என் மலர்
நீங்கள் தேடியது "navagraha"
- பக்தர்கள் நடைபாதையில் நின்றபடியே தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் யாரும் இறங்கி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழக கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் மற்றும் கடல் சீற்றமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக பனைக்குளம், ஆற்றங்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடல் சீற்றமாகவே உள்ளது.
இதனிடையே தேவிபட்டினம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் அதிக சீற்றமாக காணப்பட்டு வருவதால் கடலில் உள்ள நவபாஷான கோவிலின் 9 நவக்கிரக கற்களும் முழுவதும் கடல் நீரால் சூழ்ந்து நவக்கிரக கற்கள் வெளியே தெரியாத அளவிற்கு கடல் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நேற்று நவபாஷான கோவிலில் நவக்கிரக கற்களை தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் நடைபாதையில் நின்றபடியே கடல் நீரில் மூழ்கி கிடந்த நவபாஷாண கற்களை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து தரிசனம் செய்தனர்.
கடலுக்குள் அமைந்துள்ள 9 நவக்கிரக கற்களும் முழுவதுமாக கடல் நீரில் மூழ்கியதால் நவக்கிரக கற்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் பக்தர்கள் யாரும் இறங்கி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
- நற்காரியம் நடைபெற நவக்கிரகத்தை வழிபடுவோம்.
- இந்த காயத்ரி மந்திரங்களை தினமும் சொல்லி வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
சூர்ய காயத்ரி மந்திரம்:-
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்
சந்திர காயத்ரி மந்திரம்:-
பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ ஸோமப் பிரசோதயாத்
அங்காரக காயத்ரி மந்திரம்:-
ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பெளம ப்ரசோதயாத்
புத காயத்ரி மந்திரம்:-
ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத ப்ரசோதயாத்
குரு காயத்ரி மந்திரம்:-
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்
சுக்ர காயத்ரி மந்திரம்:-
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்
சனீஸ்வர காயத்ரி மந்திரம்:-
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்
ராகு காயத்ரி மந்திரம்:-
ஓம் நகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்
கேது காயத்ரி மந்திரம்:-
ஓம் அச்வத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
- ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உப சக்தி உண்டு.
- கிரகத்திற்கு ஏற்ற உப சக்திகளை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
* சூரியன் - சுவர்ணாகர்ஷண பைரவர் - பைரவி
* சந்திரன் - கபால பைரவர் - இந்திராணி
* செவ்வாய் - சண்ட பைரவர் - கவுமாரி
* புதன் - உத்மத்த பைரவர் - வராகி
* குரு - அசிதாங்க பைரவர் - பிரம்மாஹி
* சுக்ரன் - ருரு பைரவர் - மகேஸ்வரி
* சனி - குரோதன பைரவர் - வைஷ்ணவி
* ராகு - சம்ஹார பைரவர் - சண்டிகை
* கேது - பீஷண பைரவர் - சாமுண்டி
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தின் கரையில் கால பைரவர் சன்னிதி இருக்கிறது. இங்குள்ள பைரவர் சிலையை, திருவாசியுடன் ஒரே கல்லில் செதுக்கியிருக்கிறார்கள். எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் இந்த பைரவர் எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் அருள்கிறார். தலையில் பிறை சந்திரன் சூடியிருக்கிறார். இவரை வழிபாடு செய்தால் ஆணவம் நீங்கும் என்கிறார்கள்.
- குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
- பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும்.
ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாக்கினார்.
பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.
பிரகஸ்பதி குருவானது எப்படி?
வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையவேண்டும் என்று லட்சியம் கொண்ட பிரகஸ்பதி நான்கு வகை வேதங்களையும் கற்று, பல யாகங்களும் ஹோமங்களும் செய்தார். அஸ்வமேத யாகம் போன்ற சிறந்த யாகங்களை நூற்றுக்கும்மேல் செய்தார். இப்படி சிறப்பான ஹோமங்களைச் செய்து மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர்தான் தேவர்களுக்கு குருவாக முடியும். அதன்படி தேர்வு பெற்று பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவானார்.
அத்துடன் அவர் திருப்தி அடைந்துவிடவில்லை. தேவ குருவைவிட சிறப்பான இடத்தை அடைய மேலும் பல அரிய ஹோமங்களும் யாகங்களும் செய்ததுடன், திட்டை தலத்துக்கு வந்து, அங்கு கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அவர் தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவருக்கு நவகிரக பதவியை வழங்கினார்.
