என் மலர்
நீங்கள் தேடியது "Nallakannu"
- ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான்.
- பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?
சென்னை:
தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் இன்று முதல் அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.
இதையொட்டி இன்று காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, வஞ்சிய தேவன், ஜீவன், கழககுமார் பூங்கா ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:- தமிழ்நாட்டின் வரலாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு கவர்னர்கள் யாரும் செய்யாத அட்டூழியம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.
ஜூன் 14-ந் தேதி நடத்திய பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இன்று கையெழுத்து இயக்கம் நடத்த தொடங்கி உள்ளோம்.
ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான். குடியரசு தலைவர் உரை இந்திய அரசு தயாரிக்கும் உரை தான்.
ஆனால் பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?
மார்க்சியம் காலாவதியானது என்று சொன்னார். அது பற்றி இவருக்கு என்ன தெரியும். அம்பேத்கர் சொன்ன கருத்துக்கு மாறாக பேச ஆரம்பித்தார். முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த போது அவர் முயற்சியை முகத்திற்கு நேராக பேசுகிறார்.
முதலமைச்சர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்கட்சி தலைவரா?
கவர்னர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை தகுதி உள்ளது. ஆளுநர் பதவியே இருக்க கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்.
தமிழக ஆளுநர் நீக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி. இவரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். நாகாலாந்தில் இதே நாச வேலை செய்தார் அவர்கள் துரத்திவிட்டார்கள். கையெழுத்து எல்லோரிடமும் பெற வேண்டும் இது அரசியல் காரணத்திற்கு இல்லை. தமிழ் நாட்டின் நன்மைக்கு என்று சொல்லுங்கள். எங்கெங்கு கையெழுத்து வாங்க முடியுமோ அங்கு எல்லாம் கையெழுத்து வாங்குங்கள், வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் வாங்குங்கள். இது வெற்றி பெரும் என்ற நம்பிக்கையோடு இதனை தொடங்குகிறோம். தி.மு.க. தோழமை கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு.
- நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்.
சென்னை :
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்! என கூறியுள்ளார்.
99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் #நல்லகண்ணு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) December 26, 2023
ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு அவர்கள், நமக்கெல்லாம் ஊக்கமாகவும்…
- ஒவ்வொரு முறையும் தேசிய அளவிலும் கோவை தொகுதி கவனம் பெற்று வருகிறது.
- கமல்ஹாசன், தனது முதல் தேர்தலை கோவையில் தான் சந்தித்தார்.
சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் எந்த தேர்தல் வந்தாலும் கோவை தொகுதி அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட கூடிய தொகுதியாக மாறுகிறது. ஒவ்வொரு முறையும் தேசிய அளவிலும் கோவை தொகுதி கவனம் பெற்று வருகிறது.
பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அந்த கட்சியில் உள்ள மிக முக்கியமான பிரமுகர்கள் இங்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதே கோவை நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்று வருவதற்கான காரணமாக உள்ளது.
என்னதான் நட்சத்திர வேட்பாளர்கள் ஒரு நட்சத்திர பிம்பத்துடன் போட்டியிட்டாலும் கோவை தொகுதியில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இங்கு போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் உள்ளூர் வேட்பாளர்களிடம் தோற்று 2-வது இடத்தை தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் அ.தி.மு.க.வும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கோவை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ஜ.க.வை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியிலும் பா.ஜ.க அரசு அமைந்தது. ஆனால் 13 மாதங்களிலேயே வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதனை தொடர்ந்து 1999-ம் ஆண்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கோவை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு சார்பில், பொதுவாழ்வில் நேர்மையானவர், எளிமையானவர் என அறியப்படும் ஆர்.நல்லக்கண்ணு போட்டியிட்டார். கோவை எப்போதும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு செல்வாக்கு மிகுந்த பகுதியாகவே இருந்து வருகிறது. இதனால் எப்படியும் தங்களுக்கு தான் வெற்றி நிச்சயம் என நினைத்தனர்.
ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தன. தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.நல்லக்கண்ணுவால் 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.
மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், தனது முதல் தேர்தலை கோவையில் தான் சந்தித்தார். கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசனை தோற்கடித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிவந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடைசி நேரத்தில் கோவை தொகுதியில் களமிறக்கப்பட்டார். முடிவில் அவர் 4.50 லட்சம் வாக்குகள் பெற்று 2-ம் இடத்தையே பிடித்தார். தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5.68 லட்சம் வாக்குகள் பெற்று எம்.பி.ஆனார்.
இதுவரை நடந்த பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில், கோவை பாராளுமன்ற, சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வெளியூரை சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் தொடர் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ளனர்.
மாறாக அவர்களை எதிர்த்து போட்டியிடும் உள்ளூர் வேட்பாளர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றியை நிலைநாட்டி வருகிறார்கள்.
இதனால் வரும் காலங்களில் நட்சத்திர வேட்பாளர்கள் கோவையில் போட்டியிட தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:-
சாதி பின்னணி கொண்ட, சாதி பின்னணி ஏதும் இல்லாத நட்சத்திர வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் இறங்கி தோற்பது கோவையில் ஆடுபுலி ஆட்டமாக நடந்து வருகிறது.
