என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muslim Girl"

    • சம்பந்தப்பட்ட பெண் (சானியா மிர்சா) இந்திய விமானப் படையில் விமானியாக இணைக்கப்பட இன்னும் 4 ஆண்டுகள் ஆகும்.
    • போர் விமானிக்கான திறனையும், தகுதியையும் அவர் பெற வேண்டும். அவரது எதிர்காலம் சிறக்கவும், கனவுகள் நனவாகவும் வாழ்த்துக்கள்.

    புதுடெல்லி:

    தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைவதற்காக நடைபெற்ற தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சானியாமிர்சா என்ற முஸ்லிம் பெண் இந்திய அளவில் 149-வது இடத்தை பிடித்தார்.

    அவர் விமானப்படையின் போர் விமான பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார். அதன் காரணமாக அவரே நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானி ஆவார் என்று ஊடகங்களில் தகவல் பரவியது.

    விமானப்படையில் அவருக்கு உள்ள வாய்ப்புகள் தொடர்பாக இந்திய விமானப்படை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய பாதுகாப்பு அகாடமியானது முப்படை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிகளையே மேற்கொள்வார்கள்.

    இறுதி ஆண்டின்போது சம்பந்தப்பட்ட படைப் பிரிவுக்கான பிரத்தியேக பயிற்சிகளை பெறுவார்கள். முக்கியமாக விமானப்படையில் இணையும் அதிகாரிகளுக்கு கடைசி 6 மாதங்களிலேயே விமானிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண் (சானியா மிர்சா) இந்திய விமானப் படையில் விமானியாக இணைக்கப்பட இன்னும் 4 ஆண்டுகள் ஆகும்.

    இந்த காலகட்டத்தில் அவர் விமான படைக்கான பல்வேறு பிரத்தியேக பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். போர் விமானிக்கான திறனையும், தகுதியையும் அவர் பெற வேண்டும். அவரது எதிர்காலம் சிறக்கவும், கனவுகள் நனவாகவும் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த சானியா மிர்சாவின் தந்தை டி.வி. பெட்டிகளை பழுது பார்க்கும் பணியை செய்து வருகிறார். சானியா மிர்சா 12-ம் வகுப்பில் இந்தி வழியில் படித்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார்.

    மத்தியபிரதேசத்தை சேர்ந்த அவ்னி சதுர்வேதி கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் போர் விமானி ஆனார். அவரை கண்டு ஊக்கம் அடைந்தே தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் வெற்றி பெற்றதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

    • ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
    • 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் என்கிற பகுதியில், இந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.

    இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக, 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

    சுமார் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள், பைக்கில் பயணித்த ஒருவரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இந்து ஆண்டு நண்பரிடம் பேசியதாக கூறி தாக்கி உள்ளனர். மேலும், அவர்கள் அணிந்திருந்த ஹிஜாபையும் கழட்ட வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். இந்து நபரிடம் சிறுமிகள் பேசினார்கள் என்ற விஷயம் பெரிதாகியுள்ளது.

    அப்போது, சிறுமிகள் தங்களது சகோதரரை அண்ணனை அழைக்க, சிறுமிகள் போனை எடுத்தபோது, அந்த கும்பல் அதை பிடுங்கி எறிந்துள்ளது. மேலும், அந்த சிறுமிகள் இளைஞரிடம் பரிசு கொடுத்ததாகவும் மர்ம கும்பல் குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், பைக் ஓட்டிய அந்த இளைஞர் இந்து இல்லை என்று தெரிந்த பிறகுதான் மர்ம கும்பல் சிறுமிகளை விடுவித்தது. அங்கிருந்து தப்பிய சிறுமிகள் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களில் ஒருவர்," தன்னை மர்ம கும்பல் அடித்து ஹிஜாபை கழற்ற முயன்றதாக" வாக்குமூலம் அளித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரூரல் எஸ்பி சாகர் ஜெயின் தெரிவித்தார். பரப்பப்படும் வீடியோவைப் பயன்படுத்தி மற்றவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

    ×