அதன்படி நவகிரகங்களில் சுபகிரகமான குரு பகவானாக ஏற்றம் பெற்றார். அது முதற்கொண்டு திட்டையில் சுவாமி சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் குரு பகவான் தனிச்சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
சிவபெருமானின் ஞானவடிவமான தட்சிணாமூர்த்தி ஆதிகுரு என அழைக்கப்படுகிறார்.
இவரை வழிபடுபவர்களுக்கு அருளையும், ஞானத்தையும் வழங்கக்கூடியவர். எல்லா சிவன் கோவில்களிலும் தென் கோஷ்டத்தில் இவர் எழுந்தருளியிருப்பார். குரு பகவான் இல்லாத திருக்கோவில்களில் தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடுகின்றனர். ஆனால் குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். குருவுக்கு செய்யும் பரிகாரங்களை குருவுக்கே செய்யவேண்டும்.
குருவால் ஏற்படும் தோஷங்களுக்கு குருவையே வழிபடவேண்டும். உலகம் முழுவதும் உள்ள பணம், பொன் விஷயங்களுக்கு குருவே அதிபதி. எனவே பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும். உங்களுக்கு பொருள் வந்துவிட்டது. அடுத்தது என்ன, திருமணம்தானே? அதற்கும் குருவின் அருள் வேண்டும்.
குரு பலம்
ஒருமுறை பார்வதி தேவியானவர் பூவுலகில் பிறந்து, சிவபெருமானை திருமணம் செய்துகொள்ள கடுந்தவம் புரிந்தார். நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று தேவியை மணந்து கொள்ளவேண்டுமென்று முறையிட்டனர். அப்போது சிவன், "தேவியைத் திருமணம் செய்துகொள்ள நானும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்ன செய்வது? தேவிக்கு இன்னும் குரு பலம் வரவில்லையே' என்றார். உலக அன்னையான தேவிக்கே குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் எனும்போது சாமான்யர்களான நம் நிலை என்ன? எனவே திருமணம் தடைப்படுபவர்கள் அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திட்டைக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து, குரு பகவானை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கினால், திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.
சரி; பொருள் சேர்ந்துவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. குழந்தை வரம் கிடைக்க வில்லை. அப்போதும் குரு பகவானையே வழிபடவேண்டும். ஏனென்றால் குரு பகவான் புத்திரகாரகன் என்று அழைக்கப்படுகின்றார்.
அவர் அருள் இருந்தால்தான் குழந்தை பிறக்கும்.
நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இதையே கூறுகின்றன. வியாழகிரகத்திலிருந்து வரும் மஞ்சள் நிறமான மீத்தேன் கதிர்கள்தான் உயிரினங்கள் உண்டாகக் காரணமென்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வித்யாகாரகன் குரு பகவான்
குருவருளால் பொருள், திருமணம், குழந்தைச் செல்வம் என எல்லாம் பெற்று விட்டீர்கள். அந்தக் குழந்தை நல்லபடியாகப் படித்து முன்னேற வேண்டும் அல்லவா? அதற்கும் குரு பகவான்தான் அருளவேண்டும். கல்வியில் முன்னேற்றம், வேத வேதாந்த சாஸ்திர அறிவு, நல்ல புத்தி, ஞாபக சக்தி அனைத்தையும் வழங்குபவர் குரு பகவான்தான். அப்படி நல்லபடியாகப் படித்துத் தேறிய குழந்தைகளுக்கு உரிய பதவியை வழங்குபவரும் குரு பகவான் தான். அவர் அருளால்தான் அரசியல் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகிய பதவிகள் கிடைக்கும். அதுபோலவே நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கிகள் மற்றும் முக்கியமான நிர்வாகத் துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் குரு அருள் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
குரு பார்க்க கோடி நன்மை
நவகிரகங்களில் முழுமையான சுப கிரகம் குரு பகவான் ஒருவரே. சந்திரன் சுபரானாலும் இவர் வளர்பிறையில் மட்டுமே சுபராகக் கருதப்படுவார். புதன் சுபகிரகங்களோடு சேரும்போது மட்டுமே சுபர். அசுப கிரகங்களோடு சேரும்போது பாபத் தன்மை அடைந்துவிடுவார். சுக்கிரன் சுப கிரகமானாலும் அவர் அசுர இனத்தில் பிறந்ததால் அவரை முழு சுபராக ஏற்பதில்லை. எனவே, தேவகுருவான குரு பகவானே முழுச்சுபராக கருதப்படுகின்றார்.
