என் மலர்
நீங்கள் தேடியது "NCP"
- பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
- எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அஜித் பவார் மாநில துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றார்.
அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரசின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல், கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுனில் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களும் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தனர். அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்ற நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மராட்டிய அரசில் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் பிரபுல் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்.பி. சுனில் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு ஆதரவு அளித்து மந்திரிகளாக பதவியேற்ற 9 பேரையும் தகுதிநீக்கம் செய்யும்படி, சபாநாயகருக்கு இ-மெயில் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
- சரத் பவார் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.
- அப்போது பேசிய அவர், எங்களுக்கு அதிகாரப் பசி கிடையாது, மக்களுக்காக உழைக்கிறோம் என்றார்.
மும்பை:
மும்பையில் தனது எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் பேசியதாவது:
மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆண்டுகளாக தேசியவாத காஙகிரஸ் கட்சி வலுவான தலைமையை உருவாக்கியுள்ளது. மக்கள் நலன்களைப் பற்றி கவலைப்படாதவர்களின் கைகளில் இந்தியாவின் ஆட்சி உள்ளது.
எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம்.
இன்று ஒட்டுமொத்த நாடும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது. நம் வழியில் தடைகள் இருந்தாலும் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
நமது சின்னத்தை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டோம். யாரும் கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார்.
- சரத் பவார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
- அஜித் பவார் தலைமையில் மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
மும்பை:
மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பையில் இன்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் தனித்தனியாக நடைபெற்றன.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்களும், அஜித் பவார் தலைமையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.
இதையடுத்து, அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஜூலை 6-ம் தேதி (நாளை) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களை இன்று சந்தித்த சரத் பவார், கட்சியின் பெயரும் சின்னமும் யாரிடம் செல்லப் போவது இல்லை என்றார்.
- தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
- அப்போது பேசிய சரத் பவார், வயது ஒரு தடையல்ல, நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன் என்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் நேற்று தனித்தனியாக நடைபெற்றன.
இதையடுத்து, அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் தான். 82 ஆக இருந்தாலும் சரி, 92 ஆக இருந்தாலும் சரி, வயது ஒரு தடையல்ல. நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன். இன்றைய சந்திப்பு எங்களின் மன உறுதியை அதிகரிக்க உதவியுள்ளது என தெரிவித்தார்.
செயற்குழு கூட்டம் முடிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி திடீரென அங்கு வந்து சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார்.
- எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பு
- டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டத்தில் அஜித் பவார் பங்கேற்பு
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டவர் பிரபுல் பட்டேல். அப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்தார்.
அதன்பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தனியாக செயல்படுகிறார். அஜித் பவார் உடன் பிரபுல் பட்டேலும் சென்றுள்ளார். இவர்கள் தற்போது தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனக் கூறி வருகிறார்கள்.
நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரபுல் பட்டேல் கலந்து கொண்டார்.
அதன்பின் பேசிய பிரபுல் பட்டேல், தேசியவாத காங்கிரஸ் ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம் எனத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ''நானும், அஜித் பவாரும் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு அங்கம். எங்கள் தரப்பில் இருந்து அஜித் பவார் கருத்துகளை முன்னெடுத்து வைத்தார்'' என்றார்.
திங்கட்கிழமை காலையில் அஜித் பவார், பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோர் சரத்பவாரை சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக செயல்பட வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், சரத் பவார் அவர்களுடைய கருத்துகளை கேட்டுக்கொண்டு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
சரத் பவார் எங்களை அழைக்கவில்லை. நாங்கள் அவரை பார்க்கச் சென்று, அவருடைய வாழ்த்தை பெறச் சென்றோம் என்றார் அஜித் பவார்.
- அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜக-சிவசேனா கூட்டணி அரசில் இணைந்தனர்.
- சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தனி அணியாக பிரிந்தார். அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக-சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம் சரத்பவரால் நிறுவப்பட்ட தேசியவாத கட்சி பிளவுபட்டது.