தேர்தல் அரசியலை பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரதான வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆளுமை மிக்க தலைவர்களே, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு தான் தேர்தலில் அதிக வாய்ப்பு அளித்தது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
ஆர்.நல்லக்கண்ணு, கமல், அண்ணாமலை, ஆகியோர் தேர்தல் களத்தில் அதிகம் பணியாற்றினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன், தி.மு.க.வை சேர்ந்த கணபதி ராஜ்குமார் ஆகியோர் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்பதாலும், கட்சியிலும் அடிமட்ட நிலை வரை இணைப்பு இருந்ததாலும் வெற்றி பெற்றுள்ளனர். எனவே நட்சத்திர வேட்பாளர்களாக களம் இறங்கினாலும் வெளியூர்காரர்களை கோவை மக்கள் அங்கீகரிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நல்லுகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததாக நம்மை பொறுத்தவரை யாரும் கருதி விட முடியாது.
* தோழர் நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்துள்ளேன்.
* திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக்கொண்டிருக்கக்கூடிய திட்டங்களுக்கெல்லாம் உறுதுணையாக பக்கபலமாக விளக்கிக்கொண்டிருப்பவர் அய்யா நல்லகண்ணு.
* தோழர் நல்லகண்ணு எதையும் அடக்கமாக, ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்துபவர்.
* அய்யா நல்லகண்ணுவை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.
* எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என அய்யா நல்லகண்ணுவை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
- அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
- சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா நல்லக்கண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணிகள் தொடர வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நூறாண்டு காணும் தொண்டு.
எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வரவேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு.
சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார்.
அவருக்கு என் வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா நல்லகண்ணுக்கு, இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா நல்லக்கண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- நல்லகண்ணு பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தப்படும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அன்னார் அவர்கள் ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ஆம் ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கிச் சிறப்பித்தது. இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும்வகையில், திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு "தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்" எனப் பெயரிடவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.
- நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர்.
சென்னை :
த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு அய்யா. சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர். தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர்.
சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.
தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர்.
தலைவனாக வருவது முக்கியமன்று. தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம் என்ற இலக்கணத்திற்கு இன்றுவரை ஒற்றை உதாரணம், நேர்மையின் ஊற்றுக்கண்ணான திரு.நல்லக்கண்ணு அய்யா மட்டுமே. அவரே, நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர்.
நூற்றாண்டு காணும் அவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குவோம். அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
- பெரியார், கலைஞருக்கு கிடைக்காத பாக்கியம் ஐயா நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது.
- இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் நல்லகண்ணு
சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. நல்லகண்ணுக்கு பழ.நெடுமாறன் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* ஐயா நல்லகண்ணுவிடம் வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளோம்.
* தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய வாழ்த்து இல்லை.
* பெரியார், கலைஞருக்கு கிடைக்காத பாக்கியம் ஐயா நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது.
* பொதுவுடைமை, திராவிடம், தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் நிறைந்த மேடை இது.
* தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட மிகப்பெரிய ஊக்கம் எதுவும் இல்லை.
* 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார் நல்லகண்ணு.
* கட்சிக்காகவே உழைத்தார். உழைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் நல்லகண்ணு
* கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கினேன். நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே எனக்கு கிடைத்த பெருமை என்று கூறினார்.
- தலைவர் கலைஞரை விட ஐயா நல்லக்கண்ணு ஒரு வயதுதான் இளையவர்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது அதை கண்டித்து முதன் முதலாக அறிக்கை வெளியிட்டது நல்லக்கண்ணு தான்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடை பெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இரா.நல்லக்கண்ணுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்ததுடன் கவிதை நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இங்கே பழ.நெடுமாறன் குறிப்பிட்டு சொல்லும்போது வாழ்த்துவதற்காக நாங்கள் வந்திடவில்லை. வாழ்த்து பெறுவதற்காக வந்திருக்கிறோம் என்றார். அந்த வகையில் நூற்றாண்டு விழா நாயகராக இருக்கக்கூடிய நல்லக்கண்ணுவின் தியாகத்தை சிறப்பை இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறோம்.
சமத்துவ சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய பணியில் வெல்வதற்காக ஐயா வாழ்த்துங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம். உங்கள் வாழ்த்தை விட எங்களுக்கு பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்து விட போவதில்லை.
தந்தை பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லக்கண்ணு ஐயாவுக்கு கிடைத்துள்ளது. 100 வயதை கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ் சமுதாயத்திற்காக உழைக்க இன்னும் தயாராக இருக்கேன் என்றும், உள்ள உறுதியோடு இங்கே அமர்ந்திருக்கக்கூடிய ஐயாவுக்கு கம்பீரமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி என பல்வேறு தலைவர்களோடு நெருங்கி பழகியவர் நல்லக்கண்ணு.