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்து கிரகங்களையும் முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து கிரகங்களினால் வரும் தோஷங்களைக் கட்டுப்படுத்துகிற சக்தி முழு சுபகிரகமான குரு பகவானுக்கு உண்டு. குருவின் 5, 7, 9-ஆம் பார்வைகள் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. எனவேதான் "குரு பார்க்க கோடி தோஷம் விலகும்', "குரு பார்க்க கோடி நன்மை' என்று பழமொழிகள் உருவாகின.
- செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.
- வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள்.
திங்கட்கிழமை
திங்கட்கிழமை எனப்படும் சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷங்களில் சிவனை வேண்டி பிரதோஷ விரதம் இருப்பது மிகுந்த நன்மையை தரும். சோமவாரம் விரதம் இருந்து , ஈசனுக்கு பால் , அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது மிகவும் சிறந்தது என ஆன்மிகப் பெரியவர்கள் கூறியுள்ளனர்.
செவ்வாய் கிழமை
செவ்வாய் கிழமை என்றதும் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது துர்க்கை அம்மனும் , ராகு காலத்தில் ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கும் தான். அந்த அளவிற்கு செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் , இல்லத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். அன்று முருகனுக்கும் உகந்த நாள். அன்றைய தினம் முருகப்பெருமானை வணங்கி கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் பொல்லாதவரை பொடிப்பொடியாக்கும்.
புதன்கிழமை
புதன் கிழமை ஆனைமுகத்தனை வணங்க ஏற்ற நாளாகும். புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட , எந்த ஒரு காரியமும் தடங்கல் இல்லாமல் நடக்கும்.
வியாழன் கிழமை
வியாழன் கிழமைகளில் விஷ்ணு , தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு விரதம் இருப்பது நன்மையை தரவல்லது. அன்று குபேரனுக்கும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். மேலும் செல்வத்தை வாரி வழங்குபவளான திருமகளை வணங்கவும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடுவது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் காக்கும்.
சனிக்கிழமை
நவகிரகங்களில் அனைவரின் தலை எழுத்தையும் மாற்றவல்ல சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. ஆஞ்சநேயர் , பெருமாள் , மற்றும் காளி தேவிக்கும் சனிக்கிழமை உகந்த நாளே. சனிக்கிழமை அன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றினால் ஜாதக ரீதியாக ஒருவருக்கு ஏற்படும் சனி தோஷத்திற்கு நிவாரணம் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை
நவகிரகங்களில் முதன்மையானவராகக் கருதப்படும் சூரிய பகவானுக்கு ஏற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்று கிழமைகளில் தவறாமல் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் , எதிரிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு, நம்முடைய வாழ்க்கையும் அந்த சூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கும்...
- இது வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறுவதுதான்
- பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேவிபட்டினம் கடல் பகுதி. இ்ந்த பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் நவபாஷாண நவக்கிரக கோவில் உள்ளது. ராமபிரானால் பூஜை செய்யப்பட்ட கடலில் அமைந்துள்ள இந்த நவக்கிரக கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்வதற்காக வந்து செல்கின்றனர். இந்த நவக்கிரக கற்களை பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கடலுக்குள் பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவிபட்டினம் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் ஏராளமான பைபர், பாய்மர படகுகள் கடற்கரை மணலில் தரைத்தட்டி நின்றன. நவக்கிரக கோவில் அமைந்துள்ள பகுதியிலும் பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடல் நீரில் மூழ்கிய நிலையில் இருக்கும் நவக்கிரக கற்கள் காலை முதல் மதியம் 1 மணி வரை தெளிவாக வெளியே தெரிந்தன. இதனை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
இதுபற்றி தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியதும் குறிப்பாக ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வீசும் காற்று காரணமாக கடல்நீர் பகல் முழுவதும் உள்வாங்கி காணப்படும். மீண்டும் மதியத்திற்கு பிறகு சகஜநிலைக்கு திரும்பி விடும். இது வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறுவதுதான். இதனால் அச்சப்பட தேவையில்லை என்றனர்.
