்கள் ராதிகா, காளிதாஸ், திருச்சி கட்டுமான மேற்பார்வை பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு புதிய திறன் மின்மாற்றியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் புதிய திறன் மின்மாற்றியால் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியை சேர்ந்த கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வடபாதிமங்கலத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிற்கு உள்ள மின்பாதை வழியாக மின் சாரம் வந்தது தவிர்க்கப்பட்டு தற்போது 5 கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ள மின் பாதை மூலம் மின்சாரம் வழங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
இந்த கூடுதல் திறன் மின்மாற்றி மூலம் கூத்தாநல்லூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் பயனாளிகள் பயன் அடைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி வருவது காமெடியாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு தமிழகமே இருளில் மூழ்கியதை தமிழக மக்கள் மறந்து விட மாட்டார்கள். மு.க.ஸ்டாலினும் மறந்து விட மாட்டார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியது என்பதை யாரும் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர் அகமது, நகர துணை செயலாளர் உதய குமார், பொருளாளர் பாஸ் கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமதுஅஸ்ரப், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வரவேற்றார். முடிவில் கூத்தாநல்லூர் உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் நன்றி கூறினார்.
சென்னை அண்ணா நகரில் உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து மத்திய சென்னை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை அனுப்பி வைக்கப்படுகின்றன.
மழைக்காலம் தொடங்கி விட்டதால் சேமிப்பு கிடங்கில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய அமைச்சர் காமராஜ் இன்று காலையில் அங்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டையில் இருந்த அரிசியை எடுத்து பார்த்து தரமாக உள்ளதா? என்று பார்வையிட்டார். பாமாயில் வைக்கப்பட்டுள்ள அட்டை பெட்டியில் ‘கசிவு’ ஏற்பட்டுள்ளதா? என்றும் பார்த்தார்.
அமைச்சருடன் உயர் அதிகாரிகளும் சென்று உணவுப் பொருட்களை பாதுகாத்து வரும் நடவடிக்கை பற்றி எடுத்து கூறினார்கள். மழைக்காலங்களில் குடோனில் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் காமராஜ் விளக்கி கூறினார்.
அதன்பிறகு அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
3 மாதத்துக்கு தேவையான உணவுப்பொருள் குடோன்களில் இருப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்தேன் தற்போது அரிசி, சர்க்கரை உள்பட அனைத்து பொருட்களும் தேவையான அளவு கையிருப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்பட்டு விட்டது. இனி புதிதாக ‘ஸ்மார்ட் கார்டு’ வேண்டுவோர் மனு செய்தால் ஆய்வு செய்து வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு நடைமுறையில் மக்களுக்கு எந்த குழப்பமும் இல்லாமல் உணவுப்பொருள் வழங்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் விரைவில் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும் ஆனால் இது கட்டாயமாக்கப்படவில்லை. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடைமுறை சிக்கல் இன்றி இது செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்திய 1076 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் கடத்தலில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள்.
எனவே பெரிய அளவில் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. குடோன்களில் இருந்து ரேஷன் அரிசியை கடைகளுக்கு கொண்டு செல்வதை கண்காணிக்க லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterKamaraj
திருவாரூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், முன்னாள் பொதுச்செயலாளர் பிரபாகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நுகர்வோர் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ரமேஷ். ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு நிர்வாகி கனகராஜ், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொகுதி மேம்பாட்டிற்கு தேவையானவை குறித்து கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-
திருவாரூர் தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் உள்நோக்கத்துடன் நடைபெறுவதாக கருத வேண்டாம். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இங்கு சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளர்கள். அனைத்து தேவைகளும் முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப் படும்.
திருவாரூரில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். திருவாரூர் விளமல் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும். ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை. தற்போது சம்பா விதைப்பு நடைபெற்று வரும் சூழலில் விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. வயல்களுக்கு தண்ணீரைகொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்-அமைச்சரின்் உத்தரவின்படி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தண்ணீர் பிரச்சினை சரியாகி விடும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
திருவாரூர்:
திருவாரூரில் அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110 -வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க நகர செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட் ட பொருளாளர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலாஜி, ரெயில் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ், நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
அ.தி.மு.க அரசு மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது, பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்று முழக்கமிட்டார். அதனை நனவாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். சத்துணவு தந்து குழந்தைகளின் பசியை போக்கினார். அடுத்து முதல்வராக வந்த ஜெயலலிதா விலையில்லா அரிசியை வழங்கி மக்களின் பசியை போக்கினார்.
