என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiri"

    • இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன.
    • 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    மலைகளின் அரசியான ஊட்டிக்கு சாதாரண நாட்களை விட விடுமுறை தினங்களில் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.

    கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.

    இந்த கட்டுப்பாடு ஏப்.1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட இ-பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த மறு ஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மழை பாதிப்பை பார்வையிட்ட அமைச்சர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
    • மழையினால் பாதிப்புகள் ஏற்ப்பட்டால் உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளவேண்டும்

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக மழையின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி தடுப்புச்சுவர் சேதம், ஓம்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆகியவற்றை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தங்களை கவனமுடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் மழையினால் பாதிப்புகள் ஏற்ப்பட்டால் உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளவேண்டும் என கூறினார். இந்த மழைபாதிப்புகள் குறித்த ஆய்வின் போது கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் காயத்ரி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கோத்தகிரி அரசு பள்ளியில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தும் பணி நடைபெற்றதையும் அவர் பார்வையிட்டார். 

    • றப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 01.01.2023-2ஐ தகுதிநாளாகக் கொண்டு 09.11.2022 முதல் 08.12.2022 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் நடைபெறுகிறது. மேலும் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைதிருத்தங்கள், முகவரி மாற்றங்கள் மற்றும் வாக்காளர் அடையான அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம். மேலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 09.11.2022 அன்று முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பொதுமக்கள் உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    ஏற்கனவே 12:11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்றது. அதை போல் இன்று 26.11.2022 மற்றும் நாளை 27.11.2022 காலை 10.00 மணி முதல் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றிக்கு விண்ணப்பங்களை வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமே பெற்று ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பொதுமக்கள் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி சம்மந்தப்பட்ட வாக்குச்சா வடிகளை அணுகி வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டும், திருத்தங்க ள் இருப்பின், அதனை சரி செய்வதற்குரிய படிவத்தை பெற்று உரிய ஆதாரங்க ளுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை சென்று ஆய்வு செய்யும்போது, வாக்காளர்கள் இறந்துவிட்டதாக வீட்டின் அருகில் உள்ளவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில், அந்த விவரத்தினை சம்மந்தப்பட்ட வாக்குசாவடி நிலை முகவர்கள் மூலம் உறுதி செய்து, சம்மந்தப்பட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செம்மையான வாக்காளர் பட்டியல் வெளியிடும் வகையில் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் நடந்தது. 

    • பிளாஸ்டிக் பொருள் வைத்திருந்ததற்காக ரூ.79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • ஒரு கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஊட்டி

    தமிழக அரசு ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பினாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்,ஓட்டல், பேக்கரி, உணவகங்கள், வணிக வளாகங்கள், பார்கெட் ஆகிய பகுதிகளில் தடைசெய்யப்ட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வு மேற்கொண்டதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 15 கிலோ பறிமுதல் செய்யபட்டு ரூ.55,000 அபராதம் விதித்தனர். குன்னூர் வட்டாட்சியர் தலைமையில், 2 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.4,500அபராதம் விதித்தனர்.

    உதகை நகராட்சி ஆணையாளர் தலைமையில், 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.5,000 அபராதம் விதித்தனர். குன்னூர் நகராட்சி ஆனையாளர் தலைமையில், 300 கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.7,000 அபராதம் விதித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர்களின் ஆய்வில் ஒரு கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ. 7.500 அபராதம் விதித்தனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், 100 கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.500 அபராதம் விதித்தளர்,

    நீலகிரி மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 19.400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, அக்கடைகளுக்கு 25.11.2022 மற்றும் இன்று 26.11.2022 அபராத தொகையாக மொத்தம் ரூ.79,600 விதிக்கப்பட்டது. மேலும், தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    • கடந்த மாதம் 19-ந் தேதி காட்டு யானை தாக்கியதில் பாப்பாத்தி என்ற பெண் உயிரிழந்தாா்.
    • 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், 4 கால்நடை மருத்துவா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி

    கூடலூா், தேவாலா வாழவயல் பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி காட்டு யானை தாக்கியதில் பாப்பாத்தி என்ற பெண் உயிரிழந்தாா். தொடா்ந்து பி.எம்.2 மக்னா என்ற அந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் வலியுறுத்தினா்.

    இதனைத் தொடா்ந்து அந்த யானையை பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

    இதற்கிடைேய அந்த யானை நாடுகாணியை அடுத்த காரக்கொல்லி வனப்பகுதியில் உலவி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.

    இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினா், 4 கால்நடை மருத்துவா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர்.

    இதற்கிடையே கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கரளிகண்டி வனப்பகுதியில் கூடலூர் உதவி வன பாதுகாவலர் தலைமையில் கூடலூர், பந்தலூர், நாடுகாணி வனச்சரக பணியாளர்கள் மற்றும் வன உயிரின கால்நடை மருத்துவ குழுவினருடன், மக்னா யானையின் கால் தடத்தை வைத்து டிரோன் காமிரா மூலம் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது யானை முண்டக்கொல்லி வனப்பகுதிக்குள் யானை தென்பட்டுள்ளது.

