என் மலர்
நீங்கள் தேடியது "NIA officers"
- பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் வீட்டில் இன்று சோதனை நடைபெற்றது.
- ராஜா முகமது வீட்டுக்கு இன்று காலை உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
பழனி:
நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவர் வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. இவர் தனது தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டுக்கு உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான பி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகியிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.
- மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முபின் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும், கோவையில் நாசவேலையை அரங்கேற்றும் நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
அவர்கள் அனைவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஐ.எஸ். தொடர்புடையவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில வாரங்களில், கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை, மயிலாடுதுறை என 40 இடங்களில் சோதனை நடக்கிறது.
இதில் கோவையில் மட்டும் கோவை கோட்டைமேடு, புல்லுக்காடு, உக்கடம், பிருந்தாவன் நகர், பாரத் நகர், குனியமுத்தூர், டி.கே.செட்டி வீதி, வசந்தா நகர் என 15 இடங்களில் சோதனை நடந்தது.
இந்த வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் 16 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 6 மணி முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது.
சோதனையின் போது வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டின் கதவுகளை பூட்டி கொண்டு வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.
இதபோல் பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த சையது ரகுமான் என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது.
சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. இருப்பினும் சோதனை முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் தெரியவரும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அசாருதீன் உள்பட 7 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் பல தகவல்களையும் கூறியுள்ளனர்.
அவர்களிடம் பெற்ற ஆதாரங்கள், வீடியோக்களின் அடிப்படையிலேயே இன்று இந்த சோதனையானது நடந்தது.
சென்னையில் இன்று 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனையின் போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
மயிலாடுதுறையில் முகம்மது பைசல் என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 4 இடங்களில் சோதனை நடந்தது. டவுன் கரிக்காத்தோப்பைச் சேர்ந்த அன்வர்தீன், ஏர்வாடி கட்டளைத் தெருவைச் சேர்ந்த கமாலுதீன், தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் ஒருவர் வீடு, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஆரீஸ் என்பவர் வீட்டில் இந்த சோதனை நடந்தது.
ஒரே நேரத்தில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலம்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை.
சென்னை:
இலங்கையில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு 13 இலங்கை தமிழர்கள் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலம் மங்களூரில் புகுந்தது தெரிய வந்தது.
இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழக பகுதிக்கு வந்து பின்னர் பஸ், ரெயில், கார், மோட்டார் சைக்கிள் மூலமாக இவர்கள் மங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அம்மாநில போலீசார் கண்டு பிடித்தனர்.
இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த சீனிஆபுல்கான் என்பவர் உள்பட சிலர் அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மங்களூர் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். இவர்களில் 3 பேர் தலை மறைவானார்கள்.
மங்களூர் போலீசார் நடத்தி வந்த இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சட்ட விரோதமாக இலங்கை தமிழர்களை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டி புதிய வழக்கை பதிவு செய்திருந்தார்கள்.
இதுபற்றி அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் ஆள் கடத்தலின் பின்னணி பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்தன. இலங்கையில் இருந்து 38 தமிழர்களை கனடாவில் குடியேற வைப்பதற்காக போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல் தயாரித்திருப்பதும் அம்பலமானது.
இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக 10 பேர் மீதும் கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 3 பேரில் சீனி ஆபுல்கான் என்கிற விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர் ராமநாதபுரத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
கோவை:
அண்டை நாடான வங்காளதேசத்தில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகளவு பனியன் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம், அரசியல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனியன் தொழில் முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர்.
இதன் காரணமாக வங்காளதேசத்தினர், மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, போலி ஆதார் அட்டைகளை தயாரித்து தமிழகத்திற்குள் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் நுழைந்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாகவே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் போர்வையில் தங்கி வேலை பார்த்து வந்த வங்க தேசத்தினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 8 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்.
கடந்த வாரத்தில் மட்டும் 39 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூர் மற்றும் கோவையில் தங்கியிருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பனியன் நிறுவனங்கள், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வடமாநில தொழிலாளர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தெரிந்தால் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்க்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரில் 24 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வாகனங்களில் வருபவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா? எதற்காக திருப்பூர் வருகின்றனர்? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்துகின்றனர்.முறையான ஆவணங்கள் வைத்துள்ளவர்களை தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கின்றனர்.
இதேபோல் மாவட்ட முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தின் ஊடுருவல் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் முகாமிட்டு, பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், இங்கும் வங்கதேசத்தினர் வந்து இருக்கலாம் என்பதால் தொழில் நிறுவனங்களில் சோதனை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:-
கோவை மாநகரை பொறுத்தவரை சட்டவிரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என்பது குறித்து தொடர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் உள்ள முகவரிகளிலும் விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையான விவரங்களே இருந்தன.
