என் மலர்
நீங்கள் தேடியது "Mumbai Indians"
- பெங்களூரு அணி மும்பையை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டது.
- இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றியும் (கொல்கத்தாவுக்கு எதிராக), 3-ல் தோல்வியும் (சென்னை, குஜராத், லக்னோவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 204 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி நெருங்கி வந்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தியும் பலன் இல்லை.
பந்து வீச்சில் பலவீனமாக இருக்கும் மும்பை அணிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நேற்று முன்தினம் இரவு அணியுடன் இணைந்தார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் போது முதுகில் காயமடைந்த பும்ரா, ஆபரேசன் செய்த பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்ட அவர் உடல்தகுதி எட்டியதை தொடர்ந்து மும்பையுடன் கைகோர்த்துள்ளார். உடனடியாக பயிற்சியை தொடங்கிய பும்ரா, பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் அணித் தேர்வுக்கு தயாராக இருப்பதாக மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே நிருபர்களிடம் தெரிவித்தார்.
துல்லியமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறன் படைத்த பும்ராவின் வருகை நிச்சயம் மும்பை அணிக்கு புது தெம்பை அளிக்கும். பும்ரா ஐ.பி.எல்.-ல் 133 ஆட்டங்களில் ஆடி 165 விக்கெட் வீழ்த்தி இருப்பது கவனிக்கத்தக்கது.
வலை பயிற்சியில் பந்து தாக்கி கால்முட்டியில் காயமடைந்ததால் லக்னோவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஆடாத ரோகித் சர்மா பார்க்க நன்றாக தெரிகிறார். பயிற்சிக்கு பிறகு அவரது உடல்தகுதியை ஆராய்ந்து ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம் என்றும் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே குறிப்பிட்டார்.
அதிரடியாக ஆட முடியாமல் தடுமாறியதால் கடந்த ஆட்டத்தில் 'ரிட்டயர்ட்அவுட்' முறையில் வெளியேற்றப்பட்ட திலக் வர்மா (23 பந்தில் 25 ரன்) குறித்து பேசிய ஜெயவர்த்தனே, நாளைய (இன்று) ஆட்டத்தில் திலக் வர்மா களம்இறங்கி வெற்றி தேடி தருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தனது முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை போட்டுத்தாக்கியது. கடந்த ஆட்டத்தில் குஜராத்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் 'சரண்' அடைந்தது. பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகிய 3 பேரும் முதல் 5 ஓவருக்குள் அடங்கியதால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் போய் விட்டது.
பெங்களூரு அணி மும்பையை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக 11 ஆட்டங்களில் ஆடியிருக்கும் பெங்களூரு அணி அதில் 3-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. அதனால் அந்த நீண்ட கால சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வரிந்து கட்டி நிற்பார்கள்.
மொத்தத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் மும்பையும், 14-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: வில் ஜாக்ஸ் அல்லது ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), மிட்செல் சான்ட்னெர் அல்லது விக்னேஷ் புத்தூர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா அல்லது அஷ்வனி குமார்.
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, குருணல் பாண்ட்யா, டிம் டேவிட், புவனேஷ்வர்குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள், ராசிக் சலாம்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை.
- ஐபிஎல் 2-வது பாதியில் பும்ரா விளையாடுவார் என்று கூறப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.
இதனால், ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை
இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்ட பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனை மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இணைந்தாலும் நாளைய போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது.
- திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார்.
- போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார்.
ஐ.பி.எல். தொடரின் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 7 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, 23 பந்துகளில் 25ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரரானார் திலக் வர்மா.
இந்நிலையில் திலக் வர்மா சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார். போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார். அதற்காக இறுதி ஓவர் வரை விளையாட முற்பட்டார். ஆனால் அவர் சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது.
கிரிக்கெட்டில் இது எப்போதும் நிகழ்வதுதான். அவரை வெளியேற்றுவது சரியானதல்ல. ஆனால் அதை நாங்கள் செய்ய வேண்டி இருந்தது. அப்போது அது சமயோஜிதமாக தோன்றியது.
இவ்வாறு திலக் கூறினார்.
- முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
- லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 60 ரன்னும், மார்க்ரம் 53 ரன்னும் அடித்தனர்.
மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஐ.பி.எல். வரலாற்றில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற புதிய சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
- மிட்செல் மார்ஷ், மார்கிராம் அரைசதம் அடித்தனர்.
- ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் 2025 தொடரின் 16ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீ்ச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்தில் அரைசதம் விளாசினார். 5.3 ஓவருக்குள் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். ரிஷப் பண்ட்-ஐ 2 ரன்னில் வெளியேற்றினார்.
மார்கிராம் மெல்லமெல்ல ஆட்டத்தில் வேகத்தை கூட்டி 38 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டையும் ஹர்திக் பாண்ட்யாதான் கைப்பற்றினார். ஆயுஷ் படோனி 19 பந்தில் 30 ரன்கள் அடித்தார்.
கடைசி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்த டேவிட் மில்லர் 14 பந்தில் 27 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ 19.3 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.
4ஆவது பந்தில் டேவிட் மில்லரும், 5ஆவது பந்தில் ஆகாஷ் தீப்பும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி பந்தில் வைடு உடன் 3 ரன்கள் விட்டுக்கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 203 ரன்கள் குவித்தது.
- மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 100-வது போட்டியில் சூர்யகுமார் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.
- சூர்யகுமாருக்கு அவர் பெயர் மற்றும் 100 என்ற நம்பர் பொறித்த டிசர்ட்டை கொடுத்து பொல்லார்ட் வாழ்த்து தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் சூர்யகுமார் யாதவ் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 100-வது போட்டியில் சூர்யகுமார் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.
மும்பை அணிக்காக 100-வது போட்டியில் களமிறங்கிய 8-வது வீரர் சூர்யகுமார். அவருக்கு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் அவர் பெயர் மற்றும் 100 என்ற நம்பர் பொறித்த டிசர்ட் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதற்குமுன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 100-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய வீரர்களில் ரோகித் சர்மா, பொல்லார்ட், ஹர்பஜன் சிங், லசித் மலிங்கா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அம்பதி ராயுடு ஆகியோர் உள்ளனர்.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் இம்பேக்ட் பிளேயராக இடம்பெறவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. தொடர்ந்து 3 போட்டிகளாக இம்பெக்ட் பிளேயராக விளையாடி வந்த ரோகித் இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக கூட இல்லாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடந்த முடிந்த 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் இந்த முடிவை மும்பை அணி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
- 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
- இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் லக்னோவும், ஒன்றில் மட்டும் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இம்பெக்ட் பிளேயராக கூட அவர் இடம்பெறவில்லை. இது ரோகித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
- மும்பையில் நடந்த கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை பந்தாடியது.
- வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி தீவிரம் காட்டும்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.
ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அடக்கியது. சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 172 ரன் இலக்கை பஞ்சாப் அணி 16.2 ஓவரில் எளிதாக எட்டிப்பிடித்தது.
இந்த தோல்வியை தொடர்ந்து ஆடுகளத்தின் தன்மை குறித்து புகார் கிளம்பியது. 'இந்த ஆடுகளத்தை உருவாக்கிய ஊழியர்கள் இது லக்னோ அணியின் சொந்த மைதானம் என்பதை மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். உள்ளூர் அணிக்கான அனுகூலமான சூழல் எதுவுமில்லை. பஞ்சாப் பிட்ச் பராமரிப்பாளர் ஆடுகளத்தை தயார் செய்தது போல் இருந்தது' என்று லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர்கான் கூறியிருந்தார். இதனால் இந்த ஆட்டத்துக்கு உள்ளூர் அணிக்கு கைகொடுக்கும் வகையிலான ஆடுகளம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (189 ரன்), மிட்செல் மார்ஷ் (124) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. குறிப்பாக ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 0, 15, 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட அவர் நிலைத்து நின்று கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி நம்பிக்கை அளித்தாலும் இன்னும் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் எந்த போட்டியிலும் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் முழு உடல் தகுதியை எட்டியதால் லக்னோ அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது. அவரது வருகை அந்த அணியின் பந்து வீச்சுக்கு பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.
