என் மலர்
நீங்கள் தேடியது "Noodles"
- சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார்.
- மனைவி, சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.
கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். குஞ்சனிடம் இருந்து சந்தீப் விவாகரத்து பெற விரும்பினார். அவர் ஒரு வழக்கறிஞரைக் கூட அணுகியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார். ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கினார்.
மனைவியும் சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்தார்.
பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார். அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி போலீசில் சரணடைந்தார். குஞ்சன் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் அறிவித்தனர். சந்தீப்பை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
- அனைவருக்கும் பனீர் பக்கோரா மிகவும் பிடிக்கும்.
- பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது.
நூடுல்ஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் பனீர் சேர்த்து என்றால் விட்டு வைக்கவே மாட்டார்கள். பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது. பனீரையும், நூடுஸ்சையும் வைத்து பன்னீர் பக்கோரா செய்தால் அவ்வளவுதான் செய்த உடனேயே காலியாகிவிடும். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த டிஷ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
பனீர்- ஒரு கப் துருவியது
நூடுல்ஸ் - 2 பாக்கெட்டுகள்
கான்பிளார் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - கால் கப்
குடைமிளகாய் - 1
முட்டைக்கோஸ் - 1 கப்
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
சீஸ் - அரை கப்
உப்பு - தேயான அளவு
செய்முறை
முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, நூடுல்ஸ் மசாலாப் பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். பின்னர் நூடுல்ஸ் வெந்ததும் எடுத்து தனியே வைக்க வேண்டும்.
நூடுல்ஸ் ஆறிய பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பச்சை கொத்தமல்லி, மிளகாய் தூள், ரவை, பூண்டு விழுது, சீஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உருண்டைகளுக்கு நடுவே விருப்பப்பட்டால் சீஸ் துண்டுகளையும் வைத்து மூடி வைக்கலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை விட்டு பொறித்து எடுக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி, கொத்தமல்லி சாஸுடன் பரிமாறவும்.
மிச்சம் வைக்காமல் அனைத்தும் உடனேயே காலியாகிவிடும்.

- நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாகும்.
- நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ் என்பது குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவாகும்.
நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும் புரோட்டீன்களும் குறைவாக இருப்பதால் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
நூடுல்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உருவாக்கும். மேலும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் மலக்குடல் புற்றுநோய் வர வழிவகுக்கும். நூடுல்ஸில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது, இது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
நூடுல்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அவை விரைவாக செரிமானமாகி பசியை அதிகரிக்கும். நூடுல்ஸில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்.
- நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.
- ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.
நூடுல்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான உணவுத் தேர்வாக மாறியுள்ளது. ஏனெனில் அவை மலிவானவை, தயாரிப்பதற்கு எளிதானவை மற்றும் வசதியானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நூடுல்ஸ் என்றாலே பிடிக்கும்.
இருப்பினும், நூடுல்ஸை தொடர்ந்து உட்கொள்வதால் சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் உள்ளன. நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி பார்க்கலாம்.
நூடுல்சில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. இது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சோடியம் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதினால் உயர் ரத்த அழுத்தம், நீர் தக்கவைத்தல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. அவை போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதில்லை. மேலும் அவற்றை தொடர்ந்து உட்கொள்வது குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
உடல் பருமன்
நூடுல்சில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இது தொடர்ந்து உட்கொண்டால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும். தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது. இது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
புற்றுநோய்
நூடுல்சில் பிஸ்பெனால் ஏ போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இது பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. நூடுல்சை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக வயிற்று புற்றுநோய். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடும் பெண்களுக்கு வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 68 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
செரிமான பிரச்னைகள்
நூடுல்சில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள அதிக சோடியம் காரணமாக வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒரே நாளில் பல நூடுல்சை உட்கொள்வது வயிற்றில் அசௌகரியம் மற்றும் ஒழுங்கற்ற குடல் அசைவுகளை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகமாக உள்ளது. இது மூளையில் உள்ள இரசாயனங்களின் சமநிலையை சீர்குலைக்கும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்சை உட்கொள்வது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
நூடுல்ஸ் ஒரு வசதியான மற்றும் மலிவான உணவு. விருப்பமாக இருந்தாலும், அவை பலவிதமான உடல்நல அபாயங்களுடன் வருகின்றன. அவற்றை மிதமாக உட்கொள்வது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், நூடுல்சை வழக்கமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கலாம்.
- காரம் மற்றும் சுவை காரணமாக நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.
- பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது.
கோபன்ஹேகன்:
தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடுல்சை தயாரித்து விற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.
இந்தநிலையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அதிக கார சுவை கொண்ட இந்த நூடுல்சுக்கு தடை விதித்துள்ளது. டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அந்த நூடுல்சில் அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக கூறியுள்ளது. காப்சைசின் என்பது மிளகாய், மிளகு உள்ளிட்டவற்றில் காரத்தன்மைக்கு வித்திடும் இயற்கையான கூட்டு வேதியியல் கலவையாகும். இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதனை திரும்ப பெறுமாறும் கேட்டு கொண்டுள்ளது.
- இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரி செலுத்தியாக வேண்டும்.
- இதற்கு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) என்று பெயர்.
இந்தியாவை தங்களின் விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதனால் அங்கு வணிகம் மேற்கொண்டிருக்கும் நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து இந்தியவிலும், இந்திய நிறுவனங்களும் அந்நாட்டிலும் வர்த்தகம் செய்து வருகின்றன. சுவிட்சர்லாந்து சட்டப்படி மற்ற நாட்டு நிறுவனங்கள் 10% வரியை செலுத்த வேண்டும்.
ஆனால் இந்தியா போன்று விருப்ப பட்டியலில் இருக்கும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 5% வரியை செலுத்தினால் போதுமானது. இதற்கு இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) என்று பெயர். இந்த விருப்ப பட்டியலிலிருந்துதான் தற்போது இந்தியாவை அந்நாடு நீக்கியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனமான 'நெஸ்லே' பொருட்கள் இந்தியாவில் அதிக புழக்கத்தில் உள்ளன. அதில் குறிப்பாக மேகி நூடுல்ஸ் அதிக விற்பனை ஆகும் பண்டமாக இருந்தது.