நேற்று பகல் வரையிலும் தெளிவாக வெளியே தெரிந்த நிலையில் இருந்த நவக்கிரக கற்களும் மதியத்திற்கு பிறகு கடல் நீர் ஏறி சகஜ நிலைக்கு திரும்பியது. இதனால் மீண்டும் கடல் நீரில் பாதி அளவுக்கு மேல் மூழ்கிய நிலையில் நவக்கிரக கற்கள் காணப்பட்டது. இதேபோல் ராமேசுவரம் சங்குமால் கடற்கரை, அக்னிதீர்த்த கடற்கரை, துறைமுக கடற்கரை மற்றும் பாம்பன் கடற்கரை பகுதியில் நேற்று காலை நேரத்தில் கடல்நீர் உள்வாங்கி காணப்பட்டது. பகல் 12 மணிக்கு பிறகு மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை.
- புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்...
1. படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்கிரதோஷம் படிப்படியாக குறையும். இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம், படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடிநீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.
2. அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.
3. வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.
4. ஆசான், வேதம் படித்தவர, நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது குருவின் ஆசிகள் கிடைக்கும்.
5. சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும்.
6. சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.
7. திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள் ), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகங்களையும் தரும்.
8. ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.
9. பாம்புகளை கண்டதும் அடிக்காமல் இருப்பது, இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது, குடி கெடுத்தவன், குடிகாரன், குரு துரோகி, பசுவை கொன்றவன், சண்டாளன் - இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு-கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம், போகம், மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும். ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமம் தான், தெரிந்தே சேர்வது நமக்கு தரித்தரம் )
10. பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.
- அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும்.
- திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.
சிவன், பெருமாள், முருகன் என அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும். கிரக தோஷம் நீங்க பக்தர்கள் நவக்கிரகங்களை வலம் வந்து விளக்கேற்றி வழிபடுவர். இதேபோல கோவை நகரில் ஆட்சி புரியும் கோனியம்மன் கோவிலிலும் நவக்கிரக சன்னதி உள்ளது. மற்ற கோவில்களில் நவக்கிரக சுவாமிகளும் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.
கிருத்திகா ரோகினி உடனமர் சந்திரபகவான், சுகீர்த்தி உடனமர் சுக்கிர பகவான், ஞானதேவி உடனமர் புதன் பகவான், சித்திரலேகா உடனமர் கேதுபகவான், சக்திதேவி உடனமர் செவ்வாய் பகவான், ஹிம்ஷிகா தேவி உடனமர் ராகுபகவான், சனி நீலாதேவி உடனமர் சனீஷ்வரபகவான், உஷா பிரத்யுஷா உடனமர் சூரியபகவான், தாராதேவி உடனமர் குருபகவான் என சுவாமி சிலைகள் உள்ளன.
இங்கு நவக்கிரகங்கள் மகிழ்ச்சியான நிலையில் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மகிழ்ச்சி நிலையில் இருக்கும் சுவாமிகளை வழிபட்டால் நாம் நினைத்து வழிபட்டது நடக்கும், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.
வியாழன், சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபடுவர். நவக்கிரக சன்னதி களில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார்கள். இங்குள்ள சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
- திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
- சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய் வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்
வெள்ளிக்கிழமை அன்று நாம் விசேஷமாக தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அப்படி நாம் வழிபடும் போது நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் என்ன என்று பார்க்கலாம்...
ஆன்மிகத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பட்ட தெய்வங்களை விசேஷமாக வழிபடுவது வழக்கம். இருப்பினும் நாம் தினமும் அனைத்து தெய்வங்களுக்கான மந்திரங்களை சொல்லி வழிபட அன்றை நாள் கூடுதல் விசேஷமாகும்.
விநாயகர்
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்
சிவன்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே
அம்பாள்
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும், குன்றாத இளமையும்,
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்,
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே,
ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி
அருள்வாய் அபிராமியே!

விஷ்ணு
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.
முருகன்
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடி வந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

நவகிரகம் : வெள்ளி/சுக்ரன்
சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.
- இக்கோவிலை நவக்கிரக கோவில் என்றும் அழைக்கிறார்கள்.
