search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MUDA"

    • சித்தராமையா மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு எனக் குற்றச்சாட்டு.
    • லோக்ஆயுக்தாவின் மைசூரு கிளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

    லோக்ஆயுக்தா அமைப்பின் மைசூரி கிளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சாட்சிகளை அழித்ததாக அமலாக்கத்துறையும் குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிலையில் மூடா தலைவராக இருந்த மாரி கவுடா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். உடல்நலத்தை சுட்டிக்காட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    1983-ல் இருந்து மாரி கவுடா சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்து பல்வேறு பதவிகள் வகித்தவர். மைசூரு தாலுகா பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார். 2000-த்தில் டவுண் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தார். அதன்பின் 8 வருடம் கழித்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    மாரி கவுடா ராஜினாமா குறித்து சித்தராமையா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    மைசூரு நகர்ப்புற திட்டத்திற்கான ஒரு இடத்தை கொடுத்ததற்கான மதிப்புமிக்க இடத்தில் 14 மனைகள் சித்தராமையா மனைவி பி.என். பார்வதி பெயருக்கு ஒதுக்கபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன்மூலம் மாநில அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பீடு என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த மனைகள் தனது மனைவியின் சகோதரர் பரிசாக கொடுத்தது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சித்தராமையா மனைவி 14 மனைகளையும் திருப்பி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பும் அதை திரும்பி வாங்க ஒப்புக் கொண்டது.

    • மூடா நில முறைகேடு விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது.
    • அரசு பற்றி விவாதிப்பதில் அர்த்தம் இல்லை.

    பெங்களூரு:

    மத்திய மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ஜனதா தளம் (எஸ்) கட்சி பலமாகுமா? அல்லது பலவீனம் அடையுமா? என்பதை கடவுள் முடிவு செய்வார். ஆனால் முதல்-மந்திரி சித்தராமையா முதலில் தனது பிரச்சனையை சரி செய்து கொள்ள வேண்டும். என்னை யாரும் அச்சுறுத்த முடியாது. நான் யாரை கண்டும் பயப்பட மாட்டேன். நான் கடவுளுக்கு மட்டுமே பயப்படுகிறேன். சித்தராமையாவை போன்று லட்சம் பேர் வந்தாலும் நான் பயப்பட மாட்டேன்.

    நான் அரசியலில் சித்தராமையாவின் நிழலில் வளர்ந்தவனா?. சொந்த உழைப்பு, கட்சி தொண்டர்களின் உழைப்பால் நான் அரசியலில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். அதனால் என்னை யாராவது மிரட்ட முடியுமா?. என் மீது எத்தகைய வழக்கு போட்டாலும் மிரட்ட முடியாது. என்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு போட்டுள்ளனர்.

    இந்த வேலைகள் எல்லாம் என்னிடம் நடைபெறாது. என் மீது பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு போட்டுள்ளனர். இதற்கு காலமே பதில் சொல்லும். மூடா நில முறைகேடு விவகாரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. அதனால் இந்த அரசு பற்றி விவாதிப்பதில் அர்த்தம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சித்தராமையா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து முதலமைச்சர் சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

    இதைதொடர்ந்து, முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சித்தராமையா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கை சித்தராமையா மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தால் பெறப்பட்ட 14 மனைகளை திரும்ப ஒப்படைக்க தயாராக உள்ளதாக கடிதத்தில் கூறியுள்ளார்.

    • முடா நில ஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மீது FIR பதியப்பட்டுள்ளது.
    • தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது FIR பதியப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஊழல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் ஜாமினில் உள்ள மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் முதலில் பதவி விலக வேண்டும். அவர்கள் பதவி விலகினால், நானும் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஹெச்.டி. குமாரசாமி மந்திரியாக உள்ளார்.
    • அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டப் பிறகு அவர் ஜாமின் பெற்றுள்ளார்.

    முடா மோசடி தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அளித்த உத்தரவு செல்லும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து முறைகேடு தொடர்பாக லோக்ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனால் சித்தராமையா தனது முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் சித்தராமையா பதில் அளித்து கூறியதாவது:-

    நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். ஹெச்.டி. குமாரசாமி மந்திரியாக உள்ளார். அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டப் பிறகு அவர் ஜாமின் பெற்றுள்ளார். அவர் பிரதமர் மோடியின் மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளார்.

    இதெல்லாம் நமது அரசியலை சீர்குலைப்பதற்கான அரசியல் வேலை. அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். லோட்டஸ் ஆபரேசனை முயற்சி செய்தார்கள். அது தோல்வியடைந்தது. ஏனென்றால் எங்களிடம் 136 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.

    ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை இல்லாமல் இரண்டு முறை ஆட்சி அமைத்தார்கள். எடியூரப்பா வெற்றி பெற்றாரா? நாங்கள் சட்டப்பூர்வமாக போரிடுவோம்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    • கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் முடா நில ஒதுக்கீட்டு வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். இதையடுத்து கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய மந்திரி எச்.டி.குமாரசாமி, முன்னாள் மந்திரி முருகேஷ் நிராணி, எம்.எல்.ஏக்கள் சசிகலா ஜொல்லே, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்க கவர்னர் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 31-ந் தேதி கர்நாடக அரசு சார்பில் விதான்சவுதாவில் உள்ள காந்தி சிலையில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக செல்லப்போவதாக காங்கிரஸ் மாநில தலைவரும், கர்நாடக துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

    மேலும் இந்த ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள் என்று அறிவித்து உள்ளார். கவர்னருக்கு எதிராக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • 29-ந்தேதி விசாரணை நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
    • அன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெறும்.

    முதல்-மந்திரி சித்தராமையா மீதான முடா நில முறைகேடு வழக்கில் விசாரணை நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை 29-ந்தேதி நடைபெறும். அதுவரை இந்த உத்தரவு தொடரும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) சார்பில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் கடந்த 2011-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் ஒதுக்கப்பட்டன.

    இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதனால் முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடரவும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் சமூக ஆர்வலர்கள் டி.ஜே. ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோர் கடிதம் வழங்கினர்.

    அதன் அடிப்படையில் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி கவர்னர் கடந்த 17-ந்தேதி உத்தரவிட்டார்.

    முன்னதாக மூடா நில முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் முறைப்படி அனுமதி வழங்காத நிலையில், டி.ஜே. ஆபிரகாம் மற்றும் சினேகமயி கிருஷ்ணா ஆகிய 2 பேரும், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கோரி பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டிலும் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இதில், சினேகமயி கிருஷ்ணா தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு வருகிற இன்று கூறப்படும் என்று நீதிபதி அறிவித்தார். டி.ஜே. ஆபிரகாம் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வருகிற 21-ந்தேதி (நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் வழக்கு தொடர அனுமதித்த கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா சார்பில் அவரது வக்கீல் ரவிவர்மா குமார் 'ரிட்' மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரினார். அப்போது நீதிபதி நாகபிரசன்னா, ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு வக்கீல் ரவிவர்மா குமார், மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் சமூக ஆர்வலர் சித்தராமையாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் வருகிற 20-ந்தேதி (நாளை) தீர்ப்பு வருகிறது.

    எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

    ஐகோர்ட்டில் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை தொடங்கியது. அப்போது முதல்-மந்திரி சித்தராமையா சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியும், கவர்னர் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வக்கீல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர். முதலில் சித்தராமையா வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். அவர் தனது தரப்பு வாதத்தை விளக்கமாக எடுத்து வைத்தார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-

    கவர்னர் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்பட்டு முதல்-மந்திரி மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார். மந்திரிசபையின் முடிவையும் அவா் நிராகரித்துள்ளார். இது அரசியல் சாசனத்தின் 163-வது அட்டவணையை மீறுவது ஆகும். அரசியல் காரணங்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்கும் உள்நோக்கத்தில் கவர்னர் முடிவு எடுத்துள்ளார். இதுபோன்ற வழக்குகளில் கவர்னர் மந்திரிசபையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் அதற்கு பதிலாக வழக்கின் உண்மை தன்மையை ஆராயாமல் 2 பக்க விளக்கத்துடன் வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார்.

    கவர்னரிடம் பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் முதல்-மந்திரிக்கு எதிரான புகாரை மட்டுமே தேர்ந்தெடுத்து அனுமதி அளித்துள்ளார். முடா முறைகேட்டில் முதல்-மந்திரிக்கு எந்த தொடர்பும் இல்லை. ஏனெனில் இது முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்றது. இதை கருத்தில் கொள்ளாமல் வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    தன்னை மந்திரிசபையின் முடிவு கட்டுப்படுத்தாது என்று கவர்னர் கூறியுள்ளார். மந்திரிசபையின் முடிவில் முதல்-மந்திரிக்கு தொடர்பு இல்லை. ஏனெனில் அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. புகார்களை தான் தன்னிச்சையாக ஆய்வு செய்ததாக கவர்னர் சொல்கிறார். பாதி உண்மை ஒரு பொய்யை விட அபாயகரமானது. மந்திரிசபையின் முடிவை மீறி அவர் முடிவு எடுத்திருந்தாலும், அதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும். அத்தகைய சரியான காரணத்தை கவர்னர் இதில் கூறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து கவர்னர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷார் மேத்தா வாதிடுகையில், "இந்த வழக்கில் முதல்-மந்திரியை பாதுகாக்கும் நோக்கத்தில் மந்திரிசபை முடிவு அமைந்துள்ளது. மந்திரிசபை முடிவின்படி கவர்னர் செயல்பட வேண்டும் என்றாலும், சில நேரங்களில் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது.