மும்பை அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடமும், 36 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடமும் உதை வாங்கியது. மும்பையில் நடந்த கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 116 ரன்னில் சுருட்டிய மும்பை அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
முந்தைய ஆட்டத்தில் மும்பை அணியில் பேட்டிங்கில் ரிக்கெல்டன் (62 ரன்), சூர்யகுமார் (27 ரன்) கடைசி வரை களத்தில் நின்று அசத்தினர். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடந்த 3 ஆட்டங்களில் 0, 8, 13 என்று சொற்ப ரன்களில் வெளியேறிய அவர் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். பந்து வீச்சில் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான பஞ்சாப்பை சேர்ந்த 23 வயது அஷ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரது கவனத்தை ஈர்த்ததுடன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். பும்ரா இல்லாத குறையை போக்கும் வகையில் அவர் தொடர்ந்து ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், விக்னேஷ் புத்தூர், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் பந்து வீச்சில் வலு சேர்க்கிறார்கள்.
வெற்றி உத்வேகத்தை தொடர மும்பை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு உள்ளூரில் முதல் வெற்றியை ருசிக்க லக்னோ அணி எல்லா வகையிலும் முயலும். இரு அணிகளும் இரண்டாவது வெற்றிக்கு குறிவைக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் லக்னோவும், ஒன்றில் மட்டும் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய்,
மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், அஷ்வனி குமார், விக்னேஷ் புத்தூர் அல்லது முஜீப் ரகுமான்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- மும்பை அணிக்காக நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை.
- நாங்கள் கோப்பையை வென்ற சீசன்களில் எனது அணி வீரர்களாக இருந்தவர்கள் இப்போது பயிற்சியாளராக உள்ளனர்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
3 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை 2 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி விளையாடுகிறார்.
இந்நிலையில் எனது பதவி மாறியிருக்கலாம். ஆனால் அணிக்காக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தேன். இப்போது, நான் தொடக்க வீரராக இருக்கிறேன். நான் கேப்டனாக இருந்தேன். இப்போது, கேப்டனாக இல்லை. நாங்கள் கோப்பையை வென்ற சீசன்களில் எனது அணி வீரர்களாக இருந்தவர்கள் இப்போது பயிற்சியாளராக உள்ளனர்.
எனவே, பாத்திரங்கள் (Role) மாறிவிட்டன. நிறைய மாறிவிட்டன. ஆனால் மனநிலை அப்படியே உள்ளது. இந்த அணிக்காக நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை. அதுதான் வெளியே சென்று ஆட்டங்களையும் கோப்பைகளையும் வெல்வது. அதற்காகவே மும்பை இந்தியன்ஸ் பெயர் பெற்றது. பல ஆண்டுகளாக, நாங்கள் கோப்பைகளை வென்றுள்ளோம். யாரும் நம்பாத சூழ்நிலைகளில் இருந்து ஆட்டங்களை மாற்றியமைத்துள்ளோம்.
எங்களிடம் பல இளம் இந்திய வீரர்களும் சிறந்த திறமைகளை கொண்டுள்ளனர். அவர்களுடன் விளையாட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். டாடா ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் பெருமையைக் கொண்டு வருவதே எனது இலக்கு.
என்று ரோகித் சர்மா கூறினார்.
- பும்ராவின் காயம் சற்று கடுமையானது.
- பும்ராவுக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அவரது முதுகில் மீண்டும் ஒரு எழும்பு முறிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் அவர் அணிக்கு திரும்புவது தாமதமாகிறது.
அவர் காயம் குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், பும்ராவின் காயம் சற்று கடுமையானது. அவருக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை. பும்ரா கூட இதில் கவனமாக இருக்கிறார்.
காயம் குணமடைந்து பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் முழு வீச்சில் இன்னும் பந்து வீசவில்லை. அதற்கு சில காலம் ஆகலாம்.
அவர் அணிக்கு திரும்புவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவர் ஏப்ரல் 2-வது வாரத்திற்குள் அணிக்கு திரும்புவார். குறிப்பாக இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என கூறப்படுகிறது.
இதனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிகிறது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சோகமான செய்தியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
- ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை மும்பை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா 116 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 12.5 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 12-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி அதில் பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஒரு மைதானத்தில் குறிப்பிட்ட ஒரு அணியை அதிக முறை வீழ்த்திய சாதனையை மும்பை படைத்துள்ளது.
மேலும் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி 24 வெற்றிகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 21 வெற்றிகளை பெற்று இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.