- இறைவனும், இறைவியும் தோன்றி நவக்கிரகங்களின் சாபத்தை விலக்கினர்.
தலவரலாறு
முன்னொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்று ஒருவர் இருந்தார். ஒருநாள் ஒரு இளந்துறவி காலவ முனிவரிடம் வந்தார். தனது வருங்காலம் பற்றி அறிவிக்கும்படி கேட்டார். காலவ முனிவர் தமது ஞானதிருஷ்டியால் இளந்துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்தார். உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை என்றார்.

உடனே அந்த இளந்துறவி காலவ முனிவரைப் பார்த்து, மற்றவரின் வருங்காலம் பற்றிக் கூறும் நீர் உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டோ? எனக்கேட்டு நகைத்து மறைந்தார்.
காலவ முனிவர் தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார். தனது முன்வினைப் பயனால் முன்ஜென்மத்தில் நண்டுகளின் காலை முரித்துத் தின்ற பாவத்தால், கூடிய விரைவில் தமக்குத் தொழுநோய் வரப்போகிறது என்பதை உணர்ந்தார்.
காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தைப் பார்த்த மற்ற முனிவர்கள், சோகத்துக்குக் காரணம் என்ன என்று விசாரித்தனர். காலவ முனிவர் தமது வருங்கால நிலையை எடுத்துரைத்தார்.
அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள். நவக்கிரகங்களை நோக்கித் தவம் செய்து வினைப் பயனிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்யும் என்று ஆறுதல் கூறினார்கள்.
அதன்படி காலவ முனிவர் நவக்கிரகங்களைத் தியானித்து கடுந்தவம் புரிந்தார். காலவ முனிவரின் முன் நவநாயகர்கள் ஒருசேர வந்து காட்சி கொடுத்தார்கள்.
முனிவரே உமது தவத்திற்கு மகிழ்ந்தோம் உமக்கு என்ன வரம் வேண்டும் என்றார்கள்.

காலவ முனிவர் நவநாயகர்களை நோக்கி, நவமண்டலாதிபர்களே வினைப்பயனையூட்டும் தேவர்களே அடியேனைத் தொழுநோய் பற்றும் சூழ்நிலை உள்ளது.
அந்த தொழுநோய் என்னை அணுகாதபடி வரம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நவ நாயகர்களும் அவ்வண்ணமே ஆகுக என்று வரம் தந்து மறைந்தனர்.
இந்த செய்தி பிரம்ம தேவருக்குத் தெரியவந்தது. நவக்கிரகங்களைத் தம்மிடம் வருமாறு செய்தார். அவர்களை நோக்கி, நவக்கிரகங்களே நீங்கள் தேவர்களாக இருந்தாலும், எம் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்களாவீர்கள். தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.
சிவபெருமானின் ஆணைப்படியும், கால தேவனின் துணை கொண்டும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவரவரது வினைப்பயனை ஊட்டுவதற்காகவே உங்களை யாம் படைத்தோம். அவ்வாறே நடக்கும் படியும் உங்களுக்கு உத்தரவிட்டோம்.
ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் மீறி நடக்கத் தொடங்கினீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்களாகி காலவ முனிவருக்குத் தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள்.
ஆகவே நீங்கள் ஒன்பதுபேரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் கஷ்டப்படவேண்டிய கால அளவு வரை நீங்கள் அந்த தொழுநோயால் துயர் அடைவீராக என்று சாபமிட்டார்.
சாபமொழி கேட்ட நவக்கிரகங்கள், அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து, தங்களின் சாபத்துக்கு விமோசனம் ஒன்று கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அதுகேட்டு மனம் இரங்கிய பிரம்மன், காவிரி ஆற்றின் வடகரையை அணுகுங்கள். அங்கே அர்க்கவனம் என்ற வெள்ளெருக்கங்காடு ஒன்று உள்ளது. அங்கே தங்கி இருந்து தவம்புரியுங்கள்.

கார்த்திகை மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிப் பன்னிரெண்டு ஞாயிற்றுக்கிழமை முடிய எழுபத்தெட்டு நாட்கள் தவம் புரியவேண்டும்.
திங்கட்கிழமைதோறும் உதயத்துக்கு முன்னதாகக் காவிரியில் நீராடி பிராண வரதரையும், மங்கள நாயகியையும் வழிபட வேண்டும்.