    இதனால் அந்த யானை இரவு நேரத்தில் வாச்சிக்கொல்லி, புளியம்பாறை, மரம்பிலா கோல்கேட், கோழிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த ெபாதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • 1758-ஆம் ஆண்டு டிசம்பா் 4-ந் தேதி மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் உருவாக்கப்பட்டது.
    • ராணுவ வீரா்களின் உயிா் தியாகத்தை போற்றும் வகையில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஊட்டி

    சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் 1758-ஆம் ஆண்டு டிசம்பா் 4-ந் தேதி மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் உருவாக்கப்பட்டது. பின்னா் மதுக்கரையில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையம் உருவாக்கப்பட்டு, 1947 ஆம் ஆண்டு குன்னூா் வெலிங்டனில் உள்ள ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ்க்கு மாற்றப்பட்டது. இரண்டரை நூற்றாண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற வரலாற்றை கொண்டுள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் 264-வது உதய தினம் நீலகிரியில் கொண்டாடப்பட்டது.

    இதில், பல்வேறு போா்களில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களின் உயிா் தியாகத்தை போற்றும் வகையில் போா் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ், ராணுவ மூத்த அதிகாரிகள் மற்றும் படைவீரா்கள் இதில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸில் சைனிக் சம்மேளனம், முன்னாள் படைவீரா்கள், தற்போது பணியில் இருக்கும் படை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.

    • பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊட்டி,

    தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தநிலையில் ஊட்டி ஊரக போலீஸ் நிலையம் சார்பில் முத்தொரை பஜாரில் இருந்து முத்தோரை பாலாடா வரை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊட்டி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி விஜயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ஆட்டம், பாட்டத்துடன் களைகட்ட உள்ளது
    • புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஓட்டல்கள், விடுதிகள் முழுவதும் அலங்கார தோரணங்கள், வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது.

    இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் வருகை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு மிகவும் உற்சாகமான நிகழ்வுகள், மறக்கமுடியாத இரவுகள் இனிப்பான செயல்பாடுகளுடன் கொண்டாடப்படும்.

    அந்த வகையில் இந்த ஆண்டும் 2023 புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரியில் தற்போது கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது. புத்தாண்டை கொண்டுவதற்காகவே தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் இங்கு வருவார்கள். இதனால் ஊட்டியில் உள்ள விடுதிகள், லாட்ஜூகள், ஓட்டல்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது.

    புத்தாண்டு தினத்தின் முந்தைய தினமான நாளை இரவு ஊட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், பட்டாசு என, புத்தாண்டை அமர்க்களமாக வரவேற்க சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் தயாராகி வருகிறார்கள். புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஓட்டல்கள், விடுதிகள் முழுவதும் அலங்கார தோரணங்கள், வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இரவில் ஊட்டி நகரமே வண்ண விளக்குகளாலும், அலங்காரத்தினாலும் ஜொலிக்கிறது. இதுதவிர வித, விதமான உணவு வகைகளும் சுற்றுலா பயணிகளுக்கு தயாராகி வருகிறது.

    இதுதவிர ஊட்டியில் உள்ள மாரியம்மன், காந்தல் காசிவிஸ்வநாதர், எல்க்ஹில் முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், குழந்தை ஏசு, புனித மரியன்னை, சி.எஸ்.ஐ., தூய யோவான், மைக்கா மவுண்ட்உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இதில் திரளான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதேபோல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர், கோத்திகிரியில் உள்ள பூங்காக்கள், முதுமலை புலிகள் காப்பகம் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து புத்தாண்டை கொண்டாட உள்ளனர்.

    புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்கள், முக்கிய சாலைகள் என பல்வேறு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை மாவட்டத்திலும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். கோவையில் அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் ஏராளமான நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன.

    இந்த ஓட்டல்களில் எல்லாம் புத்தாண்டையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போதே தீவிரமாக நடந்து வருகிறது.

    ஓட்டல்கள் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அந்தபகுதியே வண்ணமயமாக ஜொலிக்கிறது. புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு பல்வேறு விதமான ஆட்டம், பாட்டத்துடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று பொள்ளாச்சி, ஆனைகட்டி, ஆனைமலை போன்ற இடங்களில் உள்ள ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாடத்திற்கு தயராகி வருகிறார்கள். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மக்கள் அதிகளவில் கூடி புத்தாண்டை கொண்டாடுவார்கள்.

    அப்போது சாலையில் இளைஞர்கள் கார், மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து சென்றும், கேக் வெட்டியும் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதுதவிர கோவில்களில் சிறப்பு பூஜையும், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.

