search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchamurthys"

    • கோவை சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றம் சார்பில், 63 நாயன்மார் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, இன்று பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் அடியார்கள் திருக்கூட்டம், கோவை சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றம் சார்பில், 63 நாயன்மார் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாயன்மார் உற்சவ திருமேனிகளை, நொய்யல் கரையில் உள்ள வி.ஏ.டி., பள்ளி வளாகத்தில் இருந்து பல்லக்கில் வைத்து, பஞ்சமூர்த்திகளுடன் ஊர்வலமாக எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி வளாகத்தில் காலை 9மணிக்கு, 63 நாயன்மார் உற்சவர்களுக்கு திருமஞ்சனம், 11 மணிக்கு மகா தீபாராதனை, 11:15 மணிக்கு அர்ச்சனை வழிபாடு,11:45 மணிக்கு பிரசாதம் வழங்குதல்,அன்னம்பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    • திருமறைநாதர்-வேதநாயகி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சப்பரத்தில் புறப்பாடு நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூ ரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட திருமறை நாதர்-வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இைதத்தொடர்ந்து முக்கிய நிகழ்வாக மாங்கொட்டை திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு திருவாத வூர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், சண்டி கேஸ்வரர், திருமறைநாதரு டன் பிரியாவிடை, வேத நாயகி அம்பாள் ஆகிய பஞ்ச மூர்த்திகள் சப்பரத்தில் புறப்பட்டு வந்தனர்.

    திருவாதவூர், கொட்டகுடி விலக்கு, ஆண்டிபட்டி, பதினெட்டாங்குடி, மில் கேட், தெற்குப்பட்டி வழி யாக மேலூர் நகர் பகுதியில் முழுவதும் சுற்றி வந்து இன்று மாலை மேலூர் சிவன் கோவிலை சென்றடைகிறது.

    வரும் வழிதோறும் பல மண்டகப்படிகளில் பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனைகள் செய்யப்படுகிறது. மீண்டும் நாளை காலை மேலூரில் இருந்து புறப்பட்டு திருவாத வூர் கோவிலை திரும்பச் சென்றடைகிறது.

    வருகிற 31-ந் தேதி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஜூன் 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடைபெறு கிறது இதில் ஆயிரக்க ணக்கான கிராம மக்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுப்பார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    ×