இந்நிலையில் நாகாலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்களும் அஜித் பவாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாகாலாந்தில் உள்ள ஒட்டுமொத்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அஜித் பவார் பக்கம் சென்றது. சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது சிவசேனாவில் இருந்து ஷிண்டே எப்படி பிரிந்தாரோ, அதேபோன்று அஜித் பவாரின் அரசியல் நகர்வு இருக்கிறது. ஷிண்டே இறுதியில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ந்ததும், கட்சியை உடைத்து தனியாக பிரிந்த ஷிண்டே, பாஜகவுடன் கைகோர்த்து புதிய அரசை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
- அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.
- அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர்.
மும்பை:
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார்.
முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல் மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றcர்.
அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டம் பாந்திராவில் நடந்தது. அதன்பின், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்தார்.
இதேபோல், சரத் பவார் தரப்பினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சரத்பவார், அஜித்பவார் இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து துணை முதல்வரானார் அஜித் பவார்
- அஜித் பவார், சரத் பவார் ஆகியோருக்கு எத்தனை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு என்பது உறுதியாக தெரியவில்லை
மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும், அவருடன் சென்ற 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றனர்.
இதனால் சரத் பவார்- அஜித் பவார் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் இருந்தும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ளது.
பா.ஜனதா- ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தற்போது ஆட்சியில் உள்ளன. ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக நீடிப்பாரா? என்ற கேள்வி கடந்த சில வாரங்களுக்கு முன் எழுந்தது. பின்னர் அவர்தான் நீட்டிப்பார் என பா.ஜனதா உறுதியாக கூறியதால், அந்த பிரச்சனை அப்படியே அமர்ந்தது.
இந்த நிலையில் நேற்று சரத் பவார்- அஜித் பவார் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு புனேவில் உள்ள தொழில் அதிபர் அதுல் சோர்டியா பங்களாவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அமேல் மிட்கரி கூறுகையில் ''இரு தலைவர்களுடைய சந்திப்பு, குடும்பம் தொடர்பானதாக இருந்திருக்கும்'' என்றார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ. அதுல் பட்கால்கர் ''இதுகுறித்து ஜெயந்த் பாட்டீல் மற்றும் பவார்களிடம், சந்திப்பு குறித்து கேட்டால் சிறந்ததாக இருக்கும்'' என்றார்.
தேசியவாத காங்கிரசில் 54 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர்கள் சரத் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது, அஜித் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.
சிவசேனா கட்சியில் இருந்து 40 எல்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் இணைந்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து துணை முதல்வராகியுள்ளார்.
- சரத் பவாருடன் அஜித் பவார் ரகசிய சந்திப்பு
- அண்ணன் மகனை சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை என்றார் சரத் பவார்
மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஒன்றிணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வந்தன. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை கைப்பற்றி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்.
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பூசலை உண்டாக்கிய அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் பங்கேற்று துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வருகிறது. துரோகி என்ற அளவிற்கு அஜித் பவாரை சாடினார் சரத் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சி சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.
சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். கட்சி பிளவுக்குப் பிறகு ஏற்கனவே இருவரும் சந்தித்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் ரகசியமாக சந்தித்தது மகாராஷ்டிரா அரசியலில் பேசும்பொருளாக உருவெடுத்தது.
சந்திப்பு குறித்து சராத் பவார், தனது அண்ணன் மகனான அஜித் பவாரை சந்திப்பதில் தவறு இல்லை. ஒருபோதும் பா.ஜனதாவில் இணையமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் கட்சி பத்திரிகையான சாம்னா, சரத் பவார் தொடர்ந்து அஜித் பவாரை சந்திப்பது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அதில் ''அஜித் பவார் தொடர்ந்து சரத் பவாரை சந்திப்பதை பார்க்க நகைப்புக்குரியதாக உள்ளது. அவர் அதை தவிர்க்கவில்லை.
பா.ஜனதாவின் சாணக்கியர் குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து அஜித் பவரை சரத் பவாருடன் சந்திக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும், இதுபோன்ற சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். இது நல்லது அல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
- சரத் பவாரை அஜித் பவார் சந்தித்தது கூட்டணியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
- சரத் பவார் இல்லாமல் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க இருப்பதாக வதந்தி வெளியானது
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு அண்ணன் மகன் ஆவார்.
இருவருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வரும் நிலையில், குடும்ப விசயமாக சந்தித்துள்ளனர். முன்னதாக ஒருமுறை சரத் பவார் மனைவி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அஜித் பவார் சரத் பவார் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சரத் பவாரை அஜித் பவார் ரகசிய சென்று சந்தித்தார். இது குடும்ப சந்திப்பு என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.
ஆனால் சரத் பவார் உடன் கூட்டணி வைத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் இந்த சந்திப்பை விரும்பவில்லை.
சிவசேனா தனது கட்சி பத்திரிகையில் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தது. தொடர் சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.
சரத் பவார்- அஜித் பவார் சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
ஏனென்றால் இந்த மாத இறுதியில் மகாராஷ்டிராவில் இரண்டு நாட்கள் I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சிகள் உள்ளன.
இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமே, பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மேலும், பொதுத்தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என உத்தவ் தாக்கரே நினைக்கிறார். இவ்வாறு இருக்கும்போது பவார்கள் சந்திப்பு கூட்டணி கட்சிகளுக்கு சரியென்று படவில்லை.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், பவார்களின் சந்திப்பு கவலைக்குரிய விசயம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நானா பட்டோல் கூறியதாவது:-
இருவரின் சந்திப்பு எங்களை பொறுத்தவரை கவலைக்குரிய விசயம்தான். ரகசிய இடத்தில் நடைபெற்ற இருவருடைய சந்திப்பை நாங்கள் ஏற்கவில்லை. எனினும், இந்த விசயம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் விவாதிப்பார்கள். எதிர்க்கட்சி கூட்டணி விவாதிக்கும். ஆகவே, இது குறித்து மேலும் விவாதிப்பது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸ் மக்களவை தேர்தலில் சரத் பவார் கட்சி இல்லாமல் போட்டியிடும் என்பதில் எந்த உண்மையும் இல்லை'' என்றார்.
- அஜித் பவார் தலைமையிலான குழு தனியாக இயங்கி வருகிறது
- தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை என சரத் பவார் உறுதியாக கூறுகிறார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார், சில ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் உடன் தனியாக செயல்பட்டு வருகிறார். நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் எப்படி காய் நகர்த்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் சரத் பவாரே, தனது கட்சியை தக்கவைத்துக் கொள்வதில திண்டாடி வருகிறார். பொதுவாக ஒரு கட்சி பிளவுப்படும்போது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அதிகமாக யார் பக்கம் இருக்கிறார்களோ? அவர்கள் கைதான் ஓங்கியிருக்கும்.
ஆனால், சரத் பவார் எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சிகள் என்று அர்த்தம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில் ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. சில எம்.எல்.ஏ.-க்கள் விலகியுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், எம்.எல்.ஏ.-க்கள் அரசியல் கட்சி என்று அர்த்தம் கிடையாது. அவர்களுடைய பெயர்கள் கூறி, பிரிந்து சென்றவர்களுக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.
நேற்று சரத் பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவருமான சுப்ரியா சுலே, ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. அஜித் பவார் அதன் தலைவராக தொடர்கிறார்'' என்றார்.
இதற்கு முதலில் பதில் அளித்த சரத் பவார், ''இந்த விசயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை'' எனக் கூறியிருந்தார். பின்னர், இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 2-ந்தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 சட்டசபை உறுப்பினர்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா மந்திரிசபையில் இணைந்தனர்.
- ஏக்நாத் ஷிண்டே அரசில் இணைந்தது மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக...
- அனைத்து மக்களையும் பாதுகாப்பதுதான் எங்களது பணி
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்படும் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அஜித் பவார், பேசியபோது "நாங்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசில் இணைந்தது, மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான். நாங்கள் இந்த முடிவை மாநில வளர்ச்சிக்காக எடுத்தோம்.
அரசியலில், நிரந்தர எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. நாங்கள் மகாயுதி கூட்டணியில் உள்ளோம். எங்களுடைய பணி அனைத்து சாதி மற்றும் மத மக்களை காப்பாற்றுவதுதான். இதை மகாராஷ்டிர மாநிலத்தை ஒவ்வொருவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
நாங்கள் விவசாயிகளின் நலனுக்காக பணிபுரிவோம். நிலத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. நீர்வளத்துறை மந்திரியாக இருக்கும்போது இதற்கான ஏராளமான பணிகளை செய்துள்ளேன்" என்றார்.