என் மலர்
நீங்கள் தேடியது "Oscars"
- இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
- இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் (west bank) சட்டவிரோதமாக ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.
நோ அதர் லேண்ட் படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த ததகவலை பகிர்ந்துள்ளார். "எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால், இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது" என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.

இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற நோ அதர் லேண்ட் படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
இந்த படத்தை மசாஃபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தாம் பல்லா கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொன்றிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.
பயங்கரவாதிகள்(பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
- ஆர்.ஆர்.ஆர். மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கும் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்திற்கும் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.
- ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்கர் விருது குழுவில் தேர்வாகியுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். அதில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிலிருந்து 6 நபர்கள் ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாகவுள்ளது. இந்திய சினிமாவில் இருந்து இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண்
- இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் கடந்த ஆண்டு வெளியாகிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய 'பார்க்கிங்' படத்தில் நடித்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை வாங்கியது பார்க்கிங் திரைப்படம்.
திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்தார்.
ஒரு ஐடி இளைஞனும், அரசாங்க ஊழியரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் இருப்பது ஒரே ஒரு பார்க்கிங் ஸ்லாட் மட்டும் தான். அதில் யார் காரை நிறுத்துவது என்பதை மையமாக வைத்து இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். ஒரு தனிமனித ஈகோ எந்த எல்லை வரைக்கும் செல்லும் என இப்படம் தெளிவாக காட்சி படுத்தி இருக்கும், படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார் ராம்குமார்.
சமீபத்தில் படித்தின் ரீமேக் ரைட்ஸை 5 மொழிகளில் வாங்கினர். இந்நிலையில் படத்தின் திரைக்கதையை ஆஸ்கர் லைப்ரரி கோர் கல்க்ஷனில் இணைக்க படத்தின் தயாரிப்பாளரை கேட்டு அகாடமியில் இருந்து மெயிலை அனுப்பியுள்ளது, இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் ஒரு நல்ல கதை அதுக்கான இடத்த தானே தேடி போகும் என்று நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
- ஆஸ்கார் விழாவில், ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது.
WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.
16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெறவுள்ளார்.
47 வயதாகும் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர்.
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41 இல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜான் சீனா அறிவித்தார்.
மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
- அதிகாரப்பூர்வமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருந்தது.
- இந்தி மொழி திரைப்படமான சந்தோஷ் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு நாடு முழுக்க 29 படங்களில் ஒரு படத்தை அனுப்பும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 29 திரைப்படங்களை பார்த்த இந்திய திரைப்பட கூட்டமைப்பு ஆஸ்கர்ஸ் 2025 விருதுக்கு இந்தியா சார்பில் லாபட்டா லேடீஸ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி ஆஸ்கர் 2025-க்கு தகுதியான படங்களின் பெயர்களை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட லாபட்டா லேடீஸ் திரைப்படம் இடம்பெறவில்லை. எனினும், சர்வதேச இணை தயாரிப்பில் வெளியான இந்தி மொழி திரைப்படமான சந்தோஷ் இடம்பெற்றுள்ளது.
"சிறந்த சர்வதேச திரைப்படம்" சந்தோஷ் திரைப்படம் சிறந்த சர்வதேச அம்சத்திற்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
- ஆஸ்கர்ஸ் பரிந்துரை பட்டியலில் லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் இடம்பெற்றுள்ளது.
- இந்தியா சார்பில் ஒற்றை நம்பிக்கையாக உள்ளது.
ஆஸ்கர்ஸ் விருதுகள் 2025-ல் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் பரிந்துரைப் பட்டியலில் இந்தியா சார்பில் "அனுஜா" இடம்பெற்றுள்ளது. இந்த குறும்படத்தின் வெளியீட்டு தேதியை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃப்ளிக்ஸ் தற்போது அறிவித்து இருக்கிறது.
அதன்படி 2025 ஆஸ்கர்ஸ் பரிந்துரை பட்டியலில் உள்ள "அனுஜா" குறும்படம் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் அதன் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், "அனுஜா என்பது விரைந்து மீள்தன்மை, சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையின் கதை. அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லைவ் ஆக்ஷன் குறும்படம் பிப்ரவரி 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வருகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதோடு குறும்படத்தின் டிரெய்லரும் வெளியாகி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்க உள்ளார்.
- 'எமிலியா பெரெஸ்' 13 பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் உலகளவில் மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெளியான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்கள், பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கும் வழக்கும் கடந்த 96 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் நாளை காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான நிகழ்ச்சிகள் இன்றிரவு தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்க உள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ஸ்பானிஷ் மொழி திரைப்படமான 'எமிலியா பெரெஸ்' 13 பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக பிரிவுகளில் தேர்வான ஆங்கிலம் மொழி அல்லாத திரைப்படம் என்ற புதிய சாதனையை இந்தப் படம் படைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வான முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து 'புரூட்டலிஸ்ட்' என்ற ஆங்கில திரைப்படம் 11 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது.
