என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister thangam thennarasu"

    • கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது.
    • ஆய்வு பணியை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    சங்ககால பாண்டியர்களின் துறைமுகமாக கொற்கை போற்றப்படுகிறது.

    சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் சங்கமருவியக் காலத்தைச் சார்ந்த காவியமான சிலப்பதிகாரமும் கொற்கையைப் பற்றி விவரிக்கின்றன.

    பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச்சிறந்த துறைமுகமாக செயல்பட்டிருந்தது. மேலை நாட்டுடன் குறிப்பாக ரோம் நாட்டுடனும், இலங்கையுடனும், பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் கடல்வழி வணிகம் நடைபெற்றுள்ளது.

    அகழாய்வாளர்கள் கொற்கையில் ரோமநாட்டு மட்கலன்களும், ரௌலட்டட் வகை பானை ஓடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு மேற்கொண்ட அகழாய்வில் கங்கை சமவெளியை சார்ந்த கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வடஇந்திய கருப்பு வண்ணமெருகேற்றப்பட்ட பானைஓடுகளும் மற்றும் கருப்பு பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகளும் வெளிப்படுத்தப்பட்டன. இவை தமிழ்நாடானது இந்தியாவின் பிறபகுதிகளோடு குறிப்பாக கங்கை சமவெளி நகரங்களுடன் நெருங்கிய உள்நாட்டு வணிகம் நடைபெற்றுள்ளதைக் எடுத்துக்காட்டுகிறது.

    ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வுகளில் பெறப்பட்ட கரிமப்பகுப்பாய்வுக் காலக்கணிப்பின்படி கி.மு.8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிக முக்கியத் துறைமுகமாக செயல்பட்டிருந்ததை சுட்டிக்காட்டுகிறது.

    இதற்கிடையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிப்பதற்காக கடல் சார் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் இந்த கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடல்சார் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது. அதனை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல் பகுதியில் நடைபெறுகிறது. வருகிற 9-ந்தேதி வரை இந்த ஆய்வில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், தொல்லியல் அலுவலர்களும் ஈடுபடுகின்றனர்.

    ஆய்வின் முடிவில் கொற்கையில் புதைந்துள்ள மிகப்பெரிய துறைமுகமும், அதை சார்ந்த வரலாற்றுத்தகவல்களும் விரைவில் வெளிவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி.
    • திராவிட மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நான் முதல்-அமைச்சருடைய வார்த்தைகளில் இருந்து எடுத்துச் சொல்கிறேன்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுடைய முதல் மாநாடு நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் பேசியதாவது-

    மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி.

    திராவிட மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நான் முதல்-அமைச்சருடைய வார்த்தைகளில் இருந்து எடுத்துச் சொல்கிறேன். தந்தை பெரியார் பேசிய சமூக சீர்திருத்த கோட்பாடுகள், சீர்திருத்தக்கருத்துக்கள், அரசியல் பொருளாதாரம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியுனுடைய அடிப்படையில் அடுத்த பரிணாமமாக அதை கொண்டு சேர்க்கக் கூடிய கட்டம்.

    சுய மரியாதை, சமூக நீதி, மதசார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள், தமிழ் மொழிக்கான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஆட்சி முறையை கொண்டு வருவது தான் திராவிட மாடலுடைய ஆட்சி. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சட்டம், திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு, சம வேலை வாய்ப்புகள் என எல்லா மாவட்டத்திலும், எல்லா துறைகளிலும் உருவாக்க தூணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சி.

    திராவிட மாடல் ஆட்சி எல்லாவற்றையும் உருவாக்கும், எதையும் சிதைக்காது, சீர்தூக்கும், யாரையும் பிரிக்காது எல்லோரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் இந்த ஆட்சி தாழ்த்தாது அனைவரையும் சமமாக நடத்தும், யாரையும் இந்த ஆட்சி புறக்கணிக்காது தோளோடு தோள் நின்று அனைவரையும் அரவணைக்கும். இந்த கோட்பாடுகளைத்தான் ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டு காலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இன்று நிரூபித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேசுவரம் நடராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தீயணைப்புத் துறையினரின் வெள்ள தடுப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் அமைச்சர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அமைச்சர் தங்கம் தென்னரசு வடகிழக்கு பருவ மழையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் பேசுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை தடுப்பு போல வெள்ள தடுப்புக்கான எல்லாவிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பாதுகாக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

    எந்தந்த இடங்களில் தண்ணீர் தேங்குகிறதோ அதையெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம். ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையிலும் மற்ற நகராட்சி பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    தொடர்ந்து 2, 3 நாட்களுக்கு கனமழை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பொது மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினை இல்லாத வகையிலும், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மின்சார வாரியம் போன்ற அத்தியாவசிய துறைகள் அனைத்தும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

    முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேசுவரம் நடராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தீயணைப்புத் துறையினரின் வெள்ள தடுப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தங்கச்சிமடம், ஊராட்சி அய்யன் தோப்பு பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களையும் பார்வையிட்டார். பாம்பன் பாலம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி பிரவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×