இப்படி எண்ணற்ற திட்டங்களை தந்த அ.தி.மு.க மட்டுமே அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் முழு தகுதியை பெற்றுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வர் பதவிக்கு வந்து விடலாம் என தி.மு.க . தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டார். இதற்காக பல தவறான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவருடைய முயற்சிக்கு டி.டி.வி. தினகரன் துணையிருந்து வருகிறார்.
தி.மு.க. நினைப்பதை நடத்தி காட்டுவதற்கு தினகரன் தொடர்ந்து துணை போகிறார். தி.மு.க .எத்தனை துரோகிகளை அழைத்துக் கொண்டு வந்தாலும் அ.தி.மு.க.வை ஒருகாலும் வெல்ல முடியாது. தமிழகத்தில் இன்னும் மூன்றாண்டுகளை அ.தி.மு.க. ஆட்சி நிறைவு செய்யும். இதனை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும். திருவாரூர் தொகுதியை எதிர்வரும் மூன்றாண்டுகளில் சிறப்பான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல அதிமுகவால் மட்டுமே முடியும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.
கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் கலியபெருமான், விஜய ராகவன், பாப்பாத்தி மணி, சூரியசாமி, கூரியர் மதிவாணன், சின்னராஜ், எம்.ஜி.ஆர். கருப்பையன், குருசாமி, துரை, நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். #ministerkamaraj #mkstalin #dinakaran
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய 2 வங்கிகளுக்கும் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது.
இதில் மணலி கூட்டுறவு வங்கி நிர்வாக்ககுழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க. தரப்பில் 11 பேரும், தி.மு.க. கூட்டணி தரப்பில் 11 பேரும் சுயேட்சைகளாக 8 பேரும் ஆக மொத்தம் 30 பேரும், கட்டக்குடி கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க சார்பில் 11 பேரும் தி.மு.க. கூட்டணி சார்பில் 11 பேரும் மொத்தம் 22 பேரும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் மணலி கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 பேர் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலசுப்ரமணியன் 701 வாக்குகள், மாரிமுத்து 700 வாக்குகள், ராஜேந்திரன் 661 வாக்குகள், ராமகிருஷ்ணன் 649 வாக்குகள், ராமலிங்கம் 667 வாக்குகள், சிங்காரவேலு 641 வாக்குகள், கமலா 711 வாக்குகள், எம்.சுமித்ரா 697 வாக்குகள், ஆர்.சுமத்திரா 705 வாக்குகள், முருகேசன் 756 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதன்மூலம் மணலி கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை அதிமுக கைப்பற்றியது.
கட்டக்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாசிலாமணி 250 வாக்குகள், இளமாறன் 239 வாக்குகள், கலியபெருமாள் 254 வாக்குகள், அமுதாதேவி 243 வாக்குகள், பிச்சைக்கண்ணு 242 வாக்குகள், டேவிட்ராஜ் 241 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களை பிடித்தனர். மீதமுள்ள இடங்களில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரிமளா 214 வாக்குகள். பவானி 213 வாக்குகள், கலா 225 வாக்குகள், தங்கமணி 258 வாக்குகள், அருமைராஜ் 250 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பான்மை இடங்களை அதிமுக பெற்றுள்ளதால் கட்டக்குடி கூட்டுறவு சங்கமும் அதிமுக வசம் வந்தது.
கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கும் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது.
மத்திய நுகர்பொருள் விவகாரங்கள், பொதுவினியோகம் மற்றும் உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானை, தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு துறை அமைச்சர் காமராஜ் புதுடெல்லி கிருஷி பவனில் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது தமிழ்நாட்டில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களின் கொள்முதல் கால அளவினை நீட்டிப்பு செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் அனுப்பி வைத்த கோரிக்கை கடிதத்தை அமைச்சர் காமராஜ், மத்திய மந்திரியிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, எம்.பி.க்கள் கோபால், விஜிலா சத்யானந்த், தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் முதன்மை உள்ளுறை ஆணையாளர் (தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி) என்.முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர். #MinisterKamaraj #UnionMinister #RamVilasPaswan
திருச்சி விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்.
மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படவில்லை. சட்டப்பூர்வ விதிகள் காரணமாகத்தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய அரசின் முகவராக இருந்து கொண்டுதான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறோம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்படும். மேலும் அக்டோபர் மாதத் தில் புதிய ஆதார விலை அறிவிக்கப்படும். இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறைதான்.
அதே நேரத்தில் வட்ட தலைநகரங்களில் உள்ள பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். மேலும் நடப்பாண்டில் வெளிப்பகுதிகளில் நெல்லுக்கான விலை குறைத்து வழங்கப்படுவதால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களை நாடி வருகிறார்கள்.
எனவே எந்தெந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதோ, அங்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்படும்.
இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.