    புத்தாண்டை மக்கள் பாதுகாப்புடன் கொண்டாட போலீசாரும் அறிவுறுத்தி உள்ளனர். புத்தாண்டையொட்டி கோவை மாவட்டத்தில் மாநகரில 1500 போலீசாரும் 1500 போலீசாரும் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது
    • நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சிவசண்முகராஜா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அம்ரித் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி உத்தரவிற்கிணங்க, 1.1.2023 தேதியினை தகுதி நாளாகக்கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டது.

    இச்சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முழுமையான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியர்களான துரைசாமி (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதுதுல்லா (கூடலூர்), நகராட்சி ஆணையாளர்கள் காந்திராஜ் (ஊட்டி), திரு.கிருஷ்ணமூர்த்தி (குன்னூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, தேர்தல் தாசில்தார் புஷ்பா தேவி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தாசில்தார்கள் ராஜசேகர் (ஊட்டி),காயத்ரி (கோத்தகிரி), நடேசன் (பந்தலூர்), சித்தராஜ் (கூடலூர்), இந்திரா (குந்தா) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.
    • பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித், பலூன்க ளை பறக்க விட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அதேபோன்று விளையாட்டுத் துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    அதன் அடிப்படையில் இன்றைய தினம் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-

    மாணவிகள், மாற்றுத்திற னாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் என அனைவரும் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டி, தடகள போட்டி, இறகுபந்து போட்டி, கபடி போட்டி, சிலம்பம், நீச்சல் போட்டி, கிரிக்கெட் போட்டி, ஆக்கிப் போட்டி, கையுந்து போட்டி என பல்வேறு போட்டிகள் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.

    எனவே அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி தாசில்தார் ராஜசேகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.
    • ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.

    தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

    நாளை காலை 10 மணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நீலகிரி முதலாவது புத்தக திருவிழாவை தொடக்கி வைக்கின்றனர்.

    தொடர்ந்து ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.

    பப்பாசி குமரன் பதிப்பகத்தின் தலைவர் வயிரவன் அறிமுக உரையாற்றுகிறார். திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேச உள்ளார்.

    மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜின் நாட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    6-ந் தேதி எழுத்தாளர் இமயத்தின் வாழ்க்கைதான் இலக்கியம் சிறப்புரை, பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சியும், பாபு நிஸாவின் கரோக்கி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

    7-ந் தேதி திரைப்பட பாடல் ஆசிரியர் யுகபாரதியின் சிறப்புரையும், பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமாரின் மழைத்துளிகள் சொல்லி சென்ற கதை குறித்து பேசுகிறார். இதுதவிர பெண்களுக்கு பெரிதும் மனநிறைவு தருவது குடும்ப பொறுப்பே, சமுதாய பொறுப்பே என்ற தலைமையில் பட்டிமன்றமும் நடக்கிறது.

    9-ந் தேதி வரலாற்று நாவல் ஆசிரியர் ஸ்ரீமதி வரலாற்று புதினங்கள் வற்றாத புதையல்கள் குறித்து பேசுகிறார். மணிஹட்டி சிவாவின் படுகா நடனமும் நடக்கிறது. 10-ந் தேதி சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பூனையும், பாற்கடலும் குறித்து பேசுகிறார்.

    தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எழுத்தாளர்கள் உள்பட பல துறைகளில் சாதித் தவர்கள் பங் கேற்று சிறப்புரை யாற்றுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    14-ந் தேதி நிறைவு விழா நடக்கிறது.

    இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    நாளை முதல் 14-ந் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்குகிறது.

    11 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, 1 மணிக்கு பட்டிமன்றங்கள் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    • ஊட்டிக்கு வருகை தந்து வருகிற ஜூன் மாதத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
    • ஊட்டி 200 லட்சினையும் திறந்து வைத்தார்.

    ஊட்டி

    கடந்த 1819-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன் தற்போதுள்ள ஊட்டியை கட்டமைத்து, நவீனப்படுத்தி வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினாா்.

    இவா் ஊட்டிக்கு வருகை தந்து வருகிற ஜூன் மாதத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

    இதனைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சாா்பில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கலைத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலைத் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.

    புத்தகத் திருவிழாவை நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். இதனைத் தொடா்ந்து, 'ஊட்டி 200 என்ற லோகோவை' வெளியிட்டார். தொடர்ந்து ஊட்டி 200 லட்சினையும் திறந்து வைத்தார். விழாவில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எழுத்தாளர்கள் உள்பட பல துறைகளில் சாதித்தவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்கள். இதுதவிர கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இந்த புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளன.

    இதில், ஜான் சல்லீவன் நவீன ஊட்டி உருவாக எடுத்த முயற்சி, நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள், மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

    மேலும், வனத் துறையின் மூலம் வன விலங்குகள் பாதுகாப்பது குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் பதப்படுத்தப்பட்ட சிறுத்தை, நீலகிரி வரையாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கிய புத்தக திருவிழாவினை காண நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.

    பொதுமக்கள், மாணவ, மாணவிகள், புத்தக பிரியர்கள் என அனைவரும் புத்தக அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட ஊராட்சி தலைவர்பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×