இருப்பினும் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணை நடத்துவதற்காக தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆலந்தூர்:
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்ரியா. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வரும் இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தெலுங்கானா போலீசாரும், அம்மாநிலத்தில் இயங்கி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஜக்ரியாவை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ஜக்ரியா வெளிமாநிலத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஜக்ரியா அதிகாரிகள் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெலுங்கானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவரது பின்னணி தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜக்ரியாவின் பாகிஸ்தான் பின்னணி தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்(வயது 38) கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி. யின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இந்த வழக்கை விசாரித்தனர். இதில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (35), ரத்தினபுரியை சேர்ந்த சதாம்உசேன்(27) ஆகியோருக்கு முக்கிய தொடர்பு இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சதாம் உசேன் (27) கைது செய்யப்பட்டார். பின்னர் அக்டோபர் மாதம் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த சுபைர்(33) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில் 15 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முபாரக்கை(37) கைது செய்தனர். இந்த வழக்கில் உடந்தையாக இருந்ததாக போத்தனூரை சேர்ந்த அபு தாகீர்(32) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கைதானவர்களிடம் விசாரணை நடத்திய போது கோவை கணபதியில் ஹக்கீம் என்ற பெயிண்டர் கொலைக்கு பழிக்கு பழியாக சசிகுமாரை கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். கைதானவர்கள் தலைமறைவாக இருந்தபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்- யார்? என விசாரணை நடத்தினர்.
இதில் இந்த வழக்கின் பின்னணயில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை உத்தரவின்பேரில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு எல்.ஆர். குமார் தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கில் கைதான முபாரக் உள்பட 4 பேரின் வீடுகளில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீடுகளில் இருந்து செல்போன்கள், பாக்கெட் டைரி, மெமரி கார்டுகள், ரசீதுகள், அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மே மாதம் செல்வபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் பெபின் ரகுமான், உக்கடத்தை சேர்ந்த அனீஷ், குனியமுத்தூரை சேர்ந்த ஹைதர் அலி, துடிய லூரை சேர்ந்த சதாம்உசேன், வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த முகமது அலி ஆகியோரது வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், டைரி, சி.டி.க்கள், செல்போன்கள், ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முபாரக்கை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது ஏராளமான முக்கிய தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்ததாக கூறப்பட்டது.
இந்தநிலையில் இன்று சாய்பாபா காலனியை சேர்ந்த ஷாஜகான் என்பவரது வீட்டில் திடீரென என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் துடியலூரில் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார்.
என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையில் அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து ஷாஜகானின் வீடு மற்றும் மர அறுவை ஆலையில் தனித்தனியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் கோவை மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஷாஜகான் வீட்டில் நடந்து வரும் சோதனை குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-
ஷாஜகானின் வீட்டில் மத வழிபாடு வகுப்புகள் நடந்து வந்தது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் திரட்டுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்து முன்னணி பிரமுகர் கொலையில் கைதானவர்களுக்கு ஷாஜகான் உதவி செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #HinduMunnani #Sasikumar
கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் முபாரக்(35), சதாம்உசேன் (27), சுபைர்(33), அபுதாகீர் (32) ஆகிய 4 பேரை சி.பி.சி. ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் பின்னணியில் ஒரு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் கைதான முபாரக் உள்ளிட்ட 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மார்ச்18-ந் தேதி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து நேற்று செல்வபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் பெபின் ரகுமான்(25), உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த அனீஷ்(32), குனியமுத்தூர் சுகுணாபுரத்தை சேர்ந்த ஹைதர் அலி(33), துடியலூர் சேரன் காலனியை சேர்ந்த சதாம் உசேன், வெள்ளக் கிணறு பகுதியை சேர்ந்த முகமது அலி ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் ஒரு லேப்டாப், டைரி, 3 சி.டி.க்கள், செல்போன்கள், 50-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரிடமும் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அவர்களை ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு கூறி சென்றனர்.
கைப்பற்றப்பட்ட செல்போன், சிம்கார்டுகள், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலக ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சசிகுமார் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட முபாரக் உள்பட 4 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் வீடுகளில் சோதனை நடத்தப்பட் டது. இதில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
என்.ஐ.ஏ. விசாரணையில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதன் பேரில் மேலும் 13 வாலிபர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினர்.
இதற்கிடையே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்ற பெபின் ரகுமான், ஹைதர் அலி, அனீஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலை நேரத்தில் எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதம் செய்துள்ளனர். வெளியில் இருந்து லேப்டாப்பை கொண்டு வந்து வைத்து ஏதோ காகிதங்களில் எழுதி மிரட்டி கையெழுத்து பெற்றனர். எனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.