உதயாதி எழு நாழிகைக்குள் அர்க்க இலை (வெள்ளெருக்கு இலை)யில் ஒரு பிடி அளவு தயிர், அன்னம் வைத்து அதை சாப்பிட வேண்டும். மற்ற நாட்களில் உணவின்றி நோன்பு இருக்க வேண்டும். இந்த அரிய நோன்பைச் சிறிதளவும் தவறாமல் செய்து வந்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று சொன்னார்.
பிரம்மன் கூறிய வண்ணம் நவநாயகர்கள் பூலோகத்தை அடைந்து அர்க்கவனத்தைத் தேடி வந்து கொண்டிருந்தனர். தமக்கு முன்னே அவ்வழியில் அகத்தியர் செல்வதைக்கண்டு விரைந்து நடந்து அவரிடம் அணுகி வணங்கினார்கள். தமக்கு நேர்ந்த சாப வரலாற்றை கூறி அர்க்கவனத்தைத் தேடுகிறோம், அது உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்றனர்.

அகத்தியர், அவர்களைப் பார்த்து நாமும் அர்க்கவனத்திற்குத் சென்று பிராண வரதரை வழிபடச் செல்கிறோம். அவ்வனத்திற்கு உங்களையும் அழைத்துப் போகிறோம் வாருங்கள் என்று கூறி அழைத்துப்போனார்.
அவருடன் அந்த இடத்திற்கு சென்ற நவக்கிரக தெய்வங்கள் தங்கள் தவத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க கோள் தீர்த்த விநாயகரை பிரதிஷ்டை செய்து மங்கலநாயகி உடனாய பிராணநாதேஸ்வரரை வழிபட்டனர்.

அப்போது இறைவனும், இறைவியும் தோன்றி நவக்கிரகங்களின் சாபத்தை விலக்கி நவக்கிரக தெய்வங்களை நாடி வரும் பக்தர்களுக்கு சுதந்திரமாக அருள்பாலிக்க அருள்புரிந்தனர் என்பது புராணவரலாறு. அவர்கள் தவம் இருந்த இடமே சூரியனார்கோவில் ஆகும். இக்கோவிலை நவக்கிரக கோவில் என்றும் அழைக்கிறார்கள்.
சூரியன்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சூரியன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் சூரியனாரை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் சூர்ய நாராயணரே” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
சந்திரன்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சந்திரன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மகாலட்சுமியை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
சுக்கிரன்: ருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சுக்கிரன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அம்பாளை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
செவ்வாய்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு செவ்வாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் முருகனை வணங்கவேண்டும் அதோடு தினமும் ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
புதன்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு புதன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஸ்ரீராமனை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ராம ராம ராம, ஓம் நமோ, பகவதே வாசுதேவாய” என்ற மந்திரம் ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
குரு: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு குரு இருக்கும் பட்சத்தில் அவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
சனி: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சனி இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெங்கடாஜலபதியை வணங்கவேண்டும் அதோடு தினமும் “கோவிந்தா, ராமதாச ஆஞ்சநேய, அனுமன், நரசிம்மர் - யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே, சாஸ்தா - ஓம் தர்மசாஸ்தாவே சரணம்” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும். இதையும் படிக்கலாமே: நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா ? இந்த கதையை படியுங்கள்
ராகு: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு ராகு இருக்கும் பட்சத்தில் அவர்கள் துர்கை அம்மனை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் துர்கா தேவியே போற்றி ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
கேது: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு கேது இருக்கும் பட்சத்தில் அவர்கள் விநாயகரை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் சக்தி விநாயக நமஹ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
சந்திரன்: சந்திர பகவானுக்கு உரியது நெல். அதனால், அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது.
செவ்வாய்: செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். சொத்து சேரும்.
புதன்: புதனுக்குரியது பச்சை பயிறு. இத்தானியத்தை வைத்து வணங்கினால், கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம். ஜோதிட கலையில் புகழ் பெறலாம்.
குரு: குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
சுக்கிரன்: சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம்.
சனி: சனி பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும். கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நோய் தீரும். ஆயுள் அதிகமாகும்.
இராகு: இராகு பகவானுக்கு உரியது உளுந்து. உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை இராகு பகவானுக்கு உண்டு.
கேது: கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும்.