ஆனால் உணவுப் பொருளான மேகி நூடுல்ஸ் -இல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரசாயனம் கலந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மேகி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
ஆனால் அதிக ரசாயனம் கலக்கவில்லை என கூறி நெஸ்லே நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

வெகு காலமாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசின் முடிவு சரிதான் என்ற தீர்ப்பளித்தது. இதனால் குமைச்சலில் இருந்த சுவிட்சர்லாந்து தற்போது இந்த வேலையை பார்த்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அன்றைய தேதி முதல் அந்நாட்டில் வணிகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரி செலுத்தியாக வேண்டும்.
- எந்தவித பயமும் இல்லாமல் ஜாலியாக ‘நூடுல்ஸ்’ சாப்பிட்டு கொண்டே ஸ்கை டைவிங் சாகசம் செய்கிறார்.
- ஒரு பயனர், வாழ்க்கையை எவ்வாறு ரசித்து வாழ வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என பதிவிட்டார்.
வான்சாகசம், கடல் சாகசம் போன்ற சாகச விளையாட்டுகளை விரும்பும் வாலிபர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான வான் சாகசத்தை விரும்பிய ஒருவர் 'ஸ்கை டைவிங்' சாகசம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக 'ஸ்கை டைவிங்' செய்யும் பெரும்பாலானோர் கண்களை மூடி கொள்வது, தனது பாதுகாவலரை இறுக்கி பிடித்து கொள்வது போன்ற செயல்களை செய்வார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் 'ஸ்கை டைவிங்' செய்யும் வாலிபர் உயரத்தில் இருந்து குதிப்பது குறித்து எந்தவித பயமும் இல்லாமல் ஜாலியாக 'நூடுல்ஸ்' சாப்பிட்டு கொண்டே ஸ்கை டைவிங் சாகசம் செய்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், 'ஸ்கை டைவிங்' செய்வதே சுவாரஸ்யமான ஒரு விஷயம். இந்த வாலிபர் அதை மேலும் சுவாரஸ்யமாக்கி விட்டார் என பதிவிட்டனர். ஒரு பயனர், வாழ்க்கையை எவ்வாறு ரசித்து வாழ வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என பதிவிட்டார்.
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் -1
பீன்ஸ் - 5
பச்சை பட்டாணி - கொஞ்சம்
உருளைக்கிழங்கு - கொஞ்சம்
எண்ணெய் - தேவையான அளவு
மேகி நூடுல்ஸ் - சின்ன பாக்கெட்
கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.
வேகவைத்த மேகி நூடுல்ஸ்சுடன், வதங்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறிது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.
கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்சில் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.
எண்ணெய் - 5 தேக்கரண்டி,
வெங்காயம் - 2,
குடைமிளகாய் - 1,
முட்டைகோஸ் - 1/4,
கேரட் - 3,
பீன்ஸ் - 2,
முட்டை - 2,
மட்டன் - 100 கிராம்,
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு, சர்க்கரை - ½ தேக்கரண்டி,

செய்முறை :
வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீன்ஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
மட்டனை உப்பு, வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கறிகள் சற்று வதங்கியதும் முட்டையை ஊற்றி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.
கடைசியாக பின்பு நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.
மேகி நூடுல்ஸ் - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
பொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
வெங்காயத்தாள் - 1 கட்டு
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிது துண்டு,
பச்சைமிளகாய் - 2,
செஷ்வான் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 3 டீஸ்பூன்

செய்முறை :
நூடுல்ஸில் கால் பங்கை நன்றாக நொறுக்கி வைக்கவும்.
மீதமுள்ள முக்கால் பாகம் நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்த நன்றாக மசித்து கொள்ளவும்.
மைதா மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கேரட், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி, மேகி நூடுல்ஸ் மசாலா, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயத்தாள், செஷ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நொறுக்கிய நூடுல்ஸை ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும்.
கலந்த கலவையை விருப்பமான வடிவில் பிடித்து மைதா மாவில் முக்கி நொறுக்கி வைத்துள்ள நூடுல்ஸில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
கேரட் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், நூடுல்ஸை போட்டு, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் வேக வைத்து இறக்கி, நீரை வடித்துவிட்டு, பின் குளிர்ந்த நீரால் நூடுல்ஸை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூண்டு வெஜ் நூடுல்ஸ் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நூடுல்ஸ் - 200 கிராம்
மைதா மாவு - 200 கிராம்
வெங்காயம் - 2
கேரட் துருவல் - கால் கப்
உருளைக்கிழங்கு - 2
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
முட்டைக்கோஸ் துருவல் - கால் கப்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மைதா மாவை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டைக்கோஸ், கேரட், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, இறக்க வேண்டும்.
அதனுடன் உருளைக்கிழங்கு, நூடுல்ஸ், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்த மாவை பூரி போல் உருட்டி சமோசா வடிவல் மடித்து அதன் நடுவில் நூடுல்ஸ் மசாலாவை வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு ஓட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சமோசக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான நூடுல்ஸ் சமோசா ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.