என் மலர்
நீங்கள் தேடியது "PAKvNZ"
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டது.
மவுண்ட் மனுவா:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் 2-1 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மவுண்ட் மனுவாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி 20 பந்தில் 50 ரன்களில் அவுட்டானார். டிம் செய்பர்ட் 22 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் 26 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராவத் 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்தின் துல்லிய பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.
அப்துல் சமது 44 ரன்னும், இர்பான் கான் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது.
நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டும், ஜகாரி போக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.
சிட்னி:
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப்ஸ் (195 ரன்), கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் சான்ட்னெர் (8 விக்கெட்), சவுத்தி, பெர்குசன் (தலா 7 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது.
அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப் கான் (10 விக்கெட்), ஷாஹின் ஷா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இறுதிப்போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய அரையிறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது.
- மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது மீண்டும் விக்கெட் கீப்பராக அணிக்குள் இணைந்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே பைனல் செல்லும் வாய்ப்பை இவ்விரு அணிகளுமே இழந்து விட்ட நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அஜாஸ் படேலின் 4-வது ஓவரின் 3-வது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் பந்தை தவற விட்டதை பயன்படுத்திய விக்கெட் கீப்பர் டாம் ப்ளன்டல் கச்சிதமாக ஸ்டம்பிங் செய்து 7 ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஷான் மசூத் 10 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் மற்றொரு ஸ்பின்னர் மைக்கேல் பிரேஸ்லெஸ் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து பந்தை நழுவ விட்டார். அதை கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் டாம் ப்ளெண்டல் மீண்டும் துல்லியமாக ஸ்டம்பிங் செய்து அவரை 3 ரன்களில் அவுட்டாக்கினார்.
பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் முறையில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாவது மிகவும் அரிதாகும். அதிலும் போட்டி துவங்கியதுமே பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் பந்து வீசுவார்கள் என்பதால் எட்ஜ், போல்ட், எல்பிடபிள்யு, கேட்ச் ஆகிய முறைகளில் தான் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அவுட்டாவார்கள்.
ஆனால் அவை அனைத்திற்கும் விதிவிலக்காக இப்போட்டியில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த ஸ்டம்பிங் முறையில் 2 விக்கெட்டுகள் விழுந்தன. 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் குறிப்பாக ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வு அரங்கேறியதில்லை. மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஜமைக்காவில் கடந்த 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது.
- விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கராச்சி:
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் தாரை வார்த்தது. சொந்த மண்ணில் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் முழுமையாக தோற்றது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடியோடு மாற்றப்பட்டது.
கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, நஜம் சேத்தி அமர்த்தப்பட்டார். தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக முன்னாள் கேப்டன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பதவியும் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரிலும் அவர் சொதப்பினால் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது. இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை மாற்றினார்.
தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சப்ராஸ் அகமது அரை சதம் அடித்தார். 86 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் சதம் அடித்தார்.
கராச்சி:
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது. இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை மாற்றினார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சப்ராஸ் அகமது அரை சதம் அடித்தார்.
86 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்துள்ளது. பாபர் அசாம் 161 ரன்களுடனும் (277 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஹா சல்மான் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதனையடுத்து இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே பாபர் அசாம் அவுட் ஆனார். அவர் 161 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் மட்டும் நிலைத்து ஆடி சதம் அடித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் செளதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- கேப்டன் பாபர் அசாம், ஆகா சல்மான் சதமடித்து அசத்தினர்.
கராச்சி:
பாகிஸ்தான், நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்திய கேப்டன் பாபர் அசாம் 161 ரன்னில் அவுட்டானார். ஆகா சல்மான் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். சப்ராஸ் அகமது 86 ரன்னில் வெளியேறினார்.
நியூசிலாந்து சார்பில் சவுத்தி 3 விக்கெட், அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல், ஐஷ் சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருந்தது. லாதம் 78 ரன்னுடனும், கான்வே 82 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டேவன் கான்வே 92 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் சதமடித்து 113 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தது.
அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி சதமடித்தார். டாம் பிளெண்டல் 47 ரன்னும், டேரில் மிட்செல் 42 ரன்னும் எடுத்தனர்.
மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 440 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட்டும், நவ்மான் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.
- பாகிஸ்தானின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை கைப்பற்ற நியூசிலாந்து முயற்சித்து வருகிறது.
கராச்சி:
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.
கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில் இன்று 5-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது பாகிஸ்தான். அந்த அணி டிரா செய்யும் நோக்கில் ஆடியது. நௌமன் அலி மற்றும் பாபர் அசாம் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பாகிஸ்தானின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை கைப்பற்ற நியூசிலாந்து முயற்சித்து வருகிறது. இதனால் பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் உள்ளது.
- பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 311 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.
- நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 61 ரன் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
கராச்சி:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
174 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியின் நௌமன் அலி, பாபர் அசாம் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு சர்ப்ராஸ் கான் ஒத்துழைப்பு கொடுத்தார். சர்ப்ராஸ் கான் 53 ரன்னிலும், ஆகா சல்மான் 6 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாம் உல் ஹக் 96 ரன்னில் அவுட்டானார். அப்போது 7 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 206 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவுத் ஷகீல், வாசிம் ஜுனியர் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 71 ரன்களை எடுத்தபோது பிரிந்தது. வாசிம் ஜுனியர் 43 ரன்னில் அவுட்டனார்.
இறுதியில், பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஷகீல் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அடித்து ஆடி வெற்றி பெற வேண்டும் என அந்த அணி வீரர்கள் விளையாடினர்.
இறுதியில், நியூசிலாந்து 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பிரேஸ்வெல் 3 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் 35 ரன்னும், கான்வே 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 2-ம் தேதி தொடங்குகிறது.
- பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர்.
- நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனருக்கு பதில் மெட் ஹென்றி இடம் பெற்றார்.
கராச்சி:
பாகிஸ்தான-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர். நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனருக்கு பதில் மெட் ஹென்றி இடம் பெற்றார். முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
- முதல் விக்கெட்டுக்கு டாம் லாதம் - கான்வே 134 ரன்கள் சேர்த்தனர்.
- தற்போது வரை நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
கராச்சி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே கராச்சியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 2) கராச்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் விக்கெட்டுக்கு டாம் லாதம் - கான்வே 134 ரன்கள் எடுத்தனர். தற்போது வரை நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி நடக்கும் கராச்சி மைதானத்தில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- டாம் லாதம் - கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர்.
- பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நிஷம் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கராச்சி:
பாகிஸ்தான-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர். நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாகனருக்கு பதில் மெட் ஹென்றி இடம் பெற்றார். முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். டாம் லாதம் - கான்வே ஜோடி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர். அணியில் எண்ணிக்கை 134 ரன்கள் இருந்த போது லாதம் அவுட் ஆனார்.
இதனையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கான்வே சதம் அடித்து அசத்தினார். அவர் 122 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே வில்லியம்சனும் அவுட் ஆனார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் 26 ரன்னிலும் மிட்செல் 3 ரன்னிலும் பிரேஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நிஷம் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார்.
- இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
வெலிங்டன்:
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியானது இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்தத் தொடர்களில் இருந்து ஆடம் மில்னே விலகி உள்ளார்.
இந்த இரு தொடர்களிலும் 16 நாட்களில் 6 ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும். இதற்கு தகுந்த அளவில் தயாராகவில்லை என்பதால் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆடம் மில்னே தெரிவித்தார்.
இதை வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆடம் மில்னேவுக்கு பதிலாக பிளேர் டிக்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.