இதுமட்டுமின்றி, 'விக்கட்' 10 பிரிவுகளிலும், கான்கிளேவ், எ கம்ப்ளிட் அன்னோன் ஆகிய படங்கள் 9 பிரிவுகளில் தேர்வாகியுள்ளன. இதில், எமிலியா பெரெஸ், விக்கட், டியூன் 2, தி புரூட்டலிஸ்ட் ஆகிய படங்கள் சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகர், நடிகை பிரிவுகளில் தேர்வாகி உள்ளன. இதனால் இந்த திரைப்படங்களுக்கு இடையே கடும் போட்டி நிகழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த 'அனுஜா' என்ற குறும்படம் சிறந்த குறும்படம் என்ற பிரிவில் தேர்வாகி உள்ளது.
இந்திய ரசிகர்கள் ஆஸ்கர்ஸ் 2025 நிகழ்ச்சியை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார் மூவிஸ் அல்லது ஸ்டார் மூவிஸ் செலக்ட் தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கும் வழக்கம் கடந்த 96 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
- 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் தற்பொழுத் நடைப்பெற்று வருகிறது.
ஆஸ்கர் விருதுகள் உலகளவில் மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெளியான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்கள், பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கும் வழக்கம் கடந்த 96 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் தற்பொழுத் நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை யார் யார் எந்தெந்த ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளனர் என்பதை இச்செய்தியில் காணலாம்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை எ ரியல் பெயின் ( A Real pain) படத்திற்காக கீரன் கல்கின் ( Kieran Culkin) வென்றார்.
சிறந்த ஆனிமேடட் படத்திற்கான விருதை ஃப்லோ {FLOW} திரைப்படம் வென்றது. இப்படத்தை Gints Zilbalodis இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆனிமேடட் குறும்படத்திற்கான விருதை IN THE SHADOW OF THE CYPRESS குறும்படம் வென்றுள்ளது. இப்படத்தை Shirin Sohani and Hossein Molayemi இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை Wicked திரைப்படத்திற்காக Paul Tazewell வென்றார். இவரே ஆஸ்கர் விருது வெல்லும் முதல் கருப்பினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை அனோரா (Anora) திரைப்படம் வென்றது. சியான் பேகர் (Sean Baker) இப்படத்தின் திரைக்கதை ஆசிரியராவார்.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கான்கிலேவ் (CONCLAVE) திரைப்படத்திற்காக Peter Straughan வென்றார்.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரதிற்கான விருது THE SUBSTANCE திரைப்படத்திற்காக PIERRE-OLIVIER PERSIN, STÉPHANIE GUILLON AND MARILYNE SCARSELLI வென்றனர்.
சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை Anora திரைப்படத்திற்காக Sean Baker வென்றார்.
சிறந்த துணை நடிகைக்கான விருதை EMILIA PÉREZ படத்திற்காக Zoe Saldaña வென்றார்.
சிறந்த கலை வடிவமைப்புக்கான விருதை WICKED திரைப்படத்திற்காக
NATHAN CROWLEY மற்றும் LEE SANDALES வென்றனர்.
சிறந்த பாடலுக்கான விருதை EMILIA PÉREZ திரைப்படத்தில் இடம் பெற்ற El Mal பாடல் வென்றது. இப்பாடலை பாடியவர்கள் Clément Ducol, Camille மற்றும் Jacques Audiard என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 97வது ஆக்ஸர் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ்- இல் நடைப்பெற்றது.
- Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது
97வது ஆக்ஸர் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ்- இல் நடைப்பெற்றது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளை வழங்கியது.
Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப்படம் , திரைக்கதை, இயக்குனர், நடிகை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதை அள்ளியுள்ளது.
இந்த வருடம் ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் இந்தியாவிலுருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் தேர்வானது.
ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.
அனுஜா படம் மட்டுமே இந்தியா சார்பில் இந்த வருடம் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்ற ஆகும் ஆனால் சிறந்த லவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை I'M NOT A ROBOT படம் வென்றது.
இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்த அனுஜா திரைப்படம் விருது வெல்லாததால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீன் பேக்கர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா.
- இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது
2024 ஆம் ஆண்டு சியான் பேகர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா. இப்படத்தின் தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் சீன் பேக்கர் மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தில் Mikey Madison, Mark Eydelshteyn,Yura Borisov,Karren Karagulian, Vache Tovmasyan மற்றும் Aleksei Serebryakov முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. பல்வேறு திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் இந்த ஆஸ்கர் விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை 25- வயதே ஆன மைக்கி மாடிசன் வென்றுள்ளார். சிறந்த இயக்குனர், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பிற்கான விருதை சீன் பேக்கர் வென்றார். ஒரு நபர் நாங்கு ஆஸ்கர் விருதினை வாங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.