    அதன் அடிப்படையில் கவர்னர் முடிவு எடுத்து முதல்-மந்திரி மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார். அரசியல் சாசன அதிகாரத்தை கொண்ட கவர்னர் சட்டப்படி உத்தரவிட்டுள்ளார். அதனால் அவரது உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது. தேவைப்பட்டால் மனுதாரர், சிறப்பு கோர்ட்டை அணுகி விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரலாம்" என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, முதல்-மந்திரி மீதான ஊழல் வழக்கின் தீர்ப்பை வருகிற 29-ந் தேதி ஒத்திவைக்கும்படி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி கூறுகையில், "முடா வழக்கில் சிறப்பு கோர்ட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. ஏனெனில் ஐகோர்ட்டில் முதல்-மந்திரியின் மனு மீது விசாரணை நடக்கிறது. இதன் மீதான அடுத்த விசாரணை நடைபெறும் வரை சிறப்பு கோர்ட்டு தனது தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும்" என்றார்.

    இந்த ரிட் மனு மீதான அடுத்த விசாரணை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தற்போதைக்கு விலகியுள்ளது. அவருக்கு தற்காலிக நிவாரணமாக 10 நாட்களுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தடை ஏற்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முடா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி.
    • ஆளுநர் அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு தாக்க செய்ய இருக்கிறார் சித்தராமையா.

    முடா முறைகேடு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளிதுள்ளார். முடா முறைகேட்டில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஆளுநர் வழக்குப்பதிவை செய்ய வழங்கிய அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்ககோரியும் கோரிக்கை வைக்கப்பட இருக்கிறது.

    மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) சித்தராமையா மனைவிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியது. இந்த வீட்டுமனைகள் முறையற்ற முறையில் ஒதுக்கப்பட்டதாக கூறி, அதற்கு இழப்பீடாக மிகவும் அதிக மதிப்பிலான இடத்தில் 50:50 என்ற விகிதம் அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டதது. இந்த விவகார்தில் 4 ஆயிரம் கோடி முதல் 5 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் உங்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது? இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என சித்தராமையாகவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுந்திருந்தார். இது தொடர்பாக அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.

    அப்போது ஆளுநர் தனது கடிதத்தை திரும்பப்பெற வேண்டும் என அதில் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்துதான் ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளார்.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • முடா விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டி வருகின்றன.

    முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது முடா விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார். அதற்கு கார்கே கன்னடத்தில் பதில் தெரிவித்தார். அதற்கு இந்தியில் பதில் தெறிக்குமாறு அந்த செய்தியாளர் தெரிவித்தார். இதனை கேட்டதும் கடுப்பான கார்கே, கேள்வியை கன்னடத்தில் கேட்குமாறு காட்டமாக தெரிவித்தார்.

    "கர்நாடகாவுக்கு வரும் போது சிறிதாவது கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் தமிழ்நாட்டிற்குச் சென்று இந்தியில் கேள்வி கேட்க முடியுமா? கர்நாடகாவுக்கு வரும் போது கொஞ்சமாவது கன்னட மொழியை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டு கார்கே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

    மல்லிகார்ஜுன கார்கே பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை.
    • கர்நாடக அரசை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.

    பெங்களூரு:

    முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா கூறுகையில், மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க இது ஒரு பெரிய சதி. கர்நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தவறு செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை என்றார்.

    இந்நிலையில், கர்நாடக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 19-ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    • ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை.
    • அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை.

    முடா முறைகேட்டில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் அனுமதி வழங்கியுள்ளார்.

    இதற்கு கர்நாடக மாநில மந்திரிகள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு ஏதும் செய்யவில்லை. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் காங்கிஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக நியமித்துள்ள பாஜக அரசு அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை. அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை. என்னால் தற்போது நோட்டீஸ் சரியா அல்லது தவறா? எனக் கூற முடியாது.

    ஆனால் ஒருவிசயம் என்னவென்றால், மேற்குவங்கம், கர்நாடகா, தமிழ்நாடு அல்லது வேறு எங்கெல்லாம் பாஜக அல்லாத அரசு ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்துள்ளதோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகப்பட்டியான இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். வழக்கின் முழு விவரம், வழக்கறிஞர் ஆலோசனைக்குப் பிறகு இது தொடர்பாக பதில் அளிப்பேன்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • எனது ஆட்சியைக் கவிழ்க்க பெரிய சதி என சித்தராமையா குற்றம் சாட்டினார்.
    • நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினா செய்ய தேவையில்லை என்றார்.

    பெங்களூரு:

    முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா கூறுகையில், மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி சித்த ராமையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க இது ஒரு பெரிய சதி.

    டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவினர் இதைச் செய்துள்ளனர்.

    கர்நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    இந்த சதியில் மத்திய அரசும், பாஜக, ஜேடி(எஸ்) உள்ளிட்ட கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

    காங்கிரஸ் தலைமை என்னுடன் உள்ளது. முழு அமைச்சரவையும், அரசாங்கமும் என்னுடன் உள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள்.

    நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினா செய்ய தேவையில்லை என தெரிவித்தார்.

    ×