தலைவர் கலைஞரை விட ஐயா நல்லக்கண்ணு ஒரு வயதுதான் இளையவர். இவரது 80-வது பிறந்தநாள் விழாவில் கலைஞர் குறிப்பிட்டு பேசும்போது, வயதால் எனக்கு தம்பி, அனுபவத்தால் எனக்கு அண்ணன், என்னைவிட வயதில் இளையவர், ஆனால் அனுபவத்திலும், தியாகத்திலும் நம்மைவிட மூத்தவர் என்று குறிப்பிட்டார்.
இதைவிட முத்தாய்ப்பாய் ஒன்றை குறிப்பிட்டார். ஒரு கார் விபத்து கலைஞருக்கு ஏற்பட்டது. அந்த விபத்தில் கலைஞரின் ஒரு கண் பாதிக்கப்பட்டது. அது எல்லாருக்கும் தெரியும். அதை குறிப்பிட்டு எனக்கு ஒரு கண்தான் முகத்தில் இருக்கிறது. இன்னொன்று அகத்தில் இருக்கிறது. அதுதான் நல்லக்கண்ணு என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு நல்லக்கண்ணுவை மதித்தார். தோழமை உணர்வோடு கலைஞர் பாராட்டினார்.
கடந்த 2001-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அராஜகமாக கைது செய்யப்பட்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். அப்போது அதை கண்டித்து முதன் முதலாக அறிக்கை வெளியிட்டது யார் என்றால் நல்லக்கண்ணு தான்.
இத்தனைக்கும் அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது. அதைப்பற்றி கவலைப்படாமல் கண்டித்தார். அப்படிப்பட்ட தோழமை இறுதி வரை பேணி பாதுகாத்தார் கலைஞர்.
அந்த நட்புணர்வோடு தான் இன்றைக்கு நான் உங்களை வாழ்த்தவும், வாழ்த்து பெறவும் வந்திருக்கிறேன்.
நல்லக்கண்ணுக்கு அம்பேத்கர் விருது கலைஞர் வழங்கினார். நான் 2022-ல் தகைசால் தமிழர் வருது வழங்குகினேன். அம்பேத்கர் விருது பெறும்போது தமிழ் நாடு அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதில் 50 ஆயிரத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும், இன்னொரு 50 ஆயிரத்தை விவசாய சங்கத்துக்கும் கொடுத்து விட்டார்.
இப்போது நான் ஆட்சிக்கு வந்தபோது தகைசால் தமிழர் விருதை கொடுத்தபோது 10 லட்சம் ரூபாய் கொடுத்தோம். அந்த 10 லட்சத்துடன் 5 ஆயிரம் ரூபாயை சேர்த்து தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாக அளித்தவர்தான் நல்லக்கண்ணு.
அவரது 80-வது பிறந்தநாளின்போது இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியனும், பொருளாளர் தாவீதும் ரூ.1 கோடி திரட்டி தந்தார்கள். அந்த ரூ.1 கோடியை மேடையிலேயே இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கொடுத்தவர்தான் நல்லக்கண்ணு. அதே மேடையில் அவருக்கு வழங்கப்பட்டது. அதையும் அவர் இயக்கத்துக்கே கொடுத்து விட்டார்.
இப்படி இயக்கம் வேறு தான் வேறு என நினைக்காமல் இயக்கத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிற மாமனிதரை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியுமா?
கட்சிக்காகவே உழைத்தார். உழைப்பால் வந்த பணத்தை கட்சிக்காகவே கொடுத்தார். கட்சி வேறுபாடின்றி அதனால்தான் வரலாற்றில் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார்.
திராவிட இயக்கத்துக்கும் பொது உடமை இயக்கத்துக்கும் ஆன அரசியல் நட்பு இடையிடையே விட்டுபோய் இருக்கலாம். ஆனால் கொள்கை நட்பு எப்போதும், எந்த சூழ்நிலையிலும் தொடரும். அது தொடரக்கூடியது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழவுக்கான ஏற்பாடுகளை தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை நிறுவனர் த.மணி வண்ணன், திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இரா.நல்லக்கண்ணுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடை பெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இரா.நல்லக்கண்ணுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்ததுடன் கவிதை நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இந்தநிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டார்.
பின்னர், விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:-
விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும். காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன்; இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது.
- இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, காலில் செருப்பு, தீபாவளி, பொங்கல் போனஸ், 8 மணி நேர வேலை, இதெல்லாம் நல்லகண்ணு போன்றவர்கள் ரத்தம்சிந்தி பெற்றுத் தந்தது. இது பற்றி தெரியாத பலரில் நானும் ஒருவன்; இதனால் பலனடைந்த பலர்களிலும் நானும் ஒருவன். விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் கோரிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
- நல்லக்கண்ணுவுக்கு எந்த வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க அவரது ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
- நல்லக்கண்ணுவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு 97 வயதாகிறது. இவருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நல்லக்கண்ணுவுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு சிறுநீரக தொற்று பாதிப்பும் இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று பாதிப்புக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் 2-வது நாளாக நல்லக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நல்லக்கண்ணுவுக்கு எந்த வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க அவரது ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணி ராஜன் இன்று காலை கூறும்போது,
பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எந்தவகை காய்ச்சலால் நல்லக்கண்ணு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரும் என்று கூறினார்.